சோத்துக்கட்சி! -கஸ்தூரி(38)

kasturi

(38) ஆகவே தோழர்களே...!

மிழ்நாட்டுல அரசியல் சார்ந்த நிகழ்வு எதுவும் கடந்த வாரத்துல நடக்கல. எல்லாரும் கப்-சிப்னு இருக்காங்க.

அதனால்... வேற மாநிலங்கள கொஞ்சம் பார்க்கலாமா?

இருபத்தி அஞ்சு வருஷமா திரிபுராவை ஆண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்... தன்னோட கோட்டய கோட்ட விட்ருச்சு. முதல்தடவையா பி.ஜே.பி. வெற்றிவாகை சூடியிருக்கு. இதுல பி.ஜே.பி. ஜெயிச்சதவிட பெரிய நியூஸ்....

இந்தியாவில் இப்போ கம்யூனிஸ்ட் ஆட்சி எஞ்சியிருக்கிற இடம் கேரளா மட்டும்தான்.

"கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா -கேரளா தவிர எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது'னு விளம்பரம் போட்டுக்கலாம்கிற அளவுக்கு ஆகிருச்சு.

எப்படி இருந்த கட்சி!

இப்ப கேரளாவுல மட்டும்... யாருக்கும் நோகாம கொஞ்சம் நேர்கோட்டுல வண்டிய ஓட்டிக்கிட்டுப் போய்க்கிட்டிருக்காரு தோழர் பினராயி விஜயன்.

ஆனா... அவரே... தனக்கு ஒண்ணுன்னதும்... தமிழ்நாட்டுக்குத்தான் ஓடி வந்திருக்காரு.

கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை -அப்பல்லோவுல அட்மிட் ஆன விஷயம்... சென்னைல இருக்க எல்லாருக்கும் தெரியும்.

ஆனா... ‘"பினராயி விஜயனோட மனைவிதான் அட்மிட் ஆகியிருக்காங்க. குசலம் விசாரிக்கத்தான் பினராயி விஜயன் ஆஸ்பத்திரிக்கு வந்தார்'னு ஒரு தகவல் கட்சி வட்டாரத்துலருந்து உலவுச்சு..

மறுநாள்... "இல்லல்ல... பினராயி விஜயன்தான் அட்மிட் ஆகியிருக்கார். இது சாதாரணமா செஞ்சுக்கிற உடற்பரிசோதனைதான்'னு அதிகாரப்பூர்வமா சொன்னாங்க அப்பல்லோகாரங்க.

சின்ன வயசுலருந்தே... அரசியல் ஈடுபாடுகொண்ட தோழர் பினராயி விஜயன், தன்னோட பத்தொன்பது வயசுல... கேரள மாணவர் சங்க பொறுப்பிலும் தொடர்ந்து வாலிப

(38) ஆகவே தோழர்களே...!

மிழ்நாட்டுல அரசியல் சார்ந்த நிகழ்வு எதுவும் கடந்த வாரத்துல நடக்கல. எல்லாரும் கப்-சிப்னு இருக்காங்க.

அதனால்... வேற மாநிலங்கள கொஞ்சம் பார்க்கலாமா?

இருபத்தி அஞ்சு வருஷமா திரிபுராவை ஆண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்... தன்னோட கோட்டய கோட்ட விட்ருச்சு. முதல்தடவையா பி.ஜே.பி. வெற்றிவாகை சூடியிருக்கு. இதுல பி.ஜே.பி. ஜெயிச்சதவிட பெரிய நியூஸ்....

இந்தியாவில் இப்போ கம்யூனிஸ்ட் ஆட்சி எஞ்சியிருக்கிற இடம் கேரளா மட்டும்தான்.

"கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா -கேரளா தவிர எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது'னு விளம்பரம் போட்டுக்கலாம்கிற அளவுக்கு ஆகிருச்சு.

எப்படி இருந்த கட்சி!

இப்ப கேரளாவுல மட்டும்... யாருக்கும் நோகாம கொஞ்சம் நேர்கோட்டுல வண்டிய ஓட்டிக்கிட்டுப் போய்க்கிட்டிருக்காரு தோழர் பினராயி விஜயன்.

ஆனா... அவரே... தனக்கு ஒண்ணுன்னதும்... தமிழ்நாட்டுக்குத்தான் ஓடி வந்திருக்காரு.

கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை -அப்பல்லோவுல அட்மிட் ஆன விஷயம்... சென்னைல இருக்க எல்லாருக்கும் தெரியும்.

ஆனா... ‘"பினராயி விஜயனோட மனைவிதான் அட்மிட் ஆகியிருக்காங்க. குசலம் விசாரிக்கத்தான் பினராயி விஜயன் ஆஸ்பத்திரிக்கு வந்தார்'னு ஒரு தகவல் கட்சி வட்டாரத்துலருந்து உலவுச்சு..

மறுநாள்... "இல்லல்ல... பினராயி விஜயன்தான் அட்மிட் ஆகியிருக்கார். இது சாதாரணமா செஞ்சுக்கிற உடற்பரிசோதனைதான்'னு அதிகாரப்பூர்வமா சொன்னாங்க அப்பல்லோகாரங்க.

சின்ன வயசுலருந்தே... அரசியல் ஈடுபாடுகொண்ட தோழர் பினராயி விஜயன், தன்னோட பத்தொன்பது வயசுல... கேரள மாணவர் சங்க பொறுப்பிலும் தொடர்ந்து வாலிபர் சங்க பொறுப்பிலும் செயலாற்றினார். ஈ.கே.நாயனாரின் அமைச்சரவையிலும் பணியாற்றியவர். கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராகவும் உயர்ந்தார். இந்தக் கட்சிப் பதவிக்காக அமைச்சர் பதவியை ராஜினாமா செஞ்சார். கட்சியின் சகதலைவரான முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடிச்சபோதும்... கேரளாவில் கட்சியை வளர்க்க... கடுமையாக உழைச்சார்.

உழைப்பால் அவருக்கு கிடைத்த உயர்வுதான்... 2016-லிருந்து கேரள முதலமைச்சராக இருக்கிறார்.

மத்த இடங்கள்லயெல்லாம் கம்யூனிஸ்ட் நொண்டியடிச்சப்போ... கேரளாவுல கட்சிக்கு புது சுவாசம் கிடைச்சதுன்னா... அதுக்கு பினராயி விஜயனின் உழைப்பு மிகமுக்கிய காரணம். அவர் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டதுமே... அவரின் அரசியல் பணியை உணர்ந்த பலரும் சந்தோஷப்பட்டாங்க. அதுல நானும் ஒருத்தி.

தமிழ்நாட்டுல... கம்யூனிஸம்னா கருப்பா? செகப்பா?னு கேட்டவங்க மத்தியிலகூட பினராயி விஜயன் ஃபேமஸாகியிருக்கார்னா... கேரளாபோய் கமல் அவரை சந்திச்சது முக்கிய காரணம்.

(இப்ப ட்ரீட்மெண்ட்டுக்கு வந்தவரை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகைல போய் கமல் பார்த்துப் பேசியிருக்கார்)

இத நான் கிண்டலுக்குச் சொல்லல.

தமிழ்நாட்டில் நல்ல அரசியல்வாதிகள் எப்படி இருக்கணும்கிறதுக்கு உதாரணமா இருந்த... இருக்கிற கம்யூனிஸ தலைவர்களுக்கும், கம்யூனிஸ சித்தாந்தங்களுக்கும் பெரிசா தமிழ்நாட்டுல அங்கீகாரம் கிடைச்சதில்ல.

சொத்த சொந்த கட்சிக்கு எழுதிவச்சிட்டு... சொந்த சம்பாத்தியத்த கட்சிக்கு குடுத்திட்டு... கட்சி தர்ற சொற்ப மாசச் சம்பளத்த வாங்கிக்கிட்டு... மக்கள் பணி செய்றவங்க... கம்யூனிஸ்ட்காரங்க. ரொம்ப ஃபெண்டாஸ்டிக் சித்தாந்தம் அது. அரசியல் சேவை செய்ய வர்றவங்க அப்படித்தான் இருக்கணும்.

கோடிகோடியா குடும்பத்தோட சேர்ந்து ஆட்டயப் போடுறவங்களுக்கு மத்தியில... வாரிசு அரசியலுக்கு மத்தியில... கட்சி ஆபீஸ்லயே தூங்கி எழுந்து, எளிமையாவும், நேர்மையாவும் இருக்க கம்யூனிஸ்ட் தலைவர்கள... கம்யூனிஸ்ட் கட்சியில கண்கூடா பார்க்கலாம்.. அப்படி பல தோழர்கள் இருக்காங்க.

"பிரகாஷ் காரத்தும் கட்சியில இருக்கார், அவர் மனைவி பிருந்தா காரத்தும் இருக்காரே... இது வாரிசு அரசியல் இல்லையா?'னு கேட்கலாம்.

அவங்க திருமணத்துக்கு முன்னாடியே சக ஊழியர்களா கட்சிப்பணி ஆற்றினவங்க. அரசியல் சேவை... குடும்ப வாழ்க்கையால் பாதிக்கக்கூடாதுங்கிறதுக்காக... கட்சி உறுப்பினர்களையே வாழ்க்கைத் துணையா அமைச்சுக்கிட்ட... உமாநாத், பாப்பா உமாநாத்... மாதிரி பல தோழர்களைச் சொல்லலாம்.

வாரிசுகளுக்கும் சேர்த்து சம்பாதிச்சிக்கிட்டிருக்க அரசியல்வாதிகளுக்கு மத்தியில...

"எந்த வகையிலும் குடும்ப வாழ்க்கை தன்னோட கட்சிப்பணிக்கு குறுக்க வரக்கூடாது'ங்கிறதுக்காக கல்யாணமே பண்ணிக்காம... ஒரு துறவறம்போல... கட்சிக்கு உழைக்கிற தோழர் பாலபாரதி மாதிரி பல தோழர்களைச் சொல்லலாம். தனிப்பட்ட முறையில நான் மிகவும் மதிக்கக்கூடிய தலைவர்கள்... தோழர் நல்லகண்ணு, தோழர் டி.ராஜா... இப்படி பல தோழர்களைச் சொல்லலாம்.

தோழர் நல்லகண்ணுவோட எளிமை.... தாமிரபரணி ஆற்றைக் காப்பாற்ற அவர் நடத்திய சட்டப் போராட்டத்து மூலமா... அவரோட வலிமை... இதெல்லாம் பார்க்கும்போது அவர்மேல மதிப்பு கூடிக்கிட்டேதான் இருக்கு. தன்னலமற்ற தலைவர். இதேபோல தோழர் தா.பாண்டியனோட எளிமையும், பேச்சும், யதார்த்த அரசியலும் எனக்குப் பிடிக்கும்.

இப்படிப்பட்ட நேர்மையான... எளிமையான... உண்மையான... கம்யூனிஸ தோழர்களுக்கு நம்ம தமிழக மக்கள் தேர்தல்ல உரிய அங்கீகாரத்த கொடுத்திருக்காங்களான்னா... ‘இல்லன்னுதான் சொல்லணும். ஏன்னா... எளிமையான இந்த தலைவர்களோட உழைப்பை... சேவையை நம்ம மக்கள் பெரும்பாலும் தெரிஞ்சுக்க விரும்புறதில்ல.

அதனாலதான்... பினராயி விஜயனோட சர்வீஸை நான் குறைச்சு மதிப்பிடல. ஆனா... கமல் போய் பார்த்ததுக்கு அப்புறம்தான்... நம்ம மக்கள்ட்ட பினராயி ஃபேமஸ் ஆனதா நான் நினைக்கிறேன்.

தோழர் பினராயி விஜயன் நீண்ட ஆயுளோட... உடல் நலத்தோட வாழ... அவர் நம்பாத கடவுள்கிட்ட நான் வேண்டிக்கிறேன்.

எனக்கு ஒரே ஒரு சந்தேகம்தான்...

பினராயி விஜயன் ஏன் மருத்துவம் செய்துக்க... தன்னோட சொந்த மாநிலத்த விட்டுட்டு... அண்டை மாநிலத்து ஆஸ்பத்திரிய நாடணும்?

ஒரு மாநிலத்துக்கு முதலமைச்சரா இருக்கிறவரு... தனக்கான மருத்துவ வசதி தன்னோட மாநிலத்துல கிடைக்காதுனு ஒப்புக்கிற மாதிரி இருக்கே...?!

அப்படியே சென்னையில ட்ரீட்மெண்ட் எடுக்கணும்னாலும் ஓமந்தூரார் தோட்டத்துல இருக்க அரசாங்கத்தோட மல்டி ஸ்பெஷாலிடி ஆஸ்பத்திரிய நாடியிருக்கலாம்.

(நான் அந்த ஆஸ்பத்திரிய போய் பார்த்தேன். உண்மையிலயே உலகத்தரமான மருத்துவ வசதிகளோட இருக்கு.)

அப்பல்லோவுல ட்ரீட்மெண்டுன்னா... பில்லு வெயிட்டா இருக்கும். அந்த பில்ல செட்டில் பண்ணுவது யார்?

கண்டிப்பா கட்சி இந்த செலவ ஏத்துக்காது.

பினராயி விஜயன் சம்மதிச்சிருந்தா... கேரளாவுல இருக்க தனியார் ஆஸ்பத்திரிகள்கூட அவருக்கு ட்ரீட்மெண்ட் தந்திருக்குமே..

இவ்வளவு ஏன்.....

கேரளாவுல தனியார் ஆஸ்பத்திரிகள்ல... ரொம்ப செலவாகும்னு வச்சுக்கிட்டாலும்...

பினராயி விஜயன் "உம்'னு ஒரு வார்த்த சொல்லீருந்தா... உம்மன்சாண்டியே சரிதான்னு செலவ ஏத்துக்கிட்டிருப்பாரே...

(இந்த கட்டுரையை நான் எழுதுறப்போ... பேனா... தானா... அதையும் எழுதுது. எல்லாம் நேரம்... என் நேரம் இல்லீங்க. அவரோட நேரம். "உம்மன்சாண்டி'ன்னு சொன்னாலே "சரிதா'ன்னு நினைவுக்கு வருதே... நான் சொல்றது ‘சரிதான?!)

எனக்கு சரியா நினைவு இல்ல... கர்நாடக காங்கிரஸ் பிரமுகரும், நடிகருமான அம்பரீஷ் வெளிநாட்டுல சிகிச்சை செஞ்சுக்கிட்டதுக்கு அரசாங்க பணம்... ஒருகோடியோ... ஒன்னரைக்கோடியோ... கொடுத்ததா அப்போ ஒரு சர்ச்சை ஓடிச்சு.

அரசாங்கம்னா அப்படித்தான்... ஆதார் அட்டை இல்லேனு 90 வயசு முன்னாள் ராணுவ வீரருக்கு பென்ஷன் நிறுத்தி வைக்குது அரசாங்கம். ஆயிரம் கோடிகள ஆட்டயப் போட்டுட்டு ஓடுற அல்டாப்பு பேர்வழிகள... அண்ணாந்து பார்த்துக்கிட்டிருக்கோம்.

இப்ப அத விடுங்க...

விஜயன் அப்பல்லோ விஜயம் எதுக்கு?

ஒருவேள... ஜெயலலிதா விசுவாசியா? இல்லேன்னா... சி.சி.டி.வி. கேமரா எங்க இல்லயோ... அங்கதான் ட்ரீட்மெண்ட்டுனு ரெண்டுநாள் ரெஸ்ட் எடுக்கணும்னு வந்தாரா?

வழக்கமான செக்-அப் பண்ற வசதிகூட கேரள மருத்துவமனைகள்ல இல்லயா? தன்னோட மாநிலத்த, அவரே குறைச்சு மதிப்பிடுறதா ஆகாதா?

அப்பல்லோவுல தும்முனாக்கூட லட்ச ரூபாதான்.

கவருமெண்ட்டு பில்லா? கட்சி பில்லா?

சென்னைக்கு வந்த இடத்துல திடீர்னு அப்பல்லோவுல சேர்ந்திருந்தா பரவால்ல. ஆனா... திருவனந்தபுரத்துலருந்து வந்து... அப்பல்லோவுல சேர்ந்திருக்காரே...!

பூசணிக்கா வாசனை அடிக்குதே!

(அடுத்த விஷயத்தை ஒரு இதழ் விட்டு மறு இதழில் எழுதுகிறேன்!)

kasthuri
இதையும் படியுங்கள்
Subscribe