(50) தமிழ் அவர் சுவாசம்!
நான் முதன்முதலாக தயாரித்த "தைமாசம் பூவாசம்'’ படத்தின் துவக்கவிழாவில் என் அழைப்பை ஏற்று தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டார்.
படம் தயாராகி வெளிவரும் நேரத்தில், படத்தின் சிறப்புக் காட்சியைக் காண தலைவர் கலைஞர் சித்தப்பாவை படம் பார்க்க வரும்படி அழைத்தேன்.
கலைஞர், தன் துணைவியார் ராஜாத்தி அம்மா அவர்களுடன் வந்திருந்து படம் பார்த்தார்.
இந்தப் படத்தில் கதாநாயகியாக நான் அறிமுகப்படுத்திய நடிகை தேவகி, திருவாரூரைச் சேர்ந்த பெண். இதை கலைஞரிடம் தெரியப்படுத்தினேன்.
இந்தப் படத்தில் நான் வயதான ஆசிரியர் தோற்றத்தில்... மிகவும் சிரத்தையோடு நடித்திருந்தேன்.
என்னை அந்த கதாபாத்திரத்திற்கேற்ப ஒப்பனை மூலம் மாற்றியிருந்தார் மேக்-அப் மேன் கஜபதி அண்ணன் அவர்கள்.
(என் அப்பாவின் மேக்-அப் மேனாக இருந்து... பிறகு எனக்கும் மேக்-அப் மேனாக பணியாற்றினார் கஜபதி அண்ணன். எங்கள் குடும்பத்தில் ஒருவராக இருந்தார். அதனால்தான்... எல்டாம்ஸ் ஹோட்டல் பிரச்சினையில்... எந்தத் தவறும் செய்யாத கஜபதி அண்ணனை கத்தியைக் காட்டி தி.மு.க. கட்சிக்காரர் ஒருவர் மிரட்டியபோது... அந்தப் பிரச்சினையில் நியாயம் கேட்டு தீவிரமாகப் போராடினேன்.)
படம் முடிந்து வெளியே வந்தார் கலைஞர்.
கஜபதி அண்ணனைப் பார்த்தார். அவரை கலைஞருக்கு நன்றாகத் தெரியும்.
""கஜபதி...''’என கலைஞர் கூப்பிட... வணக்கம் தெரிவித்தார்.
""ஒப்பனை சிறப்பாகச் செய்திருக்கிறாய்''’எனச் சொன்னார் கலைஞர்.
"என்னடா இது... ரொம்ப சிரத்தை எடுத்து நடிச்சிருக்கோம். நம்மள சித்தப்பா பாராட்டலையே...'’என நான் மனசுக்குள் வருத்தப்பட்டுக்கொண்டிருக்க...
அடுத்த நொடியே...
""உங்கொப்பனைவிட சிறப்பாகச் செய்திருக்கிறாய்''’என்றார் பாருங்கள்.
(50) தமிழ் அவர் சுவாசம்!
நான் முதன்முதலாக தயாரித்த "தைமாசம் பூவாசம்'’ படத்தின் துவக்கவிழாவில் என் அழைப்பை ஏற்று தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டார்.
படம் தயாராகி வெளிவரும் நேரத்தில், படத்தின் சிறப்புக் காட்சியைக் காண தலைவர் கலைஞர் சித்தப்பாவை படம் பார்க்க வரும்படி அழைத்தேன்.
கலைஞர், தன் துணைவியார் ராஜாத்தி அம்மா அவர்களுடன் வந்திருந்து படம் பார்த்தார்.
இந்தப் படத்தில் கதாநாயகியாக நான் அறிமுகப்படுத்திய நடிகை தேவகி, திருவாரூரைச் சேர்ந்த பெண். இதை கலைஞரிடம் தெரியப்படுத்தினேன்.
இந்தப் படத்தில் நான் வயதான ஆசிரியர் தோற்றத்தில்... மிகவும் சிரத்தையோடு நடித்திருந்தேன்.
என்னை அந்த கதாபாத்திரத்திற்கேற்ப ஒப்பனை மூலம் மாற்றியிருந்தார் மேக்-அப் மேன் கஜபதி அண்ணன் அவர்கள்.
(என் அப்பாவின் மேக்-அப் மேனாக இருந்து... பிறகு எனக்கும் மேக்-அப் மேனாக பணியாற்றினார் கஜபதி அண்ணன். எங்கள் குடும்பத்தில் ஒருவராக இருந்தார். அதனால்தான்... எல்டாம்ஸ் ஹோட்டல் பிரச்சினையில்... எந்தத் தவறும் செய்யாத கஜபதி அண்ணனை கத்தியைக் காட்டி தி.மு.க. கட்சிக்காரர் ஒருவர் மிரட்டியபோது... அந்தப் பிரச்சினையில் நியாயம் கேட்டு தீவிரமாகப் போராடினேன்.)
படம் முடிந்து வெளியே வந்தார் கலைஞர்.
கஜபதி அண்ணனைப் பார்த்தார். அவரை கலைஞருக்கு நன்றாகத் தெரியும்.
""கஜபதி...''’என கலைஞர் கூப்பிட... வணக்கம் தெரிவித்தார்.
""ஒப்பனை சிறப்பாகச் செய்திருக்கிறாய்''’எனச் சொன்னார் கலைஞர்.
"என்னடா இது... ரொம்ப சிரத்தை எடுத்து நடிச்சிருக்கோம். நம்மள சித்தப்பா பாராட்டலையே...'’என நான் மனசுக்குள் வருத்தப்பட்டுக்கொண்டிருக்க...
அடுத்த நொடியே...
""உங்கொப்பனைவிட சிறப்பாகச் செய்திருக்கிறாய்''’என்றார் பாருங்கள்...
"ஒப்பனை -உங்கொப்பனை... ஆகா... தலைவனின் தமிழ் விளையாட்டே...'’ என வியந்து, மகிழ்ந்து... பாராட்டிய கலைஞருக்கு நன்றிகூடச் சொல்ல மறந்து நின்றுவிட்டேன்.
என்ன ஒரு வார்த்தை அழகு.
தமிழ் என்பது கலைஞரின் சுவாசமாயிற்றே....
நான் தலைவர் கலைஞரைப் பார்க்க அப்பாயின்ட்மென்ட்டெல்லாம் வாங்கமாட்டேன். அவரைப் பார்க்கவேண்டும் என்று தோன்றினால், உடனே போய் பார்த்துவிட்டு வருவேன்.
ஒருமுறை பார்க்கப் போயிருந்தபோது... தலைவர் வெளியில் சென்றிருந்தார். ரொம்ப நேரம் காத்திருந்துவிட்டு.. வீட்டுக்குத் திரும்பிவிட்டேன்.
நான் வீடு திரும்பி ரொம்ப நேரம் ஆனநிலையில்...
"நாம தலைவர பார்க்கப்போன விஷயத்தை தலைவர்கிட்ட சொல்லீருப்பாங்க. ஆனா... ‘"எதுக்குப்பா வந்த... என்ன விஷயம்?'னு தலைவர் ஒரு போன் பண்ணிக்கூட கேட்கலையே...'’ என நினைத்துக்கொண்டிருந்தபோதே... போன் ஒலித்தது. தலைவர்தான் பேசினார்.
""வீட்டுக்கு வா''’என்றார்.
உடனே போனேன்.
""என்னய்யா... கோவிச்சுக்கிட்டுப் போயிட்டியா?''’எனக் கேட்டார்.
""அதெல்லாம் இல்லப்பா. உங்களப் பார்க்கணும்னு வந்தேன். இப்ப பார்த்திட்டேன். சும்மாதான் வந்தேன்''’எனச் சொன்னேன்.
தலைவர்-தொண்டன் என்கிற உறவைத் தாண்டி... அப்பா-மகன் போன்றது எனக்கும் தலைவருக்கும் இடையேயான உறவு.
நான் அதிகாலையில் எழுந்து நடிகர் சங்கம் போய்விடுவேன்.
உடற்பயிற்சிக்காக ஷட்டில்காக் விளையாடிவிட்டு... வீட்டுக்குத் திரும்பும்போது... சில சமயம் அறிவாலயத்தில் கலைஞரின் கார் நின்றிருந்தால், நான் அறிவாலயத்துக்குள் நுழைந்துவிடுவேன்.
கலைஞர் வாக்கிங் போய்க்கொண்டிருப்பார். கூடவே நானும் அவருடன் பேசியபடி வாக்கிங் போவேன்.
வாக்கிங் முடிந்து, அவர் காரில் அமர்ந்ததும்... சில சமயம்... நான் கலைஞரின் ஷூ லேஸை அவிழ்த்து ஷூவை கழட்டிவிடுவேன்.
""இதெல்லாம் எதுக்குப்பா... வேணாம்ப்பா...''’என கடிந்துகொள்வார் கலைஞர்.
""இருக்கட்டும்ப்பா''’எனச் சொல்லிவிட்டு... அவரின் பாதத்தைப் பிடித்து... மென்மையாக அழுத்தி மஸாஜ் செய்துவிடுவேன்.
(நான் இதுபோல் என் அப்பாவிற்கு மஸாஜ் செய்துவிட்டிருக்கிறேன்)
ஒருதடவை... காலையில் தலைவரைப் பார்க்க ஆலிவர் ரோடு வீட்டிற்குப் போயிருந்தேன். அப்போது அவருடன் சேர்ந்து ஷட்டில்காக் ஆடியிருக்கிறேன்.
கலைஞர் அரங்கில் நடிகர் சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடத்தினோம்.
அப்போது நான்... “""நடிகர் சங்க கடன் பிரச்சினையை தலைவர் தீர்த்து வைக்கவேண்டும்''’என கோரிக்கை விடுத்தேன்.
""கடனில் பாதியை நடிகர் சங்கம் சார்பில் தீர்த்துவிடுங்கள். மீதியை அரசு சார்பில் தீர்த்துவைக்க வழிவகை செய்கிறேன்''’என கலைஞர் சொன்னார்.
ஆனால்... அது நடக்காமல் போய்விட்டது.
நடிகர் சங்கம் சார்பில் நடிகர் சங்கத்தில், கலைஞருக்கு பாராட்டுவிழா நடத்தியபோது... பிரமாண்டமான சைஸில் ஷீல்டு கொடுத்தோம்.
நான் அ.தி.மு.க.வில் இருந்தபோதும்... கலைஞர் மீதான பாசமும், மரியாதையும் எனக்கு எப்போதும் போலவே இருந்தது... இருக்கிறது.
நடிகர்சங்கத் தலைவராக சரத்குமார் அவர்களும், செயலாளராக நானும் தேர்வு செய்யப்பட்டதும்... நடிகர்சங்க நிர்வாகிகளுடன் அப்போது முதல்வராக இருந்த கலைஞரைச் சந்தித்திருக்கிறேன்.
சென்னை லீ மெரிடியன் ஹோட்டலில் சகோதரி ராதிகா, தனது "சித்தி'’சீரியல் வெற்றிக்காக விழா எடுத்தார். கலைஞர் தலைமையில் இந்த விழா நடந்தது.
அப்போது பேசிய கலைஞர்... ""நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் குடும்பம் எப்போதுமே எங்களுடன்தான் இருக்கும். அதில் ஒரு பிள்ளை மட்டும் (ராதாரவி) வெளியில் போயிருக்கிறது. ஒருவேளை அந்தப்பிள்ளை, நான் ஏதாவது சொல்லித்தான் வெளியே போயிருப்பார்''’எனப் பேசினார்.
நான் ஏன் அப்போது தி.மு.கழகத்தை விட்டு வெளியே போனேன்.
சின்னச் சின்ன காரணங்கள்தான்.
அதைச் சொல்வதற்கு முன்...
தி.மு.கழகத்தின் பேச்சாளன் என்கிற முறையில்... அரசியல் அரங்கத்தில் நான் சந்தித்த ஓரிரு சம்பவங்களைச் சொல்கிறேன்.
என் வாழ்க்கையில் மிக முக்கியமான... நான் மறக்க முடியாத அரசியல் பிரமுகர்களில் மிக முக்கியமானவர்... மறைந்த முன்னாள் அமைச்சர் திரு. வீரபாண்டி ஆறுமுகம் அவர்கள். அவரை நான், எனது தந்தை ஸ்தானத்தில் வைத்திருக்கிறேன்.
வீரபாண்டியாருடைய குடும்பமே என்னோட குடும்பம் மாதிரி. வீரபாண்டியாரோட மனைவி ரெங்கநாயகி அம்மாவாகட்டும், அவரோட மகள்கள் மகேஸ்வரி, நிர்மலா, மகன்கள் நெடுஞ்செழியன், ராஜா... எல்லாம் எனக்கு உடன்பிறவா சகோதர-சகோதரிகள். நான் தி.மு.கழகத்தில் இருந்தபோதும் சரி, அதன்பிறகு அண்ணா தி.மு.க.வுல சேர்ந்ததற்கு அப்புறமும் சரி... வீரபாண்டியார் குடும்பத்துக்கும், என்னுடைய குடும்பத்திற்கும் இடையேயான குடும்பப்பாங்கான உறவு பாதிக்கப்படவில்லை.
வீரபாண்டியாரோட குடும்பத்திற்கு ஒரு பிரச்சினை என்றால் அங்க இந்த ராதாரவி இருப்பான். அந்த அளவுக்கு அந்த குடும்பத்தின்மேல் எனக்கு அன்பும், மரியாதையும் இருக்கிறது.
ஏனென்றால்... "இன்றைக்கு இந்த ராதாரவி உயிரோடு இருப்பதற்கு வீரபாண்டியாரும் அவரோட குடும்பமும்தான் காரணம்' என்று சொல்லலாம்.
1991 மே மாதம் சேலம் மாவட்டத்தில்... தி.மு.கழகத்தை ஆதரித்து நான் தேர்தல் பிரச்சாரம் செய்யப் போயிருந்தேன். எனக்கு நேஷனல் ஹோட்டலில் ரூம் போட்டிருந்தார்கள்.
9-ஆம் நம்பர் ரூமில் நான் தங்கினேன். அதே ஹோட்டலில் 10-ஆம் நம்பர் ரூமில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரங்கராஜன் குமாரமங்கலம் தங்கியிருந்தார். அதாவது பக்கத்து பக்கத்து அறைகளில் தங்கியிருந்தோம்.
மே 21-ம் தேதி அந்த ஹோட்டலிலிருந்து நான் தேர்தல் பிரச்சாரத்துக்குக் கிளம்பினேன். கொண்டலாம்பட்டியில மீட்டிங் முடித்துவிட்டு இரவில் ஜீப் மூலம் நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு திரும்பிக்கொண்டிருந்தோம். அப்போது... போலீஸ்காரர் ஒருவர் நாங்கள் வந்த வண்டியை வழிமறித்தார். அவர் முகத்தில் ஒருவித பதட்டம்.
""வண்டியில கட்டியிருக்க கட்சிக் கொடிய எடுத்திடுங்க'' எனச் சொன்னார். அந்த போலீஸ்காரரின் முகத்தில் பதட்டமும், பரபரப்பும் நொடிக்கு நொடி அதிகரித்துக்கொண்டே இருந்தது.
""என்ன சார்... என்ன ஆச்சு, எதுக்கு வண்டியில கட்டியிருக்க தி.மு.க. கொடிய எடுக்க சொல்றீங்க''’எனக் கேட்டேன்.
போலீஸ்காரர் விஷயத்தைச் சொன்னதும் நாங்கள் பெரும் அதிர்ச்சியடைந்தோம்...!
(சினிமா நடிகனான நான் சினிமாவிலும் பார்த்திராத... ஒரு கலவரம்...)
ஜாதக பலன்?! சரத்குமார் அவர்கள் ஒரு பத்திரிகை நடத்திவந்தார். அதற்காக கலைஞரை பேட்டி எடுத்த சரத், தான் கேட்ட கேள்வி ஒன்றையும் அதற்கு கலைஞர் சொன்ன பதிலையும் என்னிடம் சொல்லி வியந்தார். ""உங்களுடைய சிறுவயதில் நீங்கள் உங்களின் தந்தையாருடன் இருக்கும் புகைப்படத்தைப் பார்க்கும்போது... உங்கள் தந்தையார் ஆன்மிகவாதியாக இருப்பதை அறிய முடிகிறது. அதனால் உங்கள் தந்தை, உங்களுக்கான ஜாதகத்தை ஜோதிடர் மூலம் எழுதி வைத்திருப்பாரே... அதைப்பற்றிச் சொல்லுங்கள்''’என்பது சரத்தின் கேள்வி. ""எனக்கு இப்போது 82 வயது ஆகிறது. என்னுடைய ஜாதகத்தை கணித்தவர் "72 வயதில் இந்த ஜாதகதாரர் இறந்துபோய்விடுவார்'’எனச் சொல்லியிருந்தார்''’எனச் சொல்லிவிட்டு... வாய்விட்டுச் சிரித்திருக்கிறார் கலைஞர். |