(49) சிண்டு முடிபவர்களால் சிக்கல்!
திருச்சியில என் அப்பாவுக்கு சிலை திறப்பு விழாவும், நினைவக திறப்பு விழாவும் நான் நடத்தியது பற்றி ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன்.
அந்த நிகழ்ச்சிக்கு முந்தின தினங்களில் நடந்த விஷயங்களைச் சொல்கிறேன்..
21-07-1985-ல் விழா நடத்த ஏற்பாடு செய்துவிட்டு, தலைவர் கலைஞரிடம் சிலை திறப்பு விஷயம் குறித்துச் சொன்னேன்.
""உதவிக்கு யார வைச்சிக்கிற?''’என தலைவர் கேட்டார்.
""நீங்க யாரைச் சொல்றீங்களோ அவங்கள கூப்பிட்டுக்கிறேன்''
""கே.கே.என்.தங்கராஜை உதவிக்கு வைச்சிக்கோ''’என்றார்.
கே.கே.என்.தங்கராஜை எனக்கு அறிமுகம் பண்ணி வைத்ததே தலைவர் கலைஞர்தான். நானும் கே.கே.என்.தங்கராஜ் அண்ணனை கூட வைத்துக்கொண்டுதான் சிலை திறப்பு விழாவுக்கு தேவையான வேலைகளை, பிரமாண்டமான ஏற்பாடுகளை செய்தேன். அழைப்பிதழ் அடித்து எல்லோருக்கும் கொடுத்தேன்.
"அந்த அழைப்பிதழில் ’திருச்சி மாவட்ட தி.மு.கழக பொருளாளர் பெயர போடல' என பிரச்சினையைக் கிளப்பினார்கள்.
திருச்சியில் இருந்த எனக்கு சென்னையில இருந்து போன் வந்தது. அய்யா அன்பில் தர்மலிங்கம் அவர்கள்தான் பேசினார்..
""அழைப்பிதழ்ல திருச்சி கழக பொருளாளரோட பெயர போடலனு தலைவர் வருத்தப்படுறாரு''’ எனச் சொன்னார்..
""ஐயா நான் தி.மு.கழக கூட்டம் நடத்தல. நான் நடத்துறது எம்.ஆர்.ராதாவோட சிலை திறப்பு விழா. இது என் குடும்ப நிகழ்ச்சி. என்னோட குடும்பம் செய்யுற விழா. அதுல என் குடும்பத்தோட தலைவரா இருக்கிற தலைவர் கலைஞர் சித்தப்பா அவர்களுக்கு உரிய மதிப்பையும், மரியாதையையும் செய்திருக்கேன்... அவ்வளவுதான்''’எனச் சொன்னேன்.
அன்பிலார், ""அது எல்லாம் சரிதானப்பா. ஆனா கட்சினு ஒண்ணு இருக்குல. அழைப்பிதழ்ல பெயர் போடாததால அந்த பொருளாளர் ’"போட்டி கூட்டம் நடத்தப்போறேன்'னு சொல்றார்''’எனச
(49) சிண்டு முடிபவர்களால் சிக்கல்!
திருச்சியில என் அப்பாவுக்கு சிலை திறப்பு விழாவும், நினைவக திறப்பு விழாவும் நான் நடத்தியது பற்றி ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன்.
அந்த நிகழ்ச்சிக்கு முந்தின தினங்களில் நடந்த விஷயங்களைச் சொல்கிறேன்..
21-07-1985-ல் விழா நடத்த ஏற்பாடு செய்துவிட்டு, தலைவர் கலைஞரிடம் சிலை திறப்பு விஷயம் குறித்துச் சொன்னேன்.
""உதவிக்கு யார வைச்சிக்கிற?''’என தலைவர் கேட்டார்.
""நீங்க யாரைச் சொல்றீங்களோ அவங்கள கூப்பிட்டுக்கிறேன்''
""கே.கே.என்.தங்கராஜை உதவிக்கு வைச்சிக்கோ''’என்றார்.
கே.கே.என்.தங்கராஜை எனக்கு அறிமுகம் பண்ணி வைத்ததே தலைவர் கலைஞர்தான். நானும் கே.கே.என்.தங்கராஜ் அண்ணனை கூட வைத்துக்கொண்டுதான் சிலை திறப்பு விழாவுக்கு தேவையான வேலைகளை, பிரமாண்டமான ஏற்பாடுகளை செய்தேன். அழைப்பிதழ் அடித்து எல்லோருக்கும் கொடுத்தேன்.
"அந்த அழைப்பிதழில் ’திருச்சி மாவட்ட தி.மு.கழக பொருளாளர் பெயர போடல' என பிரச்சினையைக் கிளப்பினார்கள்.
திருச்சியில் இருந்த எனக்கு சென்னையில இருந்து போன் வந்தது. அய்யா அன்பில் தர்மலிங்கம் அவர்கள்தான் பேசினார்..
""அழைப்பிதழ்ல திருச்சி கழக பொருளாளரோட பெயர போடலனு தலைவர் வருத்தப்படுறாரு''’ எனச் சொன்னார்..
""ஐயா நான் தி.மு.கழக கூட்டம் நடத்தல. நான் நடத்துறது எம்.ஆர்.ராதாவோட சிலை திறப்பு விழா. இது என் குடும்ப நிகழ்ச்சி. என்னோட குடும்பம் செய்யுற விழா. அதுல என் குடும்பத்தோட தலைவரா இருக்கிற தலைவர் கலைஞர் சித்தப்பா அவர்களுக்கு உரிய மதிப்பையும், மரியாதையையும் செய்திருக்கேன்... அவ்வளவுதான்''’எனச் சொன்னேன்.
அன்பிலார், ""அது எல்லாம் சரிதானப்பா. ஆனா கட்சினு ஒண்ணு இருக்குல. அழைப்பிதழ்ல பெயர் போடாததால அந்த பொருளாளர் ’"போட்டி கூட்டம் நடத்தப்போறேன்'னு சொல்றார்''’எனச் சொன்னார்.
""மீட்டிங்தானே நடத்தட்டும். யாரு வேண்டும்னாலும் என்ன வேண்டும்னாலும் செய்யட்டும்''’’ எனச் சொன்னேன். பேச்சு வளர்ந்து வாக்குவாதமானது. அப்போது நான் ஒரு விஷயத்தைச் சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டேன்.
அதற்கு அப்புறம் கே.கே.என்.தங்கராஜ் சொன்னதன்பேரில் அவருடன் அந்த பொருளாளர் வீட்டுக்குப் போனேன். வீட்டுக் கதவைத் தட்டினேன். ஆனால் யாருமே வந்து கதவைத் திறக்கவில்லை. (வீட்டுக்குள்ளே ஆட்கள் இருந்ததா நினைக்கிறேன்). கதவை தட்டித் தட்டிப் பார்த்தேன் யாரும் திறக்காததால வீட்டுக்கு உள்ளே அழைப்பிதழை போட்டுவிட்டு திரும்பி வந்துவிட்டோம்..
தலைவர் கலைஞர் திருச்சி ரயில்வே ஸ்டேஷனுக்கு அதிகாலை 4 மணிக்கு வந்தார். அவரை வரவேற்க தூக்கக் கலக்கத்தோடு எழுந்து ரயில்வே ஸ்டேஷனுக்கு ஓடினேன்.
வழிநெடுகிலும் வாழை தோரணம் அது இதுனு அசத்திவிட்டேன்.
விழா நடக்குறதுக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்பாக... விழா இடத்துக்கு வேறு வழியில் வருவதாக தலைவர் சொல்லிவிட்டார். அதனால்... முன்னாடி பக்கம் கட்டின வாழை தோரணம், அலங்கார ஏற்பாடுகளையும் உடனடியாக அந்த வழிக்கு மாற்றினேன். தலைவர் கலைஞரை விழா நடக்கும் இடத்துக்கு அழைத்துக்கொண்டு செல்ல குதிரை வண்டி வைத்து சிறப்பான வரவேற்பு கொடுத்தேன். விழாவில் விஜிமா (நடிகர் விஜயகாந்த்), எஸ்.எஸ்.மாமா (நடிகர் எஸ்.எஸ்.சந்திரன்), சந்திரசேகர் (நடிகர் வாகை சந்திரசேகர்), பாண்டியன், தியாகு எல்லாரும் கலந்துகொண்டார்கள்.
என் அப்பாவின் சிலையை திறந்து வைத்துப் பேசும்போது ""எனக்கு ’கலைஞர்’ பட்டம் கொடுத்ததே எம்.ஆர்.ராதாதான்''’என்றார் தலைவர் கலைஞர்.
அந்த விழா மேடையிலதான் தி.மு.கழகத்தோட தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் கட்டுவதற்கான நிதியாக தலைவர் கலைஞரிடம் ரூ.5,000/- நிதி கொடுத்தேன். அண்ணா அறிவாலய கட்டடம் கட்ட முதன்முதலில நிதி கொடுத்தவன் நான்தான்.
நான் நடத்திய நிகழ்ச்சி தி.மு.க.விற்கு ஒரு எழுச்சிதரும் மாநாடாகவே அமைந்தது. அந்த நிகழ்ச்சி மூலமாகத்தான் எனக்கு அரசியல் வெளிச்சப் புகழ் கிடைத்தது.
நான் அழைப்பிதழில் திருச்சி மாவட்ட கழக பொருளாளர் பெயரை திட்டமிட்டு தவிர்க்கவில்லை. அதேசமயம்... தன் கட்சி நிர்வாகிகளுக்கு உரிய மரியாதை கிடைக்கவேண்டும் என்பதில் ஒரு சிறந்த தலைவராக கலைஞரின் செயல்பாடு இருந்தது... இருக்கிறது. அதேபோல் கட்சி நிர்வாகிகளிடம் தவறு இருந்தால் கண்டிக்கவும் செய்வார்.
இதை எதற்காகச் சொல்கிறேனென்றால்...
திருச்சியில் விழா முடிந்தபின் பத்திரிகையாளர் தேவிமணி அவர்களுக்கு திருச்சி ராஜாளி ஹோட்டலில் பிறந்தநாள் கொண்டாடினோம். இதில் நடிகர்கள் பலரும் கலந்துகொண்டோம்.
சிலை திறப்பு விழாவுக்கு வந்து சிறப்பித்தமைக்காக கலைஞருக்கு நன்றி சொல்ல நான் போனபோது தலைவர் யாரையோ சத்தமாக கடிந்துகொண்டிருந்தார்.
""தலைவர் யார திட்டிட்டு இருக்காரு''’எனக் கேட்டேன். "திருச்சி பொருளாளரை திட்டிட்டு இருக்கார்'’எனச் சொன்னார்கள்.
""ராதாரவி உன்னோட வீடு தேடி வந்து அழைப்பிதழ் வச்சாரா? இல்லையா?''
""ஆமாங்க தலைவரே...''’’
""தனிப்பட்ட முறையில உனக்கு அழைப்பிதழ் வச்சான். ஆனா நீ வீட்டுக் கதவக்கூட திறக்கல. ரவிகிட்ட இருந்த அந்த மரியாதை உன்கிட்ட இல்ல''’என கடிந்துகொண்டிருந்தார். அப்போதுதான்... ‘"தலைமைன்னா என்ன, கலைஞர் சித்தப்பா ஒரு பெரிய இயக்கத்தோட தலைவரா எவ்வளவு உறுதியா நடந்துக்கிறார்... யார் பக்கம் நியாயம் இருக்குனு நீதி தராசுபோல கணிச்சு அவங்களுக்கு ஆதரவா பேசுவாரு'’ என்பதையெல்லாம் தெரிந்துகொண்டேன்.
ஏதோ கோபத்தில் நான், அய்யா அன்பிலார் அவர்களிடம் போனில் அப்படி பேசியதற்காக வருத்தப்பட்டுக்கொண்டேன்.
1989-90ல் முதல்வர் கலைஞர் தலைமையில் தி.மு.கழக ஆட்சி நடந்துகொண்டிருந்தது.
ஆட்சியில் இருக்கிறபோதும் தொடர்ந்து மக்களைச் சந்திக்க கூட்டங்களை நடத்துவது தி.மு.க.வின் ஸ்டைலாச்சே. நான் சினிமாவில் பிசியாக இருந்தபோதும்... மீட்டிங்குகளிலும் கலந்து கொண்டிருந்தேன். எங்க ஏரியாவான தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோட்டில் வேலு மிலிட்டரி ஹோட்டல் இருக்கிறது.. எல்டாம்ஸ் ரோட்டைச் சேர்ந்த தி.மு.கழகத்த சேர்ந்த கட்சிக்காரருக்கும் வேலு மிலிட்டரி ஹோட்டலுக்கும் சின்ன தகராறு வந்து பெரிய பிரச்சினையாக ஆகிவிட்டது. ’’"வேலு மிலிட்டரி ஹோட்டல்காரனுக்கு வக்காலத்து வாங்குறியா?'’எனச் சொல்லி தி.மு.கழகத்த சேர்ந்த யாரோ ஒருத்தர் என்னுடைய மேக்-அப்மேன் கஜபதி அண்ணனிடம் கத்தியைக் காட்டி மிரட்டி... "குத்திடுவேன்'னு சத்தம் போட்டிருக்கார். அதோட அரசியல் செல்வாக்கப் பயன்படுத்தி... என்னுடைய ஆட்களை கைதுபண்ணி போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிப்போய் உட்கார வைத்துவிட்டார்கள்.
"வா அருகில் வா'’பட ஷூட்டிங்கிற்காக நாகப்பட்டினத்தில் இருந்த எனக்கு தகவல் கிடைத்ததும்... சென்னைக்கு வந்துவிட்டேன். நானும் எஸ்.எஸ்.மாமா (நடிகர் எஸ்.எஸ்.சந்திரன்), சந்திரசேகர் (நடிகர் வாகை சந்திரசேகர்) மூணுபேரும் நடுரோட்டில் உட்கார்ந்துவிட்டோம். பிரச்சினை பெரிசாக... அப்ப உயர் போலீஸ் அதிகாரியான பாலசந்திரன் வந்து என்னை சமாதானப்படுத்தினார். நான் எதையுமே மறுத்திட்டேன். ’""என்னோட ஆட்கள வெளியே விடுங்க. இல்லனா அவங்களோட சேர்த்து என்னையும் கைது பண்ணி ஜெயிலுக்கு கூட்டிட்டு போங்க''’என சத்தம்போட்டேன். "என்னோட பிரச்சினைக்காக எஸ்.எஸ்.மாமாவும், சந்திரசேகரும் பாதிக்கப்பட வேண்டாமே...' என அவர்களை அனுப்பிவிட்டு, தனிஒருவனா நின்று பிரச்சினையை எதிர்கொண்டேன். என்னையும் கைது செய்து தேனாம்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் உட்கார வைத்தார்கள். ’நான் தி.மு.க.காரன்தான். தி.மு.க. ஆட்சிதான் நடக்குது. இருந்தாலும் என்னை போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டுப் போனார்கள்.. "நான் விசாரித்தவரைக்கும் ’தப்பு என்னோட ஆட்கள் மேல இல்ல. தப்பு பண்ணது எல்லாம் அந்த தி.மு.க.கட்சிக்காரன்தான்'’ எனச் சொன்னதால் இவ்வளவு உறுதியாக இருந்தேன்.
தேனாம்பேட்டை போலீஸ் ஸ்டேஷனிலிருந்து கமிஷனர் ஆபீசுக்கு கூட்டிட்டுப்போய்... என்னோட அங்க அடையாளங்கள், விவரங்கள கேட்டு எழுதினார்கள். அப்போது ஒரு போலீஸ்காரர் "சாப்பிடுறீங்களா?'’எனக் கேட்க... “""இப்படியே நேரா ஜெயிலுக்கு கூட்டிட்டுப் போறேன்னு சொன்னால் இங்கேயே சாப்பிடுறேன். இல்ல என்னோட ஆட்கள எல்லாம் வெளியே விடுங்க நான் வீட்டுக்கு போய் சாப்பிட்டுக்கிறேன்''’எனச் சொல்லிவிட்டேன்.
வெளியூரில் மீட்டிங்கிற்காகப் போயிருந்த தலைவர் கலைஞருக்கு விஷயம் தெரிந்து... கலைஞர் சொல்லித்தான் எங்களை வெளியே விட்டார்கள்.
ஒண்ணும் இல்லாத விஷயத்த பெரிசு பண்ணி பேசுறதுக்கு நாலுபேர் இருக்கத்தானே செய்யுறாங்க. அதிலும் என்னைச் சுத்தி இருந்தவங்களுக்கு நான் நிம்மதியா இருந்தாலே பிடிக்காது. வேலு மிலிட்டரி ஹோட்டல் பிரச்சினையால் எனக்கும் சகோதரர் தளபதி ஸ்டாலினுக்கும் இடையே வருத்தம் ஏற்பட்டதா புரளியையும் கிளப்பினாங்க. ஆனா உண்மைய சொல்லணும்னா தளபதி அந்தப் பிரச்சினையில தலையிடவே இல்லை. இருந்தாலும் அந்த உண்மையை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருந்தது. அதனால 1990-91ல் நான் முதன்முதலில் தயாரித்த "தைமாசம் பூவாசம்'‘படத்திற்காக என் வீட்டில் நடந்த துவக்கவிழாவிற்கு தளபதி அவர்களை அழைத்தேன். அவரும் கலந்துகொண்டார். அதன்பிறகுதான் சிண்டு முடிஞ்சுவிட நினைத்தவர்கள்... தங்களோட புரளிபேசும் வாயை மூடுனாங்க.
(தலைவர் கலைஞரின் வார்த்தை விளையாட்டு)