(60) ராகுல் கேட்ட கேள்வி!
நான் அதி.மு.க. மீட்டிங்கில் பேசிவிட்டு... இரவு வீடு திரும்பும்போது... அண்ணா அறிவாலயம் எதிரே.... சிட் சாட்டில் என்னுடன் வருபவர்களோடு சேர்ந்து சாப்பிடுவேன்.
நைட் பத்தரை மணிக்கு மேல... வெறும் டிபன் சாப்பிட முடியுமா? இதையெல்லாம் நோட் பண்ணி... முதல்வர் புரட்சித்தலைவி அம்மாவுக்கு அனுப்பிவிட்டார்கள்.
இதேபோல... மெரீனா கடற்கரையில்... நானும், என்னுடன் வந்தவர்களும்... காரை நிறுத்திவிட்டு... சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது... இரவு பதினோரு மணியைத் தாண்டிவிட்டது.
ரவுண்ட்ஸ் வந்த ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர்... தன்னுடைய ஜீப்பில் அமர்ந்தபடியே... மைக் மூலம்... ‘"அங்க யாரு கூட்டமா இருக்கிறது... கிளம்புங்க'’என கடுமையாகச் சொன்னார்.
என்னுடன் இருந்த ஒரு நபர்... ‘"ராதாரவி சார் இருக்கார்'’எனச் சொல்ல...
"யாரா இருந்தாலும் அஞ்சு நிமிஷத்துல இடத்தை காலி பண்ணணும்'’என்றார் மைக்கில்.
கோபமான நான்... நேரே அந்த போலீஸ் ஜீப்புக்குப் போய்... மைக்கை எடுத்து... ""பத்து நிமிஷம் டைம் தர்றேன்... அதுக்குள்ள... இங்க இருக்க போலீஸ்காரங்க இடத்தை காலி பண்ணணும்''’என்றேன்.
நிலைமை ரொம்ப டென்ஷனாகிவிட்டது.
"சார்... பதினோரு மணிக்கு மேல பீச்ல இருக்கக்கூடாது. இது சட்டம்-ஒழுங்கு ரூல்'’என்றார்.
""முதல்லயே இப்படித் தன்மையா சொல்லீருக்கலாமே?''’என நானும் சொன்னேன்.
சமரசமாகி கிளம்பினோம்.
அப்போதைய சென்னை போலீஸ் கமிஷனர் விஜயகுமார், இதை முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டுபோனார்.
முதலமைச்சரை சந்திக்கச் சொல்லி எனக்குத் தகவல் வந்தது.
விஷயம் இதுதான் என்று தெரியாமல்... அம்மாவைப் போய்ப் பார்த்தேன்.
""ஒரு மாவட்டச் செலயாளர் என்கிட்ட ‘ராதாரவி மீட்டிங் பேசுறதுக்கு சம்பளம் அதிகமா கேட்கிறார்''னு சொன்னார். அவரே... ‘""ராதாரவிய வச்சு ஒரு கூட்டம் போட்டுட்டா... அந்த தாக்கம் ரொம்ப நாளைக்கு இருக்கு. ஆறு மாசத்துக்கு கூட்டம்போடத் தேவையில்லம்மா''னு சொன்னார். ‘""ஆறு மாசத்துக்கு வேற மீட்டிங் போடத் தேவையில்லேங்கிறபோது... ராதாரவிக்கு சம்பளம் கூடுதலா கொடுக்கலாமே''னு நான் சொன்னேன். ""நீங்க இப்ப சினிமாவுல பெரிசா சம்பாதிக்கிறீங்களா?னு தெரியல. வீடு ஏலப் பிரச்சினைலருந்து இப்பதான் மீண்டிருக்கீங்க. கட்சி மீட்டிங் மூலமா கிடைக்கிற வருமானத்த வீட்டுக்கு செலவு பண்ணுங்க. ஏன் தேவையில்லாம ஒரு கூட்டத்த உங்கக்கூட சேர்த்துக்கிட்டு... அவங்களுக்கும் செலவு பண்றீங்க. இவ்வளவு செலவு பண்ணலாமா?''’எனக் கேட்டபடி... சிட் சாட் பில்லை எடுத்து என்னிடம் காட்டினார் அம்மா.
""சேத்துப்பட்டுல எஸ்.எஸ்.சந்திரன் மீட்டிங் பேசிட்டு வந்தப்ப... சிலபேர் தகராறு பண்ணீட்டாங்கம்மா. அதுபோல ஏற்படக்கூடாதுனு பாதுகாப்புக்காக இவங்களையெல்லாம் கூட்டிப் போறேம்மா''’என்றேன் நான்.
""அதுக்காக... வருமானத்தையெல்லாம் இப்படி செலவு பண்றதா?''’’
""நான் கட்சிப்பணியில இருக்கிற வரைக்கும்... பொறுப்பா இருக்கேம்ம்மா. அதுக்குப் பிறகுதான்...''’’
""என்னை நீங்க முதலமைச்சரா... கட்சித் தலைவரா... பார்க்கவேணாம். உங்க மூத்த சகோதரியா சொல்றேன்...''’என்றார் அம்மா.
"புரட்சித்தலைவி' அப்படி அக்கறையோடு சொன்னதிலிருந்து... தினசரி... சுமார் ஒரு லிட்டர் குடித்துக்கொண்டிருந்த நான் இப்போது குடிப்பழக்கத்தையே விட்டுவிட்டேன். சிகரெட்டையும் விட்டு 14 வருஷங்கள் ஆச்சு.
இப்போது நான் விஜய் அவர்களின் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறேன். படப்பிடிப்பின்போது அந்தப் படத்தில் நடிக்கும் ஒருவர், என்னிடம் ""ராதாரவி சார்... பீச்ல ஒரு சம்பவம் ஞாபகம் இருக்கா?'' என்று கேட்டார்.
""ஆமா! ஒங்களுக்கு எப்படித் தெரியும்?'' என்றேன் நான்.
""நான்தான் அந்த இன்ஸ்பெக்டர்'' என்றார்... இப்போது ஓய்வுபெற்றுவிட்ட அவர்.
நான்காண்டு காலம் சைதாப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வாக என்னால் முடிந்தளவு நேர்மையாக செயல்பட்டேன். தி.மு.க. பிரமுகரான முன்னாள் மேயர் மா.சு. அவர்கள் பள்ளிக்கட்டடம் சம்பந்தமாக வைத்த கோரிக்கையைக்கூட நிறைவேற்றினேன். மாற்றுக்கட்சியினருடன் நான் பழகுவது அறிந்தும்... அம்மா அவர்கள் என்னை எதுவும் சொல்லவில்லை.
நான் பொதுவாக நிறைய புத்தகங்கள் படிப்பேன். சட்டசபையில் பேசுவதற்காக நிறைய புத்தகங்களை படித்து... அதிலிருந்து பொன்மொழிகளை எடுத்து... சட்டசபையில் பேசுவேன். என் பேச்சை பலமுறை அம்மா அவர்கள் விழுந்து விழுந்து சிரித்து ரசித்திருக்கிறார்.
ஒருமுறை இப்படி நான் உதாரணம் சொல்லி பேசிவிட்டு அமர்ந்ததும்... அம்மா அவர்கள் ஒரு குறிப்புச்சீட்டில், "அந்தப் புத்தகம் வேண்டும்'’என குறிப்பிட்டு அனுப்பினார்.
அந்தப் புத்தகத்தை கொண்டுபோய்... அவரின் வீட்டில் கொடுத்துவிட்டு வந்தேன்.
இரண்டு நாளில் அந்தப் புத்தகத்தை திரும்ப என்னிடம் கொடுத்தார்.
"புரட்சித்தலைவி' நிறைய புத்தகங்கள் படிப்பவர் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் "இவ்வளவு பெரிய புத்தகத்தை இரண்டு நாளில் திரும்பக் கொடுத்திருக்கிறாரென்றால்... படிக்காமல் சும்மா புரட்டியிருப்பார்...' என நினைத்தபடியே... புத்தகத்தைப் பிரித்துப் பார்த்தேன்.
புத்தகத்தின் தொடக்கத்திலிருந்து, கடைசிப் பக்கம் வரை... முக்கியமான இடங்களில் சிவப்பு மையால் அடிக்கோடிட்டிருந்தார்.
எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது.
என் அம்மாவோட மரணத்துக்கு "புரட்சித்தலைவி' அம்மா வருவாங்க என ரொம்ப எதிர்பார்த்தேன். ஆனா... அவங்க வரவில்லை. முதல்வராக இருந்த கலைஞர்... சிகிச்சை பெற்றிருந்ததால்... போனில் விசாரித்தார். எங்களுடைய தொகுதி எம்.எல்.ஏ. என்கிற முறையிலும், நட்பு ரீதியிலும் தளபதி மு.க.ஸ்டாலின் வந்தார்.
இதற்காக கோபாலபுரம் சென்று தலைவர் கலைஞரையும், அறிவாலயம் சென்று தளபதி அவர்களையும் சந்தித்து நன்றி தெரிவித்தேன்.
"ராதாரவி தி.மு.கவில் சேர்ந்திட்டார்' என பேசினார்கள்.
நானோ... அப்போது தி.மு.க.வில் சேரவில்லை. அ.தி.மு.க.விலிருந்து ஒதுங்கியிருந்தேன்.
"நீங்க காங்கிரஸில் சேரலாமே. ராகுல்காந்தியை சென்று சந்திக்கலாமே'’என நண்பர்கள் சொன்னார்கள்.
""என்னை வாழவைக்கிறது தமிழ் மொழி... தமிழ்நாடு. எனக்கு தேசிய அரசியல்ல விருப்பம் இல்லை''’எனச் சொல்லிவிட்டேன். ஆனாலும் ராகுல்காந்தியை சந்திக்கவேண்டிய ஒரு சூழ்நிலை அமைந்தது.
நடிகர் சங்க கட்டடத்தை இடித்துவிட்டு அந்த இடத்தில் புதிய கட்டடம் கட்ட முடிவு செய்தோம். அதற்காக நடிகர் சங்க தலைவராக இருந்த சரத்குமார் சாரிடம் சொல்லிட்டு, "சங்கத்தின் பொதுச்செயலாளர் என்ற முறையில் ராகுல்காந்தியை சந்தித்து அழைப்பிதழ் கொடுக்கலாம்' என டெல்லிக்குப் போனேன்.
அவரைப் பார்ப்பதற்கு முன்னாடி என்னுடைய விவரங்களைக் கேட்டு எழுதிக்கொண்டார்கள்.. என்னைப் பற்றிய விவரங்கள் தெரிந்ததும் உடனே பார்க்க நேரம் ஒதுக்கிக்கொடுத்தார்..
அந்தச் சந்திப்பில்... பெருந்தலைவர் காமராஜர் மீது எங்கள் குடும்பத்திற்கு இருந்த நட்பையும், புகைப்படங்களையும் காண்பித்தேன். ராகுல்காந்தி வியப்புடன் பார்த்து விசாரித்தார். "காங்கிரஸில் சேர வந்திருக்கிறீர்களா'’எனக் கேட்டார். நான் ""இல்ல சார்''’எனச் சொல்லிவிட்டு அழைப்பிதழைக் கொடுத்தேன்.
தமிழ்நாட்டோட அரசியல் நிலவரத்தைப் பற்றி என்னிடம் விசாரித்த ராகுல், "தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்ல யார் ஜெயிப்பா?'’எனக் கேட்டார்.
""அண்ணா தி.மு.க.தான் தேர்தல்ல ஜெயிக்கும்''“என பதில் சொன்னேன். அதற்கான காரணங்களையும் சொன்னேன்.
ராகுல்காந்தி என்னிடம் பேசும்போது அண்ணா தி.மு.க. பத்தி நிறைய விஷயங்களைக் கேட்டறிந்தார். அவருடைய பேச்சிலிருந்து நான் புரிந்துகொண்டது... "அண்ணா தி.மு.க. மீதும், புரட்சி த்தலைவி அம்மா மீதும் ராகுல்காந்திக்கு நல்ல மரியாதை இருந்தது' என்பதைத்தான்.
சென்னை திரும்பியதும் புரட்சித்தலைவியைப் பார்த்து இந்த விஷயத்தைச் சொன்னேன்.
ஆயினும் முன்புபோல் எனக்கு கட்சியில் முக்கியத்துவம் தரப்படவில்லை.
("நீங்க இப்படிச் செஞ்சா... புரட்சித்தலைவி அம்மாவுக்கு சிக்கல் வரும்'’என்றார்கள் என்னிடம்)
கணிப்புக்குப் பரிசு!
2011 சட்டமன்றத் தேர்தல். ""விஜயகாந்த் கட்சி எங்களுடன் கூட்டணியில் இருப்பதால்... நாங்கள் 204 இடங்களில் ஜெயிப்போம்''’என நான் பிரச்சாரம் செய்தேன்.
என் மகன் திருமணப் பத்திரிகை வைப்பதற்காக மலேசியா சென்று டத்தோஸ்ரீ சாமுவேல் அவர்களுக்கு பத்திரிகை வைத்தேன். அப்போது டத்தோஸ்ரீ என் நண்பர் சந்திரசேகரிடம்... ‘"ராதாரவிக்கு பைத்தியமா? 200 தொகுதிகளுக்கு மேல ஜெயிக்க முடியுமா தமிழ்நாட்டு அரசியல்ல..?'’ எனக் கேட்டார்.
ரிசல்ட் வந்தது... நான் சொன்னது போலவே.
அதிகாலை நான்கு மணிக்கு எனக்கு போன் செய்த டத்தோஸ்ரீ, "எப்படி இவ்வளவு கரெக்ட்டா சொன்னீங்க?'’எனக் கேட்டார்.
""28 வருஷம் தி.மு.க.வுல... 12 வருஷம் அ.தி.மு.க.வுல என்னோட அரசியல் அனுபவம். ஒவ்வொரு தேர்தல்லயும் மக்கள் மத்தியில ஜீப்புல நின்னு... நின்னு... பழகிப்போச்சு. அந்த அனுபவம்தான்''’ என்றேன்.
என் மகன் திருமணத்திற்கு வந்து தாலி எடுத்துக்கொடுத்த டத்தோஸ்ரீ... ஒரு பரிசைக் கொடுத்து... ‘"இது ராதாரவியோட ஸ்டேட்டஸுக்கான பரிசு'’எனச் சொன்னார்.