(59)மாமா எம்.பி; நான் எம்.எல்.ஏ!
நானும் எஸ்.எஸ்.மாமாவும் (நடிகர் எஸ்.எஸ்.சந்திரன்) அண்ணா தி.மு.க.வுக்கு வந்ததுக்கு அப்புறம் 2001 சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.
எங்க ரெண்டு பேருக்கும் பிரச்சார டூர் போட்டுத் தந்தார் கள். நான் ஒரு பக்கம், எஸ்.எஸ். மாமா ஒரு பக்கம்... போட்டி போட்டுக்கொண்டு பிரச்சாரம் செய்தோம். ’சூறாவளி பிரச்சாரம்... சூறாவளி பிரச்சாரம்’ எனச் சொல் வார்களே, அதை நாங்கள் இருவரும் செய்தோம். நாங்க போகாத ஏரியாவே இல்லை என்பதுபோல 234 தொகுதிகளிலும் ஓட்டு வேட்டையாடினோம். அண்ணா தி.மு.க அமோக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. அந்த வெற்றியில் எங்களுக்கும் பங்கு உள்ளது என்றே சொல்லலாம்..
புரட்சித்தலைவி ஜெயலலிதா அம்மா முதலமைச்சராக பதவியேற்றாங்க. இந்தக் காலகட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யை தேர்வு செய்யவேண்டியிருந்தது.
அப்போது அண்ணா தி.மு.க.வில் முக்கிய நபராக இருந்த பாஸ்கரன் சார், என்னிடம்... "உங்க ரெண்டுபேர்ல யாராவது ஒருத்தரதான் எம்.பி.யாக்க முடியும்'“எனச் சொன்னார். உடனே நான், ""எஸ்.எஸ். சந்திரனையே எம்.பி.யாக்குங்க''’எனச் சொன்னேன்.
"எஸ்.எஸ்.மாமாவுக்கு வயசாகிடுச்சி. அவரால அதுக்கு மேல ஓடியாடி அரசியல் பண்ண முடியாது. ரொம்ப வருஷமா அரசியல்ல இருக்க அவருக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கணும்'’என நான் நினைத்தேன்.
அதுமட்டுமில்லை... அந்த நேரத்தில் எஸ்.எஸ். மாமா ரொம்ப கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தார். மாதாமாதம் நான் அவரோட குடும்பத்துக்கு உதவி செய்துகொண்டிருந்தேன். என்னோட அம்மா தனலட்சுமியம்மாள் தன்னோட நகையை அட மானம் வைத்து எஸ்.எஸ்.மாமாவுக்கு 25 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து உதவி
(59)மாமா எம்.பி; நான் எம்.எல்.ஏ!
நானும் எஸ்.எஸ்.மாமாவும் (நடிகர் எஸ்.எஸ்.சந்திரன்) அண்ணா தி.மு.க.வுக்கு வந்ததுக்கு அப்புறம் 2001 சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.
எங்க ரெண்டு பேருக்கும் பிரச்சார டூர் போட்டுத் தந்தார் கள். நான் ஒரு பக்கம், எஸ்.எஸ். மாமா ஒரு பக்கம்... போட்டி போட்டுக்கொண்டு பிரச்சாரம் செய்தோம். ’சூறாவளி பிரச்சாரம்... சூறாவளி பிரச்சாரம்’ எனச் சொல் வார்களே, அதை நாங்கள் இருவரும் செய்தோம். நாங்க போகாத ஏரியாவே இல்லை என்பதுபோல 234 தொகுதிகளிலும் ஓட்டு வேட்டையாடினோம். அண்ணா தி.மு.க அமோக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. அந்த வெற்றியில் எங்களுக்கும் பங்கு உள்ளது என்றே சொல்லலாம்..
புரட்சித்தலைவி ஜெயலலிதா அம்மா முதலமைச்சராக பதவியேற்றாங்க. இந்தக் காலகட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யை தேர்வு செய்யவேண்டியிருந்தது.
அப்போது அண்ணா தி.மு.க.வில் முக்கிய நபராக இருந்த பாஸ்கரன் சார், என்னிடம்... "உங்க ரெண்டுபேர்ல யாராவது ஒருத்தரதான் எம்.பி.யாக்க முடியும்'“எனச் சொன்னார். உடனே நான், ""எஸ்.எஸ். சந்திரனையே எம்.பி.யாக்குங்க''’எனச் சொன்னேன்.
"எஸ்.எஸ்.மாமாவுக்கு வயசாகிடுச்சி. அவரால அதுக்கு மேல ஓடியாடி அரசியல் பண்ண முடியாது. ரொம்ப வருஷமா அரசியல்ல இருக்க அவருக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கணும்'’என நான் நினைத்தேன்.
அதுமட்டுமில்லை... அந்த நேரத்தில் எஸ்.எஸ். மாமா ரொம்ப கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தார். மாதாமாதம் நான் அவரோட குடும்பத்துக்கு உதவி செய்துகொண்டிருந்தேன். என்னோட அம்மா தனலட்சுமியம்மாள் தன்னோட நகையை அட மானம் வைத்து எஸ்.எஸ்.மாமாவுக்கு 25 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து உதவி செய்திருக்கிறார்கள். அதனால "எஸ்.எஸ்.மாமா எம்.பி.யாகிவிட்டால் அவரோட குடும்பம் நல்லா இருக்கும். எம்.பி.க்கான சம்பளம் அவரோட குடும்பத்துக்கு உதவியாக இருக்கும்'’என்பதால் பாஸ்கரன் சாரிடம் நான் அவ்வாறு சொன்னேன்.
எஸ்.எஸ்.மாமா எம்.பி. ஆனார்.
முதன்முதலில் டெல்லிக்கு, பாராளுமன்றத்துக்கு கிளம்பும் போது... எஸ்.எஸ்.மாமாவுக்கு என் செலவில் இரண்டுசெட் சூட் தைத்துக் கொடுத்தேன். ஷூ, டை, பெல்ட் எல்லாம் வாங்கிக் கொடுத்து... நல்ல மரியாதை செய்து, அவரை மிகசந்தோஷமாக ஏர்போர்ட்டுக்குப் போய் வழி அனுப்பிவிட்டு வந்தேன்.
(எஸ்.எஸ்.மாமா கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில்... என்னுடைய நண்பர் என்பதால் என் தாய், தன்னோட நகைய அடமானம் வைத்து பணம் கொடுத்து உதவியதுடன்.. அவரை தன்னோட மக னாகவே பாவிச்சாங்க என் அம்மா. ஆனால்... என் னோட அம்மா இறந்தபோது... அவர் வரவில்லை. அது எனக்கு ரொம்ப வேதனையாக இருந்தது)
எஸ்.எஸ்.மாமா எம்.பி.ஆனதற்குப் பிறகு... நான் தொடர்ந்து சினிமாவில் நடித்துக்கொண்டிருந் தேன். அண்ணா தி.மு.க. மீட்டிங்குகளில் கலந்துகொண்டு பேசிவந்தேன்.
அஜித் சாரோட ’"ராஜா'’பட ஷூட்டிங்கிற் காக ஊட்டியில் இருந்தேன். (என் தங்கை ரதிகலா வின் கணவர் குமாருக்கு நல்ல நண்பர் அஜித் சார்)
அப்போது கட்சி ஆபீஸில் இருந்து எனக்கு போன் வந்தது. "அம்மா உங்கள அவசரமா வரச் சொல்லீருக்காங்க... உடனே புறப்பட்டு வாங்க'’எனச் சொன்னார்கள்.
ஷூட்டிங் ரொம்ப டைட் ஷெட்யூலில் நடந்து கொண்டிருந்தது. நான் பாதியில கிளம்பவேண்டிய நிர்பந்தம். "என்ன செய்யுறது?'’ என நான் தவிப்போட இருந்தபோது... விஷயத்தைக் கேள் விப்பட்டு அஜித் சார் என்னிடம் வந்து, ""சார் நீங்க உடனே கிளம்பி சென்னைக்கு போங்க. ஒருநாள்தானே... எப்படியாவது சமாளிச்சுக் கிறோம். மேடம் அவசரமா கூப்பிட்டிருக்காங்கன்னா... ஏதாவது முக்கியமான விஷய மாத்தான் இருக்கும். கண்டிப்பா நல்ல செய்தியா சொல்வாங்க. நீங்க தாமதிக்காம கிளம்புங்க சார்''’எனச் சொன்னதுடன் என்னை வழியனுப்பி வைத்ததும் அஜித் சார்தான்.
கோவை வந்து விமானம் மூலம் சென்னை வர விமானம் கிடைக்காத தால்... காரில் கிளம்பினேன்.
அடுத்தநாள் புரட்சித்தலைவி அம்மாவை சந்தித்தேன்.
""சைதாப்பேட்டை இடைத்தேர்தல்ல நீங்க போட்டியிடணும்''“என அம்மா என்னிடம் சொன்னாங்க.
எனக்கு அது வியப்பாகவும், இன்ப அதிர்ச்சியாகவும்... கூடவே தயக்கமாகவும் இருந்தது.
""எனக்கு எதுக்குங்க அம்மா... கட்சியில எத்தனையோ சீனியர்ஸ் இருக்காங்க... அவங்கள்ல யாருக்காவது சீட் கொடுங்கம்மா''’என நான் சொன்னேன். பொதுவாக... அந்தமாதிரி எல்லாம் பேசினால் அம்மாவுக்குப் பிடிக்காது. அவங்களுக்கு கோபம் வந்துவிடும்.
(ஒருமுறை புரட்சித்தலைவி அம்மா, என்னிடம் “"என்னை முதலமைச்சர், கட்சி தலைவர்னு பார்க்காதீங்க. உங்க குடும்பத்துல ஒருத்தியா உங்களோட சகோதரியா நினைச்சிக்குங்க'’எனச் சொல்லியிருக்காங்க. அதனால் அவங்ககிட்ட நான் உரிமையோடு பேசுவேன். மற்றவங்க யாரும் அம்மாகிட்ட அப்படி பேசமுடியாது. எந்தச் சந்தர்ப்பத்துல அப்படிச் சொன்னாங்க? என்பதை அடுத்துச் சொல்றேன்.)
நான் அப்படிச் சொன்னபோதும்... என்னிடம் பொறுமையாக... ""நான் சொல்றேன்ல. நீங்க போங்க நான் பாத்துக் கிறேன். தேர்தல்ல நீங்க தான் போட்டியிடணும்'' எனச் சொன்னாங்க.
""சரிங்கம்மா''’என்றேன்.
""அப்புறம்... இப் போதைக்கு இந்த விஷ யம் வெளியில தெரிய வேண்டாம். உங்க தாயாருக்குக்கூட தெரியவேண்டாம்''’என்றார்.
""சரிங்கம்மா''’எனச் சொல்லிவிட்டு வந்தேன்.
மறுபடி ஊட்டிக்கு காரில் கிளம்பினேன்...
கண்களை மூடி யோசித்துக்கொண்டிருந்த எனக்கு, அந்தச் சம்பவம் மனதில் பளிச்செனப் பட்டது.
அப்போது நான் தி.மு.க.காரன். தலைவர் கலைஞர் ஆட்சி நடந்துகொண்டிருந்தது. அண்ணன் பழனிவேல்ராஜன் சபாநாயகராக இருந்தார். அவரைப் பார்க்க நானும், எனது நண்பரும், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் யூனியன் நிர்வாகியுமான கே.ஆர். செல்வராஜும் தலைமைச் செயலகத்துக்குப் போனோம். அந்த நேரம் சட்டசபை நடந்துகொண்டிருந்தது.. நாங்கள் இருவரும் சட்டசபை அரங்கம் வழியாக போகும்போது... யாரோ ஒருவர் சட்டப்பேரவை கதவைத் திறந்தார். அப்போது சட்டப்பேரவை இயங்கிக்கொண்டு இருந்ததையும், அங்கு எம்.எல்.ஏ.க்களும், அமைச்சர்களும் உட்கார்ந்து இருந்ததையும் ஒரு நிமிடம் பார்த்தோம்.
அப்போது கே.ஆர்.செல்வராஜ்... ""அண்ணே... உங்க வாழ்நாள்ல எப்படியாவது இந்த அசெம் பிளியில நீங்க போய் உட்காரணும்ணே''“எனச் சொன்னார். உடனே நான் விளையாட்டாக... ""கூடிய சீக்கிரம் அது நடக்கும்டா தம்பி''’எனச் சொல்லிச் சிரித்தேன்.
அன்னைக்கு நான் விளையாட்டா சொன்ன வார்த்தையை உண்மையாக்கிக்கிட்டிருக்காரே... காட்டினது புரட்சித் தலைவி அம்மா... என வியந்தபடியே பயணித்தேன். மறுபடி ஊட்டி யில் "ராஜா' பட ஷூட்டிங்கில் கலந்து கொண்டேன்.
அப்போது அஜித் சார் ""சென்னைக்கு போனீங்களே... நல்ல விஷயம்தானே...?''’என கேட்டார்.
""ஆமாம்...'' என்றேன். ஆனால்... புரட்சித் தலைவி கட்டளையிட்டதால் விஷயத்தைச் சொல்லவில்லை. அஜித் சாரும்... என்னிடம் ‘"என்ன விஷயம்?'’ என கேட்கவும் இல்லை.
நடிகனாக மட்டும் இருந்த ராதாரவிய எம்.எல்.ஏ. ஆக்கி அழகு பார்த்தது... அவங்கதான். அவங்களுக்கு இப்பவும் நான் நன்றி சொல்லிக் கிறேன்.
அண்ணா தி.மு.க. கட்சியில் மட்டும் பார்க்க முடிந்த ஒரு விஷயம் அது.
அம்மா கட்சி ஆபீஸுக்கு... கட்சி தொடங்கிய நாள், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள்... இப்படி முக்கியமான தினங்களில் வந்து எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிப்பார். நான் கட்சியில் சேர்ந்த சமயம்... எம்.ஜி.ஆர். சிலையருகே போடப்பட்ட மேடையில் அம்மாவின் பக்கத்தில் நானும் நின்றேன். அந்த ஒருதடவைதான். அதன்பின்... கட்சி அலுவலகத்திற்குள் நுழையும் வழி அருகே போய் நின்றுவிடுவேன்.
அதிலும் அடிக்கிற மாதிரியான கலர் சட்டை அணிந்து நிற்பேன். எல்லோரும் வெள்ளைச் சட்டையில் இருக்க... நான் மட்டும் தனித்துத் தெரிவேன் கூட்டத்தில். இதை ஓரிருமுறை கவனித்தவர்... அடுத்தொருமுறை நான் இப்படி நின்றபோது... அலுவலகத்திற்குள் சென்றுவிட்டு வெளியே வந்த அம்மா... ""என்ன ரவி... ஏன் ஸ்டேஜ் பக்கம் வராம தூரமா ஒதுங்கி நிற்கிறீங்க?''’எனக் கேட்டார்.
""ரொம்ப தள்ளுமுள்ளுவா இருக்கும்மா... இடிக்கிறாங்கம்மா...''’என்றேன்.
சிரித்துவிட்டார்.
நான் அவரின் கவனம் ஈர்க்க போட்ட கலர்ச்சட்டை... நான் நினைத்தபடியே அவரின் கவனத்தை ஈர்த்தது.
இப்படி அம்மா என்னிடம் பேசிவிட்டுச் சென்றதும்... கட்சி நிர்வாகிகள் பலரும் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்.
"அம்மா என்ன சொன்னாங்க?'’என கேட்டு நச்சரித்துவிட்டார்கள்.
இப்படி யாரிடமாவது அம்மா பேசினால்... "அவர் அம்மாவுக்கு வேண்டப்பட்டவர்' என்கிற மனோபாவம் அ.தி.மு.க.வில் அதிகமாக உண்டு.
(ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் மது குடித்துக்கொண்டிருந்த நான்... அதை விட்டொழித்தேன். காரணம்....)