(58) ஆளுங்கட்சியிலிருந்து எதிர்க்கட்சிக்கு...
1991-ல் அண்ணா தி.மு.கழகம் ஆட்சியைப் பிடித்தது. முதன்முறையாக புரட்சித்தலைவி ஜெயலலிதா அம்மா அவர்கள் முதலமைச்சரானார்.
அந்தசமயம்... மெட்ராஸ் யூனிவர்சிட்டி நூற்றாண்டு அரங்கத்தில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனமான ஃபெஃப்சி சார்பில் ஜெயலலிதா அம்மாவுக்கு பாராட்டுவிழா நடந்தது. தென்னிந்திய நடிகர்சங்க தலைவராகவும், ஃபெஃப்சி தொழிலாளர் அமைப்பின் உபதலைவராகவும் இருந்த எனக்கும் அந்த விழாவில் கலந்துகொள்ள அழைப்பு வந்தது. நான் அப்போது தி.மு.கழகத்தில் இருந்தபோதும்... விழாவில் கலந்துகொண்டேன். "தி.மு.க.காரன் என்பதால், நமக்கு எப்படி மரியாதை இருக்குமோ?'’என நான் தயக்கத்துடன் சென்றேன். ஆனால்... முதலமைச்சர் இருக்கைக்கு அருகில் எனக்கு இருக்கை போடப்பட்டு இருந்தது.
முதல்வர் வந்ததும்... அப்போது ஃபெஃப்சியின் தலைவராக இருந்த மோகன்காந்திராமன்... மற்றவர்களை முதல்வருக்கு அறிமுகப்படுத்தி வைத்தபோது... "இவர்தான் அம்மா ராதாரவி'’என என்னை அறிமுகம் செய்து வைத்தார்.
""எனக்குத் தெரியாதா இவர்தான் ராதாரவி''னு’என அம்மா சொல்ல... நான் உடனே ""வணக்கம் அம்மா''’என்றேன். அதை ஏற்றுக்கொண்டு அவரும் வணக்கம் தெரிவித்தார்.
அந்த நிகழ்ச்சியில தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் எனக்கு பேச அனுமதி கொடுத்தார்கள். நானும் மேடையில பேசினேன். அப்போது... ""அம்மா... உங்களோட பார்வை படுற இடமெல்லாம் வெற்றியாக இருக்கிறது. நீங்க நடிகர்சங்க ஆயுட்கால உறுப்பினராக இருக்கிறீர்கள் அம்மா. தென்னிந்திய நடிகர் சங்கத்தோட ஆயுட்காலத்த நீங்கதான் காப்பாற்ற வேண்டும்''’என நடிகர் சங்கத்தின் கடன் விவகாரத்தை சூசகமாகச் சொன்னேன்.
அதன்பிறகு...
அண்ணா தி.மு.கழக ஆட்சியில அம்மா முதலமைச்சராக இருந்தபோது, திரைத் தொழிலாளர்களுக்கு பள்ளிக்கரணையில் வீட்டுமனை... இடம் ஒதுக்கீடு பண்ணினார்கள். அதற்காக அம்மாவைப் பாராட்டி ஒரு விழா ஏற்பாடு செய்தோம். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில்தான் இந்த நிகழ்ச்
(58) ஆளுங்கட்சியிலிருந்து எதிர்க்கட்சிக்கு...
1991-ல் அண்ணா தி.மு.கழகம் ஆட்சியைப் பிடித்தது. முதன்முறையாக புரட்சித்தலைவி ஜெயலலிதா அம்மா அவர்கள் முதலமைச்சரானார்.
அந்தசமயம்... மெட்ராஸ் யூனிவர்சிட்டி நூற்றாண்டு அரங்கத்தில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனமான ஃபெஃப்சி சார்பில் ஜெயலலிதா அம்மாவுக்கு பாராட்டுவிழா நடந்தது. தென்னிந்திய நடிகர்சங்க தலைவராகவும், ஃபெஃப்சி தொழிலாளர் அமைப்பின் உபதலைவராகவும் இருந்த எனக்கும் அந்த விழாவில் கலந்துகொள்ள அழைப்பு வந்தது. நான் அப்போது தி.மு.கழகத்தில் இருந்தபோதும்... விழாவில் கலந்துகொண்டேன். "தி.மு.க.காரன் என்பதால், நமக்கு எப்படி மரியாதை இருக்குமோ?'’என நான் தயக்கத்துடன் சென்றேன். ஆனால்... முதலமைச்சர் இருக்கைக்கு அருகில் எனக்கு இருக்கை போடப்பட்டு இருந்தது.
முதல்வர் வந்ததும்... அப்போது ஃபெஃப்சியின் தலைவராக இருந்த மோகன்காந்திராமன்... மற்றவர்களை முதல்வருக்கு அறிமுகப்படுத்தி வைத்தபோது... "இவர்தான் அம்மா ராதாரவி'’என என்னை அறிமுகம் செய்து வைத்தார்.
""எனக்குத் தெரியாதா இவர்தான் ராதாரவி''னு’என அம்மா சொல்ல... நான் உடனே ""வணக்கம் அம்மா''’என்றேன். அதை ஏற்றுக்கொண்டு அவரும் வணக்கம் தெரிவித்தார்.
அந்த நிகழ்ச்சியில தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் எனக்கு பேச அனுமதி கொடுத்தார்கள். நானும் மேடையில பேசினேன். அப்போது... ""அம்மா... உங்களோட பார்வை படுற இடமெல்லாம் வெற்றியாக இருக்கிறது. நீங்க நடிகர்சங்க ஆயுட்கால உறுப்பினராக இருக்கிறீர்கள் அம்மா. தென்னிந்திய நடிகர் சங்கத்தோட ஆயுட்காலத்த நீங்கதான் காப்பாற்ற வேண்டும்''’என நடிகர் சங்கத்தின் கடன் விவகாரத்தை சூசகமாகச் சொன்னேன்.
அதன்பிறகு...
அண்ணா தி.மு.கழக ஆட்சியில அம்மா முதலமைச்சராக இருந்தபோது, திரைத் தொழிலாளர்களுக்கு பள்ளிக்கரணையில் வீட்டுமனை... இடம் ஒதுக்கீடு பண்ணினார்கள். அதற்காக அம்மாவைப் பாராட்டி ஒரு விழா ஏற்பாடு செய்தோம். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில்தான் இந்த நிகழ்ச்சி நடந்தது. இப்பவும் நான் தி.மு.கழகத்துலதான் இருந்தேன்.
முதலமைச்சர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி என்பதால் புரோட்டக்கால்படி... நிகழ்ச்சி நிரலையும் அதில் பங்கு கொள்கிறவர்களின் விவரங்களையும் முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும். அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பொறுப்பை நான் ஏற்றேன். எனக்கு உதவியாக நடிகர் சங்க நிர்வாகியான கே.ஆர்.செல்வராஜை வைத்துக்கொள்ள அனுமதி கேட்டேன். "நடிகர் சங்கம் சார்பில் ரஜினி பேசுவார்' என்றும் தெரிவித்தேன். எல்லாவற்றையும் அம்மா அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.
நடிகர் சங்கம் சார்பில் ரஜினி சாரை பேசவைக்க நான் நினைத்ததற்கு முக்கிய காரணம் இருந்தது.
ரஜினிசாருக்கும் புரட்சித் தலைவி அம்மாவுக்கும் ஏதோ ஒருசில பிரச்சினைகள் இருப்பதா அப்போ ஒரு பேச்சு இருந்தது.
வெளிநாட்டில் இருந்த ரஜினி சாரை தொடர்புகொண்டு... நிகழ்ச்சியைப்பற்றி தெரிவித்ததுடன் “""நிகழ்ச்சிக்கு நீங்க வாங்க. நான்தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போறேன். அப்ப முதலமைச்சருக்கு பூங்கொத்து கொடுக்கச் சொல்றேன். நடிகர் சங்கம் சார்பில் நீங்க பேசுங்க. உங்களுக்கும், முதல்வருக்கும் பிரச்சினைனு வர்ற பேச்சுகளுக்கு ஒரு முற்றுப்புள்ளியா இது அமையும்...''’என நான் சொன்னேன். ரஜினியும் நிகழ்ச்சிக்கு வந்தார்.
நிகழ்ச்சியின்போது... “""நடிகர் சங்கம் சார்பில் ரஜினி சார், முதலமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்து மேடையில பேசுவார்''’எனச் சொன்னேன். அதேமாதிரி ரஜினி சார் முதலமைச்சர் அம்மாவுக்கு பூங்கொத்து கொடுத்து நிகழ்ச்சியில பேசினார்.. மேடையில ரஜினிசார் பேச்சு எல்லோரையும் வெகுவாக கவர்ந்தது. நிகழ்ச்சியில ஒரே கைதட்டல், சிரிப்பொலிதான். அம்மா உட்பட நிகழ்ச்சியில கலந்துகிட்டவங்க எல்லாரும் கலகலப்பாகிவிட்டார்கள்.
(அந்த மேடையில் ரஜினி சார் பேசியிருக்காவிட்டால்... "ரஜினிக்கும், ஜெயலலிதா அம்மாவுக்கும் இடையே காம்ப்ரமைஸ் ஆகியிருக்காது' என்றுதான் சொல்லுவேன்)
அந்த நிகழ்ச்சியில நான் பேசும்போது... மறுபடி நடிகர் சங்க கடன் பிரச்சினையைத்தான் பேசினேன். அப்பவும் ""நடிகர் சங்க ஆயுட்கால உறுப்பினர் அம்மா நீங்க. தென்னிந்திய நடிகர் சங்கத்தோட ஆயுட்காலத்த நீங்கதான் காப்பாற்றணும். நாங்க ஒரு ஷோ நடத்துறோம். நீங்க தலைமை தாங்கினா... கடனை அடைச்சிடுவோம்''’என பேசினேன்.
முதலமைச்சர் அம்மா தனது ஏற்புரையில்... ""எப்போ பார்த்தாலும் ராதாரவி, என்னை "ஆயுட்கால உறுப்பினர், ஆயுளை காப்பாத்துங்கனு சொல்றாரு'’எனச் சொல்லிச் சிரித்துவிட்டு, ""நிச்சயமா நடிகர் சங்கத்துக்கு நான் ஏதாவது செய்வேன்''’என அறிவித்தார்.
நிகழ்ச்சியை முடிச்சிட்டு அம்மா கிளம்பிச் சென்றார்.
சில நிமிடங்களில்... முதல்வரின் பி.எஸ்.ஓ. ஒருவர் ஓடிவந்து...“"சார் உங்கள சி.எம். மேடம் கூப்பிடுறாங்க'’எனச் சொல்ல... உடனே நான் தலைதெறிக்க ஓடினேன். யூனிவர்சிட்டி அரங்கத்துக்கு பின்னாடி வழியாக மேடைவரை முதலமைச்சர் கார் வர ஏற்பாடு செய்திருந்தோம். அந்த இடத்துக்கு ஓடிப்போய் பார்த்தேன். காரில் முதலமைச்சர் இருந்தாங்க. கார் கதவு மூடப்படவில்லை.
""ஒண்ணும் கவலப்படாதீங்க. ரெண்டு மாதத்துல தேதி தரேன்''’எனச் சொல்லிவிட்டுக் கிளம்பினார்.
(நடிகர் சங்கத்தோட கடனைத் தீர்க்க கிரிக்கெட் போட்டி நடத்த முடிவு செய்திருந்தோம். அதுக்காக தேதி தரேன்னு முதலமைச்சர் சொன்னாங்க. ஆனா சில சூழ்நிலைகளால அது நடக்காமப் போச்சு.)
தி.மு.கழகத்தில் சிலரால் எனக்கு வருத்தம் இருந்த சமயம்...
1999-ல் நான் என்னோட பெரிய அக்காவைப் பார்க்க அமெரிக்காவில் இருக்கிற நியூ ஆர்லியன்ஸுக்கு போய்விட்டேன். அந்தச் சமயம் இங்கே எம்.பி. எலெக்ஷன் அறிவிப்பு. அங்கிருந்தபடி தமிழக அரசியல் நிலவரத்தை கவனித்தபடி... "அடுத்து என்ன செய்யலாம்?'’என யோசித்துக்கொண்டிருந்தேன்.
(எனக்கென்று பெரிய கூட்டம் கிடையாது. வழக்கமா எல்லாரும் வந்து, "என்ன செய்யலாம் எப்படி செய்யலாம்?'’என என்கிட்ட ஐடியா கேட்பாங்க. நான்தான் அடுத்தவங்களுக்கு யோசனை சொல்வேன். நான் யார்கிட்ட போய் யோசனை கேட்பது? எனக்குப் பின்னாடி பெரிய அளவுக்கு கூட்டம் இல்லை என்றாலும், இருப்பவர்கள் எல்லாரும் உண்மையானவர்கள். நான் எடுக்கிற முடிவுக்கு கட்டுப்பட்டு என் பின்னாடி வருகிறவர்கள்தான்.)
நியூ ஆர்லியன்ஸில் இருக்கிற பல இடங்களைச் சுற்றிப் பார்த்தேன். அப்போது கோயம்புத்தூரைச் சேர்ந்த... டப்பிங் ஆர்டிஸ்ட் யூனியன்ல இருந்தவங்க... நியூயார்க்கில இருந்தாங்க. அவங்க ரொம்ப வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவங்க. காங்கிரஸ் மகளிர் பிரிவுல இருந்தாங்க. காங்கிரஸில் அவங்களுக்கு நல்ல செல்வாக்கு. அதனால் “"தி.மு.கழகத்துல இருந்து விலகி காங்கிரஸ்ல சேருங்க'’எனச் சொல்லி என்னை வற்புறுத்தினாங்க. காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி அவர்களின் பி.ஏ. ஜார்ஜை சந்திக்கச் சொன்னாங்க.
""என்னைப் பார்க்கவே தமிழ்நாட்டுல நிறையபேர் இருக்காங்க. நான்போய் ஜார்ஜை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை''’என என்னோட பாணியில சொல்லிவிட்டேன். அதற்கு அப்புறம் காங்கிரஸில் என்னை சேர்க்கும் முயற்சியை அவங்க விட்டுட்டாங்க.
அது என்னமோ தெரியவில்லை... பெருந்தலைவர் காமராஜருக்கு அப்புறம் காங்கிரஸ் மேல் அவ்வளவா எனக்கு ஈர்ப்பு இல்லை.
1999-ல் எம்.பி. தேர்தல் சூடு பிடித்திருந்தது. நான் சென்னைக்கு திரும்பி வந்தேன். நான் அமெரிக்காவில் இருந்த நேரத்தில் எஸ்.எஸ். மாமாவுக்கும் (நடிகர் எஸ்.எஸ்.சந்திரன்) ம.தி.மு.கழக தலைமையோடு ஏதோ மனக்கசப்பு ஏற்பட்டிருந்தது. நான் சென்னைக்கு வந்ததுக்கு அப்புறம் எஸ்.எஸ். மாமா... ""நான் அ.தி.மு.க.வுல சேரப்போறேன் மாப்ள''’எனச் சொன்னார். நானும் அந்த மூடில்தான் இருந்தேன்.
உடனே எஸ்.எஸ். மாமா அண்ணா தி.மு.க.வில் இருக்கிற முக்கிய நபர்களைப் பார்த்துப் பேசினார். ஆனா நான், யார்கிட்டேவும் பேசவில்லை. "பொறுத்தார் பூமி ஆள்வார்'’எனச் சொல்வாங்க. அதுமாதிரி அமைதியாக இருந்தேன்.
தலைமைக்கு நெருக்கமானவர்கள் மூலமா விஷயம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கவனத்திற்குப் போனது. அப்போது அம்மா மதுரையில சுற்றுப்பயணம் செய்துகொண்டிருந்தார்.“"அண்ணா தி.மு.கவுல சேர ராதாரவிக்கு விருப்பமான்னு கேளுங்க'’ என அம்மா சொல்லியிருக்காங்க.
"ராதாரவி, எஸ்.எஸ்.சந்திரன் ரெண்டு பேருக்குமே கட்சியில சேர விரும்பம்தான்'னு சொல்லப்பட்டதால் அம்மா சம்மதம் தெரிவித்தார்கள்
உடனே எனக்கும் எஸ்.எஸ். மாமாவுக்கும் மதுரைக்கு ஃப்ளைட் டிக்கெட் போட்டுக் கொடுத்தார்கள். நாங்க ரெண்டுபேரும் மதுரைக்குப் போனோம்.
அடுத்த நாள் சங்கம் ஓட்டலில் அம்மாவைப் பார்த்து கட்சியில் இணைவதாக இருந்தது. ஆனால் "தாமரைக்கனியால் ஏதோ சில குழப்பம் ஏற்பட்டதால் ’அம்மா கோபமா இருக்காங்க, நாளைக்கு அவங்களைப் பார்க்கலாம்' என நிர்வாகிகள் சொன்னார்கள். அம்மா அறைக்கு அருகிலேயே எங்களுக்கு ஒரு அறை கொடுத்து தங்கச் சொன்னார்கள்.
மறுநாள்... அம்மா சிவகாசிக்கு கிளம்பிவிட்டார். எங்களையும் அவங்களோட கான்வாயில் வரச்சொல்லிவிட்டதால்... அதன்படி சிவகாசி சென்றோம். அங்கே பிரச்சார மேடையில் அம்மாவை சந்தித்தோம்.
அப்புறம் எஸ்.எஸ். மாமா, அம்மாவுக்கு சால்வை கொடுத்தார்.
""அம்மா... நான் என் கையால உங்களுக்கு சால்வை அணிவிக்கணும்மா''’என்றேன். அம்மா அனுமதி கொடுத்தார்கள். சால்வையை அவர்களுக்கு அணிவித்தேன். அம்மாவுடன் சசிகலாம்மாவும் இருந்தாங்க. அவங்களுக்கும் வணக்கம் சொன்னேன்.
தி.மு.கழகம்தான் அப்போது ஆளும் கட்சி. அ.தி.மு.க. எதிர்க்கட்சி. ஆளுங்கட்சியிலிருந்து எதிர்க்கட்சியில் சேர்ந்தது பலருக்கும் வியப்பைத் தந்தது.
"ராதாரவி, எஸ்.எஸ்.சந்திரன் பல்டி'’என சில பத்திரிகைகள் எழுதின. அண்ணா தி.மு.க.வில் சேர்ந்ததுக்கு அப்புறம் முதல்தடவை சென்னைக்கு வந்தபோது பத்திரிகையாளர்கள் என்னைச் சுற்றி வளைத்து "சார் நீங்க திடீர்னு பல்டி அடிச்சதுக்கு என்ன காரணம்?'“என கேட்டார்கள்.
""என்னங்க இது... ஒரு கட்சி, இன்னொரு கட்சியோட கூட்டணி வச்சா... கொள்கை, கூட்டணினு சொல்றீங்க. தனியொரு ஆள் கட்சி விட்டு வேறு கட்சிக்குப் போனா பல்டினு சொல்றீங்க. என்ன நியாயம் இது?''’என கேட்டேன். எல்லாரும் அமைதியாகிவிட்டார்கள்.
("அம்மா கூப்பிடுறாங்கன்னா... ஏதாவது முக்கியமான விஷயமா இருக்கும். நீங்க உடனே கிளம்புங்க'’ என என்னை அனுப்பிவைத்தார் அஜீத்)