சோத்துக்கட்சி! -கஸ்தூரி (37)

kasturi

டந்தவாரம் ஒரு பிறந்தநாளும், இறந்தநாளும் தலையங்கங்களில் இடம் பிடிச்சது.

பிப்ரவரி 24-ந் தேதி அம்மா ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள். அவங்க உண்மையாவே இருந்திருந்தா... இருக்க விருப்பப்பட்டிருப்பாங்களா?... அப்படீங்கிறது டவுட்டு.

தன்னோட கடைசி மூச்சுவரைக்கும் அவங்க எது எதுக்கெல்லாம் பாடுபட்டாங்களோ... அது எல்லாத்தையும் ஒட்டுமொத்தமா ஆப்போஸிட்டா மாத்திட்டாங்க. அடையாளமே தெரியாம மாத்திட்டாங்க.

அவ்வளவு ஏன்...

அந்தம்மா உருவத்தையே அடையாளம் தெரியாம மாத்திட்டாங்க.

kasturiபாவம், வெளியூர்ல இருக்கவங்களுக்கு... சென்னைல-அ.தி.மு.க. ஆபீஸ்ல திறந்து வச்ச அம்மாவோட சிலைய நேர்ல... கண்குளிர பார்க்குற பேறு கிடைச்சிருக்காது. அதனால நீங்க வருத்தப்படாதீங்க. அது அம்மா சிலைûயா இருந்தாத்தானே வருத்தப்படுறதுக்கு.

"அது யாரோட சிலை?'ங்கிறத கண்டுபிடிக்கிறதுக்கே விசாரணைக் கமிஷன் வைக்கணும்ங்கிற அளவுல இருக்கு. அது கண்டிப்பா அம்மா சிலைதான். ஆனா "யாரோட அம்மா?'ங்கிறதுலதான் விவாதம் நடந்துக்கிட்டிருக்கு.

ஆட்டக் கடிச்சு... மாட்டக் கடிச்சு... கடைசியில மனுஷனக் கடிச்ச கதையா...

ஏர்போர்ட்ல கூரை விழுந்தது. பஸ் ஸ்டாண்ட்ல சுவரு விழுந்தது. அப்பவெல்லாம்... "அதுக்கு குடுத்த பட்ஜெட்ல கமிஷன் போக துண்டு விழுந்திருச்சு'னு நினைச்சோம்.

இப்ப இந்த சிலையைப் பார்த்து என்ன நினைக்கிறது? "சிலை செஞ்சவருக்குத்தான் சரியா வரல'னு நினைச்சாலும்... "ஓ.கே... சூப்பர்'னு சொல்லி... அந்தச் சிலையைக் கொண்டுவந்து இனாகுரேட் பண்றாங்கன்னா... அப்ப அதுல ஒரு உள்நோக்கமோ... யாருக்காவது அனுகூலமோ இல்லாமலா இருந்திருக்கும்?

ஒரு கதை சொல்றேன்...

ஒரு குடியானவன் ஒரு கொழுத்த ஆட்ட சந்தையில வி

டந்தவாரம் ஒரு பிறந்தநாளும், இறந்தநாளும் தலையங்கங்களில் இடம் பிடிச்சது.

பிப்ரவரி 24-ந் தேதி அம்மா ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள். அவங்க உண்மையாவே இருந்திருந்தா... இருக்க விருப்பப்பட்டிருப்பாங்களா?... அப்படீங்கிறது டவுட்டு.

தன்னோட கடைசி மூச்சுவரைக்கும் அவங்க எது எதுக்கெல்லாம் பாடுபட்டாங்களோ... அது எல்லாத்தையும் ஒட்டுமொத்தமா ஆப்போஸிட்டா மாத்திட்டாங்க. அடையாளமே தெரியாம மாத்திட்டாங்க.

அவ்வளவு ஏன்...

அந்தம்மா உருவத்தையே அடையாளம் தெரியாம மாத்திட்டாங்க.

kasturiபாவம், வெளியூர்ல இருக்கவங்களுக்கு... சென்னைல-அ.தி.மு.க. ஆபீஸ்ல திறந்து வச்ச அம்மாவோட சிலைய நேர்ல... கண்குளிர பார்க்குற பேறு கிடைச்சிருக்காது. அதனால நீங்க வருத்தப்படாதீங்க. அது அம்மா சிலைûயா இருந்தாத்தானே வருத்தப்படுறதுக்கு.

"அது யாரோட சிலை?'ங்கிறத கண்டுபிடிக்கிறதுக்கே விசாரணைக் கமிஷன் வைக்கணும்ங்கிற அளவுல இருக்கு. அது கண்டிப்பா அம்மா சிலைதான். ஆனா "யாரோட அம்மா?'ங்கிறதுலதான் விவாதம் நடந்துக்கிட்டிருக்கு.

ஆட்டக் கடிச்சு... மாட்டக் கடிச்சு... கடைசியில மனுஷனக் கடிச்ச கதையா...

ஏர்போர்ட்ல கூரை விழுந்தது. பஸ் ஸ்டாண்ட்ல சுவரு விழுந்தது. அப்பவெல்லாம்... "அதுக்கு குடுத்த பட்ஜெட்ல கமிஷன் போக துண்டு விழுந்திருச்சு'னு நினைச்சோம்.

இப்ப இந்த சிலையைப் பார்த்து என்ன நினைக்கிறது? "சிலை செஞ்சவருக்குத்தான் சரியா வரல'னு நினைச்சாலும்... "ஓ.கே... சூப்பர்'னு சொல்லி... அந்தச் சிலையைக் கொண்டுவந்து இனாகுரேட் பண்றாங்கன்னா... அப்ப அதுல ஒரு உள்நோக்கமோ... யாருக்காவது அனுகூலமோ இல்லாமலா இருந்திருக்கும்?

ஒரு கதை சொல்றேன்...

ஒரு குடியானவன் ஒரு கொழுத்த ஆட்ட சந்தையில விற்கிறதுக்காக முதுகுல சுமந்துக்கிட்டுப் போய்க்கிட்டிருந்தான்.

அந்த ஆட்ட எப்படியாவது ஆட்டயப் போடணும்னு மூணு திருடனுங்க ப்ளான் போட்டானுங்க.

ஒரு திருடன், குடியானவனுக்கு எதிர வந்தான்.

""என்னப்பா? அரிசி மூட்டைய முதுகில சுமந்துக்கிட்டு எங்க போற?''ன்னு கேட்டான்.

""டேய்... கபோதி... இது என்ன அரிசி மூட்டையா? உசுருள்ள ஒரு ஆட்ட தூக்கிட்டுப் போயிட்டிருக்கேன்... தெரியலையா?''னு குடியானவன் கேட்டான்.

""அப்படியா? உனக்கு ஆடு மாதிரியா தெரியுது. அப்ப சரி...''னு ஒரு மையமா சொல்லிட்டுப் போயிட்டான் முதல் திருடன்.

"அரிசி மூட்டயாம்ல'னு திட்டியபடி... போய்க்கிட்டிருந்தான் குடியானவன்.

ரெண்டாவது திருடன் எதிர வந்தான்.

""என்னப்பா... பன்னியத் தூக்கிக்கிட்டு எங்க போய்க்கிட்டிருக்க?''னு கேட்டான்.

""அடப்பாவி... ஒனக்கு புத்தி கழண்டு போச்சா? இது பன்னியா?''னு டென்ஷனாக...

""ஆமா... கருப்பா... கொழுகொழுனு... பன்னிதான...''னு திருடன் சொல்ல...

""வெள்ள வெளேர்னு கொழுத்த ஆட்ட தூக்கிட்டுப் போறேன்... பன்னீங்கிறியேடா...''னு குடியானவன் கோபமாகக் கேட்க...

""அட ஆமாண்ணே... புரிஞ்சிருச்சு.... புரிஞ்சிருச்சு. பார்க்க ஆடு மாதிரிதான் தெரியுது... ஹஹஹ''னு சிரிச்சுக்கிட்டே போனான்.

குடியானவனுக்கு குழப்பம்.

"ஒருத்தன் அரிசி மூட்டங்கிறான்... ஒருத்தன் பன்னிங்கிறான்... சரி, இதோ சந்தை நெருங்கிருச்சு. வந்த விலைக்கு வித்துட்டு வீட்டுக்குப் போயிடலாம்னு யோசிச்சிக்கிட்டே நடக்க...

மூணாவது திருடன் முன்ன வந்தான்.

""அய்யய்யய்யா... அய்யா... ஆங்... ஆட்ட தூக்கிச் சுமந்தவன பாத்திருக்கேன். கன்னுக்குட்டிய சுமந்துட்டு போனவன பாத்திருக்கேன்... ஆனா, கொழுத்த ஆளுயர நாயை தூக்கிச் சுமக்கிற ஆள இப்பத்தான் பார்க்குறேன்... நாய்க்கு நல்ல வியாபாரம் இருக்கா என்ன?''னு என்று கேட்டான்.

""எதுடா நாயி? நீதான்டா நாயி! ஒரு ஆட்ட சுமந்துக்கிட்டுப் போறேன்... நாயீங்கிற...''னு திட்ட...

""அய்யய்ய... இதுக்கேன்ணே கோவிச்சுக்குற? நீ சொன்னா கேட்டுக்குறேன். இந்த நாய ஆடுன்னே சொல்றேன்''னு சொல்லிட்டு நமட்டுச் சிரிப்போட போனான்.

குடியானவனுக்கு தலையே சுத்திப்போச்சு. ரஜினி ஸ்டைல்ல...

"நாம எடுத்துட்டுப் போறது ஆடு இல்ல. இது ஏதோ பேய். நிமிஷத்துக்கு நிமிஷம் உருமாறுற பேய். பார்க்கிறவன் கண்ணுக்கெல்லாம் ஒரு மாதிரி தெரியுது. இதோட சங்காத்தமே வேணாம்'னு ஆட்ட தரையில "டமால்'னு போட்டுட்டு திரும்பிப் பார்க்காம ஓடிட்டான் குடியானவன்.

திருடனுங்க மூணு பேரும் வந்து ஆட்ட அபேஸ் பண்ணிட்டாங்களாம்.

இந்த மாதிரிதான்... அந்த ஜெயலலிதா சிலையப் பார்த்து... ""இது அப்படியே அம்மா மாதிரி இருக்கு. "இல்ல'னு சொல்றவங்கள்லாம் துரோகிங்க''னு சொன்ன அமைச்சர் ஜெயக்குமார்... மறுநாளே... "அம்மா சிலையில மாற்றங்கள் கொண்டுவர ஆவன செய்யப்படும்'னு உண்மையை ஒத்துக்கிட்டார்.

அப்ப... முதல்நாளு "துரோகி'ங்கனு யார திட்டுனாரு ஜெயக்குமார்?

இதுக்குத்தான் திட்டும்போது அவசரப்பட்டு திட்டக்கூடாதுங்கிறது.

எத்தனைவிதமான குற்றச்சாட்டு இருந்தாலும் அம்மா... உங்களை ரொம்ப மிஸ் பண்றோம்.

அம்மாவோட பிறந்தநாள விமரிசையா கொண்டாடிய தமிழ்நாட்டுக்கு மறுநாள் காலைல ஒரு அதிர்ச்சியான செய்தி காத்திருந்தது.

இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகை ஸ்ரீதேவி, அகால மரணமடைந்த செய்திதான் அது.

இந்தியில வேணும்னா அவங்க ஒரு புகழ்பெற்ற நடிகையா இருந்திருக்கலாம்.

தமிழ்நாட்டப் பொறுத்தவரைக்கும் அவங்க எப்பவுமே இந்த மண்ணின் குழந்தை. அஞ்சு வயசுல பால்மணம் மாறாத குழந்தையாப் பார்த்து 13 வயசுல குமரியா பார்த்து... ஏதோ தேடித்தேடி வரன் பார்த்து... நல்ல மாப்பிள்ளைக்கி கட்டிக் குடுத்த மாதிரியே... இந்தி சினிமாவுக்கு 20 வயசுல சீரும் சிறப்புமா அவங்கள அனுப்பி வச்சது தமிழ்நாடு.

போனிகபூருக்கு மனைவியான பிறகும்கூட... தமிழையும் தமிழ்நாட்டையும் மறக்காமத்தான் இருந்தாங்க ஸ்ரீதேவி.

திடீர்னு... இந்த வயசுல அவங்க இறந்தது அதிர்ச்சிகரமான ஒண்ணுதான்.

ஆனாலும்...

தன்னோட கணவர் -மகள் -உறவினர்கள்னு எல்லோரும் புடைசூழ இருக்கும்போது... கல்யாண விழாவுல சந்தோஷமா டான்ஸ் ஆடிக்கிட்டு... அன்பைப் பகிர்ந்துக்கிட்டு... மகிழ்ச்சியான தருணத்துல இறந்தாங்க என்கிறத... அந்த வருத்தத்துலயும் ஆறுதலா வச்சுக்க முடியும்.

பாவம்... துக்க வீட்ல கூட இடைவிடாம தேசிய தொலைக்காட்சிகள் ஏதாவது கிடைக்குமானு செய்திவேட்டை ஆடிக்கிட்டிருக்காங்க. அவங்களோட பணி விசுவாசத்த எப்படி பாராட்டுறதுனு தெரியல!?

எப்படிச் செத்தார் ஸ்ரீதேவினு விவாதம் பண்ணிக்கிட்டிருக்காங்க.

"மாண்டலின் சீனிவாசன்'னு ஒரு மாண்டலின் இசை மேதை இருந்தாரு. அஞ்சு வயசுலருந்தே மாண்டலின் வாசிச்சு பேர் வாங்கினவர்.

குடிக்கமாட்டார். ராணுவ கட்டுப்பாட்டோட உடல் நலம் பேணுவார். அவர் லிவர் பெயிலிவர் ஆகி 45 வயசுல இறந்துட்டார்.

"யாருக்கு எப்ப மரணம் வரும்?'னு தெரிஞ்சிட்டாத்தான் மனுஷன் வேற மாதிரி வாழ்வானே! அது தெரியாமத்தானே மண்ணுக்கும், பொண்ணுக்கும் ஆலாய் பறந்து... பாவங்கள சேகரிச்சுக்கிட்டே இருக்கான்.

ஸ்ரீதேவி இறந்ததைப் பத்தி... பத்திபத்தியா விவாதிச்சவங்க... விழுப்புரம் பக்கத்துல ஒரு விதவைத் தாயையும் சிறுமியான மகளையும் பாலியல் வன்புணர்வு செஞ்சதோட... எட்டுவயது சிறுவன் தமயனை அடிச்சே கொன்னதப் பத்தி... ஒரு சிங்கிள் காலம் செய்தியில் விவாதிக்கக்கூட தயங்குனது ஏன்?

டி.வி.யில அது நியூஸா வரும்போது... அதைப் பார்க்கக்கூட அவங்களுக்கு வழி இல்லைங்கிறதுனாலதான... இது தேசிய பிரச்சினையா மாறமாட்டேங்குது.

இந்தக் கோபத்துல ஒரு சாதிப் பேரைப் போட்டு நான் ஒரு வார்த்தையை விட்டுட்டேன். அதுக்கு... உடனே விளக்கத்தையும் சொல்லிட்டேன்.

ஆனாலும்... இதோ இந்த கட்டுரையை எழுதுற பேனா மை காயுற வரைக்கும் அவங்களோட தரப்ப எனக்கு விதம் விதமா விளக்கிக்கிட்டிருக்காங்க.

இதுல எனக்கு ஒரு பெரிய படிப்பினை கிடைச்சிருக்கு.

உசுராகவே இருந்தாலும்கூட எல்லா உசுருக்கும் ஒரே சமமான மதிப்பு இருக்கிறதில்ல.

கேரளாவுல ஒரு மனநலம் குன்றிய ஒரு ஆதிவாசி இளைஞனை, ஒரு வெறிபிடிச்ச கும்பல் "அரிசி திருடினான்'னு அடிச்சே கொன்னுருக்கு.

எல்லாரோட பசியும் ஒரே மாதிரி பசி இல்ல. சிலருக்கு உணவுப் பசி. வேறு சிலருக்கோ ரத்தப் பசி.

என்னைப் பொறுத்தவரைக்கும் காலம் சென்ற ஒரு தலைவரோட பிறந்தநாளை கொண்டாடுறது இருக்கட்டுங்க. முதல்ல நாம எல்லாருக்கும் இருக்க வேண்டிய அடிப்படை மனித நேயத்தை கண்டு எடுப்போம்.

கடந்தவாரம்... மனிதம் இறந்தநாளும்கூட!

மனிதம் செத்துக்கிட்டிருக்க ஒவ்வொருநாளும் இறந்தநாள் தமிழகத்திற்கு!

நான் உட்பட நாம எல்லாருமே வெளிப்பூச்சுக்கு நல்லவங்களா வேஷம் போட்டுக்கிட்டு அலையுறோம். ஆனா நம்ம ஒவ்வொருத்தருக்குள்ளேயும் ஒரு அந்நியன் ஒளிஞ்சுக்கிட்டிருக்கான். அந்த அந்நியன் நாம கும்பலா இருக்கும்போது வெளிவர்றான்!

(அடுத்த விஷயத்தை ஒரு இதழ் விட்டு மறு இதழில் எழுதுகிறேன்!)

kasturi
இதையும் படியுங்கள்
Subscribe