""ஹலோ தலைவரே, பேரிடர் நிவாரண விவகாரத்தில் தமிழக அரசின் முதுகில் குத்துகிறது டெல்லி.''’’
""ஆமாம்பா, தேவையான நிவாரண நிதியை வழங்கச் சொல்லும் தமிழக அரசு மீதே, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டுகிறாரே?'' ’’
""உண்மைதாங்க தலைவரே, மிக்ஜாம் புயல் தாக்கத்தால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங் களில் கோரத்தாண்டவம் ஆடிய மழைவெள்ளம், அடுத்ததா தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களையும் தாக்கி, கடும் சேதத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தியிருக்கு. இதனால், பலமாகப் பாதிக்கப்பட்ட தமிழகத்தை பேரிடர் பகுதியாக அறிவிப்பதோடு, நிவாரணப் பணிகளுக்கு ஒன்றிய அரசு மொத்தமாக 21,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கணும்னு முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து வேண்டுகோள் வைத்துவரு கிறார். ஆனால் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமோ, பரிவு காட்டவேண்டிய நேரத்தில், வானிலை ஆய்வு மையம் செய்த முன்னெச்சரிக் கைப்படி தமிழக அரசு நடவடிக்கை எடுக்கலைன் னும், அதனால்தான் இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்குன்னும் தமிழக அரசு மீதே குற்றம் சாட்டியதோடு, நீங்கள் கேட்கும் போதெல்லாம் நிதி கொடுக்க, ஒன்றிய அரசு ஒன்றும் ஏ.டி.எம். இல்லைன்னு, கொஞ்சம் தெனாவெட்டாவே பதில் சொல்லியிருக்கார். இது பாதிக்கப்பட்ட மக்களையும் பொதுமக்களையும் கொதிப்பில் ஆழ்த்தியிருக்கு.''’’
""ஆமாம்பா, நிர்மலா சீதாராமனின் இந்த தெனாவெட்டு பதிலுக்கு அமைச்சர் உதயநிதி, அதிரடி பதிலைக் கொடுத்திருக்கிறாரே?''’’
""ஒன்றிய அரசு என்ன ஏ.டி.எம். மெஷினான்னு கேட்ட நிர்மலா சீதாராமன் பற்றி, அமைச்சர் உதயநிதியிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினாங்க. அதுக்கு பதில் சொன்ன உதயநிதி, மக்களின் மனநிலையை எதிரொலிக்கும் வகையில்,’"நாங்க என்ன அவங்க அப்பன் வீட்டுப் பணத்தையா கேட்டோம். தமிழ்நாட்டு மக்கள் கொடுத்த வரிப்பணத்தைத்தானே கேட்கிறோம், மற்ற மாநிலங்களுக்கெல்லாம் கேட்காமலே கொடுக்கறீங்கள்ல. தமிழ்நாட்டை மட்டும் ஏன் தனியா பார்க்கறீங்க?'ன்னு அவருக்கு பதில் சொன்னார். இதில் உள்ள பரிதவிப்பைப் புரிந்து கொள்ளாத நிர்மலா சீதாராமன்,’"உன் அப்பன் வீடு, ஆத்தா வீடுன்னு பேசுறதெல்லாம் நல்ல தில்லை. அவர் (உதயநிதி) அரசியல்ல முன்னுக்கு வரணும்னு ஆசைப்படுறார்ல. அவர் குடும்பமும் ஆசைப்படுதில்ல. அப்ப பேசுற பாஷை சரியா இருக்கணும். நாங்களும் அவர் அப்பா, தாத்தாவ வச்சி பதவியை அனுபவிக
""ஹலோ தலைவரே, பேரிடர் நிவாரண விவகாரத்தில் தமிழக அரசின் முதுகில் குத்துகிறது டெல்லி.''’’
""ஆமாம்பா, தேவையான நிவாரண நிதியை வழங்கச் சொல்லும் தமிழக அரசு மீதே, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டுகிறாரே?'' ’’
""உண்மைதாங்க தலைவரே, மிக்ஜாம் புயல் தாக்கத்தால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங் களில் கோரத்தாண்டவம் ஆடிய மழைவெள்ளம், அடுத்ததா தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களையும் தாக்கி, கடும் சேதத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தியிருக்கு. இதனால், பலமாகப் பாதிக்கப்பட்ட தமிழகத்தை பேரிடர் பகுதியாக அறிவிப்பதோடு, நிவாரணப் பணிகளுக்கு ஒன்றிய அரசு மொத்தமாக 21,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கணும்னு முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து வேண்டுகோள் வைத்துவரு கிறார். ஆனால் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமோ, பரிவு காட்டவேண்டிய நேரத்தில், வானிலை ஆய்வு மையம் செய்த முன்னெச்சரிக் கைப்படி தமிழக அரசு நடவடிக்கை எடுக்கலைன் னும், அதனால்தான் இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்குன்னும் தமிழக அரசு மீதே குற்றம் சாட்டியதோடு, நீங்கள் கேட்கும் போதெல்லாம் நிதி கொடுக்க, ஒன்றிய அரசு ஒன்றும் ஏ.டி.எம். இல்லைன்னு, கொஞ்சம் தெனாவெட்டாவே பதில் சொல்லியிருக்கார். இது பாதிக்கப்பட்ட மக்களையும் பொதுமக்களையும் கொதிப்பில் ஆழ்த்தியிருக்கு.''’’
""ஆமாம்பா, நிர்மலா சீதாராமனின் இந்த தெனாவெட்டு பதிலுக்கு அமைச்சர் உதயநிதி, அதிரடி பதிலைக் கொடுத்திருக்கிறாரே?''’’
""ஒன்றிய அரசு என்ன ஏ.டி.எம். மெஷினான்னு கேட்ட நிர்மலா சீதாராமன் பற்றி, அமைச்சர் உதயநிதியிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினாங்க. அதுக்கு பதில் சொன்ன உதயநிதி, மக்களின் மனநிலையை எதிரொலிக்கும் வகையில்,’"நாங்க என்ன அவங்க அப்பன் வீட்டுப் பணத்தையா கேட்டோம். தமிழ்நாட்டு மக்கள் கொடுத்த வரிப்பணத்தைத்தானே கேட்கிறோம், மற்ற மாநிலங்களுக்கெல்லாம் கேட்காமலே கொடுக்கறீங்கள்ல. தமிழ்நாட்டை மட்டும் ஏன் தனியா பார்க்கறீங்க?'ன்னு அவருக்கு பதில் சொன்னார். இதில் உள்ள பரிதவிப்பைப் புரிந்து கொள்ளாத நிர்மலா சீதாராமன்,’"உன் அப்பன் வீடு, ஆத்தா வீடுன்னு பேசுறதெல்லாம் நல்ல தில்லை. அவர் (உதயநிதி) அரசியல்ல முன்னுக்கு வரணும்னு ஆசைப்படுறார்ல. அவர் குடும்பமும் ஆசைப்படுதில்ல. அப்ப பேசுற பாஷை சரியா இருக்கணும். நாங்களும் அவர் அப்பா, தாத்தாவ வச்சி பதவியை அனுபவிக்கிறார்னு சொல்ல முடியும்ல'’ என்று தடாலடியாகத் தாக்குதலைத் தொடுத்ததோடு, அவருடைய பாஷை எப்போதும் அப்படித்தான். பதவிக்கு ஏத்த அளவுல வார்த்தைகள் அளந்து வரணும்’என்றும் உதயநிதியின் தகுதி பற்றியும், தகுதிக்குக் கீழ இறங்கிப்போய் நிர்மலா விமர்சிச்சிருக்கார்''’’
""நிர்மலா சீதாராமன் ராங்ரூட்டில் போய் இப்படி பதில் சொன்னதுக்கு, உதயநிதியும் நெற்றியடி பாணியில் பதில் கொடுத்திருக்காரே''’’
""ஆமாங்க தலைவரே, அப்ப கூட உதயநிதி... "நாங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் ‘மரியாதை’ தருவதற்கு தயா ராகவே இருக்கிறோம். தமிழ்நாட்டு மக்கள் மீது கொஞ்ச மாவது ‘அக்கறை’ வைத்து நிதியைத் தாருங்கள் மரியாதைக்குரிய மாண்பு மிகு ஒன்றிய நிதி அமைச்சர் அவர்களே'ன்னு சொன்னதோடு, ’"யாரிடம் எப்படி பேச வேண்டும் என்று தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், கழகத் தலைவர் மற்றும் முதலமைச்சர் ஆகியோர், எங்களுக்கு நன்றாகவே சொல்லிக் கொடுத்திருக்காங்க. அதன்படி சிலரிடம் அண்ணாவைப் போல, சிலரிடம் கலைஞரைப் போல, சிலரிடம் கழகத் தலைவரைப் போல பேசுகிறோம். எனினும், குறிப்பிட்ட சிலரிடம் பெரியார் வழியில்தான் பேசியாக வேண்டியிருக்கிறது'ன்னு நெத்தியடி பதிலைக் கொடுத்திருக்கிறார். "அவாள் தொனியில் பாஷை, கீஷைன்னு கிண்டலடிச்ச நிர்மலா சீதாராமனுக்கு, இனமான முறையில் சுயமரியாதையோட உதயநிதி பதில் கொடுத்திருக் கிறார்'னு பலரும் அவரைப் பாராட்டறாங்க.''’’
""சரிப்பா, உயர்நீதிமன்றத் தீர்ப்பால் அதிர்ந்துபோயி ருக்கும் பொன்முடியை மு.க.அழகிரி சந்தித்திருக்கிறாரே?''
""சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை அறிவிக்கப்பட்டிருக்கும் பொன்முடியை தி.மு.க. அமைச்சர்களும், கட்சியின் சீனியர்களும் சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார்கள். அந்த வரிசையில், மு.க.அழகிரியும் பொன்முடியை சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார். அப்போது, "உங்களுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில், வழக்கறி ஞர்கள் இன்னும் அழுத்தமான வாதங்களை வைத்திருக்க வேண்டும். அலட்சியமாக இருந்துவிட்டார்களோ என்று கருதுகிறேன். உச்ச நீதிமன்றத்தி லாவது அரசியல் வழக்குகளில் அனுபவ முள்ள வழக்கறிஞர்களை வைத்து வாதாடுங்கள். நிச்சயம் விடுதலை ஆவீர்கள். மீண்டும் பதவியிலும் அமர் வீர்கள்'’ என்றெல்லாம் தெம்பூட்டி யிருக்கிறார். அதற்குப் பொன்முடி, வருத்தம் கொப்பளிக்கும் குரலில், "எல்லாத்தையும் வக்கீல்கள் பார்த்துக் கொள்வார்கள் என அலட்சியமாக இருந்துவிட்டேன். அதன் விளைவுதான் இது' என்று தன் ஆதங்கத்தை வெளி யிட்டாராம்.''’’
""தமிழக காங்கிரஸ் பொறுப்பாள ராக பிரியங்காவை நியமிக்கணும்ங்கிற கோரிக்கை குரல் கேட்குதே?''’’
""நாடாளுமன்றத் தேர்தல் வருவதையொட்டி காங்கிரஸில் சில அதிரடி மாற்றங்கள் நடந்து வருகின் றன. மாநிலங்கள்தோறும், கட்சியின் பொதுச்செயலாளர்களைப் புதிதாக நியமிக்கும் முடிவில் தேசியத் தலைமை இருக்கிறது. இந்த நிலையில், காங் கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை தயாரிக்க, ப.சிதம்பரம் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்தியா கூட்டணியில் காங் கிரஸ் கட்சி இருப்பதால், கூட்டணி சார்பாக அறிவிக்கப்படும் தேர்தல் அறிக்கை யில், என்னென்ன இடம்பெற வேண்டும் என்பதை முன்வைக்கும் மற்றொரு அறிக்கை யையும் இந்தக் குழு தயாரித்து வருகிறதாம். இதற்கிடையே, உ.பி.யில் காங்கிரஸ் பொதுச்செய லாளராக இருந்த பிரியங்கா காந்தி, அப்பொறுப்பி லிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார். ஏற்கெனவே தமிழக பொறுப்பாளராக இருந்த தினேஷ்குண்டு ராவ் சில மாதங்களுக்கு முன்பே, அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டிருப்பதால், தமிழகப் பொறுப்பில் பிரியங்காவை நியமிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் பிரமுகர்கள் தேசியத் தலைமையிடம் அடம்பிடித்து வருகின்றனர்.''’’
""ஜெயலலிதாவின் ஆவி வந்து தன்னுடன் பேசுவதாகச் சொல்லி, அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் எடப் பாடியை அலறவிட்டிருக்காரே?''’’
""ஆமாங்க தலைவரே, வட சென்னை அ.தி.மு.க., மா.செ.வான ராஜேஷ், சமீபகாலமாக ’உஜ்ஜா போர்டு’ உதவியுடன் ஜெயலலிதாவின் ஆவியோடு தான் மனம் விட்டுப் பேசி வருவதாக கட்சி நிர்வாகிகள் பலரையும் திகைக்க வைத்திருக்கிறார். இதே பாணியில் எடப்பாடியிடமும் அவர் இதுகுறித்துத் தெரிவிக்க, முதலில் அவர் அரண்டுபோய், "அம்மா என்ன சொன்னார்' என்று பவ்யமாக அது குறித்துக் கேட்க ஆரம்பித்தாராம். இதைத் தொடர்ந்து, "தனக்கு கட்சியில் மாநில அளவில் முக்கிய பொறுப்பு வழங்கவேண்டும் என்று அம்மா விரும்புகிறார்'னு, சந்தடிச் சாக்கில் ராஜேஷ் சொல்ல, சுதாரித்துக்கொண்ட எடப்பாடியோ, "நானும் ஒரு மாந்ரீகர் மூலம் இப்போது எம்.ஜி.ஆருடன் பேச ஆரம்பித்திருக்கிறேன். அவர் என்னிடம், டுபாக்கூர் ஆசாமிகளை நம்பாதே என்று எச்சரித்திருக்கிறார்' என பதிலுக்கு உதார்விட்டு, ராஜேஷின் வாயை அடைத்துவிட்டாராம்.''’’
""இந்த ஆண்டு எம்.ஜி.ஆர். நினைவுதினம் பெரிதாக சோபிக்கவில்லையே?''’’
""அ.தி.மு.க.வின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் நினைவு தினமான டிசம்பர் 24ஆம் தேதியில், தமிழகம் முழுவதும் உள்ள அ.தி. மு.க.வினர் கொடி, தோரணங் களைக் கட்டியும், கட்சிப் பாடல்களை இசைத்தும், கடைப்பிடிப்பது வழக்கம். எம்.ஜி.ஆர். பெயரில் நலத்திட்ட உதவிகளும் கூட அங்கங்கே வழங்கப்படுவது உண்டு. அதேபோல், எம்.ஜி.ஆர். நினைவு நாளுக்காக அ.தி.மு.க. மாஜி மந்திரிகளும் மா.செ.க் களும் தனித்தனியாக நாளிதழ்களில் பக்கம் பக்கமாய் விளம்பரங்களைக் கொடுப்பதும் வழக்கமாக இருந்து வந்தது. இந்தமுறை அப்படிப்பட்ட விளம்பரங்களையும் நினைவு நிகழ்ச்சிகளையும் அதிகம் பார்க்க முடியவில்லை. தென் சென் னையின் மூத்த நிர்வாகியும் எம்.ஜி.ஆர். விசுவாசியுமான கடும்பாடி மற்றும் காங்கிரசிலிருந்து அ.தி.மு.க.வில் இணைந்த ராயபுரம் மனோ ஆகிய இருவர் மட்டும்தான் விளம்பரம் தந்து, எம்.ஜி.ஆரை நினைவுகூர்ந்தனர். இத்தனைக்கும், மா.செ.க்கள் எல்லோரும் எம்.ஜி.ஆர். நினைவுநாள் குறித்து விளம்பரங்கள் கொடுத்து, அவரை நினைவு கூரவேண்டும் என எடப்பாடி உத்தரவிட்டும் கூட எவரும் அலட்டிக்கொள்ளவில்லை. எம்.ஜி.ஆர். விசுவாசிகளோ, "தலைவரையே மறந்துட்ட இவங்களை எல்லாம் இனியும் எப்படி நம்புறது?' என்று புலம்புகிறார்கள்.''’’
""அ.தி.மு.க. மாஜி மந்திரிகள் மீது ரெய்டு நடத்தவேண்டும் என்று பா.ஜ.க. அண்ணாமலை டெல்லியை நெருக்குகிறாராமே?''’’
""மீண்டும் அ.தி.மு.க.வை தங்கள் கூட்டணி யில் பா.ஜ.க.வின் தேசிய தலைமை சேர்த்துக் கொண்டு விடுமோ என்கிற பதட்டம் அண்ணாமலைக்கு ஏற்பட்டிருக்கிறதாம். அதனால், அவர் கட்சியின் தேசியத் தலைவர்களிடம், ஓ.பி.எஸ். போன்றவர்களால் அ.தி.மு.க.வின் செல்வாக்கு பெரிதும் சரிந்திருக்கிறது. குறிப்பாக தென்மாவட்டத்தில் அவர்கள் பக்கம் இருந்த பிள்ளைமாரும், முக்குலத்தோரும் கூட இப்போது பா.ஜ.க. பக்கம் வரத்தொடங்கிவிட்டார்கள். தற்போது தென்மாவட்டத்தில் தனித்து நின்றாலும் 20 சத வாக்குகளுக்கு மேல் பா.ஜ.க.வால் வாங்கமுடியும். எனவே செல்வாக்கு குறைந்துள்ள அ.தி.மு.க.வை நாம் தொடர்ந்து ஓரம் கட்டுவதோடு, அ.தி.மு.க.வை நாம் கடுமையாக விமர்சிக்க வேண்டும். அங்குள்ள மாஜி மந்திரிகள் மீது ரெய்டு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். அதுதான் மக்கள் மத்தியில் நமக்கு கூடுதல் செல்வாக்கை ஏற்படுத்தும்’என்றெல்லாம் சொல்லிவருகிறாராம். இது அவரது சொந்தக் கருத்து என்று சொல்லும் கமலாலயத் தரப்பு, இதே கருத்தை பிரதமர் மோடியிடமும், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கூட அண்ணாமலை தேவையில்லாமல் வலியுறுத்தி இருக்கிறார் என்றும் ஆதங்கப்படுகிறார்கள்.''’’
""தமிழக காவல்துறைத் தலைவராக டெல்லியில் இருக்கும் சஞ்சய் அரோராவைக் கொண்டு வரும் முயற்சி ஒன்றும் இடையில் நடந்ததே?''’’
’""காவல்துறையில் இருக்கும் சிலர், டெல்லியில் இருக்கும் காவல்துறை தலைவர் சஞ்சய் அரோராவை, சீனியாரிட்டி அடிப்படையில் தமிழகத்துக்குக் கொண்டுவந்து டி.ஜி.பி. நாற்காலியில் அமரவைக்க வேண்டும் என்று ஆட்சி மேலிடத்திற்குப் பரிந்துரைத்தனர். ஆனால் ஒன்றிய அரசோ, அவரை அனுப்ப மறுத்துவிட்டது. இந்த சஞ்சய்அரோரா ஏற்கெனவே தமிழகத்தில் வீரப்பனைப் பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட அதிரடிப் படையில் செயல்பட்டவர். தேவாரம், விஜயகுமார் ஆகிய அதிகாரிகளுடன் சேர்ந்து பணியாற்றிய அரோரா, அவர் களுடன் சேர்ந்து இவரும் வீரப்பன் விவகாரத்தை சொதப்பினார் என்று, காவல்துறையினராலேயே விமர்சிக்கப்பட்டவர். தற்போது டெல்லி மாநில டி.ஜி.பி.யாக இருக்கும் சஞ்சய்அரோரா டீம்தான் பாராளுமன்றப் பாது காப்பையும் கவனித்துவரு கிறதாம். இந்த டீம் பாதுகாப்பு விவகாரத்தில் சொதப்பிய தால்தான், அண்மையில் பாராளுமன்றத்துக்குள் சிலர் நுழைந்து வண்ண வெடி குண்டுகளை வெடிக்கச் செய்து, பெரும் பதட்டத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்றும் சொல்லி, அரோராவின் திறமைக் குறைவை வெளிச்சம் போட்டுக்காட்டி வருகின்றனர். அதே சமயம் இந்த அரோரா பாதிக்கப்பட்டவர்கள் நடத்தும் போராட் டங்களை ஒடுக்கும் போது மட்டும் தன் ஆத்திரத்தை வெளிப்படுத்துகிறவர் என்றும் விமர்சிக்கப்படுகிறார். அண்மையில், தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை எதிர்த்து, மல்யுத்த வீராங்கனைகள் டெல்லியில் நடத்திவரும் போராட்டத்தை ஒடுக்குவதிலும் தற்போது அரோரா தன் வீரத்தைக் காட்டி வருகிறார் என்கிறார்கள்.''’’
""நானும் என் காதுக்கு வந்த ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். அண்மையில் நடந்திருக்கும் காவல்துறை டி.எஸ்.பி.க்கள் நியமனங்களில் பெரும் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்திருக்கிறது. குறிப்பாக சென்னை மாநகரப் பகுதியில் நியமிக்கப்பட்டவர்கள் விவகாரத்தில் ஏகத்துக்கும் பணம் விளையாடியிருக்கிறது என்கிறார்கள். இதுதான் தற்போது காவல்துறையில் ஹாட் டாக்காக இருக்கிறது.''’’