அதானிக்கு கைது வாரண்ட்! பதற்றத்தில் இந்திய அரசியல்வாதிகள்! -அதிரவைத்த அமெரிக்கா!

ss

மெரிக்க நீதிமன்றம் வைத்திருக்கும் ஒரேயொரு குற்றச்சாட்டு, அதானி குழுமம், இந்திய அரசியல்வாதிகள், நான்கு மாநில முதல்வர்கள், எதிர்க்கட்சிகள் வரை தடுமாற வைத்திருக்கிறது.

சூர்ய மின்சக்தித் திட்ட ஒப்பந்தங்களை மாநில அரசுகளிடமிருந்து பெறுவதற்கு இந்திய அரசு அதிகாரிகளுக்கு கவுதம் அதானி ரூ.2,029 கோடி லஞ்சம் கொடுத்ததை மறைத்து, அமெரிக்காவில் முதலீடுகளைத் திரட்டினார் என நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப் பட்டதையடுத்து அதானி குழுமப் பங்குகளின் மதிப்பு ஒரே நாளில் 1,04,000 ஆயிரம் கோடி வரை சரிந்துள்ளது. இந்தியத் தொழிலதிபரான கவுதம் அதானி, இந்திய அதிகாரிகளுக்கு லஞ் சம் கொடுத்த விவகாரத்தில் நியூயார்க் நீதி மன்றம், அதானி உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக ஏன் பிடிவாரண்ட் பிறப்பிக்கவேண்டும்?

adaniadanison

இதனைத் தெளிவுபடுத்த இன்னும் சில விவகாரங்களைப் பார்க்கவேண்டும்.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா. அஸூர் பவர் நிறுவனமும் அதானியின் கிரீன் பவர் நிறுவனமும் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் உற்பத்திசெய்து மாநிலங்களுக்கு விநியோகிக்க இந்தியா வின் சோலார் பவர் எனர்ஜி கார்ப்ப ரேஷனுடன் ஒப்பந்தங்களைப் போட்டுள்ளன.

இதில் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷ னுக்கு, அஸூர் பவர் 4 ஜிகாவாட் மின்சாரமும், அதானி நிறுவனம் 8 ஜிகாவாட்டும் தருவதாக ஒப்பந்தம். ஆனால், இந்த மின்சாரத்தின் விலை அதிகமாக இருந்ததால், ஆரம்பத்தில் மாநிலங்கள் எதுவும் இந்த மின்சாரத்தை வாங்க முன்வரவில்லை. ஒப்பந்தம்தான் போட முடியுமே தவிர, வாங்குபவர்களைப் பிடிப்பது உங்கள் பாடு எனத் தெரிவித்துவிட்டது சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன்.

தவிரவும், இத்தனை பெரிய திட்டத்துக்கு நிதி வேண்டுமல்லவா? அதானியின்

மெரிக்க நீதிமன்றம் வைத்திருக்கும் ஒரேயொரு குற்றச்சாட்டு, அதானி குழுமம், இந்திய அரசியல்வாதிகள், நான்கு மாநில முதல்வர்கள், எதிர்க்கட்சிகள் வரை தடுமாற வைத்திருக்கிறது.

சூர்ய மின்சக்தித் திட்ட ஒப்பந்தங்களை மாநில அரசுகளிடமிருந்து பெறுவதற்கு இந்திய அரசு அதிகாரிகளுக்கு கவுதம் அதானி ரூ.2,029 கோடி லஞ்சம் கொடுத்ததை மறைத்து, அமெரிக்காவில் முதலீடுகளைத் திரட்டினார் என நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப் பட்டதையடுத்து அதானி குழுமப் பங்குகளின் மதிப்பு ஒரே நாளில் 1,04,000 ஆயிரம் கோடி வரை சரிந்துள்ளது. இந்தியத் தொழிலதிபரான கவுதம் அதானி, இந்திய அதிகாரிகளுக்கு லஞ் சம் கொடுத்த விவகாரத்தில் நியூயார்க் நீதி மன்றம், அதானி உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக ஏன் பிடிவாரண்ட் பிறப்பிக்கவேண்டும்?

adaniadanison

இதனைத் தெளிவுபடுத்த இன்னும் சில விவகாரங்களைப் பார்க்கவேண்டும்.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா. அஸூர் பவர் நிறுவனமும் அதானியின் கிரீன் பவர் நிறுவனமும் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் உற்பத்திசெய்து மாநிலங்களுக்கு விநியோகிக்க இந்தியா வின் சோலார் பவர் எனர்ஜி கார்ப்ப ரேஷனுடன் ஒப்பந்தங்களைப் போட்டுள்ளன.

இதில் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷ னுக்கு, அஸூர் பவர் 4 ஜிகாவாட் மின்சாரமும், அதானி நிறுவனம் 8 ஜிகாவாட்டும் தருவதாக ஒப்பந்தம். ஆனால், இந்த மின்சாரத்தின் விலை அதிகமாக இருந்ததால், ஆரம்பத்தில் மாநிலங்கள் எதுவும் இந்த மின்சாரத்தை வாங்க முன்வரவில்லை. ஒப்பந்தம்தான் போட முடியுமே தவிர, வாங்குபவர்களைப் பிடிப்பது உங்கள் பாடு எனத் தெரிவித்துவிட்டது சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன்.

தவிரவும், இத்தனை பெரிய திட்டத்துக்கு நிதி வேண்டுமல்லவா? அதானியின் துணை நிறுவனங்கள் மூலமாக சிண்டிகேட்டட் லோன் மூலமாக 1.35 மில்லியன் டாலர்களைத் திரட்டியது அதானி குழுமம்.

பிறகுதான், மாநில அரசுடன் ஒப்பந்தம் போடும் படலங்கள் அரங்கேறின. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள அதிகாரிகளைச் சந்தித்து அவர்களுக்கு கனமான லஞ்சத் தொகை தருவதாக உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து சில மாநிலங்கள் மின்சாரத்தின் விலை அதிகமாக இருந்தபோதும், இந்த ஒப் பந்தத்தில் ஆர்வம்காட்ட ஆரம்பித்தன. அப்படி முதலில் ஒப்பந்தம் போட்டுக் கொண்ட மாநிலம் ஆந்திரா.

ss

ஆகஸ்டு 2021-ல் அன்றைய ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை, அதானியே நேரில் சென்று சந்தித்தார். அதையடுத்து 7 ஜிகாவாட் சூர்ய மின்சாரத்தை வாங்க ஒப்பந்தம் செய்துகொண்டது ஆந்திரா. இந்த விவகாரத்தில் ஆந்திர அதிகாரிகளுக்கு மட்டும் ரூ.1,750 கோடி ரூபாய் லஞ்சமாகத் தரப்பட்டிருக்கிறது.

பல்வேறு ஒப்பந்ததாரர்கள் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டிருந்த நிலையில், அதானிக்கு மட்டும் ஒப்பந்தம் வழங்கப்பட்டது சந்தேகத்தை எழுப்பியது. இதைத் தொடர்ந்து அம்மாநில இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, ஆந்திரப் பிரதேச அரசிடம், ஜெகன்மோகன் ரெட்டிக்கும் அதானிக்குமான ரகசிய சந்திப்பின் பின்னணியை வெளிப்படுத்துமாறு கோரிக்கை வைத்தது.

பின் ஒடிஷா, தமிழ்நாடு, ஆந்திரா, சத்தீஸ்கர், ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களும் சூரிய ஒளி மின்சாரத்தை வாங்கிக்கொள்ள, அதானி குழுமத்துடன் 2021- 2022 காலத்தில் ஒப்பந்தம் செய்துகொண்டன. இதில் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்துடன் இணைந்து செயல் படும் அசூர் பவர் நிறுவனம், அமெரிக்காவின் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறு வனம். தவிரவும், பல்வேறு மின்சக்தித் திட்டங் களுக்காக கடன் பத்திரங்கள் மூலமும், கடனாக வும் அமெரிக்க நிறுவனங்கள், முதலீட்டாளர் களிடமிருந்து 3 பில்லியன் டாலர்களை அதானி குழுமம் திரட்டியுள்ளது. இப்படி நிதி திரட்டிய அதானி குழுமம் முதலீட்டாளர்களிடமும், கடன் பெற்றவர்களிடமும் தவறான அறிக்கை களைத் தெரிவித்ததாகவும், அமெரிக்காவின் லஞ்ச எதிர்ப்புக்கொள்கைகளை மீறியதாகவும் நியூயார்க் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. தவிரவும் இப்படியொரு விசாரணை நடந்துகொண்டிருந்த விஷயத்தை மறைக்கும் முயற்சிகளையும், ஆதாரங்களை அழிக்கும் முயற்சிகளையும் அஸூர், அதானி நிறுவனங்கள் மேற்கொண்டன என்பது அமெரிக்காவின் குற்றச்சாட்டு.

நியூயார்க்கின் அரசு வழக்கறிஞர் பிரையன் பீஸ், "நமது நிதிச் சந்தைகளின் நம்பகத்தன்மை யை பணயம்வைத்து லாபம் பார்க்க விரும்புவோரிடமிருந்து முதலீட்டாளர்கள் பாதுகாக்கப்படவேண்டும்''’என்று தெரிவித்தார்.

இதையடுத்து... கவுதம் அதானி, சாகர் அதானி, வினித் ஜெயின், ரஞ்சித் குப்தா, ரூபேஷ் அகர்வால், சிரில் கேபனேஷ், சௌரப் அகர்வால், தீபக் மல்கோத்ரா ஆகிய ஏழு பேர்மீது குற்றம்சாட்டப் பட்டுள்ளதோடு, அதானி, சாகர் அதானி இரு வர்மீதும் பிடிவாரண்டும் பிறப்பிக்கப் பட்டுள்ளது.

சரி, இதற்கு ஆதாரம் இருக்கிறதா?

ss

புகாருக்கு ஆளானவர்கள் 2020 முதல் 2024 வரையிலான கட்டத்தில் அடிக்கடி சந்தித்து லஞ்சம் குறித்துப் பேசிக்கொண்டார்கள். போன் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் ஆதாரங்கள் உள்ளன என்கிறது அமெரிக்க அரசுத் தரப்பு.

கவுதமும், சாகர் அதானியும் அமெரிக்கக் கூட்டரசின் மோசடிக்கு எதிரான விதிமுறை களை மீறியதாக குற்றம்சாட்டுவதோடு, அவர் கள் மீது நிரந்தரத் தடை, அபராதம் போன்ற வற்றை விதிக்கக் கோருகிறது. இந்த எழுவர் கூட்டணியில், சிரில் கேபனேஷ், சௌரப் அகர்வால் போன்றவர்கள் அரசாங்க விசாரணை யைத் தடுப்பதன் மூலம் லஞ்ச சதியை மறைக்க முயன்றதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதில் அமெரிக்க அரசுத் தரப்பு குறிப் பிடும் ஒரு விவரம் மிக முக்கியமானது. லஞ்சம் கொடுத்தது மட்டுமின்றி, அதானி தரப்பில் அதை விரிவாக ஆவணப்படுத்தியுள்ளனர். இந்திய சூரிய மின்சக்தி திட்டத்தின் வெவ்வேறு அதிகாரிகளுக்கு, எவ்வளவு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்பதற்கான விவரத்தை வினித் ஜெயின் தனது செல்போனில் புகைப்படம் எடுத்துவைத்துள்ளார். ரூபேஷ் அகர்வால், லஞ்சப் பணத்தை அது லஞ்சப் பணம் என்று வெளித்தெரியாமல் கொடுப்பதற்கான பல்வேறு வழிமுறைகளை, மைக்ரோசாஃப்ட் எக்சலில் பதிவுசெய்துள்ளார் என்கிறது.

இந்த ஆவணங்களில் அதானியின் பெயர் “நியுமரோ யுனோ, “சூப்பர் அக்ரிகேட்டர்” என்றும், வினித் ஜெயினின் பெயர் ஸ்நேக், நியுமரோ யுனோ மைனஸ் ஒன்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக, அமெரிக்கத் தரப் பில் வலுவான ஆதா ரங்கள் இருக்கின்றன.

மாறாக அதானி யோ, “"அதானி குழுமம், அதன் நிர்வாகச் செயல் பாடுகள் அனைத்திலும் மிக உயர்தரமான வெளிப்படைத்தன்மை, ஒழுங்குமுறை, இணக் கத்தைப் பேணுகிறது'’ எனக்கூறி தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுப்பதோடு, இதனை சட்டரீதியாக எதிர்கொள்ளப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

அதேசமயம், இந்த விவகாரம் சர்வதேச அளவில் வெடித்த நிலையில், "கடந்த 3 ஆண்டு களில் தமிழக அரசுக்கும் அதானி குழுமத்துக் கும் இடையில் எந்த ஒப்பந்தமும் போடப்பட வில்லை' என தமிழக மின்துறை அமைச்சரான செந்தில்பாலாஜி விளக்கமளித்துள்ளார். “ஒன்றிய அரசின் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷனிட மிருந்து 1500 மெகாவாட் மின்சாரம் ரூ.2.61 கட்டணத்தில் பெறப்படுகிறது” என்று விளக்கமளித்துள்ளார். ஆனால் கடந்த ஜூலை மாதம் தமிழகம் வந்த அதானி, முதல்வரையும், சபரீசனையும் சந்தித்துப் பேசிச் சென்றதாக செய்திகள் வெளியானது. அதானி போன்ற பெரும் வியாபார முதலைகள், வெறுமனே மரியாதை நிமித்தச் சந்திப்புக்காக வருவார்களா என்ற சந்தேகம் எழுப்பப்படுகிறது.

தவிரவும், ஆந்திரா அதானியுடனான ஒப்பந்தப்படி ஒரு யூனிட்டுக்கு ரூ.2.41தான் வழங்குகிறது. அதுவே விலை அதிகம். ரூ.1.99-க்கு சந்தையில் மின்சாரம் கிடைக்கும் போது ஏன் கூடுதல் விலைகொடுத்து வாங்க வேண்டுமென நீதிமன்றத்தை அணுகியிருக் கின்றன எதிர்க்கட்சிகள். மாறாக, தமிழக நிதியமைச்சர் ஒரு யூனிட் ரூ.2.61 விலைக்கு மின்சாரத்தை வாங்கிவிட்டு, குறைந்த விலையில் வாங்கியிருப்பதாகச் சமாளிக்கிறார் என கேள்வியெழுப்புகின்றன தமிழக எதிர்க்கட்சிகள்.

எதிர்க்கட்சித் தலைவரான ராகுல்காந்தி, "முறைகேடு வழக்குகளில் நாட்டின் முதலமைச் சர்களே கைதுசெய்யப்படுகிறார்கள். ஆனால், இந்தியாவில் இருக்கும்வரை அதானியை கைதுசெய்யவோ, விசா ரிக்கவோ மாட்டார்கள். அவரை மோடி காப் பாற்றுகிறார். இந்தியா மற்றும் அமெரிக்காவின் சட்டத்தை அதானி மீறியுள்ளார் என்ப தையே நியூயார்க் நீதிமன்ற பிடிவாரண்ட் காட்டுகிறது. மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக இந்த விவகாரத்தை நான் கேள்வியெழுப்புவேன்''’எனக் கோபக்குரல் எழுப்பியுள்ளார்.

பதிலுக்கு பா.ஜ.க. செய்தித் தொடர்பாள ரான சம்பித் பத்ரா, “"அமெரிக்கா குறிப்பிட் டுள்ள 2021-2022 காலகட்டத்தில் அதானியுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட நான்கு மாநிலங் களில் ஒன்று காங்கிரஸ் அரசு அல்லது அதன் கூட்டணி அரசுகள் இருந்திருக்கின்றன''’என பதிலுக்கு காங்கிரஸை குற்றம்சுமத்தி விரல் நீட்டுகிறார்.

இன்னும் லஞ்சம் வாங்கிய அதிகாரிகளின் பட்டியலை மட்டும்தான் அமெரிக்கா வெளியிட வில்லை. அடுத்தடுத்த கட்ட விசாரணையில் அதுவும் வெளிவருமோ என்று கலக்கத்தில் இருக்கிறார்கள் இந்திய அதிகாரிகள்!

nkn271124
இதையும் படியுங்கள்
Subscribe