தி.மு.க.வுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குமான கூட்டணி உறவு முறிவை நோக்கி நகர்ந்துகொண்டிருக் கிறது. கூட்டணியிலிருந்து சிறுத்தை களை வெளியேற்ற லாம் என்கிற குரல்கள் தி.மு.க. இளைஞரணியில் வலுத்து வருகிறது.
சிறுத்தைகள் சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடத்துவதை திருமாவளவன் அறிவித்ததிலிருந்தே அவரைப்பற்றிய சந்தேக வலை தி.மு.க. வுக்குள் பரவிவிட்டது. முதல்வரும் தி.மு.க. தலைவருமான ஸ்டாலின், அமெரிக்காவில் இருந்தபோதே திருமா நடத்தும் இந்த மாநாடு குறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில்... சென்னை வந்ததும் பேசிக்கொள்ளலாம் என்று சொல்லியிருந்தார். இதனால் தி.மு.க.வில் அமைதி நிலவியது.
முதல்வர் ஸ்டாலின் சென்னை திரும்பியதும், திருமாவளவன் திடீரென எடுத்துள்ள அரசியலின் பின்னணியை ஸ்டாலினிடம் தி.மு.க.வின் சீனியர்கள் வெளிப்படுத்தினர். இதனையடுத்து, ஸ்டாலினை சந்திக்க அழைக்கப்பட்ட திருமா, மாநாடு அழைப்பிதழுடன் அறிவாலயம் சென்றார். ஸ்டாலின் -திருமா சந்திப்பு நடந்தது. மது ஒழிப்பு மாநாடு நடத்துவதை தி.மு.க. ரசிக்கவில்லை என்பதை ஸ்டாலின் வெளிப்படுத்த, மாநாடு எதனால் நடத்தப் படுகிறது என்பதை விளக்கியிருக்கிறார் திருமாவளவன்.
அதனை ஸ்டாலின் ஏற்கவில்லை என்கிற நிலையில், சிறுத்தைகளுடன் கூட்டணி உறவு ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் தி.மு.க.வின் ஆர்.எஸ்.பாரதி மற்றும் டி.கே.எஸ்.இளங்கோவனை மாநாட்டுக்கு அனுப்பிவைக்கிறேன் என்று பெருந்தன்மையுடன் சொல்லியிருக்கிறார் ஸ்டாலின். இந்த சந்திப்பைத் தொடர்ந்து, திருமாவின் அரசியல் மாறும் என்று தி.மு.க. எதிர்பார்த்தது. இந்த நிலையில்தான், விடுதலை சிறுத்தைகளின் துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவரான ஆதவ்அர்ஜுனா, நான்கு வருடங்களுக்கு முன்புவரை சினிமாவில் நடித்துக்கொண்டிருந்தவரெல்லாம
தி.மு.க.வுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குமான கூட்டணி உறவு முறிவை நோக்கி நகர்ந்துகொண்டிருக் கிறது. கூட்டணியிலிருந்து சிறுத்தை களை வெளியேற்ற லாம் என்கிற குரல்கள் தி.மு.க. இளைஞரணியில் வலுத்து வருகிறது.
சிறுத்தைகள் சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடத்துவதை திருமாவளவன் அறிவித்ததிலிருந்தே அவரைப்பற்றிய சந்தேக வலை தி.மு.க. வுக்குள் பரவிவிட்டது. முதல்வரும் தி.மு.க. தலைவருமான ஸ்டாலின், அமெரிக்காவில் இருந்தபோதே திருமா நடத்தும் இந்த மாநாடு குறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில்... சென்னை வந்ததும் பேசிக்கொள்ளலாம் என்று சொல்லியிருந்தார். இதனால் தி.மு.க.வில் அமைதி நிலவியது.
முதல்வர் ஸ்டாலின் சென்னை திரும்பியதும், திருமாவளவன் திடீரென எடுத்துள்ள அரசியலின் பின்னணியை ஸ்டாலினிடம் தி.மு.க.வின் சீனியர்கள் வெளிப்படுத்தினர். இதனையடுத்து, ஸ்டாலினை சந்திக்க அழைக்கப்பட்ட திருமா, மாநாடு அழைப்பிதழுடன் அறிவாலயம் சென்றார். ஸ்டாலின் -திருமா சந்திப்பு நடந்தது. மது ஒழிப்பு மாநாடு நடத்துவதை தி.மு.க. ரசிக்கவில்லை என்பதை ஸ்டாலின் வெளிப்படுத்த, மாநாடு எதனால் நடத்தப் படுகிறது என்பதை விளக்கியிருக்கிறார் திருமாவளவன்.
அதனை ஸ்டாலின் ஏற்கவில்லை என்கிற நிலையில், சிறுத்தைகளுடன் கூட்டணி உறவு ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் தி.மு.க.வின் ஆர்.எஸ்.பாரதி மற்றும் டி.கே.எஸ்.இளங்கோவனை மாநாட்டுக்கு அனுப்பிவைக்கிறேன் என்று பெருந்தன்மையுடன் சொல்லியிருக்கிறார் ஸ்டாலின். இந்த சந்திப்பைத் தொடர்ந்து, திருமாவின் அரசியல் மாறும் என்று தி.மு.க. எதிர்பார்த்தது. இந்த நிலையில்தான், விடுதலை சிறுத்தைகளின் துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவரான ஆதவ்அர்ஜுனா, நான்கு வருடங்களுக்கு முன்புவரை சினிமாவில் நடித்துக்கொண்டிருந்தவரெல்லாம் துணைமுதல்வ ராக ஆகும்போது, 40 ஆண்டு காலம் அரசியலில் இருக்கும் எங்கள் தலைவர் திருமாவளவன் முதல்வராகவோ, துணை முதல்வராகவோ வரக்கூடாதா? என்று வீசிய குண்டு, துணை முதல்வராகப் போகும் உதயநிதியை நேரடியாகத் தாக்கியதால், தி.மு.க.வில் கொந்தளிப்பு உருவானது.
தி.மு.க.வின் உள்கட்சி விவகாரமாக இருந்தாலும், எதிர்க்கட்சிகளின் அரசியலை எதிர்கொள்வதாக இருந்தாலும் தனது 60 ஆண்டுகால அரசியல் அனுபவத்தின் வாயிலாக அணுகு வது ஸ்டாலினின் இயல்பாக இருக்கிறது. அப்படிப்பட்டவரையே கோபப்பட வைத்திருக்கிறது அர்ஜுன் ரெட்டியின் பேட்டி.
உடனே ஆ.ராசாவை தொடர்பு கொண்டு ஸ்டாலின் விவாதிக்க, உடனே ஆதவ்வின் பேட்டியை கண்டித்து அறிக்கை வாசித்தார் ஆ.ராசா. அதில், ஆதவ் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். மேலும், தி.மு.க.வின் கோபத்தை அமைச் சர் எ.வ.வேலு மூலம் திருமாவுக்கு தெரி யப்படுத்தப்பட்டது. ஆனால், அவர் அலட்டிக்கொண்ட தாகத் தெரிய வில்லை.
இந்த நிலையில் தான், தி.மு.க.வின் கோபத்தை எப்படி கையாள்வது? இதனை இப்படியே தொடர அனுமதித்தால் கூட்டணி முறிந்துவிடுமே என யோசித்த சிறுத்தை கள் கட்சியின் மாநில நிர்வாகிகள், திருமாவளவனிடம் அவசர ஆலோசனை நடத்தினார்கள். அதேசமயம், தி.மு.க.வின் கோபத்தை தற்காலிகமாக குறைப் பதற்கும், ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்கலாம் என்பதற்கு காரணம் தேவைப்பட்டதாலும், ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக மாநில நிர்வாகிகள் அறிக்கை வாசித்தனர்.
உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான விடுதலை சிறுத்தைகளின் சீறல் குறித்து தி.மு.க. இளைஞரணியினரிடம் நாம் விசாரித்தபோது, ‘’கூட்டணியில் இருந்து கொண்டே தி.மு.க.வுக்கு நெருக்கடி கொடுக்கும் ஒரு விசயத்தை (மது ஒழிப்பு) எடுத்துக்கொண்டு திருமா அரசியல் செய்வதையும், ஆட்சியில் பங்கு; அதிகாரத்தில் பங்கு என்று பேசி வருவதையும் ஏதோ அரசியலுக்காக செய்கிறார் என எங்கள் தலைவர் (ஸ்டாலின்) பெருந்தன்மையாக எடுத்துக் கொண்டார்.
ஆனால், தி.மு.க.வின் உள்கட்சி விசயங்களில் சிறுத்தைகள் தலையிடுவதை எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்? அமைச்சர் உதயநிதிக்கு துணைமுதல்வர் பதவி தருவதும், தவிர்ப்பதும் கட்சி தலைமையின் அதிகாரத்திற்கு உட்பட்டது. அவருக்கு துணைமுதல்வர் பதவி தரப்பட வேண்டும் என்பதை தி.மு.க. மூத்த தலைவர்கள் தொடங்கி, அடிமட்ட தொண்டர் வரை ஏற்கும்போது, கூட்டணியில் உள்ள சிறுத்தைகள் எதிர்க்கவேண்டிய நோக்கம் என்ன?
உதயநிதியைத் தாக்கி பேட்டி தந்த அர்ஜுன் ரெட்டி, நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதற்கு சில நாட்கள்வரை தி.மு.க.விடம் காரியம் சாதிக்க அலைந்துகொண்டிருந்தவர். முதல்வரின் மாப்பிள்ளை சபரீசனையே சுற்றிச்சுற்றி வந்தார். அவரே கதியென கிடந்தார். ஆனால், சில பல விசயங்களில் அவர் தலையிட.. அவரை எச்சரித்து அனுப்பிய முதல்வர் குடும்பம், அதன் பிறகு நெருங்கவிடவில்லை.
இதனையடுத்து, திருமாவிடம் நெருங்கி சிறுத்தைகள் கட்சியில் இணைந்த ஆதவிற்கு எடுத்த எடுப்பிலேயே துணைப்பொதுச்செயலாளர் பதவி கிடைத்தது. அந்த பதவிக்காக அவர் எவ்வளவு செலவு செய்தார் என்பது எங்களுக்குத் தெரியும். அவருக்கு பதவி கொடுத்ததை தி.மு.க. விமர்சனம் செய்ததா... இல்லையே? அவர் போட்டியிடுவதற்காக, நாடாளுமன்ற தேர்தலில் பொதுத்தொகுதி கேட்டார் திருமா. தி.மு.க. தர மறுத்தது. அதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது.
ஆனால், தி.மு.க.வில் காரியம் சாதிக்க முடியாததாலும், எம்.பி. தேர்தலில் சீட் கொடுக்க மறுத்ததாலும் தி.மு.க. தலைமை மீது கோபம்கொண்டிருக்கிறார் ஆதவ். மேலும், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலிலும், அவர் போட்டி யிடுவதற்கு தோதான பொதுத் தொகுதியை தி.மு.க. ஒதுக்காது என ஆதவ் நினைக்கிறார். தி.மு.க.கூட்டணியில் இருந்தால் தனது எதிர்பார்ப்பு நிறை வேறாது என்கிற இயலாமைதான் உதயநிதியை விமர் சிக்க வைத்தி ருக்கிறது. தி.மு.க. கூட்டணி உடையவேண்டும் என்பது எடப்பாடி பழனிச்சாமியின் அஜெண்டா. அதனை திருமா மூலம் ஆழம் பார்க்கிறார் எடப்பாடி என்று ஆவேசப் படுகின்றனர். விடுதலை சிறுத்தைகளின் நிர்வாகிகளிடம் நாம் பேசியபோது, "உதயநிதியை அட்டாக் பண்ணும் விதத்தில் அர்ஜுன் ரெட்டி பேசியது கண்டிக்கப்பட வேண்டிய விசயம். அவரது பேட்டியில் எங்கள் கட்சியில் பலருக்கும் உடன்பாடில்லை. ஆனால், திருமாவின் அரவணைப்பில் ஆதவ் இருப்பதால் எல்லா அதிகாரமும் திருமாவுக்கு அடுத்து தனக்கு இருப்பதாக நினைத்துக்கொண்டு பேசிவருகிறார். தி.மு.க. -சிறுத்தைகளின் கூட்டணி உறவுக்கு இத்தகைய அரசியல் சரிப்பட்டு வராது. உதயநிதியை தாக்கி யிருப்பதால் இனி கூட்டணி நீடித்தாலும் அது ஆரோக் கியமாக இருக்குமா என்பது தெரியவில்லை'' என்கிறார்கள்.
இந்த நிலையில், உதயநிதியை நேரடியாக தாக்குமளவுக்கு சிறுத்தைகள் துணிந்திருப்பதை ஜீரணிக்கமுடியாத தி.மு.க., "அர்ஜுன் ரெட்டி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என பொறுமைகாத்து வருகிறது. தி.மு.க.வின் பவளவிழா பொதுக்கூட்டம், கூட்டணி கட்சி களின் தலைவர்களுடன் வருகிற 28-ந் தேதி காஞ்சிபுரத்தில் நடப்பதால் அதற்குள் ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்' என்கின்றனர் உடன்பிறப்புகள்.
______________
அர்ஜூன் ரெட்டிக்கு வலுக்கும் கண்டனங்கள்!
தி.மு.க. -விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கிடையே மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தி யிருந்தார் வி.சி.க. துணைப் பொதுச்செயலாளர் அர்ஜூன் ரெட்டி. தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டி சர்ச்சையானது. உரசல் ஏற்படுமளவிற்கு பேட்டியளித்த வி.சி.க. துணைப் பொதுச்செயலாளர் அர்ஜூன் ரெட்டி, லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகனாம். இவர் நடத்திவந்த ஜிம்மில் சேர்ந்திருந்த லாட்டரி அதிபர் மார்ட்டின் மகளோடு காதலாகி கரம்பிடித்தவர், திருமணத்துக்கு முன்னர் அர்ஜூன் ரெட்டி என்றிருந்தவர், திருமணத்துக்கு பின்னர் ஆதவ் அர்ஜூனா என்று பெயரை மாற்றிக்கொண்டுள்ளார்.
"வி.சி.க.வுக்கு புதிதாக வந்திருக்கும் ஆதவ் அர்ஜூனா, கொள்கைப் புரிதலில்லாமல் கூட் டணி அறத்துக்கு எதிராகப் பேசியுள் ளார். அவரிடம் அவரது கட்சியினரே விழிப் புணர்வுடன் இருக்க வேண்டும். அவர்மீது திருமா உரிய நடவடிக்கை மேற்கொள்வார் என்று தி.மு.க. நம்புகிறது'' என தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில், ஆதவ்அர்ஜூனா பேச்சுக்கு வி.சி.க.விலேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
வி.சி.க. பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி. கூறுகையில், "தி.மு.க. -வி.சி.க. கூட்டணி யென்பது எண்ணிக்கை அடிப்படை யிலானது அல்ல. அது ஒரு கொள்கைக் கூட்டணி. வி.சி.க. இல்லையென்றால் வட மாவட்டங் களில் தி.மு.க. தேர்தலில் வெல்ல முடியாது என்ற ஆதவ்அர்ஜூனாவின் கருத்து உண்மைக்கு மாறானது மட்டுமல்ல, அரசியல் முதிர்ச்சி யற்றது. தேர்தலில் தி.மு.க. 40 இடங் களிலும் வெல்ல வி.சி.க. உதவியது. அதேபோல் வி.சி.க.வுக்கு 2 எம்.பி.க்கள், 4 எம்.எல்.ஏ.க்கள் இருப்பது தி.மு.க. கூட்டணி யால்தான்''என்றார்.
வி.சி.க. துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு கூறுகையில், "வி.சி.க. எப்போ தும் தனி நபர்களை விமர்சிப்பதை ஏற்காது, ஆதரிக்கவும் செய்யாது. வி.சி.க., தி.மு.க. தலைமையிலான கூட்டணி யில் தான் தொடர்கிறது. எங்களின் தலைவர் இதனை உறுதிப்படுத்தி யுள்ளார்." என்று தெரிவித்துள் ளார். இவர்மீது நடவடிக்கை எடுக்கும்படி வி.சி.க. தலைமைக்கு கட்சி நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-ஆதவன்