அரெஸ்ட் பண்ண தில்லு இருக்கா? -ஜெ. கால் இருக்கிற ஒரு போட்டோவ காண்பிங்கடா... -நக்கீரன் கோபால்

ff

ஜெயலலிதா கால் விஷயத்துல நக்கீரன் இன்னைக்குவரைக்கும் ஒத்தக்கால்ல நிக்குது. நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையம் சொன்ன கருத்துக்கு இது எதிர்க்கருத்து இல்லை.

நான் பொய் சொன்னேன்னு வெச்சுக்குங்க. என்னை விசாரிக்கணுமா… இல்லையா?… தம்பி, எம்.எல்.ஏ. மனோஜ்பாண்டியன், முன்னாள் அமைச்சர் பொன்னையன் இருவரையும் அவங்க சொன்ன கருத்துக்காக ஆறுமுகசாமி ஆணையத்துல கூப்பிட்டு விசாரிச்சு -அதில் உண்மையில்லை வெறும் வதந்தின்னு சொன்னாங்க.

jayaleg

"ஜெ.வுக்கு கால் இல்லை'ன்னு நாங்க ஆதாரமா இத்தனை போட்டோ போட்டிருக்கோம்ல. இதுக்கு ஆதாரமா அவங்க படம் போட்டாக்கூட நம்பலாம். அவங்க ஆதாரம் வெச்சுருக் காங்கய்யா நாம போட்டது தப்பாப்போச்சுனு விலகிருவோம். இன்னைக்கு வரைக்கும் இந்த புகைப்படங்களுக்கு எதிரா, இதுக்கு கவுண்டர் தர மாதிரி யாருமே ஆதாரம் கொடுக்கலை.

இந்த ஆணைய அறிக்கையில முதல்ல ஒருத்தரோட சாட்சியத்துக்கு வர்றேன். ஈர 12. ராம்மோகன்ராவ். முன்னாள் தலைமைச் செயலாளர். மறைந்த முதல்வரின் விரல்களோ, அல்லது கால்களோ துண்டிக்கப் பட்டனவா என அவரிடம் கேட்கப் பட்டபோது, அவர் உணர்ச்சிவசப் பட்டு 27-09-2016 அன்று, மறைந்த முதல்வர் காவிரி நதிநீர்ப்பிரச்சனை தொடர்பாக அறிக்கையைத் தயாரித் துக் கொண்டிருந்தபோது, மருத்துவ மனையில் தனது இருக்கையிலிருந்தே அறிக்கையைக் கூற, மறைந்த முதல் வரின் காலுக்கு முன்னால் தான் அமர்ந்திருந்ததாகவும் இக்கிசுகிசுக்கள் கண்டிக்கத்தக்கவை என ஆறுமுகசாமி ஆணையத்தில் சாட்சி சொல்லியிருக்கார்.

நாங்க எங்கேயுமே ஏழு நாளில் காலை வெட்டிட்டாங்கனு சொல்லலை. இறுதி ஊர்வலம் நடக்கும்போது, அந்த ஊர்வலத்துல பார்த்த படங்கள்ல, வீடியோக்களில் கால்கள் இல்லை. எழுபத்தைந்து நாள் மருத்துவமனையில் இருந்திருக்காங்க. ஏழாவது நாள் நடந்ததைச் சொல் றார். ஆக, ராம்மோகன் ராவ்

ஜெயலலிதா கால் விஷயத்துல நக்கீரன் இன்னைக்குவரைக்கும் ஒத்தக்கால்ல நிக்குது. நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையம் சொன்ன கருத்துக்கு இது எதிர்க்கருத்து இல்லை.

நான் பொய் சொன்னேன்னு வெச்சுக்குங்க. என்னை விசாரிக்கணுமா… இல்லையா?… தம்பி, எம்.எல்.ஏ. மனோஜ்பாண்டியன், முன்னாள் அமைச்சர் பொன்னையன் இருவரையும் அவங்க சொன்ன கருத்துக்காக ஆறுமுகசாமி ஆணையத்துல கூப்பிட்டு விசாரிச்சு -அதில் உண்மையில்லை வெறும் வதந்தின்னு சொன்னாங்க.

jayaleg

"ஜெ.வுக்கு கால் இல்லை'ன்னு நாங்க ஆதாரமா இத்தனை போட்டோ போட்டிருக்கோம்ல. இதுக்கு ஆதாரமா அவங்க படம் போட்டாக்கூட நம்பலாம். அவங்க ஆதாரம் வெச்சுருக் காங்கய்யா நாம போட்டது தப்பாப்போச்சுனு விலகிருவோம். இன்னைக்கு வரைக்கும் இந்த புகைப்படங்களுக்கு எதிரா, இதுக்கு கவுண்டர் தர மாதிரி யாருமே ஆதாரம் கொடுக்கலை.

இந்த ஆணைய அறிக்கையில முதல்ல ஒருத்தரோட சாட்சியத்துக்கு வர்றேன். ஈர 12. ராம்மோகன்ராவ். முன்னாள் தலைமைச் செயலாளர். மறைந்த முதல்வரின் விரல்களோ, அல்லது கால்களோ துண்டிக்கப் பட்டனவா என அவரிடம் கேட்கப் பட்டபோது, அவர் உணர்ச்சிவசப் பட்டு 27-09-2016 அன்று, மறைந்த முதல்வர் காவிரி நதிநீர்ப்பிரச்சனை தொடர்பாக அறிக்கையைத் தயாரித் துக் கொண்டிருந்தபோது, மருத்துவ மனையில் தனது இருக்கையிலிருந்தே அறிக்கையைக் கூற, மறைந்த முதல் வரின் காலுக்கு முன்னால் தான் அமர்ந்திருந்ததாகவும் இக்கிசுகிசுக்கள் கண்டிக்கத்தக்கவை என ஆறுமுகசாமி ஆணையத்தில் சாட்சி சொல்லியிருக்கார்.

நாங்க எங்கேயுமே ஏழு நாளில் காலை வெட்டிட்டாங்கனு சொல்லலை. இறுதி ஊர்வலம் நடக்கும்போது, அந்த ஊர்வலத்துல பார்த்த படங்கள்ல, வீடியோக்களில் கால்கள் இல்லை. எழுபத்தைந்து நாள் மருத்துவமனையில் இருந்திருக்காங்க. ஏழாவது நாள் நடந்ததைச் சொல் றார். ஆக, ராம்மோகன் ராவ் சொன்னது அடிபட்டுடுது.

அடுத்ததா டாக்டர் சுதா சேஷய்யன்.

ஒரு டி.வி.யில டாக்டர் சுதா சேஷய்யன் எம்பாமிங் பற்றியும், ஜெ. கால்கள் பற்றியும் ஆறுமுகசாமி ஆணையத்துல ஒரு புதுத் தகவலைச் சொன்னதா செய்திவந்துச்சு. அதுல...

gg

ஜெயலலிதா உடலுக்கு எம்பாமிங் செய்த டாக்டர் சுதா சேஷய்யன் சாட்சியத்தின்படி மற்றொரு புதிய தகவல் கிடைத்துள்ளது. எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் தின் துணைவேந்தரும் மருத்துவமருமான சுதா சேஷய்யன், டிசம்பர் 5-ஆம் தேதி இரவு பதினொரு மணிக்கு ஜெயலலிதா உடலை எம்பாமிங் செய்யும்போது, ஜெ. பத்து முதல் பதினைந்து மணி நேரத்துக்கு முன்பாகவே இறந்திருந்தார் என்ற தகவலை ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தெரிவித்திருந்தார். ஜெயலலிதா உடலில் காயங்கள் இருக்கிறதா… இல்லையா என்பது புதிராக இருந்த நிலையில், எம்பாமிங் செய்யும்போது ஜெயலலிதாவின் முகத்திலோ உடலிலோ எந்தக் காயமும் இல்லை எனவும், கால்விரல்கள் உட்பட எந்தப் பாகமும் அகற்றப்படவில்லை எனவும் அவரது உடலை எம்பாமிங் செய்த மருத்துவர் சுதா சேஷய்யன் ஆணையத்தில் வாக்குமூலம் அளித் திருந்தார் என்பது இதன்மூலம் தெரிகிறதுனு சொன்னாங்க.

நான் மறுபடியும் என் தம்பிகள் எல்லோரையும் கூப்பிட்டு, ஆணைய அறிக்கையில எங்கேயாச்சும் அந்தம்மா அப்படிச் சொல்லியிருக்காங்களான்னு பார்க்கச் சொன்னேன். எங்கேயும் சொல்லலை.

அந்தம்மாவுக்கும் நக்கீரனுக்கும் எந்த வாய்க்கால் வரப்புத் தகராறும் இல்லை. ஜெயலலிதாங்கிற ஒரு பெண்மணி மரண மடைஞ்சிட்டாங்க. ஆனால் அந்த மரணத் துக்குப் பின்னால சதிகள் இருக்குங்கிறதை ஆரம்பத்துல இருந்து சொல்லிக்கிட்டு இருக்கோம்.

திடீர்னு ஒருநாள் (06-02-2017) டாக்டர் பீலே, டாக்டர் சுதா சேஷய்யன், கைரேகை மருத்துவ நிபுணர் பாலாஜி, டாக்டர் ஆபிரகாம் எல்லோரும் பத்திரிகை யாளர் சந்திப்பு நடத்துனாங்க. தாஜ் கொர மண்டல்ல நடந்த சந்திப்புல நக்கீரன் செய்தி யாளரையும், புகைப்படக் கலைஞரையும் உள்ளே அனுமதிக்கக்கூடாதுன்னு நாலு ஆட்களைப் போட்டுட்டாங்க. அப்படி தடுத்தது மருத்துவமனையா, போலீஸா, இல்லை சசிகலா ஆட்களா, விஜயபாஸ்கர் ஆட்களானு எனக்குத் தெரியலை.

நாங்க ஜெயலலிதாவின் முகத்தில் காணப் பட்ட மூன்று புள்ளிகள் பற்றி ஒரு கட்டுரை பண்ணுனோம். சி.சி.யூ.ல இருந்தபோது எடுத்த படம் எங்களுக்கு அப்போது கிடைச் சிருந்துச்சு. அதைப் பற்றி அந்தச் சந்திப்பில் டாக்டர் சுதா சேஷய்யன் கூறும்போது, "அந்த மூணு துளைகளைப் பார்த்ததா எனக்கு ஞாபகம் இல்லை. படுக்கையில் ஒருவர் நெடுநாட்கள் இருக்கும்போது நிறமாற்றம் இருக்கும். அத்தகைய எக்சிமோட்டிக் ஸ்பாட்ஸ் மட்டுமே ஜெ. முகத்தில் இருந்தன. பொது ஊடகங்களில், சமூக ஊடகங்களில் காட்டப்பட்டதுபோல் நான் பார்க்கவில்லை” என்றிருந்தார்.

ff

அதே அம்மா ஆணைய அறிக்கையில் குறிப்பிட்டதை வாசிக்கிறேன். “ஊடகங்களில் பரவிய வதந்தியைப்போல் மறைந்த முதல் வரின் முகத்தில் துளைகள் இல்லை. உண்மை யிலே உடலில் துளைகள் இருந்திருந்தால் எம்பாமிங் செய்யும்போது, துளைகள் வழி யாக உடல் திரவ ஓட்டம் இருந்திருக்கும்” என்று அவர் மேலும் கூறினார். அப்படி எதுவும் நடக்கவில்லை; ஆகவே, அவரைப் பொறுத்தவரை, உடல்ரீதியான வன்முறைக் கான எந்தத் தடயமும் காணப்படவில்லை.

துளை இருந்துச்சு, அதுவழியா ரத்தம் வந்துச்சுனு நாங்க எங்கேயும் சொல்லலையே. அந்த புள்ளிகள் இருந்ததைத்தான் நாங்க சொன்னோம். அதைத்தான் 06-02-2017 பத்திரிகையாளர் சந்திப்பில் பீலேவோடு அமர்ந்து, எக்சிமோட்டிக் ஸ்பாட்ஸ்ன்னு இங்கிலீஷ்ல சொல்லுச்சு. நாங்க தமிழ்ல புள்ளினு சொன்னோம்.

ஆறுமுகசாமி ஆணையத்துல ஆஜராகி சில விஷயம் சொன்னாங்க சுதா சேஷய்யன்.

மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரான ஈ.ர.15- டாக்டர் சுதா சேஷய்யன், இரவு 11.30 மணியளவில் எம்பாமிங் தொடங்கிய போது, மறைந்த முதல்வர் எம்பாமிங் செய்வதற்கு 10 முதல் 15 மணி நேரத்திற்கு முன்பே இறந்திருந் தார்னு ஆணைத்துல சொன்ன டாக்டரம்மா...

இதை 6.2.2016ல் நடந்த அந்த பத்திரிகை யாளர் சந்திப்புல சொல்லலை, ஏன்?

ஜெயலலிதாங்கிறவங்க சாவுல நிறைய மர்மம் இருக்கு. அந்த மர்மத்துக்கு காரணமானவங்கள்ல இவங்களும் ஒருத்தங்க. பீலேவோட உட்கார்ந்திருக் கும்போது, ஜெ. மரணம் பத்துப் பதி னைந்து மணி நேரத்துக்கு முன்னால நடந்துச்சுன்னு ஏன் சொல்லலை? அப்ப உண்மையை மறைச்சிருக் காங்களா இல்லையா? அது பொய்னா, இதுவும் பொய்தான?

அதோட அடுத்த வெளிப்பாடு தான், நான் துளையைப் பார்த்தேனே தவிர, காலைப் பார்க்கலைன்னு சொன்னது. எம்பாமிங் பண்ணும் போது, முழு உடலையும் சோதித்துதான் எம்பாமிங் செய்வார்கள். தொடைவழியாக ரத்தநாளத்தில் பார்மலினை செலுத்துவாங்க. அதை அந்தம்மாவே சொல்லியிருக்காங்க.

ஐந்தரை லிட்டர் பார்மாலின் திரவத்தை ஜெ. உடலில் செலுத்தினோம். பார்மலினை பம்ப் செய்யும்போது எந்த இடத்திலும் கசிவு இல்லை. எங்கேயுமோ தேவையில்லாத ஓட்டை, எந்த இடத்துலயாவது இரத்தக் கசிவு நடக்கலை.

பொதுவா, எம்பாமிங்கிறதுக்கு இதுதான் நடை முறை. ஓ.கே. ஒங்க நடைமுறை எல்லாம் ரைட்டு.

அப்ப, நான் இரண்டு காலையே கவனிக்க லைன்னு சொன்னது?

எவ்வளவு பெரிய பொய் சொல்லியிருக்காங்க. எம்பாமிங் அப்ப முழு உடலையும் பார்த்திருக் காங்க. அதாவது காலில்லாத உடலை.

ஜர்னலிஸம் அப்படிங்கிறது ஆர்ட் ஆப் வெரிபிகேஷன்னு சொல்வார் இந்து ராம் சார். அது நூற்றுக்கு நூறு உண்மை. நாங்க ஒரு செய்தியை வெரிபிகேஷன் பண்ணிக்கிட்டே இருப்போம். ஜெ. மரணத்துக்கு முன்னால நடந்தது, பின்னால நடந்ததை வெரிபிகேஷன் பண்ணிக் கிட்டே இருந்ததாலதான், ஜெயலலிதா காலை காணோம்கிறதை நாங்க ஆணித்தரமா சொல்றோம்.

டாக்டர் சுதா சேஷய்யன் சொன்னதுல எத்தனை பொய் இருக்கு.

ஒருநாள் முன்னால இறந்ததை இந்தம்மா உடல்சூடு வெச்சுத்தான் கண்டுபிடிக்கிறாங்க. அப்ப கைய மட்டும் பார்த்திருக்க மாட்டாங்க. கால் எல்லாத்தையும் பார்த்திருப்பாங்க. கவனிக்கத் தவறினேன்னு இவங்க சொல்றது எல்லாம் சுத்தப் பொய்.

இதுக்கு ஒரு முடிவு வந்தா நாங்க அடுத்த வேலைக்குப் போவோம். நான் இல்லைன்னு சொல்லி பொய் சொன்னேம்னா என்னைப் பிடிச்சு உள்ளே போடட்டும். இல்லை, அவங்க பொய் சொல்லியிருந்தாங்கன்னா அவங்களைப் பிடிச்சு உள்ளே போடட்டும். அதுவரைக் கும் நாங்க ஓயமாட்டோம்.

ஒரு பிணத்தோட புகைப் படத்தை நிற்க வெச்சு பாகம் குறிச் சதை உலகத்துல யாரும் செஞ்சிருக்க மாட்டாங்க. நாங்க ஒருத்தர்தான் செஞ்சோம். நாங்க அந்தப் புகைப்படத்துல கோடு போடுற வேலை மட்டும்தான் செஞ்சிருக் கோம். அதைப் பார்த்தா சின்னப் பிள்ளைகூட தெரிஞ்சுக்கும். "எங்கேடா காலு?' இதைத்தான் நாங்க மறுபடி மறுபடி கேட்கிறோம்.

நான் மருத்துவர் இல்லை. சாதாரண பத்திரிகையாளன். எனக்குத் தெரிஞ்ச தகவலை, என் சந்தேகத்தை உங்கள் முன்னால வைக்கிறேன். இப்பயும் சொல்றேன் ஜெ.வுக்கும் எங்களுக்கும் ஏழாம் பொருத்தம். யாரையும் விரோதியா கருதி இந்த விஷயத்தைக் கையிலெடுக்கலை. ஒரு பெரிய உண்மை இதுக்குப் பின்னால மறைஞ்சிருக்கு.

ஆமா சார், கடைசி நேரம் காப்பாத்துறதுக் காக அவங்க காலை வெட்டுனோம்னு சொன்னா, அப்படியே இந்தப் படத்தை எல்லாம் சுருட்டி வெச்சுட்டு வேற வேலை பாக்கப் போயிடுவோம். இல்லைன்னா, மரணித்த பிறகு ஜெ. காலோட இருக்க ஒரு போட்டோவை காட்டுங்களேன்.

கால் பிரச்சனை முடியறவரைக்கும் அந்தக் காலை நாங்க விடவே மாட்டோம். சம்மணம் போட்டு உக்காந்து "காலைக் காணோம்'னு சத்தம்போட்டுக் கேட்டுக்கிட்டே இருப்போம்.

nkn291022
இதையும் படியுங்கள்
Subscribe