"ஹலோ தலைவரே, தேர்தல் விறு விறுப்புகளுக்கு நடுவில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தொடர்ந்து ஊச லாட்டத்தில் இருக்கிறாரே.''”
"ஆமாம்பா, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை, உயர்நீதி மன்றம் ஒத்திவைத்திருக் கிறதே?''”
"உண்மைதாங்க தலை வரே, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, ஏறத்தாழ 9 மாதங்களாக செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வருகிறார். இலாகா இல்லாத அமைச்ச ராக நீடித்து வந்த அவரிடம் நீங்கள் பதவியை ராஜினாமா செய்தால், உங்களுக்கு ஜாமீன் வழங்குவதை அமலாக்கத் துறை எதிர்க்காது என்று வழக்கறிஞர்கள் சொன்னதால், அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமாவும் செய்தார். இந்த நிலையில் இவரது இரண்டாவது ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் முன் 21ஆம் தேதி வந்தது. இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்திருக்கிறார். செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்கு களில் முக்கிய குற்றவாளியாக இருக்கும் அவரது தம்பி அசோக் தலைமறைவாக இருப்பதால், அவரை சரணடையச் சொல்லுங்கள். அல்லது நீங்கள் அப்ரூவராக மாறுங்கள் என்று இப்போது அமலாக்கத்துறையில் இருந்து அழுத்தம் தருகிறார்களாம். செந்தில் பாலாஜியோ, என் தம்பியை மறைத்து வைத்திருப்பதே டெல்-தான். என் தம்பியை ப-கடாவாக்கப் பார்க்கிறார்கள் என்கிறாராம். விரைவில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது, அவருக்கு சாதகமான தீர்ப்பு வரலாம் என்ற எதிர்பார்ப்பும் அங்கே நிலவுகிறதாம்.''”
"சரிப்பா, தமிழக வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா அமைக்கும் திட்டத்தை டெல்- அதிரடியாக நிறுத்தி வைத்திருக்கிறதே?''”
"உண்மைதாங்க தலைவரே, தமிழகத்தில் உள்ள வாக்குச் சாவடிகளில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் கண் காணிக்க, சி.சி.டி.வி. கேமராக்களை அமைக்க முடிவெடுத்திருந்தது தேர்தல் ஆணையம். இதைத் தொடர்ந்து, இந்த கேமராக்களை அமைக்கும் டெண்டரை விட தமிழக அரசு முயற்சிகளை மேற்கொண்டது. இந்த டெண்டரை தலைமைக்கு நெருக்கமான ஒருவரிடம் ஒப்படைக்க திட்டம் தயாராக... அப்படி அமைக்கப்படும் கேமராக்கள் மூலம் வாக்குப்பதிவை, வார் ரூமில் இருந்தே கண்காணிக்கவும் வியூகம் வகுக்கப்பட்டது. இந்த விவரங்கள் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கவனத் துக்குச் சென்றிருக்கிறது. இதைத் தொடர்ந்து, தமிழக தேர்தல் அதிகாரியான சத்தியப்பிரதா சாகுவைத் தொடர்பு கொண்ட டெல்-, சி.சி.டி.வி. கேமரா அமைக்கும் பணியை இப்போதைக்கு நடத்த வேண்டாம் என்று அதிரடியாக நிறுத்தி வைத்திருக்கிறதாம்.''”
"ராகுல் பிரதமராக வேண்டும்னு தமிழக காங்கிரஸின் புதிய தலைவர் முழக்கமிட்டிருக்கிறாரே?''”
"தமிழக காங்கிரஸ் தலைவராக புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் செல்வப் பெருந்தகை, கோலாகலமாக 21ஆம் தேதி தனது பதவி ஏற்புவிழாவை சத்தியமூர்த்தி பவனில் நடத்தியிருக்கிறார். இதில் ஆச்சரியப்படத்தக்க விசயம் என்ன வென்றால், எதிரும் புதிருமாக இருக்கும் காங்கிரஸின் அத்தனை கோஷ்டித் தலைவர்களை யும் ஒரே மேடையில் ஏற்றி, அனைவரின் ஆதரவை யும் பெற்றவன் நான் என்று காட்டியிருக்கிறார் செல்வப்பெருந்தகை. முன்னதாக தன் ஆதரவாளர் கள் புடைசூழ அண்ணாசாலையில் திறந்த ஜீப்பில் ஊர்வலமாக வந்தும் கலக்கியிருக்கிறார். இந்தவிழாவில் பேசிய செல்வப்பெருந்தகை, "விரை வில் தமிழகத்தில் காமராஜர் ஆட்சி ஏற்படுவதற்கான திட்டங்களை வகுப்போம்'னு சொன்னதோடு, "இப்போது இந்தியாவிற்கும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கும் ஆபத்து வந்திருக்கிறது. அதைத் தடுப்பதற்கு, இங்கே ராகுல்தான் பிரதமராக வேண்டும்' என்று குரல் கொடுத்திருக்கிறார். தமிழக காங்கிரஸில் எழுந்திருக்கும் இந்தக் குரல் டெல்-வரை எதிரொ-க்கிறதாம்.''”
"காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டதை விடுதலைசிறுத்தைகள் கட்சி கூர்ந்து கவனிக்கிறதே?''”
"பட்டியல் இனத்தைச் சேர்ந்தவரான செல்வப்பெருந்தகை, ஏற்கனவே, சிறுத்தைகள் கட்சியில் பொறுப்பி-ருந்து பணியாற்றியவர். அந்த வகையில் அந்த சமூக மக்களிடம் நட்பு பாராட்டி வந்தவராம். பட்டிய-ன மக்களுக்கு ஆகப்பெரிய தலைவராக திருமாவளவனை சிறுத்தைகள் கட்சி யினர் கட்டமைத்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டிருப்பது, தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமோ என்கிற எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறதாம். அதற்குக் காரணம், கட்சிப் பொறுப்பை அவர் ஏற்பதற்கு முதல்நாளே, த-த் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் செல் வப்பெருந்தகைக்கு ஒரு பாராட்டுக் கூட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். கட்சித் தலைவரான பிறகு அவர் கலந்துகொள்ளும் முதல் கூட்டமே சாதி சார்ந்த கூட்டமாக அமைந் திருக்கிறது. இதுதான் சிறுத்தை களை கூர்ந்து கவனிக்க வைத்திருக் கிறதாம்.''”
"ஜெ.விடம் இருந்து பறிமுதல் செய்த நகை உள்ளிட்ட விலை யுயர்ந்த பொருட்களை எல்லாம் தமிழக அரசு பெற்றுக்கொள்ளு மாறு கர்நாடக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறதே?''”
"ஜெ.’ மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த கர்நாடக சிறப்பு நீதிமன்றம், குற்ற வாளி என்று அறி வித்து சசிகலாவை சிறைக்கு அனுப் பியது. தீர்ப்பு நேரத்தில் ஜெ. உயிரோடு இல்லாததால் அவருக்கு தண்டனை வழங்கப்பட வில்லை. அவரிடம் பறிமுதல் செய்த பொருட்களை எல்லாம் தன் பொறுப் பில் வைத்திருந்த கர்நாடக சிறப்பு நீதி மன்றம், அவற்றை தமிழக உள்துறைச் செயலாளர் நேரில் வந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது. அந்த வகையில் பார்த்தால், ஜெ.வின் மொத்த நகைகளில், தங்கம் மற்றும் வைர, வைடூரிய நகைகள் மட்டுமே 28 கிலோவாம். மேலும் வெள்ளிப் பொருட் களின் மொத்த எடை 800 கிலோ அள விற்கு இருக்கிறதாம். இதோடு 11,344 காஸ்ட்-யான பட்டுப் புடவைகள், 740 விலை உயர்ந்த காலணிகள் உள்ளிட்ட பொருட்களும் அதில் அடக்கமாம். இவற்றை விற்று, அதன்மூலம் கிடைக்கும் தொகையில், கர்நாடக அரசின் வழக்குச் செலவுக்கான 5 கோடி ரூபாயை தமிழக அரசு கொடுக்கவேண்டும் என்றும் நீதிமன்றம் கட்டளையிட்டிருக்கிறது. இதையெல்லாம் விற்பதே பெரிய தலை வ-யாக இருக்குமே என்று கருதுகிறார் களாம் தமிழக அதிகாரிகள்.''”
"எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தமிழக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களை வளைக்க பா.ஜ.க. திட்டம் வகுத்து வருகிறதே?''”
"அண்மையில் ஒரு டஜன் முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை தங்கள் கட்சியில் சேர்த்த தமிழக பா.ஜ.க. நிர் வாகிகள், இதற்காகத் தங்கள் மே-டத் திடம் சபாஷை எதிர்பார்த்தார்களாம். ஆனால் பா.ஜ.க.வின் தேசியத் தலைமை யோ, பீஸ் போன பல்புகளை எல்லாம் பொறுக்கிவந்து சீன் காட்டறீங்களா? இப்ப பதவியில் இருக்கும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி, எம்.எல்.ஏ.க்களை தூக்கிவந்து உங்கள் திறமையைக் காட்டுங்கள் என்று சொல்-விட்டதாம். இதைத் தொடர்ந்து, தங் கள் பக்கம் வருகிறவர்களுக்கு 25 கோடிவரை தருவோம் என்றபடி, காங்கிரஸ் மற்றும் அ.தி. மு.க.வைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்கு பா.ஜ.க.வினர் தூண்டில் வீசி வருகிறார்களாம். தமிழக காங்கிரஸில் தான் எதிர்பார்த்த பதவி கிடைக்காத விரக்தியில் இருக்கும் அக்கட்சி யின் எம்.எல்.ஏ. விஜயதாரணிக்கு, மேற்சொன்ன டீ-ங்கின்படி வலை விரித்திருக்கிறதாம்.''
"என்னப்பா அணுகுண்டா போட்டுக் கிட்டு இருக்கே?''”
"அதுமட்டும் இல்லீங்க தலைவரே, கோஷ்டி அ.தி.மு.க.வை நடத்திவரும் ஓ.பி. எஸ்.சையும் அவர் தரப்பினரையும் பிரதமர் மோடி முன்னிலையில் அப்படியே தங்கள் கட்சியில் இணைத்துவிடும் திட்டத்திலும் பா.ஜ.க. நிர்வாகிகள் வியூகங்களை வகுத்து வருகிறார்களாம். இதற்கான டீ-ங்குகள் இப்போது தீவிரமாக நடந்துவருகிறதாம். அதேபோல் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சிலரிடமும் டீ-ங் பேசிவருகிறார்களாம். இதையறிந்து எரிச்சலான எடப்பாடி, பா.ஜ.க. தரப்புக்கு அவர்கள் பாணியிலேயே பதிலடி கொடுக்கக் களமிறங்கிவிட்டாராம். முத-ல், தங்கள் முன்னாள் எம்.பி.யான சசிகலா புஷ்பாவை, மீண்டும் தங்கள் கட்சியில் இணைத்துக்கொள்ளும் முயற்சியில் அவர் இருக்கிறாராம். இப்படி இரு தரப்புக்கு இடை யிலும், ஆள் பிடிக்கும் போட்டி விறுவிறுப் பாக ஆரம்பித்திருக்கிறது என்கிறார்கள்.''”
"நானும் அறநிலையத்துறை தொடர்புடைய ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். இத்துறையின் கீழ்வரும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயி-ல், 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இருக்கிறார்கள். இவர்களை கோவி-ன் இணை ஆணையர் கவேனிதா, சூப்பிரடெண்ட் பால முருகன், மேலாளர் ஜோதிமகா-ங்கம் ஆகியோர் அடங்கிய மூவர் கூட்டணி, ஏறத்தாழ 15 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்யச் சொல்-, கொத்தடிமைகளாக நடத்துகிறதாம். இவர் களில், இணை ஆணையர் எப்போதாவதுதான் கோயிலுக்கு வருகிறாராம். அதேபோல் இந்த கோயி-ல் தங்கள் குடும்பத் திருமண நிகழ்ச்சி களை நடத்த வருபவர்களிடம் ஏகத்துக்கும் கலெக்ஷனும் நடக்கிறதாம். இப்படி கபாலீஸ்வரரை சங்கடப்படுத்திவரும் இந்த மூவர் கூட்டணி பற்றிய புகார்கள், இப்போது துறை அமைச்சரான சேகர்பாபுவை நோக்கிக் குவிந்துவருகிறதாம்.''
___________________
நக்கீரன் 2024 பிப். 21-23 இதழில் "ராங்-கால்' பகுதியில் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் உறுப்பினராக நியமிக்கப்பட்ட சரவணக்குமார் ஐ.ஆர்.எஸ். குறித்து எழுதப்பட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டவை எல்லாம் சரவணக்குமரன் ஐ.ஆர்.எஸ். என்ற வழக்கறிஞரை குறிப்பதாக கருதப்படுவதால், இதுகுறித்து சம்பந்தப் பட்ட சரவணக்குமரனே மறுப்பு தெரிவித்துள்ளார். அதில் இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்ட் அனுமதியுடன் சட்டம் பயின்றதால் தன்மீது தொடரப்பட்ட வழக்கு, மெட்ராஸ் டிவிசன் பெஞ்ச்சால் டிஸ்மிஸ் செய்யப் பட்டுள்ளது என்றும், தான் டி.என்.பி.எஸ்.சி. உறுப் பினராகவும் இல்லை... பா.ஜ.க. நிர்வாகியும் இல்லை என்றும் மறுப்பில் குறிப்பிட்டுள்ளார்.
-(ஆர்)