"ஹலோ தலைவரே, தமிழக அமைச்சர்கள் இருவருக்கு சென்னை உயர்நீதி மன்றம் அதிரடியாகச் சம்மன் அனுப்பி இருக்குது?''”

"ஆமாம்பா, பொங்கல் இலவசப் பொருள் விவகாரம் தந்திருக்கும் கசப்பு இது.''”

"உண்மைதாங்க தலைவரே, பொங்கல் இலவசப் பொருட்கள் விநியோகத்தில், நடந்ததாகச் சொல்லப்பட்ட முறைகேடுகள் தொடர்பான வழக்கு லோக் ஆயுக்தா நீதிமன்றத்துக்குப் போனது. ஆனால் இதை, லோக் ஆயுக்தா ஏற்க மறுத்து தள்ளுபடி செய்துவிட்டது. அதனால், அந்த வழக்கை லோக் ஆயுக்தா விசாரிக்கவேண்டும் என்கிற வழக்கு, சென்னை உயர்நீதி மன்றத்தின் கதவை பலமாகத் தட்டியது. இதை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கில் ஆஜராகு மாறு அமைச்சர்கள் சக்கரபாணி, ஐ.பெரிய சாமி மற்றும் உணவுத்துறை செயலாளர் நஜிமுதீன் ஆகியோருக்கு சுடச்சுட சம்மனை அனுப்ப, இது தி.மு.க. தரப்பை ரொம்பவே அதிரவைத்திருக்கிறது. சட்டரீதியாக இதனை எதிர்கொள்ள கோட்டையில் இருந்து அறிவுறுத்தப்பட்டிருக்காம்.''

"வனத்துறையிலும் சலசலப்பு அதிகமாகத் தெரியுதேப்பா?''”

Advertisment

rr

"ஆமாங்க தலைவரே, வனத்துறையின் செயலாளரான சுப்ரியா சாகுவுக்கும், துறையின் அமைச்சர் ராமச்சந்திரனுக்கும் ஏழாம் பொருத்தமாம். இந்த நிலையில், மேலிட செல்வாக்கால் சாகு தன்னைக் கொஞ்சமும் மதிப்பதில்லை என்று அமைச்சர் தரப்பு மேலிடம் வரை புகார்களைக் கொண்டு போயிருக்கு. அதிகாரி தரப்போ, சாகு நீலகிரி தேயிலைத் தோட்டக் கழகத் தலைவராக இருந்தவர், அதனால் லோக்கலில் ராமச்சந்திரன் செய்துவந்த அத்தனை செயல்களையும் அறிந்துவைத்திருக்கிறார். அதனால்தான் அவர், ராமச்சந்திரனை அலட்சியப் படுத்துகிறார் என்கிறது. இவர்களின் உரசல் போக்கால், துறையின் செயல்பாடு தேங்கி நிற்கிறது என்கிறது கோட்டை வட்டாரம்.''”

"பிரதமர் அலுவலகம் தமிழக கவர்னர் ரவியிடம் விசாரணை நடத்தி இருக்குதே?''”

"ஆமாங்க தலைவரே, அதுக்குக் காரணம் டெல்லி தி.மு.க. கட்சி அலுவலகத்தைத் திறந்துவைக்கச் சென் றிருந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், அங்கே பிரதமர் மோடியை சந்தித்ததெல்லாம் ஊரறிந்த செய்திதான். அந்த சந்திப்பின் போது, அவர் கொடுத்த கோரிக்கை மனுவில் நீட் விவகாரமும் இருந்தது. அதைச் சுட்டிக் காட்டி தமிழக கவர்னர் ரவி பற்றிய புகாரை ஸ்டாலின் அழுத்தமாகவே மோடியிடம் தெரிவித்திருக்கிறார். குறிப்பாக, கவர்னருக்கு என்று சில அதிகாரங்கள் இருக்கலாம். அதற்காக எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு, கவர்னர் அரசின் முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதலளிக்காமல் கிடப்பில் போடுவது சரியல்ல. இது தொடர்பான என் வருத்தத்தை மாநில முதல்வர் என்ற முறையில் உங்களிடம் பதிவு செய்கிறேன்னு கொஞ்சம் காட்டமாகவே சொல்லிவிட்டு வந்திருக்கிறார்.''”

"அதுதான் விசாரணைக்குக் காரணமா?''”

"ஆமாங்க தலைவரே, ஸ்டாலின் முகத்தில் அவ்வளவு தீவிரத்தை எதிர்பார்க்காத மோடி, தனது முதன்மைச் செயலாளர் மிஸ்ரா மூலம் தமிழக கவர்னரிடம் விசாரிக்கச் சொல்லி இருக்கிறார். அவர் ஸ்டாலின் கொடுத்த தமிழகம் சார்ந்த கோரிக்கை மனுவை கவர்னருக்கு அனுப்பிவிட்டு, அவர் மீது ஸ்டாலின் வைத்த குற்றச்சாட்டு பற்றி விசாரித்திருக்கிறார். அதற்கு கவர்னர் ரவி, முதல்வரின் வருத்தங்கள் நியாயமற்றது. நீட் தேர்வு விலக்கு மசோதாவை பொறுத்து நீங்கள் அனுப்பி வைக்கச் சொன்னால் அனுப்பி வைக்கிறேன். அதில் எனக்கு எந்த இஷ்யூவும் இல்லை. ஆனால், மக்களுக்கு எதிராக மத்திய அரசு இருப்பது போன்ற தோற்றத்தை, முதல்வர் உருவாக்கி வருகிறார்னு பதிலுக்கு முதல்வர் மீது கவர்னர் புகார் வாசித்திருக்கிறாராம்.''”

"ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம் இருக்கும்னு முதல்வர் துபாய் போவதற்கு முன்பே பேச்சு அடிபட்டதே?''”

ff

Advertisment

"உண்மைதாங்க தலைவரே, ஐ.ஏ.எஸ்.களின் செட்டப்பை பெரிய அளவில் மாற்றியமைக்கணும் என்று முதல்வர் ஸ்டாலின் திட்ட மிட்டிருந்தார். அதற்கான பட்டியலை அவரது செயலாளர் ஒருவர் தயாரித்துக் கொடுக்க, அதில் திருப்தி இல்லாத அவர், துபாய் டூரை முடிச்சிட்டு வந்து பார்த்துக்கலாம்னு அதைக் கொஞ்சம் பெண்டிங்கில் வைத்தார். துபாயில் இருந்து திரும்பிய வேகத்திலேயே டெல்லிப் பயணம் இருந்ததால், அதையும் முடிச்சிட்டு வந்து அந்தப் பட்டியலை மறுபடியும் பரிசீலித்திருக்கிறார் ஸ்டாலின். சிலரை சம்பந்தமில்லாத துறைக்கு அனுப்புவது போலவும், ஒரு சிலரை பசையுள்ள இடங்களில் அமர்த்துவது போலவும் அந்தப் பட்டியல் இருந்ததாம். இதனால் அதை ரிஜெக்ட் செய்த முதல்வர், புதிதாக ஒரு பட்டியலைத் தயாரிக்கச் சொல்லி இருக்கிறாராம்.''”

rr

"ஜெ.வின் மர்ம மரணத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி கமிஷனுக்கே தலை கிறுகிறுப்பை அப்பல்லோ தரப்பு உண்டாக்கி இருக்குதே?''”

"உண்மைதாங்க தலைவரே, ஆறுமுகசாமி கமிஷனில் இறுதிக்கட்ட விசாரணை யின் போது, இரானி என்கிற எய்ம்ஸ் மருத்துவர், 8 முறை ஜெயலலிதாவைத் தான் சந்தித்ததாகவும், 4 ஆவது முறை சந்தித்த போது அவர் தனக்கு நன்றி சொன்னதாக வும் தெரிவித்து ஆச்சரியப்படுத்தினார். அப்பல்லோ டாக்டர் செந்தில்குமாரோ, ஜெயலலிதா இங்கு சிகிச்சைக்கு வந்த நாள் முதலே மயக்கத்தில்தான் இருந்தார் என்று படக்கென்று ரகசியத்தைப் போட்டு உடைத்தார். மற்றொரு மருத்துவரோ, ஜெ.’ இறப்பதற்கு நான்கு நாளைக்கு முன்னதாக அவரைப் பார்த்தபோது, அவர் நல்ல நினை வாற்றலுடன் ஆரோக்கியமாக இருந்ததாகச் சொல்லி திகைக்க வைத்தார். இப்படி அப்பல்லோ தரப்பு முரண்பாடான வாக்கு மூலங்களால், கமிஷனையே கிறுகிறுக்க வைத்துவிட்டதாம்.''”

rr

"எடப்பாடிக்கும் ஓ.பி.எஸ்.சுக்கும் மறுபடியும் பவர் யுத்தம் ஆரம்பிச்சிடுச்சே?''”

"உண்மைதாங்க தலைவரே, அது சம்பந்தமா நம்ம நக்கீரனில் தனி ஸ்டோரி வந்திருக்கு. என்னோட தகவலை சொல்றேன். அ.தி.மு.க.வின் லகானைப் பிடிச்சே ஆகணும்னு சசிகலா துடிப்பதால், விரைவில் கட்சியின் பொதுக்குழுவில் தனது பலத்தை வலுவாக்கி ஆகனும்ன்னு நினைக்கிறார் எடப்பாடி. அதனால், உட்கட்சித் தேர்தலை ஏறத்தாழ 25 மாவட்டங்களில் நடத்த வைத்து, அதில் பெரும்பாலும் தன் ஆதர வாளர்களைப் பதவியிலும் உட்கார வைத்துவிட்டார். இந்த நிர்வாகிகள் பட்டியலுக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்கிற முறையில் ஓ.பி. எஸ்.சின் கையெழுத்துக்காக எடப்பாடி அனுப்பி வைக்கச் செய்திருந் தார். அதைப் பார்த்த ஓ.பி.எஸ்.சோ, மா.செ.க்கள் யார், யாருன்னு முடிவு செஞ்ச பிறகுதான் என்னால் ஒப்புதல் தரமுடியும். ஏன்னா, இப்பவே கட்சியில் எனக்கு பிடிப்பு இல்லைங்கிற மாதிரி இருக்குன்னு சொல்லி, அந்தப் பட்டியலைத் திருப்பி அனுப்பிவிட்டாராம். கட்சி நிர்வாகிகளா யார் வேணும்னாலும் ஜெயிக்கட்டும். ஆனால் தன் ஆதரவாளர்கள்தான் மா.செ.க்களாக இருக்கணும் என்பதில் தெளிவாக இருக்கிறாராம் ஓ.பி.எஸ்.''”

"போக்குவரத்துத் துறையை சீனியர் அமைச்சர் ஒருவருக்கு மாற்றுவதாக இருந்ததாமே?''

"ஆமாங்க தலைவரே... அமைச்சர் ராஜ கண்ணப்பனிடமிருந்து போக்குவரத்துத் துறை பறிக்கப்பட்டபோது, அதைக் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியாசாமியிடம் ஒப்படைக்க விரும்பினாராம் ஸ்டாலின். காரணம், தனக்கு கூட்டுறவுத்துறை ஒதுக்கப்பட்ட நாளில் இருந்தே, அதிருப்தியில் இருப்பவர் ஐ.பி. அதனால்தான், போக்குவரத்துத் துறையை அவரிடம் ஒப்படைக்க நினைத்தாராம். ஆனால் ஐ.பி.யோ, எனக்குப் போக்குவரத்துறை வேண்டாம் என்று சொல்லிட்டாராம். சீனியர் மறுத்தாலும், சின்சியர் அமைச்சர் சிவசங்கர் பெயரை டிக் செய்து அவரிடம் ஒப்படைத்திருக்கிறார் முதல்வர்.''”’

rr

"அ.தி.மு.க.வின் மற்றொரு. மாஜியான வேலுமணிதானாகவே சிக்கலில் மாட்டிக்கொண்டு தவிக்கிறாரே?''”

”"லஞ்ச ஒழிப்புத்துறை எடுத்த நடவடிக் கையை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கைத் தாக்கல் செய்தார். லஞ்ச ஒழிப்புத்துறையோ, வேலு மணி மீதான குற்றச்சாட்டை ஆதாரங்களுடன் பட்டியலிட்டதோடு, அவர் தரப்பில் இருந்து கைப்பற்றிய அத்தனையையும் நீதிமன்றத்தில் பட்டியலிட்டது. தான் தொடுத்த வழக்கால் தனக்கே நெருக்கடி வந்திருப்பதை உணர்ந்த வேலுமணி, அந்த வழக்கைத் தாமதப்படுத்தும் முயற்சியில் இறங்கினார். லஞ்ச ஒழிப்புத்துறையோ அவரது இந்த முயற்சிக்கும் பிரேக் பிடித்து விட்டது. இதனால் பொறியில் அகப்பட்ட எலிபோல பரிதவித்து வருகிறார் வேலுமணி.''”

"டி.டி.கே.தினகரனுக்கும் நெருக்கடி முற்றுதே?''”

"ஆமாங்க தலைவரே, அ.தி.மு.க.வின் சின்னமான இரட்டை இலையைப் பெறுவதற்காக தேர்தல் அதிகாரிக்கு சுகேஷ் சந்திரசேகர் என்ற புரோக்கர் மூலம் 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில், அமலாக்கத்துறை 8-ஆம் தேதி ஆஜராகணும்னு தினகரனுக்கு சம்மன் அனுப்பி யிருக்கிறது. இந்த வழக்கில் சுகேஷ் கைதாகி, அப்போதே ஜாமீன் வாங்கிவிட்டார். இப்போது இந்த வழக்கைக் கையில் எடுத்திருக்கும் அமலாக்கத் துறை, தினகரனை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர திட்டமிட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் தன்னைக் கைது செய்யலாம் என்று மிரண்டு போயிருக்கும் தினகரன், விசாரணையில் ஆஜராகாமல் இருக்க, வாய்தா வாங்கும் முயற்சியில் முட்டி மோதிக்கொண்டிருக்கிறார்.''”

rr

"இந்த விவகாரத்தில் புரோக்கர் சுகேஷ் சந்திரசேகரிடம் அமலாக்கத்துறை வாக்குமூலம் கூட வாங்கி இருக்குதே?''”

“"அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க தினகரன் தான் என்னை நியமித்தார். அவர்களிடம் கொடுக் கும்படி என்னிடம் 2 கோடி ரூபாயைக் கொடுத் தார் என்று அழுத்தமாகச் சொல்லி இருக்கிறார். இந்த வழக்கு தூசி தட்டப்பட்டதன் பின்னணியில் சசிகலா இருக்கிறார் என்றும், அவர் தனது டெல்லி லாபி மூலம், டார்ச்சர் கொடுக்க ஆரம்பித்துவிட் டார் என்றும் தினகரன் தரப்பு புலம்புகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய வழக்கறி ஞர் கோபிநாத்தை அமலாக்கத் துறை விசாரணைக்கு அழைத் திருந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண் டிருப்பது, விவகாரத்தை சீரியஸ் ஆக்கியிருக் கிறது. இவர் டி.டி.விக்கு மிக நெருக்கமாக இருந்தவர். இப் பொழுது சுகேஷிடம் இரண்டு கோடி ரூபாய் பெற்றது தொடர்பாக அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில் இந்த வழக்கறிஞரின் தற்கொலை மில்லியன் டாலர் கேள்வியாக எழுந்துள்ளது. பா.ம.க.வைச் சேர்ந்தவர் என்று சொல்லப்படும் இவர், தினகரனுக்கு நெருக்கமாக இருந்தார். இரண்டு கோடி ரூபாய் பணப் பரிமாற்றம் நடைபெறும் பொழுது இவர் சாட்சியாக இருந்தார் என்று சொல்லப்படுகிறது. இதற்காகத்தான் இவர் இப்பொழுது தற்கொலை செய்துகொண்டார் என கூறப்படுகிறது. இந்த தற்கொலை வழக்கமாக நடைபெறும் தற்கொலை யாக இல்லாமல் முக்கியமான வழக்குகளில் சாட்சியமாக இருப்பவர்கள் தற்கொலை செய்துகொள்வது என்கிற வகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் அமலாக்கத் துறை திடீரென ஈடுபடுவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. சசிகலாவிடம் நிறைய பணம் இருக்கிறது. அந்தப் பணத்தைப் பறிப்பதற்காக ஒரு அமலாக்கத்துறை டீம் ஒன்று இந்த முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாக டெல்லி வட்டாரங்களில் சொல்லப்படுகின்றது.''”

"பா.ஜ.க. அண்ணாமலைக்கு கட்சித் தலைமை நன்னடத்தைப் பயிற்சி கொடுத்திருக்கே?''”

rr

"உண்மைதாங்க தலைவரே, தமிழக பா.ஜ.க. தலைவராக இருக்கும் அண்ணாமலை, மற்ற மாநில நிர்வாகிகளிடமும் கட்சி சீனியர்களிடமும் மரியாதையோடு நடந்துகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு வெகுநாளாகவே இருந்துவந்தது. அதோடு அண்மைக் காலமாக பத்திரிகை யாளர்களிடமும் அவர் அதிகம் உளறிக் கொட்டுகிறார் என்றும் டெல்லித் தலைமைக்குப் புகார்கள் போனது. இதனால் எரிச்சலான பா.ஜ.க. தலைமை, அவரை டெல்லிக்கு அழைத்து, அங் குள்ள ஒரு பர்சனாலிட்டி டெவலப்மெண்ட் நிறுவனத்திடம் அனுப்பி, அவருக்கு நன்னடத்தைப் பயிற்சி கொடுக்கச் சொல்லியிருக்கிறதாம். அவர் டெல்லியில் இருந்து திரும்பி வந்ததும், கே.டி.ராகவனுக்கு பதில் புதிய பா.ஜ.க. மாநில செயலாளரை நியமிக்க இருக்கிறார்களாம்.''”

"தமிழக பா.ஜ.க.வில் இன்னும் பல நிர்வாகிகள் மாற்றப்பட இருப்பதாகச் சொல்லப்படுதே?''”

"ஆமாங்க தலைவரே, தமிழக மாநில நிர்வாகிகள் மாற்றம் குறித்து கட்சியின் சீனியர்களான பொன்னார், கேசவவிநாயகம் ஆகியோர், டெல்லியில் இருக்கும் பா.ஜ.க. பிரமுகர் சந்தோஷோடும், கட்சியின் மேலிடப் பார்வை யாளரான ரவியோடும் விவாதித்திருக்கிறார்கள். கட்சியின் பொறுப்புக்கு நியமிக்க வேண்டும் என்று இவர்கள் தலா 4 பேர் பட்டியலைக் கொடுத்திருந்ததை, அண்ணாமலை ரிஜக்ட் செய்துவிட்டதில் இவர்களுக்கும் அவர்மீது கோபமான கோபமாம். இதற்கிடையே ஒரு தரப்பு, தி.மு.க.வுக்கு பதில் சொல்ல, யூடியூபரான மாரிதாஸை பா.ஜ.க.வில் சேர்க்க வேண்டும் என்று கொடி பிடிக்க... அதற்கும் பிரேக் போட்டு அவர்களின் கோபத்தையும் அண்ணாமலை சம்பாதித்திருக்கிறாராம்.''”

"நானும் ஒரு தகவலை உன் மூலம் பகிர்ந்துக்கறேன். ஜெயக்குமார் அமைச்சராக இருந்தபோது, அவரிடம் வேலை கேட்டுப் போன சிந்து என்ற பெண்ணை, பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்றும், அவர் சகோதரிக்கும் டார்ச்சர் கொடுத்தார் என்றும் சர்ச்சைகள் வில்லங்கமாக வெடித்தது. சென்னை பிராட்வே பகுதியில் வசிக்கும் அந்த சிந்து, பிறந்த குழந்தையுடன் கஷ்டப்பட்டு வருகிறாராம். அவருக்கு மாஜி தரப்பில் இருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லையாம். இதையறிந்த சிலர், குழந்தையோடு உள்ள அந்த சிந்துவை மீண்டும், மீடியா முன் பேசவைக்கப் போகிறார்களாம். இதையறிந்த ஜெயக்குமார் மிரண்டு போயிருக்கிறார்.''’

படங்கள் : அசோக், குமரேஷ்

_____________

இறுதிச்சுற்று

மிழக அமைச்சர் கே.என்.நேருவின் தம்பியும், தொழிலதிபருமான கே.என்.ராமஜெயம், கடந்த 2012-ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். தற்போதுவரை அவரைக் கொலை செய்தவர்கள் யார் என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் மர்மமாகவே இருந்து வந்ததால், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க தமிழக அரசு ஒரு புதிய குழுவை நியமித்துள்ளது. அதில் எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில் காவல்துறையினர் நியமிக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இக்குழுவில் சென்னை மகாபலிபுரம் காவல்நிலைய ஆய்வாளரான மணிமாறன் பெயர் சேர்க்கப்பட்டபோது, அவர் மறுப்பு தெரிவித்த தாகக் கூறப்பட்டது. அதன் உண்மைத்தன்மை குறித்து விசாரித்ததில், கைதான படப்பை ரவுடி குணா மற்றும் அவரது சகாக்களிடம் மணிமாறன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அவர் மதுரைக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டதன் பின்னணி இதுதான் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

-கீரன்