"ஹலோ தலைவரே, நாவடக்கம் இல்லாத கவர்னரின் போக்கு, தமிழ் மக்களை கொதிக்க வைத்திருக்கிறது.''”
"ஆமாம்பா, திராவிடர் என்று ஒன்று இல்லை. அது வெள்ளைக்காரர்கள் கிளப்பிய புளுகுங்கிற மாதிரி கவர்னர் ஆர்.என்.ரவி, புதுசா ஒரு கரடியை அவிழ்த்துவிட்டிருக் காரே?''”
"ஆமாங்க தலைவரே, கவர்னரின் போக்கு ராஜ்பவனின் மதிப்பை நாளுக்கு நாள் குறைத்தபடியே இருக்கிறது. அண்மையில் மருது சகோதரர்களின் நினைவுநாள் விழாவில் கலந்து கொண்ட அவர், சுதந்திரப்போராட்ட வீரர்கள் தமிழகத்தில் சரியாகப் போற்றப்பட வில்லைன்னு சொல்லிவிட்டு, சம்பந்தா சம் பந்தமில்லாமல் ஆரியர், திராவிடர் என்றெல் லாம் ஒன்றும் கிடையாதுன்னு சகட்டு மேனிக்கு அர்த்தமற்ற வார்த்தைகளை அள்ளிக்கொட்டினார். இதற்கு ஆளும் தி.மு.க. தரப்பு மிகக்கடுமையாகவே எதிர்வினை ஆற்றியிருக் கிறது. குறிப்பாக, "ஆளுநர் மாளிகையே… அடக்கிடு வாயை' என்று ஒருமையில் டி.ஆர்.பாலு கொந் தளிக்க, அமைச்சர்கள் பொன்முடி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் திராவிடத்துக்கு எதிரான கவர்னரின் பேச்சைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார்கள்.''”
"தமிழகத்தில் நல்லிணக்கம் நிலவக் கூடாதுங்கிற மாதிரியல்லவா கவர்னரின் பேச்சு அமைந்திருக்கிறது?''”
"உண்மைதாங்க தலைவரே, கவர்னர் எதிர் பார்த்த மாதிரியே, அவர் பேச்சு வாதப் பிரதிவாத சச்சரவையும் கருத்து மோதலையும் உண்டாக்கி இருக்கு. தி.மு.க.வின் எதிர்ப்புக்கு பதிலடி கொடுப்ப தாக நினைத்துக்கொண்டு பா.ஜ.க. அண்ணாமலை, வானதி சீனிவாசன், நாராயணன் திருப்பதி என பா.ஜ.க. பிரமுகர்கள் பலரும் கவர்னருக்கு ஆதர வாக நின்று, தி.மு.க.வுக்கு எதிராக புழுதி வாரித் தூற்றியிருக்கிறார்கள். இப்படியாக கவர்னரின் பேச்சு அரசியல்ரீதியான மோதல்களையும் ஒருவித பதட்ட நிலையையும் உருவாக்கி வருகிறது. மற்றவர் கள் என்றால் நடவடிக்கை எடுக்கலாம், கவர்னரை என்ன செய்வது என்று காவல்துறை திகைத்துப் போயிருக்கிறது. "தமிழக சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் வைத்துக்கொண்டு, நிர்வாகப் பணிகளை முடக்கும்விதமாக நடந்துகொள்ளும் கவர்னரை திரும்பப் பெறுங்கள்' என்று ஏற்கனவே குடியரசுத் தலைவரிடம் புகார் வாசித்துள்ளது தி.மு.க. இந்த நிலையில், கவர்னரின் திராவிட விமர் சனம், தமிழுணர்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் வெறுப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி வருகிறது. கவர்னரைத் திரும்பப் பெறும் கோரிக்கையை மீண்டும் தி.மு.க. டெல்லியிடம் வைக்கத் திட்டமிட்டிருக்கிறதாம்.''’
"இந்த நேரத்தில் கவர்னர் மாளிகை வாச லில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருக்கிறதே?''”
"ஆமாங்க தலைவரே, 26ஆம் தேதி
"ஹலோ தலைவரே, நாவடக்கம் இல்லாத கவர்னரின் போக்கு, தமிழ் மக்களை கொதிக்க வைத்திருக்கிறது.''”
"ஆமாம்பா, திராவிடர் என்று ஒன்று இல்லை. அது வெள்ளைக்காரர்கள் கிளப்பிய புளுகுங்கிற மாதிரி கவர்னர் ஆர்.என்.ரவி, புதுசா ஒரு கரடியை அவிழ்த்துவிட்டிருக் காரே?''”
"ஆமாங்க தலைவரே, கவர்னரின் போக்கு ராஜ்பவனின் மதிப்பை நாளுக்கு நாள் குறைத்தபடியே இருக்கிறது. அண்மையில் மருது சகோதரர்களின் நினைவுநாள் விழாவில் கலந்து கொண்ட அவர், சுதந்திரப்போராட்ட வீரர்கள் தமிழகத்தில் சரியாகப் போற்றப்பட வில்லைன்னு சொல்லிவிட்டு, சம்பந்தா சம் பந்தமில்லாமல் ஆரியர், திராவிடர் என்றெல் லாம் ஒன்றும் கிடையாதுன்னு சகட்டு மேனிக்கு அர்த்தமற்ற வார்த்தைகளை அள்ளிக்கொட்டினார். இதற்கு ஆளும் தி.மு.க. தரப்பு மிகக்கடுமையாகவே எதிர்வினை ஆற்றியிருக் கிறது. குறிப்பாக, "ஆளுநர் மாளிகையே… அடக்கிடு வாயை' என்று ஒருமையில் டி.ஆர்.பாலு கொந் தளிக்க, அமைச்சர்கள் பொன்முடி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் திராவிடத்துக்கு எதிரான கவர்னரின் பேச்சைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார்கள்.''”
"தமிழகத்தில் நல்லிணக்கம் நிலவக் கூடாதுங்கிற மாதிரியல்லவா கவர்னரின் பேச்சு அமைந்திருக்கிறது?''”
"உண்மைதாங்க தலைவரே, கவர்னர் எதிர் பார்த்த மாதிரியே, அவர் பேச்சு வாதப் பிரதிவாத சச்சரவையும் கருத்து மோதலையும் உண்டாக்கி இருக்கு. தி.மு.க.வின் எதிர்ப்புக்கு பதிலடி கொடுப்ப தாக நினைத்துக்கொண்டு பா.ஜ.க. அண்ணாமலை, வானதி சீனிவாசன், நாராயணன் திருப்பதி என பா.ஜ.க. பிரமுகர்கள் பலரும் கவர்னருக்கு ஆதர வாக நின்று, தி.மு.க.வுக்கு எதிராக புழுதி வாரித் தூற்றியிருக்கிறார்கள். இப்படியாக கவர்னரின் பேச்சு அரசியல்ரீதியான மோதல்களையும் ஒருவித பதட்ட நிலையையும் உருவாக்கி வருகிறது. மற்றவர் கள் என்றால் நடவடிக்கை எடுக்கலாம், கவர்னரை என்ன செய்வது என்று காவல்துறை திகைத்துப் போயிருக்கிறது. "தமிழக சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் வைத்துக்கொண்டு, நிர்வாகப் பணிகளை முடக்கும்விதமாக நடந்துகொள்ளும் கவர்னரை திரும்பப் பெறுங்கள்' என்று ஏற்கனவே குடியரசுத் தலைவரிடம் புகார் வாசித்துள்ளது தி.மு.க. இந்த நிலையில், கவர்னரின் திராவிட விமர் சனம், தமிழுணர்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் வெறுப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி வருகிறது. கவர்னரைத் திரும்பப் பெறும் கோரிக்கையை மீண்டும் தி.மு.க. டெல்லியிடம் வைக்கத் திட்டமிட்டிருக்கிறதாம்.''’
"இந்த நேரத்தில் கவர்னர் மாளிகை வாச லில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருக்கிறதே?''”
"ஆமாங்க தலைவரே, 26ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகை தர இருந்த நிலையில், 25ஆம் தேதி ராஜ்பவன் வாசல் பகுதியில் பெட்ரோல் குண்டு வீசியதாக ரவுடி கருக்கா வினோத் என்ற நபரை காவல்துறை கைது செய்திருக்கிறது. எப்போதும் போதையில் இருக்கும் இந்த நபர், ஏற்கெனவே டாஸ்மாக் கடை ஒன்றின் மீதும், பா.ஜ.க. அலுவலகத்தின் மீதும் இதேபோல் பெட்ரோல் குண்டு வீசியதாகவும் இவர் அண்மையில்தான் சிறையில் இருந்து வெளியில் வந்ததாகவும் காவல்துறை தரப்பு சொல்கிறது. அதேசமயம் ’இந்த விவகாரத்தில் சில நபர்கள் பெட்ரோல் குண்டுகளுடன் வந்ததாகவும், அசம்பாவிதம் தடுக்கப்பட்டு விட்டதாகவும், கவர்னருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக வும், கவர்னரின் பாதுகாப்பு சீர்குலைந்திருப்பதாகவும், தி.மு.க. தரப்பில் இருந்து அச்சுறுத்தல்கள் இருந்ததாகவும் கூறி கவர்னரின் சார்பில், அவரது துணைச் செயலாளர் செங்கோட்டையன் கமிஷனரிடம் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். ராஜ்பவனின் இந்தப் புகாரும், போலீஸ் கொடுத்த அறிக்கையும் முரண்பட்டி ருப்பதை சுட்டிக்காட்டும் பலரும், தி.மு.க.வுக்கும் ராஜ் பவனுக்கும் ஏற்பட்ட மோதலைத் திசைதிருப்பவே, இப்படியொரு சம்பவம் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டு இருக்கலாமோ என்ற சந்தேகத்தையும் எழுப்புகின்றனர்.''”
"தமிழக பா.ஜ.க.வினர், தி.மு.க. அரசின் காவல்துறை மீது சொல்லிவரும் புகாரை விசாரிக்க, பா.ஜ.க.வின் தேசியத் தலைமை விசாரணைக் குழுவை அமைத்திருக்கிறதே?''”
"உண்மைதாங்க தலைவரே, பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை வீட்டுக்கு முன்பு, அனுமதியின்றி வைக்கப் பட்டிருந்த பா.ஜ.க. கொடிக்கம்பத்தை அண்மையில் ஜே.சி.பி. வாகனத்தை வைத்து போலீஸ் அகற்றியது. அப்போது, அந்த வாகனத்தை பா.ஜ.க.வினர் தாக்கிச் சேதப்படுத்தினர். இதில் அண்ணாமலையின் சுற்றுப்பயணத்தை கவனித்துவரும் அமர்பிரசாத் ரெட்டி உட்பட 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது போலீஸ். இவர் ஜாமீனில் வெளிவர முயலும் நேரத்தில், நுங்கம்பாக்கத்தில் ஒரு அரசு அதிகாரியை மிரட்டிய வழக்கு உட்பட அவர்மீது பல்வேறு வழக்குகள் இருப்பதைச் சுட்டிக்காட்டும் சமூக ஆர்வலர்கள், அவரை குண்டர் சட்டத்தில் வைக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்கிடையே கொடிக்கம்ப விவகாரத்தில் தமிழக பா.ஜ.க.வினரை போலீசார் மிக கடுமையாக தாக்கினார்கள் என்றும், கடந்த சில மாதங்க ளாகவே போலீசாரால் பா.ஜ.க. நிர்வாகிகள் தாக்கப்படுகிறார் கள் என்றும் பொய் வழக்குகளைப் போடுகிறார்கள் என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் புகார் வாசித்தார் அண்ணாமலை. மேலும் சில பா.ஜ.க.வினரும் புகார்களை டெல்லிக்கு அனுப்பியிருக்கிறார்களாம். இதைத் தொடர்ந்து அமித்ஷாவின் உத்தரவின் பேரில், கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா எம்.பி. தலைமையில், அமைக்கப்பட்ட ஐவர் குழு சென்னை வந்து விசாரிக்க இருக்கிறது.''”
"ஓஹோ...''”
"இந்த விசாரணைக் குழுவினரிடம் என்ன மாதிரி பேச வேண்டும்? எப்படி எல்லாம் குமுற வேண்டும் என்று, மாநில நிர்வாகிகள் சிலருக்கு அண்ணாமலை க்ளாஸ் எடுத்திருக் கிறார். மேலும் சில பா.ஜ.க. நிர்வாகி களும், தி.மு.க. காவல்துறைக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை அந்த விசா ரணைக் குழுவிடம் கூறவிருக்கிறார் களாம். இதைத்தொடர்ந்து அந்தக் குழு, அமித்ஷாவிடம் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாம். இதன் அடிப்படையில், பா.ஜ.க.வின் தேசியத் தலைமை, தமிழக அரசிடம் விளக்கம் கேட்கவிருக்கிறதாம். இதன்மூலம் தி.மு.க. அரசுக்கு நெருக்கடி கொடுக்க வும் டெல்லியில் திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, தன் வீட்டு முன் இருந்த கொடிக்கம்பத்தை அகற்றும்போது, அதைத் தடுத்து மறியல் செய்ய வேண்டும் என்று, கட்சியின் கோட்டப் பொறுப்பாளர் கரு.நாகராஜனுக்கு, அண்ணாமலை உத்தர விட்டிருந்தாராம். அவர் கண்ட்ரோலில் 7 மாவட்ட தலைவர்கள் உட்பட 8 ஆயிரம் நிர்வாகி கள் இருந்தும், அவர் வெறும் 100 பேருடன் சென்று, போலீசால் எளிதாக அப்புறப்படுத்தப் பட்டு இருக்கிறார். இதனால் அவர் மீது ஏகக்கடுப் பான அண்ணாமலை, ’"போலீசை தடுத்து நிறுத்தி கொடிக் கம்பத்தை பாதுகாக்கத் தெரியவில்லையா? அப்படிப்பட்ட உங்களுக்கு எதற்கு கோட்டப் பொறுப்பாளர் பதவி?'’ என்று கடுமையாக டோஸ் விட, அண்ணாமலைக்கு எதிராக உள்ளுக்குள் ளேயே பொருமிவருகிறாராம் நாகராஜன்.''”
"நடிகை கௌதமி ராஜினாமா விவகாரம், பா.ஜ.க.வில் ஒருவித பரபரப்பை ஏற்படுத்தி இருக்குதே?''”
"பா.ஜ.க.வின் நீண்டநாள் உறுப்பினரான நடிகை கௌதமி, அண்மையில், அக்கட்சியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார். காரணம், அவருக்குச் சொந்தமான ஏறத்தாழ 200 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை, பா.ஜ.க.வைச் சேர்ந்த அழகப்பன் என்பவர் ஏமாற்றி விட்டாராம். இது தொடர்பாக அழகப்பனுடன் நட்பில் இருக்கும் பா.ஜ.க. பிரமுகர்களான அண்ணாமலை, புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் உள்ளிட்டோரிடம் கௌதமி முறையிட்டும், அவருக்குத் தீர்வு கிடைக்காத நிலையில்தான், அவர் ராஜினாமா செய்ததாகச் சொல்கிறார்கள். இந்த விவகாரம் பிரதமர் மோடி வரையில் சென்றிருக்கிறது. உடனே பிரதமர் அலுவலகம், கௌதமியைத் தொடர்பு கொண்டு, உங்கள் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படும் என்று சொல்ல, இதைத் தொடர்ந்து பரபரப்பான தமிழிசை, அண்ணாமலை உள்ளிட்டோர், இந்த விவகாரத்தில் கௌதமிக்கு உதவத் தயார் என்று சொல்லியிருக்கிறார்கள். எனினும் கௌதமி, தனது ராஜினாமா முடிவை திரும்பப்பெறுவதாக இல்லையாம்.''”
"கோட்டைத் தரப்பில் சமீப நாட்களாக, அதிக சுறுசுறுப்பையும் பரபரப்பையும் பார்க்க முடிகிறதே?''
"நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நேரம் என்பதால், ஆட்சித் தலைமையின் உத்தர வின் பேரில், கோட்டையில் படு சுறுசுறுப்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பளத்தொகையை அரசு உயர்த்தி, இந்த நேரத்தில் அவர்கள் தரப்பை மகிழ்வித்திருக்கிறது. இனி அவர்கள் அரசுக்கு எதிராக போராடுகிற சூழல் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்று, உரியவர்களுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில் சுற்றுலாத்துறை செயலாளரான சந்தீப் நந்தூரி, ஏற்கெனவே தென்மாவட்டத்தில் கலெக்டராக இருந்திருக்கிறார். இவர், சுற்றுலாத்துறையின் கொள்கைக் குறிப்பில் சொல்லப்பட்ட திட்டங்கள் எதையும் நிறைவேற்றவில்லை என்ற புகார், ஆட்சித் தலைமைக்குச் செல்ல, அதையும் விசாரித்து வருகிறது ஆட்சித் தலைமை.''
"தேர்தல் குறித்து ஏதாச்சும் சிறப்புச் செய்தி இருக்கா...?''
"2024 தேர்தலை மையப்படுத்திய பி.ஜே.பி. சார்ந்த ஒரு பரபர செய்தி சொல்றேன் கேட்டுக்க. தமிழகத்தில் 2024 தேர்தலையொட்டி பா.ஜ.க. ஒரு பெரிய கனவோட இருக்காங்க. கட்சி மட்டுமில் லாம, அந்தக் கட்சியைச் சேர்ந்த ஒரு கவர்னரும் தனது கவர்னர் பதவியை ரிசைன் பண்ணிட்டு எம்.பி. தேர்தல்ல நின்னு ஜெயிச்சு அமைச்சராகும் கனவில் இருக்காங்க. அவர் தமிழக பா.ஜ.க.வின் நீண்டகால ஆளுமையும் தமிழர்களுக்கெல் லாம் பரிட்சயமான தமிழிசை சௌந்தர ராஜன். அதேபோல, இன்னொரு தமிழக பா.ஜ.க. ஆளுமை... கட்சித் தலைமை கவர்னர் பதவி பலமுறை கூப்பிட்டுக் கூப்பிட்டுக் கொடுத்தாக்கூட, வேண்டாம், 2024 தேர்தல்ல எம்.பி.யாக நிற்க வாய்ப்புக் கொடுங்க என வலியுறுத்தியபடி மந்திரி கனவில் இருக்கிறார். அவர் பொன்.ராதாகிருஷ் ணன். இதுபோக இன்னும் எத்தனை பேர் உள்ளுக்குள்ள எம்.பி. கனவு + மந்திரி கனவுல இருக்காங்கன்னு தெரியலை.''
"வருவாய்த்துறை அலுவலர் சங்கம் நடத்திய பணிப் புறக்கணிப்புப் போராட்டம், முடிவுக்கு வந்திருக்கிறதே?''”
"திருச்சியில் மண்டல துணை தாசில்தார் பிரேம்குமார் தாக்கப்பட்டதால், வருவாய்த்துறை அலுவலர்கள் மத்தியில் இருந்த கொந்தளிப்பு, இப்போது கொஞ்சம் தணிந்திருக்கிறது. தாக்கப் பட்ட துணை தாசில்தார் வாக்குமூலத்தின் அடிப் படையில், குற்றவாளிகளைக் கைது செய்ய வேண் டும் என மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சங்க கூட்டமைப்பு, கடந்த 19 ஆம் தேதி முதல் நடத்தி வந்த பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை, கலெக்டர் பிரதீப் குமாருடன் நடத்திய பேச்சுவார்த் தைக்குப் பிறகு தற்காலிகமாக கைவிட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் இதுவரை 12 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், தாக்குதல் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த காஜாமலை விஜய் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையும் அவர்கள் தரப்பில் வைக்கப்பட்டி ருக்கிறது. உளவுத்துறையோ, இந்த விவகாரத்தை மாவட்ட ஆட்சியர் பிரதீப்பும், மாவட்ட வருவாய் அதிகாரி அபிராமியும் சரியாகக் கையாளாமல் போனதால்தான் இப்படியொரு போராட்டம் வெடித்தது என்று, மேலிடத்திற்கு ரிப்போர்ட் கொடுத்திருக்கிறதாம்.''”
"காவல்துறையிலும் சலசலப்பு தெரியுதே?''”
"காவல்துறையில் கடந்த அ.தி.மு.க. ஆட்சி யில் இருந்து தி.மு.க. ஆட்சி தொடங்கும்வரை, பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகிய இன்ஸ் பெக்டர்கள், டி.எஸ்.பி.க்கள். உள்ளிட்டோர் மாற்று பணியிடங்களுக்கு பணியமர்த்தப்பட்டு தண்டனை காலம் முடியும்வரை அவர்கள் அங்கு பணியாற்ற வேண்டும். ஆனால் தண்டனைக் காலம் முடிவதற் குள், மீண்டும் அவர்கள் பணியமர்த்தப்படுவதாக காவல்துறை வட்டாரத்தில் சலசலப்பு எழுந்திருக் கிறது. இதுகுறித்து நாம் விசாரித்தபோது, மயிலாடு துறையைச் சேர்ந்த கலைஞர் நம்பி என்பவர் மூலம், ஏ.டி.ஜி.பி. சட்டம் -ஒழுங்கு அதிகாரியிடம் இருக்கும் சபரிமலைக் கடவுளின் பெயர்கொண்ட ஒருவர் மூலம் பெரும் தொகையைப் பெற்றுக் கொண்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி ஆணை வழங்கப்பட்டு வருவதாக துறை அதிகாரி களே தெரிவிக்கிறார்கள். காவல்துறையினரே தங்களுக்குள் லஞ்சம் கொடுப்பதும், பெறுவதுமான போக்கு, இதன்மூலம் வெளிப்பட்டிருக்கிறது.''”
"நானும் ஒரு சுவாரஸ்யமான ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். கடந்த வாரம், நவராத்திரி விழாவினை கொண்டாடினார் நடிகர் ரஜினியின் மனைவி லதா. இதில் கலந்துகொள்ள முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா, முதல்வரின் சகோதரி செல்வி, டாக்டர் தமிழிசை சௌந்திரராஜன், நடிகைகள் லதா, மீனா உள்ளிட்ட பெண் பிரபலங்களை அவர் அழைத்திருந்தார். அவர்களும் கலந்துகொண்டனர். இப்படி பெண் பிரபலங்கள் கலந்துகொண்ட இந்த விழாவில், எடப்பாடியின் பரம வைரியான ஓ.பி.எஸ். ஸும் கலந்துகொள்ள, பலருக்கும் இதில் ஆச்சரியமாம். ஓ.பி.எஸ்.ஸிடம் பெண் பிரபலங்கள் அனைவரும் நலம் விசாரித்திருக்கிறார்கள். இது பெண்கள் சம்மந்தப்பட்ட விழா என்பதால், ரஜினியும் அவரது இரண்டாவது மகளின் கணவர் விசாகனும் மட்டும் இதில் கலந்துகொள்ளாமல், அந்த நேரத்தில் வெளியே கிளம்பிப் போய்விட்டார் களாம். எனினும், விழாவுக்கு வந்தவர்கள் எல்லாம், "ரஜினி சார் எங்கே?' என்று விசாரிக்க, அதற்கு "அவர் ஷூட்டிங் போயிருக்கிறார்'’ என்று பதில் சொல்லியிருக்கிறார் திருமதி ரஜினி.''