தென்சென்னை தொகுதி யின் தேர்தல் அலுவலகமாக செயல்பட்ட சென்னை மாநக ராட்சியின் அடையாறு மண் டல அலுவலகத்தில் தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய ரெய்டு விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக் கிறது.

ஈஞ்சம்பாக்கம் பகுதியி லுள்ள ஒரு நில ஆக்கிரமிப்பு பிரச்சனை தொடர்பாக, சமூக ஆர்வலர் ஒருவர் கொடுத்த புகா ரின் பேரில் விசாரணை நடத்திய சிறப்பு தாசில்தார் சரோஜா, லஞ்சம் கேட்டதாகக் கிடைத்த தகவலையடுத்து... அவரை கையும் களவுமாகப் பிடிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் திட்டமிட்டனர். அதன்படி, சரோஜாவுக்கு லஞ்சம் கொடுக்க சம்மந்தப்பட்டவர் முயற்சித்தபோது, அலுவலகத் துக்கு வெளியே நிற்கும் போலீஸ் காரரான தனது கணவரின் நண் பர் அருண்குமாரிடம் கொடுக்க, சரோஜா வலியுறுத்தியதாகச் சொல்லப்படுகிறது.

ss

அப்படி லஞ்சம் கொடுத்த போது அருண்குமாரை கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், சரோஜாவின் அலுவலகத்திலும் ரெய்டு நடத்தி, நிறைய ஆவணங் களை எடுத்துச் சென்றுள்ளனர். இந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பா.ஜ.க. தலைமையிடமிருந்து வந்த உத்தரவையடுத்து ஸ்பாட்டில் ஆஜரான பா.ஜ.க.வின் மாநில செயலாளர் கராத்தே தியாக ராஜன், தென் சென்னை தொகுதி யின் தேர்தல் அதி காரியான அமீத் திடம் சரமாரியாக கேள்வி எழுப்ப, இந்த சம்பவம் அரசியல்ரீதியாக ஏகத் துக்கும் பரபரப்பானது.

இதுகுறித்து கராத்தே தியாகராஜனிடம் கேட்டபோது, "மாநகராட்சியின் அடையாறு மண்டல அலுவல கம், தேர்தல் அலுவலகமாக இருக்கிறது. இங்குதான் பா.ஜ.க., தி.மு.க., அ.தி.மு.க. உள்பட தென்சென்னை தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரின் டாகுமெண்டுகளும் இருக்கின்றன.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் எப்படி உயர்பாதுகாப்பில் பாதுகாக்கப்படுகிறதோ அதே அளவுக்கு இங்குள்ள டாகு மெண்டுகளும் பாதுகாக்கப்பட வேண்டும். தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக் கும்போது, தேர்தல் அலுவல கத்தில் ரெய்டு நடத்த வேண்டு மானால், தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாஹு ஐ.ஏ.எஸ். அல்லது சென்னை மாவட்ட தேர்தல் அதி காரியான ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். இருவரில் ஒருவரிட மாவது அனுமதி பெற்றி ருக்க வேண்டும். ஆனால், நடத்தை விதிகள் அமலிலிருக் கும்போது அனுமதியில்லாமல் தேர்தல் அலுவலகத்தில் புகுந்து நிறைய டாகுமெண்ட்டுகளை அள்ளிச்சென்ற லஞ்ச ஒழிப்புத் துறையினரின் செயல் விதிமீறல். அப்படியே உள்ளே வந்து ரெய்டு நடத்தினால் அதனை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். ஆனால், வீடியோ எடுக்கப்படவில்லை. டாகு மெண்டுகளை எடுக்கவே இப் படி ஒரு நாடகம் நடத்தப் பட்டதா? என்கிற சந்தேகம். இதுகுறித்தெல்லாம் தேர்தல் அதிகாரியிடம் கேள்வி எழுப்பி னேன். தனக்கு எதுவும் தெரி யாது என்பதுபோல இருந்தார். இதனையடுத்துதான், சத்தியபிரதாசாஹுவுக்கும், ராதாகிருஷ்ணனுக்கும் புகார் அனுப்பினேன்''’என்கிறார் கராத்தே தியாகராஜன்.

-இளையர்