8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக ஐந்து மாவட்ட மக்களைச் சந்தித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தியவர் பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ். தற்போதைய அரசியல் சூழல் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுடன் அவரை சந்தித்தோம்..

8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக மக்களின் மனநிலை என்னவாக இருக்கிறது?

anbumani

நான் ஒருபோதும் வளர்ச்சிக்கு எதிரானவன் கிடையாது. அதனால்தான், சேலம் - சென்னை இடையி லான எட்டுவழிச்சாலையின் தேவை என்ன என்பதைக் கண்டறிய காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் சேலம் மக்களை நேரில் சந்தித்தேன். என்னுடைய தொகுதியான தருமபுரியில் மக்களை சந்திக்க அனு மதிக்கவில்லை. ஆயிரம் காவலர்களைக் குவித்து என்னைத் தடுத்தார்கள். இந்தத் திட்டத்திற்கான கோரிக்கையை யார் முன்வைத்தது? மேட்டூர் உபரிநீர்த்திட்டம், மதுரவாயல் பறக்கும் திட்டம் என கிடப்பில் இருக்கும் திட்டங்களைக் கண்டுகொள்ளாமல், முதல்வரே தன்னிச்சையாக இந்தத் திட்டத்தைக் கொண்டுவர வேண்டிய நோக்கம் என்ன? ஏற்கெனவே இருக்கும் மூன்று சாலைகளை விரிவுபடுத்தினால், செலவைக் குறைத்து நேரத்தையும் மிச்சப்படுத்தலாம். அதேபோல், சென்னை -எண்ணூர் இடையே இணைப்புச் சாலை அமைத்து, சேலத்தில் இருந்து இரும்புத்தாது எடுப்பதற்கான திட்டமும் இருப்பதாக மக்களே சந்தேகிக்கிறார்கள். நுழைவுக்கட்டுப்பாடு போன்ற பல பிரச் சனைகள் இருப்பதால், இந்த சாலையால் எளிய மக்களுக்கு எந்தப் பயனும் இருக்கப்போவதில்லை என்பதே உண்மை.

Advertisment

மக்களிடம் கருத் துக் கேட்க வேண்டிய தில்லை என்ற முடிவுக்கு அரசு வந்துவிட்டதே?

அதற்கு சட்டமே இடம் கொடுக்கவில்லை. 2014ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் இதற்கான சட்டத்தை வலுவாக்கியிருந்தார்கள். அதேயாண்டு பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபிறகு, மக்களிடம் கருத்து கேட்கத் தேவையில்லை என்ற திருத்தத்தைக் கொண்டுவந்தார்கள். அதை வைத்துதான் ஸ்டெர் லைட்டுக்கு அனுமதி பெற்றார்கள். ஆனால், 2016-ல் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அந்த திருத்தத்தை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கும் எடுத்துச்சென்று, மக்கள் கருத்து கேட்பதை உறுதிசெய்தது. தருமபுரி மாவட்டத்தில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளின் எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டவர்கள். உள்ளாட்சி பிரதிநிதிகளும் இல்லை. மீதமிருக்கும் ஒரே மக்கள் பிரதிநிதியான என்னையும் அனுமதிக்காமல் சர்வாதிகாரம் செய்கிறார்களா என்று கேட்கத் தோன்றுகிறது.

பா.ஜ.க. - பா.ம.க. இடையிலான இணக்கமான சூழலில் பிளவு ஏற்பட்டுள்ளதாக கருத்து நிலவுகிறதே?

Advertisment

8 வழிச்சாலை திட்டம் தேவையற்றது என்ற எங்களின் கருத்துக்கு, தமிழிசை தனிப்பட்ட முறையில் எங்களை இழிவுபடுத்திப் பேசுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது. இடஒதுக்கீடு கோரி 21 பேர் உயிர்த்தியாகம் செய்தனர். ஸ்டெர்லைட் போராட்டத்தைப் போலவே அன்றும் காவல்துறை கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தற்காப்புக்காக மரங்களை வெட்டி, சாலையை மறித்தார்கள். அன்று நடந்த போராட்டம்தான் 108 சமுதாயங்களைச் சேர்ந்த மக்கள் இன்று 20% இடஒதுக்கீட்டின் மூலம் பல்வேறு வாய்ப்புகளைப் பெற்றிருப்பதற்குக் காரணம். அதைக் கொச்சைப்படுத்தும் விதமாக பேசியதற்குத்தான் மன்னிப்பு கேட்கச் சொல்கிறோம்.

anbumani

""என்னுடைய அப்பா தயவில் நான் கட்சிப் பதவிக்கு வரவில்லை'' என தமிழிசை உங்களை விமர்சனம் செய்கிறாரே?

மக்களைச் சந்தித்து, போராட்டங்கள் நடத்தித்தான் நானும் அரசியல் பதவியைப் பெற்றேன். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக பொதுவாழ்க்கையில் இருக்கிறேன். விவாதம் வைத்துக்கொள்ளலாம்; யார் புத்திசாலி என்பது அப்போது தெரிந்துவிடும் என்று தமிழிசை சொல்கிறார். நான் மெரிட்டில் மருத்துவம் படித்தவன். ஆனாலும் தன் அப்பா மூலம் எம்.ஜி.ஆரின் சிபாரிசில் மருத்துவப் படிப்பு படித்த தமிழிசைதான் புத்திசாலி என்பதை ஒத்துக்கொள்கிறேன்.

சமீபத்தில் வெளியான விஜய் பட போஸ்டரை விமர்சித்து, சர்ச்சையானதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

விஜய் ரசிகர்கள் நீண்ட ஆயுள் மற்றும் நலனுடன் இருக்க வேண்டும் என்றுதான் அந்த போஸ்டரை எதிர்த்தோம். மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளத்தைக் கொண்ட ஒரு படத்திற்கு, சிகரெட்டை வைத்துதான் விளம்பரம் செய்யவேண்டுமா? கோட்பா (ஈஞபடஆ) எனும் சட்டத்தின் பிரிவு 5-ல் திரைப்படம் மற்றும் போஸ்டர்களில் புகையிலையை விளம்பரப்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்துகிறது. அந்த சட்டத் தைக் கொண்டுவந்த நான் கேட்காமல், வேறு யார் கேட்பார்கள்? "லேன்செட்' எனும் மருத்துவ ஆய்வறிக்கை "சினிமாதான் ஒருவன் சிகரெட் பிடிக்கத் தொடங்குவதற்கு முக்கியக் காரணம்' என்கிறது. இதை வலியுறுத்திய பிறகுதான் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் உள்ளிட்ட பலரும் சினிமாவில் புகை பிடிப்பதை கைவிட் டார்கள். விஜய்யும் அப்படி அறிவித்துவிட்டு, மீண்டும் அதையே செய்வதால் விமர் சித்தோம். இதில் சர்ச்சையைக் கிளப்பிவிட்டு, அரசியல் ஆதா யம் அடையும் எண்ண மெல்லாம் இல்லை.

சட்டமன்றத் தேர்தல் நடந்தால் மீண்டும் நீங்களே முதல்வர் வேட்பாளராக போட்டியிடுவீர்களா?

கடந்த தேர்தலில் நாங்கள் தனித்துப் போட்டி யிட்டபோது, கட்சி என்னை முதல்வர் வேட்பாளராக அறி வித்தது. இனிவரும் தேர்தல் களில் வியூகம் வேறு மாதிரி யாக இருக்கலாம். முதல்வர் வேட்பாளர், யாருடன் கூட் டணி போன்ற எல்லா கேள்வி களுக்கும் தேர்தல் வந்தால் தான் பதில் கிடைக்கும். ஆனால், நிச்சயமாக ஆரோக் கியமான மாற்றுக் கூட்டணி ஒன்று அமையும்.

-சந்திப்பு: ஃபெலிக்ஸ்

தொகுப்பு: ச.ப.மதிவாணன்