"ஹலோ தலைவரே, பிரதமர் மோடியின் தமிழக விசிட்டுக்குப் பிறகு இங்குள்ள பா.ஜ.க. கூடாரம் சலசலப்பில் இருக்குது.''”
"அண்ணாமலை மீடியாக்களை நோக்கி சலம்பல் காட்டியிருக்காரே?''
"கடந்த 26-ஆம் தேதி மோடி தமிழகத்துக்கு வந்தபோது மாநில பா.ஜ.க. தலைவரான அண்ணாமலைக்கு எந்த முக்கியத்துவமும் தரப்படலை. அதேபோல் விழாவில் அவர் பெயரை மோடி, குறிப்பிடவே இல்லை. இதனால் அவமானப்பட்ட அவர், மோடி மீதான தன் கோபத்தை முதல்வர் ஸ்டாலின் மீது காட்டி, அவர் மீது விழுந்து பிறாண்டி இருக்கார்ன்னு பா.ஜ.க.வினரே சொல்றாங்க. இதற்கிடையே, மோடியை விமான நிலையத்திலும் ஹெலிகாப்டர் தளத்திலும் ஸ்டேடியத்திலும் வரவேற்க பா.ஜ.க. பிரமுகர்கள் 40 பேருக்கு பாஸ் கொடுக்கப்பட்டிருக்கு. அதைப் பெறுகிறவர்கள் கோவிட் டெஸ்ட்டில் கிளியராக இருக்கணும்னு சொல்லப்பட்டதால், பலரும் போலி ரிப்போர்ட்டைக் கொடுத்துட்டாங்களாம். இதையறிந்த மோடி தரப்பு மிரண்டுபோய் இருக்குதாம்.''”
"டுபாக்கூருக்கே டுபாக்கூரா? சாரிப்பா, ஆறுபேர் விடுதலை குறித்த ஆலோசனைகள் இங்கே விறுவிறுப்பா நடக்குதே?''”
"ஆமாங்க தலைவரே, ராஜீவ் வழக்கில் சிக்கியவர்களின் விடுதலை தொடர்பான ஆலோசனை, அரசு சார்பில் தொடர்ந்து நடந்துக்கிட்டே இருக்கு. முதல்வர் ஸ்டாலின், ஊட்டிக்குப் போன நேரத்தில் கூட, அங்கேயே அது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை ஆன்லைனில் நடத்தினார். அதேபோல் ரெண்டு நாளைக்கு முன்பும், இது தொடர்பாக அவர் கோட்டையில் ஆலோசனை நடத்தினார். அப்ப பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரையும் விடுதலை செய்ய ணும்னு ஏற்கனவே சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டதால், மீண்டும் ஆறுபேருக்காக புதுசா தீர்மானம் நிறைவேற்றத் தேவையில்லைன்னு அதில் முடிவெடுக்கப்பட்டிருக்கு. சீனியர் அதிகாரிகளோ, இது தொடர்பாக கவர்னரை ஒருமுறை முதல்வர் சந்திக்கலாம் என்று ஆலோ சனை கூறியதோடு, கவர்னர் ஒத்துழைக்க மறுத்தால், பேரறிவாளன் தொடர்பான தீர்ப்பைக் காட்டியே மற்ற வர்கள் எளிதாக விடுதலையை வாங்கிடலாம்னு முதல்வரிடம் சொல்லியிருக்காங்களாம்.''”
"நாம ஏற்கனவே பேசிய படி, பா.ம.க. தலைவராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் நியமிக்கப்பட்டிருக்காரே?''”
"கடந்த 25 ஆண்டுகளாக பா.ம.க.வின் தலைவராக இருந்தவர் ஜி.கே.மணி. அதோடு சட்டமன்ற பா.ம.க. வின் தலைவராகவும் அவரே இருந்ததால், தன் மகன் அன்புமணியை, கட்சியின் தலைவர் பதவியில் உட்கார வைக்கணும்னு பா.ம.க.வின் நிறுவன ரான டாக்டர் ராமதாஸ் ஆசைப்பட்டார். இதற்கான காய் நகர்த்தல்கள் நடந்தது. அது குறித்து ரெண்டு வாரத்துக்கு முன்பே நாமும் பேசிக்கிட்டோம். அதன்படியே 28-ஆம் தேதி பா.ம.க.வின் செயற்குழு கூடி, அன்புமணி ராமதாஸைக் கட்சியின் தலைவராக அறிவித் தது. இதில் மிகவும் நெகிழ்ந்த நிலையில் காணப்பட்டார் ராமதாஸ். தலைவர் பதவியை ஏற்றுக்கொண்ட அன்புமணி, முதல்வர் ஸ்டாலினை முதலில் சந்தித்து வாழ்த்தைப் பெற்றார். கடந்த காலத்தில் தீரனால் கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்ட போது ஜி.கே.மணி கிடைத்தார். விசுவாசமாக இருந்தார். ஜி.கே.மணியின் சேவைக்குப் பாராட்டு தெரிவித்து, விடை கொடுத்து அன்புமணியைத் தலைவராக்கி நெகிழ்ந்திருக்கிறார் டாக்டர் ராமதாஸ்.''”
"கொடநாடு கொலை -கொள்ளை விவகாரத்தில் அ.தி.மு.க. மாஜி மந்திரி வைத்திலிங்கம் பெயரும் அடிபடுதே?''
"உண்மைதாங்க தலைவரே, 2014 ஜெ.’ ஆட்சிக் காலத்தில் வீட்டுவசதித் துறை மந்திரியாக இருந் தார் வைத்திலிங் கம். அந்த நேரத் தில் ஸ்ரீராம் நிறுவனம் சென்னை வண்டலூர் அருகே 57 ஏக்கர் பரப்பில், 2 ஆயிரம் வீடுகளைக் கட்டியது. இந்த விசயத் தில் வைத்தியின் மகன் பிரபுவின் நிறுவனமான முத்தம்மாள் ஏஜன்ஸிக்கு முறைகேடாக 27.01 கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனை நடந் திருக்கு. இது தொடர்பான ஆவணங்களையும் சசிகலா கொடநாடு பங்களாவில் வைத்திருந் தாராம். கொடநாடு கொள்ளைக்குப் பின், அந்த ஆவணங்கள் எடப்பாடி மூலம் வைத்தி லிங்கம் கைக்கே போய்விட்டதாம். இது தொடர்பான தகவல் விசாரணை டீமின் கவனத்துக்கு வந்திருப்பதோடு, வைத்தியின் அந்த பழைய ஊழலும் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.''”
"இன்னொரு அ.தி.மு.க. மாஜி மந்திரியான ஜெயக்குமார், புது ரூட்டைப் போட்டுக்கொண்டு இருக்கிறாரே?''”
"ராஜ்யசபா சீட்டை ரொம்பவே எதிர்பார்த்திருந்த ஜெயக்குமாருக்கு, ஏமாற்றமே கிடைத்தது. அவருக்குக் கிடைக்க இருந்த சீட்டை, 54 மா.செ.க்களின் ஆதரவுக் கடிதத்தை, தன் சகோதரர் ராதாகிருஷ்ணன் மூலம் வாங்கி இருந்த சி.வி.சண்முகம் தட்டிக்கொண்டு போய்விட்டார். மேலும் சென்னையில் இருக்கும் 5 அ.தி.மு.க. மா.செ.க்கள் ஜெயக்குமாருக்கு சீட் கொடுக்கக்கூடாதுனு கொடி பிடிச்சிருக் காங்க. இந்த நிலையில் ஜெயக்குமார், ஜூலையில் நடக்க இருக்கும் அ.தி.மு.க., பொதுக்குழு வில் கட்சியின் அவைத்தலைவர் பதவி யைக் கைப்பற்றுவதற்கான மூவ்களில் இருக்கிறார். அப்படி அவைத்தலைவர் பதவியில் உட்கார்ந்த பிறகு, அந்த சென்னை மா.செ.க்களின் பதவியைப் பறிப்பேன்னு இப்போதே சவால் விடத் தொடங்கிவிட்டார்.''”
"காங்கிரஸின் சீனியர் லீடரான கபில் சிபல், அக்கட்சியில் இருந்து ராகுலால்தான் விலகினார்னு சொல்லப்படுதே?''”
"டெல்லியில் அப்படி பேசப்படு துங்க தலைவரே... காங்கிரசின் சீனியர் தலைவரும் வழக்கறிஞருமான கபில்சிபல் தான், கட்சி தொடர்பான சட்ட விவகாரங்களையும் கையாண்டு வந்தார். காங்கிரசின் தொடர் தோல்வியால் கட்சித் தலைமை மீது கொஞ்ச நாளாகவே அதிருப்தி கொண்டிருந்த கபில்சிபலும், குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட சீனியர்கள் சிலரும், சோனியா காந்தியின் குடும்ப அரசியல்தான் தோல்விக்குக் காரணம்னு கொடிபிடித்து, தனி அணியை உருவாக்கி செயல்பட்டு வந்தாங்க. இந்த நிலையில், கட்சியில் தனக்கு ராஜ்யசபா சீட்டை கபில்சிபல் எதிர்பார்த்தார். ராகுலோ, அவரது இந்த எதிர்பார்ப்புக்கு குறுக்கே நின்றார். இதனால் எரிச்சலான கபில்சிபல், காங்கிரஸில் இருந்து விலகிவிட்டார். அவரை, சமாஜ்வாடிக் கட்சியின் சார்பில் ராஜ்யசபாவுக்கு அனுப்ப அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.''””
"தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, தங்கள் கட்சித் தலைமையிடம் தி.மு.க. பற்றி புகார் சொல்லி இருக்கிறாரே?''
"உண்மைதாங்க தலைவரே, ராஜ்ய சபா சீட்டை தலைமையிடம் எதிர்பார்த் திருந்த கே.எஸ்.அழகிரி டெல்லி சென்று, 28-ஆம் தேதி சோனியாகாந்தியை சந்தித் தார். தனக்கு சீட் கேட்ட அவர், சந்தடி சாக்கில் பேரறிவாளன் விடுதலைக்கு காங்கிரஸ் கட்சி சார்பாக கடும் எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டம் நடத்தியதை சோனியா விடம் விவரித்துவிட்டு, தி.மு.க.வின் போக்கு சரி யில்லைன்னு புகார் வாசிச்சிருக் கார். அதோடு, ராஜீவ் வழக்கில் மீதமிருக்கும் ஆறு பேரையும் விடுதலை செய்ய தி.மு.க. அரசு முடிவு செய்து இயங்குவதையும் சொல்லி, இதை எதிர்த்துக் கடுமையான போராட்டத்தை நாங்கள் முன்னெடுக்கலாமான்னு கேட்டிருக்கிறார். சோனியாவோ, அவசரப்படவேண்டாம். வெய்ட் என்று சொல்லி, அவரை அனுப்பி வைத்துவிட்டாராம்.''”
"நானும் காங்கிரஸ் தொடர் பான ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். காங் கிரஸுக்கு தி.மு.க.வால் ஒதுக்கப்பட்ட ராஜ்யசபா சீட்டைத் தனக்குத் தரணும்னு ப.சிதம்பரம் வரிஞ்சிகட்டினார். அதேபோல் தமிழகத்தைச் சேர்ந்த சிலரும் போட்டியில் குதிச்சாங்க. ப.சி.க்கு சீட் கொடுப்பதில் ராகுல்காந்திக்கு விருப்பம் இல்லை. அதே சமயம் மன்மோகன்சிங், ப.சி.யை கை விட்றாதீங்கன்னு சோனியாவிடம் கேட்டுக்கிட்டார். இதனால்தான் கடைசி நேரம் வரை மனக் குழப்பத்திலேயே இருந்த காங்கிரஸ் தலைமை, ப.சி.யை கடைசி நேரத்தில் வேட்பாளராக அறிவித்துள்ளது.''’