சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ’"அண்ணாத்த'’ படத்தின் ஷூட்டிங் 40% முடிந்த நிலையில், கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, பிரகாஷ்ராஜ், வேல ராமமூர்த்தி உட்பட இருபதுக்கும் மேற்பட்ட முக்கிய கேரக்டர்கள், நூற்றுக்கணக்கான துணை நடிகர்களை வைத்து, டைரக்டர் சிவா ஹைதரபாத் ராமோஜிராவ் ஸ்டுயோவில் ஷூட்டிங் நடத்திக் கொண்டிருந்தபோது கோவிட்-19 வந்தது.
லாக்டவுன் தளர்வு ஆரம்பித்த போது ரஜினியின் அரசியல் பயணமும் ஆரம்பித்தது. ‘’"அண்ணாத்த'வின் மீதி போர்ஷனையும் முடித்துவிட்டு, "முழுமூச்சாக அரசியலில் இறங்குவேன்'’’ எனச் சொல்லிவிட்டு ஹைதராபாத் கிளம்பினார் ரஜினி. ஷூட்டிங் ஆரம்பித்த சில நாட்களிலேயே ரஜினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அங்கே உள்ள அப்பல்லோவில் அட்மிட்டாகி சிகிச்சை முடிந்து சென்னை திரும்பிய ரஜினி ’"அரசியலில் ஈடுபட எனது உடல்நிலை ஒத்துழைக்கவில்லை' என வெளிப்படையாக அறிவித்துவிட்டு முழு ஓய்வில் இருக்கிறார்.
தனது மனைவி, மகள்கள் தவிர யாரையும் சந்திக்காமல் தனிமையில் இருக்கும் ரஜினி மீண்டும் ‘’"அண்ணாத்த' ஷூட்டிங்கில் கலந்து கொள்ளும் முடிவுக்கு வந்துள்ளார். "2021 தீபாவளிக்கு ’"அண்ணாத்த'’வை ரிலீஸ் பண்ணலாம்' என ரஜினியிடமிருந்து சிக்னல் வந்த பிறகுதான் அதிகாரப்பூர்வ அறிவிப்பை ட்விட்டரில் ரிலீஸ் பண்ணினார் கலாநிதிமாறன்.
டாக்டர்களின் அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் ஸ்ட்ரிக்டாக ஃபாலோபண்ணும் ரஜினி, தனது ஆஸ்தான ஜோசியரிடம் கலந்தாலோசித்த பின், மார்ச் மாதத்திலிருந்து ‘"அண்ணாத்த'வின் ஷூட்டிங்கில் உற்சாகமாக கலந்துகொள்ளவிருக்கிறார். ஒரு வருடத்திற்கும் மேலாக தனக்காக பொறுமை காத்த டைரக்டர் சிவாவிற்கும் நம்பிகை டானிக் கொடுத்துள்ளார் ரஜினி.
இதனால் ரொம்பவே மகிழ்ச்சியான கலாநிதிமாறன் செம அலெர்ட்டாகி, ரஜினியின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு ஹைதராபாத் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் படமாக்கப்பட வேண்டிய முக்கிய சீன்களை சென்னையிலேயே செட்போட்டு எடுத்துவிடலாம் எனக் கூறிவிட்டாராம். மேலும் ரஜினியுடன் நடித்தே ஆகவேண்டிய முக்கியக் கேரக்டர்கள் தோன்றும் சீன்களைத் தவிர, கிரவுட் அட்மாஸ்பியர் சீன்களில் லேட்டஸ்ட் விஷுவல் எஃபெக்ட்ஸ் டெக்னாலஜியைப் பயன்படுத்தி ரஜினியுடன் மேட்ச்பண்ணும் டைரக்டர் சிவாவின் ஐடியாவுக்கும் ஓ.கே. சொல்லிவிட்டாராம் கலாநிதிமாறன்.
வாங்க அண்ணாத்த... வந்து சில்வர் ஸ்கிரீனில் கலக்குங்க அண்ணாத்த.
உலக சினிமா வரலாற்றில்….
இந்திய சினிமா வரலாற்றில், ஏன் உலக சினிமா வரலாற்றில் "சக்ரா'’ படத்திற்கு சென்னை சத்யம் தியேட்டரில் ஃப்ளக்ஸ் போர்டு வைத்ததெல்லாம் நியூசாக கிளம்பும் அளவுக்கு விஷாலின் நிலைமை போய்விட்டது.
டைரக்டர் சுந்தர் சி.-விஷால் காம்பினேஷனில் ‘ஆக்ஷன்’ என்ற படத்தை பலகோடி ரூபாய் செலவில் தயாரித்தார் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன். படமோ பப்படமாகிவிட்டது.
அடுத்து மிஷ்கின் டைரக்ஷனில் ரிலீசான ‘"துப்பறிவாளன்'’ படத்தின் இரண்டாம் பாகத்தையும் மிஷ்கினே டைரக்ட் பண்ணுவதாக அறிவித்த விஷால், லண்டனில் ஷூட்டிங்கையும் ஆரம்பித்தார். மிஷ்கினின் எக்ஸ்ட்ராடினரி மைண்டால் கண்ணுமுழி பிதுங்கியது விஷாலுக்கு, ஏன்னா படத்தின் தயாரிப்பாளரும் அவர்தான்.
""ஒங்க சங்காத்தமே வேணாம் ‘"துப்பறிவாளன்-2'வை நானே டைரக்ட் பண்ணிக்குறேன்''’ என மிஷ்கினை கழட்டி விட்ட விஷால், அந்தப் படத்தை ஓரங்கட்டிவிட்டு, ஆனந்தன் டைரக்ஷனில் ‘"சக்ரா'’’ படத்தை ஆரம்பித்து, ஓ.டி.டி.யில் 2020 அக்டோபர் மாதம் ரிலீஸ்பண்ணப் போறதா சொன்னபோது தான், ரவீந்திரன் கோர்ட்டுக்குப் போனார், ஸ்டே வாங்கினார்.
இப்போது ஒருவழியாக பஞ்சாயத்துப் பேசி முடித்து முதல் கட்டமாக ஒரு தொகையை ரவீந்திரனுக்கு செட்டில் பண்ணுவதாக விஷால் ஒத்துக் கொண்ட பிறகு, வருகிற 19-ஆம் தேதி தியேட்டர்களில் "சக்ரா'’ரிலீஸ் ஆவதாக அறிவித்திருக்கிறார் விஷால். அதனாலதான் சத்யம் தியேட்டரில் ஃப்ளக்ஸ் வச்சதையெல்லாம் சாதனை சம்பவமாக்கிட்டாரு விஷால்.