தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வட மாநிலத்தவர் ஆதிக்கம்போல், திருவண்ணாமலையில் அதிகரித்துவரும் ஆந்திரா, தெலுங்கானா மக்களின் ஆதிக்கத்தால் கோவில் உரிமையே கைவிட்டுப்போகுமோ என உள்ளூர் பக்தர்கள் அச்சப்படுகின்றனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் புகழ் பரவப் பரவ, கிரிவல நாட்கள் மட்டுமல்லாமல், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் கூட இங்கே ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா பக்தர்கள் ஆயிரக்கணக்கில் குவிகின்றனர். உள்ளுர் பக்தர்களே கோவிலுக்கு செல்லமுடியாத அளவுக்கு வெளி மாநிலத்தவர்களால் நிரம்பியுள்ளது கோவில். கோவிலுக்கு வரும் அண்டை மாநில மக்கள், போக்குவரத்து விதிகளை மதிக்காமல் பயணிப்பதும், பார்க்கிங் செய்வதும் பெரும் நெரிசலை ஏற்படுத்துகிறது. அதேபோல் சுவாமி தரிசனம் செய்வதிலும் புரோக்கர்கள் மூல மாக அதிகாரிகள், சிவாச்சாரியர்கள், அய் யர்களுக்கு பணத்தை அள்ளித்தந்து விட்டு வரிசையில் வராமல் பந்தாவாக சிறப்பு தரிசனம் செய்வது, வரிசையில் காத்திருக்கும் உள்ளூர் பக்தர்களை கடுப்பாக்கியுள்ளது.
இந்நிலையில், நம்மை தொடர்பு கொண்டு பேசிய வழக்கறிஞர் ஒருவர், "கடந்த சில மாதங்களாக திருவண்ணாமலையை சுற்றியுள்ள கிராமங்களில் ஆந்திர தொழிலதிபர்கள் சிலர், ஏக்கர் கணக்கில் இடம் வாங்கிக்குவித்துள்ளனர். கடந்த இரண்டு மாதத் தில் மட்டும் 13 டாகு மெண்ட்டுகளுக்கு ஒப்பீனியன் தந்துள்ளேன், அவற்றின் தோராய மார்க் கெட் மதிப்பு 25 கோடி ரூபாய். என்னிடமே 13 டாகுமெண்ட்கள் என்றால் சீனியர் வழக்கறிஞர்களிடம் இன் னும் எத்தனை டாகு மெண்ட்டுகள் கன்சல் டிங்காகப் போயிருக்கும் என யோசித்துப்பாருங் கள். திருவண்ணாமலை நகரத்தைச்சுற்றி எங்கி ருந்தாலும் இடத்தை வாங்கிப் போடுகிறார்கள், என்ன நோக்கத்துக் காக இப்படி இடங் களை வாங்குகிறார்கள் எனத் தெரியவில்லை'' என்றார்.
இதுபற்றி ரியல் எஸ்டேட் வட்டாரத் தில் விசாரித்தபோது, "முன்பெல்லாம் சென் னையை சேர்ந்த சினிமாக் காரர்கள், தொழிலதிபர் கள், கொங்கு மண்டலத் தை சேர்ந்தவர்கள் திரு வண்ணாமலையில் ஒரு கெஸ்ட்ஹவுஸ் வேண்டு மென்று இடம்வாங்கி வீடு கட்டினார்கள். இப் போது ஆந்திரா, தெலுங் கானாவை சேர்ந்தவர் கள் வந்து இடம் வாங்கு கிறார்கள். கிரிவலப் பாதையை ஒட்டி சதுர அடிக்கணக்கில் வாங்கிய வர்கள் தற்போது, நகரத் துக்கு வெளியே ஏக்கர் கணக்கில் வாங்கிப்போடுகிறார்கள். சதுர அடிக்கு இரண்டாயிரம் என்பதை நான் காயிரமாக விலையையும் ஏற்றிவிட்டார்கள். கடந்த மூன்று மாதங்களில் மட்டும் சுமார் 200 கோடி அளவுக்கு முதலீடு செய்துள் ளார்கள். வருங்காலத்தில் இன்னும் உயரும். அவர்களின் எண்ணம் ரியல் எஸ் டேட் கிடையாது என்பதுமட்டும் உண்மை'' என்றனர். திருவண்ணாமலை நகரத்தில் ஒவ்வொரு சாதிக்கும் சத்திரங்கள் உள் ளன. காலப்போக்கில் சத்திரங்கள் திருமண மண்டபங்களாக, காம்ப்ளக்ஸ்களாக மாறிவிட்டன. தற்போது பௌர்ணமி, தீபத்திருவிழா நாட்களில் பக்தர்களுக்கு அன்னதானம் போடுவதற்கு மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடுகள் விதித்திருப்ப தால் திருமண மண்டபங்களாகத் தேடு கின்றனர். ஆந்திராவை சேர்ந்தவர்களின் நன்கொடையில் நிறைய அன்னதானம் நடக்கிறது. அன்னதானத்துக்கு திருமண மண்டபங்களுக்கு கொள்ளை வாடகை கேட்பதால், பெரிய தெருவில் ஒரு திருமண மண்டபத்தை சில கோடிகளுக்கு ஆந்திர தொழிலதிபர் ஒருவர் விலைபேசி வருகிறார் என்கிறார்கள்.
திருவண்ணாமலைக்கு ஆந்திர, தெலுங்கானா மக்களின் வருகை அதிகரிப் பதற்கான காரணத்தை நாம் விசாரித்த போது புதிய தகவல்கள் கிடைத்தன. ஆந்திர மாநிலம் எலுரு மாவட்டத்தை சேர்ந்தவர் பிரபல ஆன்மீக சொற்பொழி வாளர் சங்காட்டி கோட்டேஸ்வர ராவ். திருப்பதி தேவஸ்தான தொலைக்காட்சி உட்பட பல தொலைக்காட்சிகளில் தினமும் இவரின் சொற்பொழிவு வரு கிறது. ஆந்திர அரசின் கலை பண்பாட்டுப் பிரிவு ஆலோசகராகவும் உள்ளார். கொரோனா காலத்தில் இவரின் சொற்பொழிவுகள் சோசியல் மீடியாவில் பிரபல மானது. தொலைக்காட்சிகளில் சிவன் குறித்து பேசும்போது, "சிவனை வணங்கும் தெலுங்கு மக்களுக்கு திரு வண்ணாமலை அண்ணாமலையார் தான் குலதெய்வம். சிவத்தலங்களுக்கு தலைமை பீடம் அண்ணாமலையார் கோவில்தான்' எனக் கூறி அண்ணாமலையாரின் பெருமையை பேசிவருகிறார். இதனால் ஆந்திரா -தெலுங்கானா மக்கள் திருவண்ணா மலைக்கு அண்ணாமலையாரை தரிசிக்க வருகிறார்கள். சில நாட்கள் தங்கி அண்ணாமலையாரை தரிசிக்கலாம், அங்கே இறந்தால் முக்தியடைலாம் என்றெல்லாம் நினைத்து ஆந்திரா பகுதியிலிருந்து முதியவர்கள் வருகிறார்கள். வயதான காலத்தில் அங்கேயே இருக்கலாம் என்பதற்காகவும் இடம் வாங்கி வீடு, ஆசிரமம் கட்டுகிறார்கள் என்கிறார்கள்.
தமிழர்களின் கோவிலாக இருந்த திருப்பதி ஏழுமலை யான் கோவிலில் தங்கத்தகடு பொருத்துவதாகக்கூறி, தமிழ் கல்வெட்டுக்களை சேதப்படுத்தி மறைத்து, நம்மிடமிருந்தே பறித்ததைப்போன்ற நிலை திருவண்ணாமலை கோவிலுக்கும் வந்துவிடுமோ என்று அச்சப்படுகிறார்கள் திருவண்ணா மலை மக்கள்.