அண்ணாமலையின் ரபேல் வாட்ச் விவாதத்துக்கு உள்ளான நிலையில் தி.மு.க. அமைச்சர்களின் சொத்து விவரங்களை வெளியிடப் போவதாக அண்ணாமலை மிரட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால், அண்ணாமலைக்காக இதுவரை பா.ஜ.க. என்ன செலவு செய்தது என்ற விவரம் வெளியாகியுள்ளது. நூற்றுக்கணக்கான கோடிகள் அண்ணாமலைக்காக பா.ஜ.க. செலவு செய்துள்ளது. அவருக்காக ‘வார் ரூம்’ எனப்படும் கணினித் தொடர்பு மையங்கள் மூன்று இடங்களில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு வார் ரூம் உருவாக்க மூன்று கோடி ரூபாய் தேவை. ஒவ்வொரு வார் ரூமிலும் எண்பது கணிப்பொறி பட்டதாரிகள் மாதம் முப்பதாயிரம் ரூபாய் சம்பளத்தில் அமர்த்தப்பட்டுள்ளார்கள்.
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடம், போலி நிதி நிறுவனமான சுரானாவுக்கு சொந்தமான இடம் மற்றும் பெங்களூருவில் உள்ள ஒரு இடம் ஆகிய மூன்று இடங்களில் வார் ரூம் எனப்படும் கணிப்பொறி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்பொழுது நான்காவது வார் ரூம் ஒன்றை சென்னை மவுண்ட் ரோட்டில் அமைக்க முடிவு செய்துள்ளார்கள்.
இந்த வார் ரூம் மூலம்தான் என் மீது தாக்குதல் நடத்துகிறார்கள் என காயத்ரி ரகுராம் குற்றம் சாட்டுகிறார். பெங்களூருவில் உள்ள வார் ரூம் மூலம் ‘அண்ணாமலை பிரதமராகத் தகுதியுள்ளவர்’ என்ற பிரச்சாரம் உத்தரப்பிரதேசம் போன்ற வட மாநிலங்களுக்குச் செல்கிறது. இவை ஒவ்வொன்றையும் பராமரிக்க லட்சக்கணக்கான ரூபாய் பா.ஜ.க.வால் செலவழிக்கப்படுகிறது. இது தவிர தமிழகத்தில் இயங்கும் நூறு யூடியூப் சேனல்களை பா.ஜ.க. வாங்கியிருக்கிறது. ஒவ்வொரு யூடியூப்பருக்கும் மாதம் மூன்று லட்சம் ரூபாய் சம்பளம் அளிக்கப் படுகின்றது. இது மட்டுமில்லாமல் தி.மு.கவுக்கு தேர்தல் வேலை பார்த்த பிரஷாந்த் கிஷோர் போல, அவரிடமிருந்து பிரிந்து தற்பொழுது காங்கிரசுக்கு வேலை பார்க்கும் சுனில் மற்றும் வாராகி ஆகியோரை அண்ணாமலைக்காக பா.ஜ.க. களமிறக்கியுள்ளது. சுனில் அண்ணாமலைதான் அடுத்த பிரதமர் என்கிற பிரச் சாரத்தை மேற்கொள்கிறார். வாராகி தமிழகம் முழுவதும் சாதிக் கலவரத்தை உருவாக்கி அதில் பா.ஜ.க எப்படி பலனடைய முடியும் என ஆய்வு மேற்கொண்டு வியூகம் அமைக்கிறார். இதுதவிர பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத் தளங்களில் அண்ணாமலையின் பேச்சை ஒலிபரப்ப அந்தப் பேச்சுக்கு லைக்குகள் பெற பல அமெரிக் கன் கம்பெனிகள் பா.ஜ. க.வால் உபயோகப்படுத்தப் பட்டு வருகின்றன. சமீ பத்தில் டுவிட்டருக்கு தலைமையேற்ற ‘இலான் மாஸ்க், அண்ணா மலைக்கு போலி லைக்குகள் போடும் கம்பெனிகளைக் கண்டுபிடித்து அவற்றை நீக்கிவிட்டார். அதனால் அண் ணாமலைக்கு டுவிட்டரில் லைக்குகள் குறைந்து விட்டது என்கிறார்கள் பா.ஜ.க.வினர்.
கடந்த சட்ட மன்றத் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட ஒவ் வொரு வேட்பாளருக் கும் பதினைந்து கோடி ரூபாய் பா.ஜ.க. கொடுக்க அண்ணாமலைக்கு மட்டும் நாப்பத் தைந்து கோடி ரூபாய் கொடுத் திருக்கின்றது. எந்த ஊரில் ஆர்ப்பாட் டம், போராட்டம் என எதை நடத்தி னாலும் பா.ஜ.க. தலைமையகத்திலிருந்து அறுபது லட் சம் ரூபாய் மீட்டர் போட்டு விடுவார் அண்ணாமலை. அதுபோல இந்த வருடத்தில் இருபது மீட்டிங் போட்டு பதினைந்து கோடி ரூபாய் வாங்கியிருக்கிறார் அண்ணாமலை.
அண்ணாமலைக்கென மூன்று செயலாளர்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்கு மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் பா.ஜ.க கொடுக்கின்றது. வீட்டுச் செலவுக்கென மாதம் பதினைந்து லட்சம் ரூபாய் வாங்குகிறார் அண்ணாமலை. இது தவிர முக்கியமான சந்திப்புக்களை ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்தமான கொடநாடு பகுதியில் உள்ள ஒரு பங்களாவில்தான் அண்ணாமலை நடத்துவார். ஜெமினி கணேசனுக்குச் சொந்தமான அந்த பங்களாவுக்கு லட்சக்கணக்கான ரூபாய் வாடகை கொடுக்கிறது பா.ஜ.க. இதுதவிர, கார் செலவு, கம்ப்யூட்டர் செலவு, உணவுச் செலவு என லட்சக்கணக்கில் பில் போடுகிறார் அண்ணாமலை.
இப்படித்தான் அண்ணாமலை என்கிற உருவத்தை பராமரித்து அவர் வாயால் திராவிட இயக்கங்களைத் திட்ட வைத்து பா.ஜ.க.வை வளர்க்க கோடிக்கணக்கான ரூபாய்களை பா.ஜ.க. செலவு செய்து கொண் டிருக்கின்றது. அண்ணாமலையோ, "நான் சாணக்கியன்'’என அடிக்கடி சொல்கிறார். அமர் பிரசாத் ரெட்டி, எந்த வேலையாக இருந்தாலும் நான் முடித்துத் தருகிறேன் என மக்களை ஏமாற்றும் நிதி நிறுவனங்களான சுரானா, ஐ.எப்.எஸ்., ஆருத்ரா போன்றவை களை காப்பாற்றுகின்றார். இதில் கோடிக் கணக்கான ரூபாய் பணத்தை அண்ணா மலைக்கு வருமானமாக அமர் பிரசாத் ரெட்டி வசூலித்துத் தருகிறார். இவையெல் லாம் கேசவ விநாயகம் மூலம் புகாராக பா.ஜ.க. தலைமைக்குச் சென்றுள்ளது.
கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து பா.ஜ.க.வை வளர்க்க அண்ணாமலை என்கிற ஒரு பிம்பத்தை உருவாக்கினால் அவர் திருட்டுத்தனமாக கோடிக்கணக்கான ரூபாயை போலி நிதி நிறுவனங்கள் மூலம் வசூல் செய்கிறார் என்கிற தகவலை அறிந்து பா.ஜ.க. மேலிடம் மத்திய நிதி யமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரடி யாக தமிழக பா.ஜ.க. அலுவலகத்துக்கே அனுப்பி வைத்தது. யாரிடமும் எதுவும் பேசாத அமைதி டைப்பான நிர்மலா சீதாராமனிடம் கட்சி நிர்வாகிகள் அண்ணாமலை மீதான புகார்களை கொட்டித் தீர்த்து விட்டனர். அதையெல்லாம் கவனமாக குறிப்பெடுத்துக் கொண்டார் நிர்மலா சீதாராமன். நிதியமைச்சர் நிர்மலாவைச் சந்திக்க மிகவும் தாமதமாக வந்த அண்ணாமலை அவரை அவமானப்படுத்துவது போல நடந்து கொண்டார். அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் டெல்லிக்குப் பயணமான நிதியமைச்சர் நிர்மலா, அண்ணா மலைக்கு எதிராக மத்திய பா.ஜ.க.வில் பேச இருக்கிறார் என்கிறார்கள் பா.ஜ.க.வினர்.
"நான் ஐ.பி.எஸ்.ஆபீசர் ஆனதிலிருந்து இதுவரை உள்ள சொத்துக் கணக்குகளைக் காட்டுவேன்' என ரபேல் வாட்சுக்கு பில் கேட்ட விவகாரத்தில் அறிவித்துள்ளார் அண்ணாமலை. ஒவ்வொரு வருடமும் ஐ.பி.எஸ். ஆபீசராக இருப்பவர் தனது சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். அதனால், 2021 தேர்தலில் போட்டியிட்ட அண்ணாமலை தேர்தல் கமிஷனில் தனது சொத்து விவரங்களை தாக்கல் செய்துள்ளார். இன்னும் ஒரு வருடம்தான் அவர் கணக்குக் காட்டவில்லை.
அதைக் காட்டுவதென்ன பெரிய விசயமா? பா.ஜ.க. அண்ணாமலைக்காக செலவு செய்த நூற்றுக்கணக்கான கோடிகளுக்கு அண்ணாமலை யால் கணக்குக் காட்ட முடியுமா? அமர் பிரசாத் ரெட்டி மத்திய அரசின் பேரைப் பயன்படுத்தி தமிழகத்தில் அண்ணாமலையுடன் சேர்ந்து அடித்த பெரும் கொள்ளைக்கு கணக்கு உண்டா? என பா.ஜ.க.வினர் கேள்வி எழுப்புகிறார்கள்.
____________
இறுதிச் சுற்று!
சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவ நிலையத்தில் 22-12-2022 வியாழன்று, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், 75 அவசரகால ஊர்திகளை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். மேலும், மனநல மருத்துவமனையிலுள்ள இடை நிலை பராமரிப்பு நிலையத்தைத் திறந்து வைத்து, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் "மனநல ஆதரவு மன்றங்கள்' அமைத்து, மாணவர்களுக்கு "மனநலன் காக்கும் மனம்' திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
சீனாவை மிரட்டிவரும் இஎ 7 என்ற புதிய வகை கொரோனா இந்தியாவிலும் கண்டறி யப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து கடந்த 22-ந் தேதி, வியாழனன்று, தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் செந்தில்குமார், மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதில் கொரோனா பரவல் தடுப்பு குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப் பட்டன.