வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் ஒட்டுமொத்த கொங்கு மண்ட லத்தையும் மொத்தமாக வாரிச்சுருட்ட ஆளுங்கட்சியான தி.மு.க. வரிந்துகட்டி செயல்பட்டுவரும் நிலையில், அதன் முன் னோட்டமாக கரூர் மாவட்ட ஊராட்சியைக் கைப்பற்றி எதிர்க்கட்சிகளுக்கு ‘ஷாக் ட்ரீட்மெண்ட்’ கொடுத்துள்ளார் தமிழ்நாடு மின்சாரம், கலால் மற்றும் ஆயத்தீர்வை அமைச்சரான செந்தில்பாலாஜி.
கடந்த 2016ஆம் ஆண்டு தனது ஆட்சிக் கவிழ்ப்பு சூழ்ச்சியால் அருணாசலப்பிரதேசத்தை கைப்பற்றியது பா.ஜ.க. 2018-ல் குடியரசுத் தலைவர் ஆட்சியின் மூலம் ஜம்மு காஷ்மீரை தனது கட்டுப்பாட் டில் கொண்டுவந்தது. 2019 தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணி ஆட்சியமைத்த சிவசேனா கட்சியின் ஏக்நாத் ஷிண்டே மூலம், எம்.எல்.ஏ.க்களை வளைத்து, அங்கேயும் தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்தியது பா.ஜ.க.. 2021ஆம் ஆண்டு 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை வளைத்துப்போட்டு யூனி
வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் ஒட்டுமொத்த கொங்கு மண்ட லத்தையும் மொத்தமாக வாரிச்சுருட்ட ஆளுங்கட்சியான தி.மு.க. வரிந்துகட்டி செயல்பட்டுவரும் நிலையில், அதன் முன் னோட்டமாக கரூர் மாவட்ட ஊராட்சியைக் கைப்பற்றி எதிர்க்கட்சிகளுக்கு ‘ஷாக் ட்ரீட்மெண்ட்’ கொடுத்துள்ளார் தமிழ்நாடு மின்சாரம், கலால் மற்றும் ஆயத்தீர்வை அமைச்சரான செந்தில்பாலாஜி.
கடந்த 2016ஆம் ஆண்டு தனது ஆட்சிக் கவிழ்ப்பு சூழ்ச்சியால் அருணாசலப்பிரதேசத்தை கைப்பற்றியது பா.ஜ.க. 2018-ல் குடியரசுத் தலைவர் ஆட்சியின் மூலம் ஜம்மு காஷ்மீரை தனது கட்டுப்பாட் டில் கொண்டுவந்தது. 2019 தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணி ஆட்சியமைத்த சிவசேனா கட்சியின் ஏக்நாத் ஷிண்டே மூலம், எம்.எல்.ஏ.க்களை வளைத்து, அங்கேயும் தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்தியது பா.ஜ.க.. 2021ஆம் ஆண்டு 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை வளைத்துப்போட்டு யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் காலூன்றியது. ஆனால் பா.ஜ.க.வின் தந்திரங்களைத் தொடர்ந்து தவிடுபொடியாக்கி வரும் மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது தமிழ்நாடு.
இந்நிலையில், கோவை மக்களவைத் தொகுதியை குறிவைத்து ஒன்றிய அமைச்சர் கனவில் மிதந்துவருகிறார் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவரான அண்ணாமலை. ஆனால், அவரது கனவுக்கு இடைஞ்சலாக, தி.மு.க.வின் கோவை மண்டல பொறுப் பாளரான அமைச்சர் செந்தில்பாலாஜி திகழ்கிறார். இதனால், பா.ஜ.க. தரப்பு, தனக்குத் தெரிந்த அத்தனை அஸ்திரங்களையும் செந்தில்பாலாஜி மீது பிரயோகித்து அவரை முடக்க முயற்சி செய்வதாகக் கூறுகிறார்கள் அரசியல் நோக்கர்கள். இதுகுறித்து நம்மிடம் பேசி யவர்கள், "கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் மத்தியில் ஆட்சி செய்துவரும் பா.ஜ.க., 2024ஆம் ஆண்டு மே மாதம் வரவிருக்கும் மக்களவை தேர்தலிலும் ‘ஹாட்ரிக்’ வெற்றிபெற பல்வேறு ‘ட்ரிக்குகளைக்’ கையாளும் முடிவில் உள்ளது. அதேநேரத்தில், ஒருபக்கம் காங்கிரஸ் வட மாநிலங்களில் மீண்டும் வலுவடைந்து வரும் நிலையில், எதிர்க்கட்சிகளும் ‘பா.ஜ.க ஆட்சிக்கு வரக்கூடாது’ என்பதில் உறுதியாக உள்ளன.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியைப் பயன்படுத்தி நெல்லை, நாகர்கோவில், கொங்கு மண்டலத்தில் மொடக்குறிச்சி, கோவை தெற்கு தொகுதிகளில் வெற்றி பெற்றதால், அதைப் பயன்படுத்தி தென்மண்டலம், மேற்கு மண்டலத்தில் தனது செல்வாக்கை நிலைநிறுத்தப் படாதபாடு பட்டு வருகிறது. பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவும் எப்போது வந்தாலும் கோவைக்கே வருகிறார். அவருடைய கட்சி நிகழ்ச்சிகளையும் பெரும்பாலும் கோவையில் இருக்கும்படி பார்த்துக்கொள்கிறார்.
தமிழ்நாடு முதல்வராக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு அதிக முறை விசிட் அடித்ததும், அதிக அளவில் நலத்திட்ட உதவிகள், வளர்ச்சித் திட்டங்கள் என வழங்கியிருப்பதும் கொங்கு மண்டலத்துக்கே. ஆனாலும், ‘தி.மு.க. ஆட்சியில் கொங்கு மண்டலம் புறக்கணிக்கப்படுகிறது’ என பேசிவருகிறார் அண்ணாமலை. அதற்குக் காரணம், இதுவரை நடந்த தேர்தல்களில் இருந்த ‘தி.மு.க. வெர்சஸ் அ.தி.மு.க.’ என்ற நிலையை மாற்றி, ‘தி.மு.க. வெர்சஸ் பா.ஜ.க.’ என செயல்வடிவம் கொடுக்க முயற்சித்துவருகிறது பா.ஜ.க.
அ.தி.மு.க.வின் முக்கிய புள்ளியாக வலம்வந்த எக்ஸ் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி, கோவை பா.ஜ.க. மகளிரணியைச் சேர்ந்த மைதிலி உள்ளிட்ட பலரையும் வளைத்துப்போட்ட செந்தில்பாலாஜி, அ.தி.மு.க. ஆட்சியின் இறுதிக்கட்டத்தில் மின்சாரப் பிரச்சனையால் துவண்டுகிடந்த கோவை மாவட்ட தொழில் நிறுவனங்கள் விசயத்தில் சிறப்பு கவனம் செலுத்தி நொடியும் தடைபடா மின்சாரம் தந்து கொங்கு மண்டலத்தை தி.மு.க.வின் கோட்டையாக மாற்றிவருகிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி.
அதேநேரத்தில், கவுண்டர் சமுதாய வாக்குகளை எடப்பாடி பழனிச்சாமி அதிகம் நம்பியுள்ள நிலையில், கவுண்டர் அல்லாத பிற சமூக வாக்குகளைக் குறிவைத்து காய் நகர்த்திவருகிறார் எதிரணியைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம். இது, தி.மு.க.விற்கு சாதகமான சூழலை கொங்கு மண்டலத்தில் உருவாக்கிவரும் நிலையில், கொங்குநாடு வேட்டுவக் கவுண்டர் இளைஞர் நலச் சங்கத்தினர் மூலம் கவுண்டர் இன வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அள்ளுவதற்கும் அச்சாரம் போட்டுவிட்டார் செந்தில்பாலாஜி.
இதெல்லாம், வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் கோவை மக்களவையைக் குறிவைத்தி ருக்கும் அண்ணாமலைக்கு அதிர்ச்சியை ஏற் படுத்தியதன் விளைவுதான், மின்சாரத் துறை யில் ஊழல், டாஸ்மாக் ஏலம் என பேசிப் பேசி, இப்போது உயர்நீதிமன்றமே தடை செய்த அமலாக்கத்துறை வழக்கை தூசி தட்டுவது, ஐ.டி.விங் நிர்வாகி நிர்மல்குமார் மூலம் பொய்த் தகவல்களை ட்விட்டரில் பதி விடுவது போன்ற குடைச்சல்கள்''’என்றனர்.
ஆக, வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் அனல் தெறிப்பது உறுதி!