"ஹலோ தலைவரே, தமிழக அரசுக்குத் தொடர்ந்து இடைஞ்சல் பண்ணி வரும் கவர்னர் ரவியை, முதல்வரின் கடிதம் திகைக்க வைத்திருக்கிறது.''”

"ஆமாம்பா, அ.தி.மு.க. தரப்பு மீது கவர்னர் ரவி காட்டிவரும் பாசத்தையும் அந்தக் கடிதம் அம்பலப்படுத்தி இருக்கே?''”

rr

"உண்மைதாங்க தலைவரே, ’கை பட்டால் குத்தம் கால் பட்டால் குத்தம்ங்கிற மனப்பான்மையோடு தி.மு.க. அரசு மீது ஏதாவது புகாரைக் கிளப்புவதையே வாடிக்கையாக வைத்திருக்கும் கவர்னர், அ.தி.மு.க. தரப்பு மீது மட்டும் அளவுகடந்த பாசத்தைக் காட்டி வருகிறார். அப்படிப்பட்ட அவ ருக்கு முதல்வர் ஸ்டாலின் ஐந்து பக்க அளவிலான கடிதத்தை எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தில்,’அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல்கள் குறித்து, விசாரணை நடத்த அனுமதி கோரும் கோப் பிற்கு, இதுவரை நீங்கள் ஒப்புத லளிக்காமல் இருக்கிறீர்கள்’ என்று அதில் அவரது முகமூடியை ஸ்டாலின் கிழித்திருக் கிறார். இதைத் தொடர்ந்து, தமிழக சட் டத்துறை அமைச்சரான ரகுபதியும், 5ஆம் தேதி ஒரு கடிதத்தை கவர்ன ருக்கு எழுதி இருக்கிறார். அதில் ’அ.தி.மு.க. மாஜி மந்திரிகளான சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, பி.வி. ரமணா ஆகியோர் மீது விசாரணை நடத்த, இனியாவது தாமதிக்காமல் அனுமதி வழங்குங்கள்ன்னு அழுத்தமாகக் குறிப்பிட்டிருக்கிறார். இந்த கடிதங்கள் ராஜ்பவனை ஒருவித நெருக்கடியில் ஆழ்த்தி இருக்கிறது.''”

Advertisment

"சரிப்பா, மாநிலத் தலைவர்களை அதிரடியாக பா.ஜ.க. மாற்றி வருகிறதே?''”

"ஆமாங்க தலைவரே, இந்த வருட இறுதியில், தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக, பா.ஜ.க.வின் மாநில தலைவர்கள் பலரையும் மாற்றிவிட்டு, புதியவர்களை நியமித்து வருகிறது பா.ஜ.க.வின் தேசிய தலை மை. இந்தப் பட்டியலில் அண்ணாமலையின் பெயர் வருமா? என்ற எதிர்பார்ப்பு தமிழக பா.ஜ.க..வினர் மத்தியில் இருக்கிறது. அதேபோல, மத்திய அமைச்சர்கள் சிலரை கட்சிப் பணிக்கும், தேர்தல் பணிக்கும் அனுப்ப பிரதமர் மோடி முடிவு செய் திருக்கிறாராம். முதல்கட்டமாக, மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் கிசன் ரெட்டியை தெலுங்கானா மாநில பா.ஜ.க. தலைவராக மோடி நியமித்திருக்கிறார். இவரைப் போல குறைந்தபட்சம் இன்னும் 5 அமைச்சர்களை மோடி இப்படி கட்சிப் பணிக்கு அனுப்ப அதிரடி முடிவெடுத்திருக்கிறாராம்.''”

Advertisment

ff

"அப்ப விரைவில் ஒன்றிய அமைச்சரவையில் மாற்றம் இருக்கும்ன்னு சொல்லு.''”

"உண்மைதாங்க தலைவரே, ஒன்றிய அமைச்சர்கள் சிலரைக் கட்சிப் பணிகளுக்கு மோடி அனுப்ப விரும்புவதால், அவர்களுக்கு பதில் புதிய அமைச்சர்களை நியமிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, ஒன்றிய அமைச்சரவை மாற்றம் விரைவில் இருக்கும் என்கிறார்கள். இந்த முறை தமிழகத்தில் இருந்து த.மா.கா தலைவர் ஜி.கே.வாசனுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்ற டாக் அவர்கள் தரப்பில் உற்சாகமாக அடிபடுகிறது. நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி தொடரும் என்று அறி விக்கப்பட்டாலும், இரு தரப்புக்கும் இடையில் இருக்கும், மறைமுக வெறுப்பால், அ.தி.மு.க. வாக்குகள் பா.ஜ.க.வுக்கு முழுமையாகக் கிடைக் குமா? என்கிற சந்தேகம், டெல்லிக்கு இருக்கிறது. அதனால், பா.ஜ.க.விற்கு ஆதரவாக உள்ள பா.ம.க., த.மா.கா. கட்சிகளின் வாக்குகளை நழுவவிட்டு விடக் கூடாது என்று பா.ஜ.க. தேசியத் தலைமை நினைக்கிறதாம்.''”

"அப்ப அ.தி..மு..க. மீதான அவநம்பிக்கையால் சிலருக்கு அதிர்ஷ்டம் அடிக்கிதுன்னு சொல்லு.''”

ff

"அப்படியும் சொல்லலாம். த.மா.கா. மற்றும் பா.ம.க. ஆகிய கட்சிகளின் முழு மையான ஆதரவைப் பெற்றால் ஓரளவு தமிழகத்தில் தாக்குப்பிடிக்கலாம்னு, பா.ஜ.க.வில் இருக்கும் அறிவுஜீவிகள் குழு, அக்கட்சிக்கு ஒரு அறிக்கையைக் கொடுத்திருக்கிறதாம். இதன் அடிப்படையில் கடந்த வாரம் டெல்லியில் பா.ஜ.க.வின் சீனியர்கள் ஆலோசனை நடத்தினர். அப்போது, த.மா.கா. மற்றும் பா.ம.க.வினரின் முழுமையான ஆதரவைப் பெற, வாசனுக்கும் அன்புமணிக்கும் ஒன்றிய அமைச்சரவையில் இடம் கொடுக்கலாம்ன்னு சிலர் சொல்லி இருக்காங்க. எனினும் கட்சிக்கு உழைத்தவர்களை விட்டுவிட்டு, கூட்டணிக் கட்சியினருக்கு அமைச்சரவையில் இடம் தருவது குறித்து, அமித்ஷாவிடம் சின்னத் தயக்கம் தெரிகிறதாம்.''”

"அது இருக்கட்டும். அமித்ஷாவின் பெயரிலும் பா.ஜ.க. அண்ணாமலை வசூல் செய்வதாகத் தகவல் வருதே?''”

"அண்ணாமாலையின் பி.ஏ.வான ஸ்ரீகாந்த் என்பவர் கவர்னர் ஆர்.என்.ரவியின் நட்பு வட்டத்தில் இருப்பவர். இவருக்கு டெல்லித் தொடர்புகளும் அதிகமாம். அப்படிப்பட்ட ஸ்ரீகாந்த் மூலம், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எந்தெந்த தொழிலதிபர்கள் இதுவரை சந்தித் திருக்கிறார்கள் என்கிற பட்டியலை எடுக்கச் செய்து, அவர்களிடம் எல்லாம், ’அமித்ஷா தேர்தல் நிதி கேட்கச் சொன்னார்’ என்றபடி, அவர் மூலமே முடிந்தவரை கலெக்ஷன் செய்துவருகிறாராம். அண்ணாமலை. இந்த டெக்னிக், கோடிக்கணக்கில் அவருக்குக் கைகொடுப்பதைப் பார்த்து வாய்பிளக் கும் பா.ஜ.க.வினரே ‘அண்ணாமலைக்கு மட்டும் எப்படி, கூரையைப் பொத் துக்கொண்டு விதவிதமாக கரன்ஸி மழை பொழி கிறது?’என்று திகைக்கிறார்களாம். இந்த விவகாரத்தை அமித்ஷாவின் கவனத்துக்குக் கொண்டுபோகும் முயற்சிகளும் நடந்து வருகிறதாம்.''”

"தமிழக பா.ஜ.க. அலுவலகமான கமலாலயத்தில் அனுமதி இல்லாமல் உபரிக் கட்டிடம் கட்டப்பட்டிருக்கிறதே?''”

ff

"ஆமாங்க தலைவரே, கமலாலயத்தில் மூன்றாவது தளத்தில் கூட்டம் நடத்து வததற்காக ஒரு தற்காலிக செட் போடப் பட்டிருந்தது. இதை ஒரு தளமாக மாற்றும் வகையில், போலோ சீலீங் போடப்பட்டு ஏ.சி. வசதியையும் பொருத்தச் செய்திருக்கிறார் பா.ஜ.க. அண்ணாமலை. இந்தத் தளத்துக்கு லிப்ட் வசதியும் செய்யப்பட்டிருக்கிறது. இந்த புதிய தளம் அனுமதி பெறாமலே அமைக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்தத் தகவல் மாநகராட்சி அதிகாரிகளின் கவனத்துக்கும் போயி ருக்கிறதாம். இதற்கிடையே, இந்த புதிய தளத்தில் கடந்த 4ஆம் தேதி மாநில ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார் அண்ணாமலை. இதில், தான் மேற்கொள்ள இருக்கும் "என் மண்; என் மக்கள்' பிரச்சாரப் பயணத்தை வரும் 28 ஆம் தேதி சென்னையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பச்சைக் கொடி அசைத்துத் தொடங்கி வைக்க இருப்பதாக அவர் அறிவித்தார்.''”

"போலீசால் தேடப்படுகிற ஒருவர், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்திருக்கிறாரே?''”

"உண்மைதாங்க தலைவரே, பா.ஜ.க. மாநில செயலாளர்களில் ஒருவரான எஸ்.ஜி.சூர்யா, சிதம்பரம் கோயில் தீட்சிதர்களின் பூணூல் அறுக்கப்பட்டிருக்கிறது என்று, பொய்யான வீடியோவை சமீபத்தில் சமூக வலைத்தளத் தில் பதிவிட்டு, பதட்டப் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறார். இதனால் அவர் மீது சிதம்பரம் போலீ ஸார் வழக்கைப் பதிவு செய்தனர். ஏற்கனவே ஒரு வழக்கில் நிபந் தனை ஜாமீன் வாங்கியிருந்த சூர்யா, போலீஸுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு எஸ்கேப் ஆகிவிட்டார். அடிக்கடி தன் லொக் கேஷன்களை மாற்றிய படியே வாட்ஸ் அப் கால் மூலம் பலரிடமும் பேசிவரும் அவரை, போலீஸ் ட்ரேஸ் செய்து வந்தது. இந்த நிலையில், அண்மையில் சென்னைக்கு வந்திருந்த ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனை அந்த சூர்யா சந்தித்திருக்கிறார். போலீஸ் தேடும் ஒருவரை ஒன்றிய அமைச்சர் எப்படி சந்தித்தார்? என்ற சர்ச்சை இப்போது அமைச்சரைச் சுற்றி சிறகடிக்கிறது.''”

"நானும் என் காதுக்கு வந்த ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். தி.மு.க. தரப்புக்குக் குடைச்சல் கொடுக்கும் நோக்கத்தில் வருமான வரித்துறையினர் களமிறக்கப்பட்டுள்ள னராம். இதைத் தொடர்ந்து, அதிக மதிப்பிலான சொத்துப் பரிவர்த்தனைகள் குறித்த ஆவணங் களை எல்லாம் அவர்கள், தீவிர மாகத் துருவி வருகின்றனர். இதையறிந்த சம்பந்தப் பட்ட ஆளும் கட்சிப் புள்ளி களும், முறை கேடான பத்திரப் பதிவு களுக்கு உடந்தை யாக இருந்த அதிகாரிகளும் இப்போது பதட்டத்தில் இருக்கிறார்களாம்.''”

____________

சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்மணி, பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். இவர், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட, சென்னை மாநகராட்சி மற்றும் சி.எம்.டி.ஏ. வில், ப்ளான் அப்ரூவல் வாங்கித் தருவதாக கூறி, பலரிடமும் லட்சக்கணக்கில் கறந்து வரு கிறாராம். அதோடு, சம்பந்தப்பட்ட துறைகளில் அந்தப் பெண்மணி அதிக ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும் மேலிடம் வரை புகார்கள் சென்றிருக்கிறதாம்.

-இளையர்