ஹரியானா, ஜம்மு-காஷ்மீர் தேர்தல் முடிவுகள் காங்கிரஸை அதிர்ச்சியிலும் பா.ஜ.க.வை ஆனந்தத்திலும் தள்ளியுள்ளன.
ஜம்மு-காஷ்மீரில் எதிர் பார்த்ததுபோலவே தேசிய மாநாட் டுக் கட்சி, இந்திய காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்றிருக்கிறது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 49 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி வென்றிருக்கிறது. அதேசமயம் எந்த நோக்கத்தில் ஜம்மு- காஷ்மீரை யூனியன் பிரதேசமாகப் பிரித்து, தொகுதிகளை மறுவரையறை செய்ததோ அதில் வெற்றிபெற்றி ருக்கிறது பா.ஜ.க.
ஜம்முவின் 43 தொகுதிகளில் 29-ல் பா.ஜ.க. வென்றிருப்பதோடு ஒட்டுமொத்தமாக 25.6 சதவிகித வாக்குகளையும் உறுதிசெய்திருக் கிறது. அதேசமயம் காஷ்மீரில் பா.ஜ.க.வால் ஒரேயொரு தொகுதி யில்கூட வெற்றிபெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காஷ் மீரில் பா.ஜ.க. 25 முஸ்லிம் வேட் பாளர்களை நிறுத்தியது. இவர்கள் அனைவரையுமே காஷ்மீர் மக்கள் தோற்கடித்துள்ளனர். அதேபோல இந்துக்கள் பெரும்பான்மையாகக் காணப்படும் ஜம்மு பகுதியில் காங்கிரஸ் நிறுத்திய 21 இந்து, சீக்கிய வேட்பாளர்கள் ஒருவர்கூட ஜெயிக்கவில்லை.
ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ் 32 தொகுதிகளில் போட்டியிட்டு 6 தொகுதிகளில் மட்டும் வென்றிருக் கிறது. ஜம்மு -காஷ்மீரின் முந்தைய தேர்தலைவிடவும் 6 இடங்களில் காங்கிரஸ் குறைவாக வென்றுள்ள துடன், 17% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.
மெகபூபா முக்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி 3 இடங்களில் மட்டுமே வென்றிருக்கிறது. ஆம் ஆத்மி ஒரு இடத்திலும், மார்க்சிஸ்ட் கட்சி ஒரு இடத் திலும் வென்றிருக்கின்றன.
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப் பட்டுள்ளதால் துணைநிலை ஆளுநர் 5 நியமன எம்.எல்.ஏ.க் களை
ஹரியானா, ஜம்மு-காஷ்மீர் தேர்தல் முடிவுகள் காங்கிரஸை அதிர்ச்சியிலும் பா.ஜ.க.வை ஆனந்தத்திலும் தள்ளியுள்ளன.
ஜம்மு-காஷ்மீரில் எதிர் பார்த்ததுபோலவே தேசிய மாநாட் டுக் கட்சி, இந்திய காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்றிருக்கிறது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 49 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி வென்றிருக்கிறது. அதேசமயம் எந்த நோக்கத்தில் ஜம்மு- காஷ்மீரை யூனியன் பிரதேசமாகப் பிரித்து, தொகுதிகளை மறுவரையறை செய்ததோ அதில் வெற்றிபெற்றி ருக்கிறது பா.ஜ.க.
ஜம்முவின் 43 தொகுதிகளில் 29-ல் பா.ஜ.க. வென்றிருப்பதோடு ஒட்டுமொத்தமாக 25.6 சதவிகித வாக்குகளையும் உறுதிசெய்திருக் கிறது. அதேசமயம் காஷ்மீரில் பா.ஜ.க.வால் ஒரேயொரு தொகுதி யில்கூட வெற்றிபெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காஷ் மீரில் பா.ஜ.க. 25 முஸ்லிம் வேட் பாளர்களை நிறுத்தியது. இவர்கள் அனைவரையுமே காஷ்மீர் மக்கள் தோற்கடித்துள்ளனர். அதேபோல இந்துக்கள் பெரும்பான்மையாகக் காணப்படும் ஜம்மு பகுதியில் காங்கிரஸ் நிறுத்திய 21 இந்து, சீக்கிய வேட்பாளர்கள் ஒருவர்கூட ஜெயிக்கவில்லை.
ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ் 32 தொகுதிகளில் போட்டியிட்டு 6 தொகுதிகளில் மட்டும் வென்றிருக் கிறது. ஜம்மு -காஷ்மீரின் முந்தைய தேர்தலைவிடவும் 6 இடங்களில் காங்கிரஸ் குறைவாக வென்றுள்ள துடன், 17% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.
மெகபூபா முக்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி 3 இடங்களில் மட்டுமே வென்றிருக்கிறது. ஆம் ஆத்மி ஒரு இடத்திலும், மார்க்சிஸ்ட் கட்சி ஒரு இடத் திலும் வென்றிருக்கின்றன.
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப் பட்டுள்ளதால் துணைநிலை ஆளுநர் 5 நியமன எம்.எல்.ஏ.க் களை நியமிக்கலாம். இந்த ஐந்து பேரும் பா.ஜ.க. ஆட்க ளாகவே இருப்பர். ஆக, 95 பேரைக் கொண்ட சட்ட மன்றத்தில் மிகச்சரியாக பெரும்பான்மை பெற்றிருக்கும் தேசிய மாநாட்டுக் கட்சி, அடுத்த ஐந்தாண்டுகளைக் கடத்துவது சவாலான ஒன்றாகவே இருக்கும். மாநிலத் தலைநகரான டெல்லியில் தேவையான பெரும்பான்மை யுடன் இருக்கும் ஆம் ஆத்மி அரசையே துணைநிலை ஆளுநர் பந்தாடிக்கொண்டிருக்கும்போது, தேசத்தின் உச்சியில் ஒதுங்கியிருக்கும் காஷ்மீரை ஆட்சி செய்யப்போகும் உமர் அப்துல்லாவுக்கு இனிமேல்தான் உண்மையான சவால்கள் இருக்கிறது. ஜம்மு-காஷ்மீரில் 7 சுயேட்சைகள் வெற்றிபெற்றுள்ளனர். இவர்களை தேசிய மாநாட்டுக் கட்சி தம் பக்கம் வளைத்துக் கொள்ளும் பட்சத்தில் அடுத்துவரும் ஆண்டுகளில் பெரிய சிக்கல்கள் இருக்காது. மாறாக, பா.ஜ.க. தன் தாராளமயத்தால் தன் பக்கம் வளைத்துக்கொள்ளும் பட்சத்தில் அடுத்தடுத்த ஆண்டுகளில் நெருக்கடிதான்.
எது எப்படியென்றாலும், நெடுநாட்களாய் தேர்தலைக் காணாமல் இருந்த ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் நடந்திருப்பதும், மக்களின் தீர்ப்பின்படியான ஒரு அரசு அமைந்திருப்பதும் வரவேற்கத்தக்க மாற்றம்!
ஹரியானாவில் மூன்றாவது முறையாக பா.ஜ.க. வெற்றிபெற்றுள்ளது. காஷ்மீரைப் போலவே ஹரியானாவிலும் 90 தொகுதிகள் என்றாலும் தனிப் பெரும்பான்மைக்கு தேவையான 46 தொகுதிகளையும் தாண்டி 48 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றிபெற்றுள்ளது. இதனால் இந்த முறை பா.ஜ.க. சுயேட்சைகளையோ, கூட்டணிக் கட்சிகளையோ நம்பி ஆட்சியமைக்க வேண்டியதில்லை என்பது அதன் பலம்.
மாறாக, கருத்துக் கணிப்பில் ஆட்சியைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் 37 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளது. அதேசமயம் கடந்த முறை நயாப்சிங் சைனி அரசில் இடம் பெற்றிருந்த பா.ஜ.க.வின் 8 அமைச்சர் கள் இந்தத் தேர்தலில் தோல்வியைத் தழுவியுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியோ, “"நாங்கள் தோல்வி அடையவில்லை. சதியால் தோல்வியடைய வைக்கப்பட்டுள் ளோம். நாங்கள் தேர்தல் ஆணையத்தில் எங்களது புகார்களை வைப்போம். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் காலை 9 மணி முதல் 11 மணி வரை முடிவுகளை அறிவிப்பதில் விவரிக்கவியலாத தாமதம் ஏற்பட்டது. இதன்மூலம் பா.ஜ.க. தவறான ட்ரெண்டை ஏற்படுத்த முயன் றது'” என காங்கிரஸ் செய்தித் தொடர் பாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டி னார். இதனை தேர்தல் ஆணையம் உடனடியாக மறுத்துள்ளது.
ஹரியானாவின் பல பகுதிகளில் இ.வி.எம். எந்திரங்கள் தவறாகக் கையாளப்பட்டுள்ளன. வாக்கு முகவர் களின் கன்சாலிடேட் படிவங்களுடன் ஓரிரு நாட்களில் தேர்தல் ஆணை யத்தைச் சந்திக்க முடிவுசெய்துள்ளது காங்கிரஸ். 14 தொகுதிகளில் வாக்கு எண்ணும் செயல்முறை குறித்தும், 3 மாவட்டங்களில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் குறித்தும் பல புகார்கள் வந்துள்ளதாக பரபர புகாரைத் தெரிவித்துக் குமுறுகிறது காங்கிரஸ்.
பா.ஜ.க. தரப்பிலோ, தங்களுடைய வெற்றிக்குக் காரணமாக, “'10 வருடமாக ஆட்சியில் இருந்ததன் காரணமாக, ஆளுங் கட்சிக்கு எதிரான மனநிலை இருந்தது உண்மைதான். அதனால் கடந்த முறை வெற்றிபெற்று அதிருப்திக்குள்ளான 25 பேர் வரைக்கும் சீட் தரவில்லை. அதேசமயம் ஜாட்டுகளை மட்டும் மையப்படுத்தி வாக்குகள் சேகரிப்பதை விட்டு பின்தங்கிய வகுப்பினரைச் சேர்ந்த பலருக்கு கட்சியில் சீட் கொடுத் தோம். அதற்குப் பலன் கிடைத்திருக் கிறது” என்கிறது. காங்கிரஸ் என்னதான் சொல்லியபோதும், ஆம் ஆத்மியையோ, இந்திய தேசிய லோக் தளத்தையோ கூட்டணியில் சேர்த்துக்கொள்ளாமல் தனியே களத்தில் இறங்கியதன் போதாமை தேர்தல் முடிவில் வெளிப்பட்டி ருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. ஏனெனில், ஆம் ஆத்மி ஓரிடம்கூட வெல்லாவிட்டாலும் அதுபெற்ற வாக்கு சதவிகிதம் 1.79. இந்திய தேசிய லோக் தளம் பெற்ற வாக்கு 6%.
ஹரியானாவில் ஓரிடம்கூட வெல்லாத போதும் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், “"தேர்தல் முடிவுகள் தரும் பாடம் என்னவென்றால், தேர்தலில் யாரும் அதீத நம்பிக்கையுடன் செயல்படக்கூடாது. எந்தத் தேர்தலையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. ஒவ்வொரு தேர்தலும் முக்கிய மானது''’என தெரிவித்துள்ளார். இது காங்கிரஸைக் குறிவைத்த அறிக்கை என்பது வெளிப்படை.
பா.ஜ.க. ஆட்சிக்கு எதிரான மனநிலை இருந்தபோதும் துணிந்து தனித்து களத்தில் இறங்குவதைவிட்டு கூட்டணியுடன் செயல் பட்டிருந்தால் ஒட்டுமொத்த முடிவுகள் மாறியிருக்கலாம். ஏனெனில் காங்கிரஸுக்கும் பா.ஜ.க.வுக்குமான வாக்கு சதவிகித வித்தியாசம் வெறும் 0.3 சதவிகிதம். ஆம் ஆத்மி கேட்டதோ கூடுதலாக 3 சீட்டுகள். 3 சீட்டைத் தர மறுத்துவிட்டு ஆட்சியையே கோட்டைவிட்டு நிற்கிறது காங்கிரஸ்.
அதேபோல காங்கிரஸ் செய்த மற்றொரு தவறு, ஜாட்டுகளையும் தலித்துகளையும் பிரதானமாக நம்பி தேர்தலில் இறங்கியது. இந்த இரு சமூகத்தின் வாக்குகள் 22, 20 சதவிகிதம் என்றாலும் மிச்சமுள்ள அனைத்து சமூகத்தின் வாக்கு கள் 58 சதவிகிதம். இதில் தலித் சமூகத்தின் வாக்கு, பா.ஜ.க., காங்கிரஸ், இந்திய தேசிய லோக் தளம் என சிதறிப் போக... காங்கிரஸின் வியூகம் பொய்த்துப் போயிருக்கிறது. கூடுதலாக, காங்கிரஸுக்கு மாநிலம் தோறும் இருக்கும் கோஷ்டிப் பிரச்சனையும் சேர்ந்துகொண்டது.
தேர்தல் களத்தில் செல்ஜா குமாரியை, ஹூடா ஆதரவாளர் தாக்கிப் பேசியதும், அதையே மையமாகக் கொண்டு பா.ஜ.க. பிரச் சாரம் செய்ததும் காங்கிரஸுக்கு சேதாரத்தை உண்டாக்கியிருக்கிறது.
காங்கிரஸை நம்பி ஜூலா னாவில் போட்டியிட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தை ஹரியானா மக்கள் ஏமாற்றவில்லை. இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க.வின் யோகேஷ்குமாரைவிட 6,015 வாக்குகள் அதிகம் பெற்று வென்றுள்ளார். ஒட்டுமொத்தமாக அவருக்கு 59,065 வாக்குகள் விழுந்துள்ளன. இதுவரை களத்தில் மல்யுத்தம் செய்த வினேஷ், அரசியலில் எப்படி மல்யுத்தம் செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
கடந்தமுறை ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களில் வென்று, பா.ஜ.க. ஆட்சியமைக்க உதவியது. இந்த முறையோ தனித்துப் போட்டியிட்டு ஓரிடத்தில்கூட வெற்றிபெறாமல் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. ஒட்டுமொத் தத்தில் நயாப்சிங் சைனி, மீண்டும் ஒருமுறை முதல்வர் நாற்காலியில் அமரவிருக்கிறார்.
ஆக, காஷ்மீரில் ஒட்டுமொத்தமாகத் தோல்வியடைந்தாலும், இந்துக்கள் பெரும்பான் மையாக வசிக்கும் ஜம்முவை தங்கள்வசம் கொண்டுவந்ததன் மூலமும், ஹரியானாவில் மூன்றாம் முறை யாருமே ஆட்சியமைத்ததில் லை என்ற வரலாறை மாற்றியமைத்ததன் மூலம் பா.ஜ.க. கொண்டாட்ட மூடில் இருக்கிறது.
மாறாக, கைமேல் வந்த ஹரியானா வெற்றியைக் கோட்டை விட்டதன் மூலமும், காஷ்மீரில் கூட்டணிக் கட்சியுடன் சேர்ந்து ஆட்சியைப் பிடித்தாலும் போட்டியிட்ட 32 தொகுதிகளில் 6 இடங்களில் மட்டுமே வென்றிருப்பதன் மூலமும் சோர்வில் உள்ளது காங்கிரஸ்.