ஆந்திர முதல்வரின் பேச்சு! பாலாற்றில் பற்றிய நெருப்பு!

dd

"பாலாற்றில் மீண்டும் தடுப்பணை கட்டப்போகிறோம், தடுப்பணைகளின் உயரத்தை உயர்த்த நிதி ஒதுக்கவுள்ளோம்'' என ஆந்திரா முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித் திருப்பது வட தமிழகத்தின் 6 மாவட்ட விவசாயி களிடமும், மக்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா நந்திதுர்க்கத்தில் உருவாகும் பாலாறு 348 கி.மீ பயணமாகி தமிழ்நாட்டில் வங்கக்கட-ல் கலக்கிறது. கர்நாடகாவில் 99 கி.மீ., ஆந்திராவில் 33 கி.மீ., தமிழ்நாட்டிற்குள் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பெரும்பள்ளம் என்ற இடத்தில் நுழைந்து 222 கி.மீ. பயணமாகி கட-ல் கலக்கிறது. கர்நாடகா -ஆந்திரா எல்லையான சாந்திபுரத்தில் இருந்து ஆந்திரா -தமிழக எல்லையான புல்லூர் வரையிலான 33 கி.மீ தூரத்தில் பாலாற்றின் குறுக்கே 3 கி.மீ. தூரத்துக்கு ஒன்று என்ற கணக்கில் 5 முதல் 15 அடி உயரம் வரை 11 தடுப்பணைகளைக் கட்டியது ஆந்திரா. 2010-ல் கணேசபுரத்தில் 70 அடி உயரத்துக்கு அணை கட்ட முடிவு செய்தது ஆந்திரா. தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு

"பாலாற்றில் மீண்டும் தடுப்பணை கட்டப்போகிறோம், தடுப்பணைகளின் உயரத்தை உயர்த்த நிதி ஒதுக்கவுள்ளோம்'' என ஆந்திரா முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித் திருப்பது வட தமிழகத்தின் 6 மாவட்ட விவசாயி களிடமும், மக்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா நந்திதுர்க்கத்தில் உருவாகும் பாலாறு 348 கி.மீ பயணமாகி தமிழ்நாட்டில் வங்கக்கட-ல் கலக்கிறது. கர்நாடகாவில் 99 கி.மீ., ஆந்திராவில் 33 கி.மீ., தமிழ்நாட்டிற்குள் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பெரும்பள்ளம் என்ற இடத்தில் நுழைந்து 222 கி.மீ. பயணமாகி கட-ல் கலக்கிறது. கர்நாடகா -ஆந்திரா எல்லையான சாந்திபுரத்தில் இருந்து ஆந்திரா -தமிழக எல்லையான புல்லூர் வரையிலான 33 கி.மீ தூரத்தில் பாலாற்றின் குறுக்கே 3 கி.மீ. தூரத்துக்கு ஒன்று என்ற கணக்கில் 5 முதல் 15 அடி உயரம் வரை 11 தடுப்பணைகளைக் கட்டியது ஆந்திரா. 2010-ல் கணேசபுரத்தில் 70 அடி உயரத்துக்கு அணை கட்ட முடிவு செய்தது ஆந்திரா. தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அதையடுத்து, கணேசபுரத்தில் அணை கட்ட வில்லை என வாக்குறுதி தந்தது ஆந்திரா. ஆனால் கணேசபுரம் உட்பட பாலாற்றில் ஒரு கிலோமீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்டுவது என முடிவு செய்து அதன்படி தடுப்பணைகளைக் கட்டத் துவங்கினர்.

andhracm

2014-ல் முதலமைச்சரான தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, பாலாற்றில் சாந்திபுரம், விஜிலாபுரம், நஞ்செங்பெண்டா, கிடிமானிபெண்டா, போகல்ரே, பெத்தவெங்கா, பாலாறு, கங்குந்தி போன்ற இடங்களில் உள்ள தடுப்பணைகளின் உயரத்தை 30 அடிவரை உயர்த்தினார். கூடுதலாக தடுப்பணைகளைக் கட்டவும் செய்தார். பாலாற்றுக்கு நீர்தரும் கிளை ஆறுகளான பாபுலுஓம்கா, திப்ரோ குறுக்கேயும் தடுப்பணைகளைக் கட்டிமுடித்தார்கள். இதன் மூலம், கிருஷ்ணா நதிநீரை கால்வாய் வழியாகக் குப்பத்துக்கு கொண்டுவந்து, 2 டி.எம்.சி. தண்ணீர் குப்பம் பகுதியில் உள்ள 86 ஏரியிலும், 2 டி.எம்.சி. தண்ணீரை பாலாற்றிலும் தேக்கிவைக்க, ஹத்திரி -நீவா திட்டத்தைத் தொடங்கினார் சந்திரபாபு நாயுடு. குப்பம் தொகுதியில் பிறந்த சந்திரபாபு நாயுடு, தொடர்ச்சியாக அத்தொகுதியில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ.வாக உள்ளார். தனது தொகுதியை ஹைடெக் விவசாய, தொழிற்சாலைப் பகுதியாக்க நினைத்தார். 2019-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபின் ஹந்திரி-நீவா திட்டம், பாலாற்றில் தடுப் பணை கட்டுதல் போன்ற பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டன.

இந்நிலையில், நான்கு மாதங்களுக்கு முன்பு குப்பம் தொகுதிக்கு வந்த சந்திர பாபு நாயுடு, "நான் ஆட்சிக்கு வந்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தடுப்பணைப் பணிகள், கால் வாய் திட்டம், சர்வதேச விமானநிலையப் பணி போன்றவற்றை மீண்டும் தொடங்குவேன்'' என வாக்குறுதி தந்தார். 2024-ல் ஆந்திர சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது. அத்தேர்த-லும் சந்திரபாபு நாயுடு கட்சியைத் தோற்கடிக்கத் திட்டமிட்ட ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி, குப்பம் தொகுதியில் சந்திரபாபு நாயுடுவுக்கு போட்டியாக, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சித்தூர் எம்.எல்.சி. கிருஷ்ணபரத்தை தயார் செய்துள்ளார். அவரின் ஏற்பாட்டிலேயே செப்டம்பர் 23-ஆம் தேதி குப்பம் தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஜெகன்மோகன் ரெட்டி, "சிகுருகுண்டாவில் தங்கச்சுரங்கம் அமைக்கப்படும், புல்லூர் அணையில் 2 டி.எம்.சி தண்ணீரைத் தேக்கி வைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும், அதற்காக 120 கோடி நிதி ஒதுக்கப்ப டவுள்ளது. அதேபோல், குடிபள்ளி யில் 7 டி.எம்.சி. தண்ணீரும், சாந்திபுரத்தில் 3 டி.எம்.சி. தண்ணீ ரும் சேர்த்துவைக்கும் வகையில் 250 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது'' என்றார். இதுதான் திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட மக்களை அதிர்ச்சியடையச் செய் துள்ளது.

dd

இதுகுறித்து தமிழ் நாடு விவசாயிகள் சங்கத் தின் திருப்பத்தூர் மாவட் டத் தலைவர் முல்லை நம்மிடம், "பாலாறு தொடர்பாக மைசூர், மெட்ராஸ் ராஜதானி இடையேயான ஒப்பந் தத்தையே மீறுகிறார்கள். கர்நாடகா பாலாற்றின் குறுக்கே பல தடுப் பணைகள், அணைகள், ஏரிகளைக் கட்டிவிட்டது. இதனால் ஆந்திராவுக்கே குறைவாகத்தான் தண்ணீர் வருகிறது. அந்த நீரையும் தமிழகத்துக்குள் வர விடாமல் தடுப்பணைகளைக் கட்டித் தடுக்கிறது. ஆந்திராவில் பாலாற்றின் 33 கி.மீட்டருக்குள் 28 தடுப்பணைகளைக் கட்டிவிட்டார்கள், பல தடுப்பணைகளின் உயரத்தை அதிகரித்தார்கள், இன்னும் சில தடுப்பணைகள் கட்டுகின்றனர். இதனை எதிர்த்து தமிழக அரசு 2016-ல் தொடுத்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அவ்வழக்கை விசாரணைக்கு எடுக்க வைத்து, தடுப்பணைகளின் உயரத்தை அதிகரிப்பதைத் தடுப்பதோடு... புதிய தடுப்பணைகள் கட்டவிடாமல் கர்நாடகா, ஆந்திராவைத் தடுக்கவேண்டும். இந்த தடுப்பணைகளால் விவசாயிகள் மட்டுமல்லா மல் 1 கோடி மக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு உருவாகும்'' என்றார்.

dd

ஆந்திர முதலமைச்சரின் அறிவிப்பைக் கண்டித்து மருத்துவர் ராமதாஸ், இ.பி.எஸ், தினகரன் உட்பட சில தலைவர்கள் அறிக்கை வெளியிட் டுள்ளனர்.

தமிழக நீர்வளத்துறை அமைச் சர் துரைமுருகன், அதிகாரிகளுடன் விவாதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழக அரசு விழித்துக்கொள்ள வேண்டும்.

nkn011022
இதையும் படியுங்கள்
Subscribe