ராங்கால் : ஸ்டாலினைப் பதறவைத்த அன்பில் மகேஷ்! -தி.மு.க. களேபரம்! ஜெ சேலை விவகாரம்! -பா.ஜ.க புஸ்வாணம்! தயாராகும் ஐ.ஏ.எஸ். டிரான்பர் லிஸ்ட்!

aa

""ஹலோ தலைவரே... முன்னாள் உளவுத்துறை ஐ.ஜி. சத்தியமூர்த்தி பற்றி ஒரு பரபர செய்தி உலா வருதே?''’’

""ஆமா, என் காதுக்கும் அந்த செய்தி வந்துச்சு. விவரமா சொல்லுப்பா...''

""தலைவரே... அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் உளவுத்துறையில் கொடிகட்டிப் பறந்த சத்தியமூர்த்தி, எடப்பாடியின் தீவிர தொண்டரைப் போலவே அப்போது செயல்பட்டார். தி.மு.க. தலைவர்களுக்கு எதிராக அப்போது என்னென்ன செய்யமுடியுமோ அவ்வளவையும் செய்தார். ஆட்சி மாறியதும், தி.மு.க.விலும் தனது செல்வாக்கை வளர்த்துக்கொண்டு வருகிறார். குறிப்பாக, கவுண்டர் சமூகத்தைச சேர்ந்த இவர், தன் சமூகத்துக்கார அமைச்சர் ஒருவருடன் நெருக்கத்தை வளர்த்துக்கொண்டு, ஏறத்தாழ 300 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான காண்ட்ராக்ட் வேலையைத் தனக்கு நெருக்க மானவர்களுக்கு வாங்கிக் கொடுத்திருக் கிறாராம்.''’’

""’தி.மு.க. பற்றி நாடாளுமன்றத் தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பற்ற வைத்த நெருப்பு, இப்ப தாறுமாறாக எரியுதே?''’’

rang

""உண்மைதாங்க தலைவரே, நாடாளு மன்றத்தில் மோடிக்கு எதிரான நம்பிக்கை யில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, அதில் பேசிய தி.மு.க. எம்.பி. கனிமொழி, ’மணிப்பூரில் திரௌபதிகள் துகிலுரியப்படுகிறார்கள் ’என்று மோடி அரசை கண்டித் துக் கடுமையாகத் தாக்கினார். இது தேசிய அளவில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியது. அதனால் கனிமொழி மீது, மோடி உள் ளிட்ட பா.ஜ.க. தரப்பு கடும் கோபமடைந் தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமி

""ஹலோ தலைவரே... முன்னாள் உளவுத்துறை ஐ.ஜி. சத்தியமூர்த்தி பற்றி ஒரு பரபர செய்தி உலா வருதே?''’’

""ஆமா, என் காதுக்கும் அந்த செய்தி வந்துச்சு. விவரமா சொல்லுப்பா...''

""தலைவரே... அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் உளவுத்துறையில் கொடிகட்டிப் பறந்த சத்தியமூர்த்தி, எடப்பாடியின் தீவிர தொண்டரைப் போலவே அப்போது செயல்பட்டார். தி.மு.க. தலைவர்களுக்கு எதிராக அப்போது என்னென்ன செய்யமுடியுமோ அவ்வளவையும் செய்தார். ஆட்சி மாறியதும், தி.மு.க.விலும் தனது செல்வாக்கை வளர்த்துக்கொண்டு வருகிறார். குறிப்பாக, கவுண்டர் சமூகத்தைச சேர்ந்த இவர், தன் சமூகத்துக்கார அமைச்சர் ஒருவருடன் நெருக்கத்தை வளர்த்துக்கொண்டு, ஏறத்தாழ 300 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான காண்ட்ராக்ட் வேலையைத் தனக்கு நெருக்க மானவர்களுக்கு வாங்கிக் கொடுத்திருக் கிறாராம்.''’’

""’தி.மு.க. பற்றி நாடாளுமன்றத் தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பற்ற வைத்த நெருப்பு, இப்ப தாறுமாறாக எரியுதே?''’’

rang

""உண்மைதாங்க தலைவரே, நாடாளு மன்றத்தில் மோடிக்கு எதிரான நம்பிக்கை யில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, அதில் பேசிய தி.மு.க. எம்.பி. கனிமொழி, ’மணிப்பூரில் திரௌபதிகள் துகிலுரியப்படுகிறார்கள் ’என்று மோடி அரசை கண்டித் துக் கடுமையாகத் தாக்கினார். இது தேசிய அளவில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியது. அதனால் கனிமொழி மீது, மோடி உள் ளிட்ட பா.ஜ.க. தரப்பு கடும் கோபமடைந் தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக சட்டமன்றத்திலேயே தி.மு.க. ஆட்சியின்போது 1989-ல் ஜெயலலிதா வின் சேலை உருவப் பட்டது. அப்படிப்பட்ட கட்சியைச் சேர்ந்த நீங்களா மணிப்பூர் பற்றிப் பேசுவது?’ என்ற ரீதியில் பேசினார். இதுவும் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத் தியது.''’’

""ஆமாம்பா, இதுக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த விளக்கம், விவாதமாக்கப்படுதே?''’’

""ஆமாங்க தலைவரே, இதற்கு விளக்க மளித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், அது ஜெ.வால் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட நாடகம். இதற்காக ஜெயலலிதா ஒத்திகை பார்த்தார் என்று தமிழக சட்டமன்றத்தில் திருநாவுக்கரசு பேசியது பதிவாகி இருக்கிறது என்று, தற்போதைய காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசரின் பழைய வாக்குமூலத்தை வைத்து பதில் சொன்னார். முதல்வரின் இந்த பதிலை மறுத்து, இப்போது பா.ஜ.க. தமிழிசை தொடங்கி, அ.தி.மு.க. எடப்பாடி வரை பலரும் லாவணிக் கச்சேரியை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். இது குறித்து விவாதிக்கும் தி.மு.க.வின் சீனியர் தலைவர்கள், ’நிர்மலா சீதாராம னுக்கு பதிலடி தர எத்தனையோ சம்பவங்கள் இருக்கின்றன. அன்று சட்டமன்றத்தில் கலைஞர் படித்த பட்ஜெட் பேப்பரைப் பிடுங்கிக் கிழித்து, கலைஞரைத் திட்டியவர் ஜெயலலிதா. அவரைத் தள்ளியதில் அவர் கண்ணாடி உடைந்தது. அதையெல்லாம் விட்டுவிட்டு, திருநாவுக்கரசு சொன்ன ’ஒத்திகை’ பற்றி முதல்வர் பேசியிருக் கக்கூடாது. ஏனென்றால் திருநாவுக்கரசு, இருக்கிற இடத்துக்குத் தகுந்த மாதிரி பேசக்கூடியவர்’ என்று தங்களுக்குள் ஆதங்கப்படுகிறார் கள்.''

""அமைச்சர் அன்பில் மகேஷ் உடல்நிலை ஆளுங் கட்சித் தரப்பில் முதல்வரையே பதற வச்சிடுச்சே?''’’

rang

""ஆமாங்க தலைவரே, கிருஷ்ணகிரி மாவட் டத்தில் அரசு விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக, சேலத்திலிருந்து கிருஷ்ணகிரி சென்றுகொண்டிருந்த அமைச்சர் அன்பில் மகேஷுக்கு நெஞ்சுப் பகுதியில் லேசாக வலி வந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து பக்கத்தில் இருந்த மருத்துவ மனையில் அவருக்கு முதலுதவியும் பரிசோதனையும் நடந்திருக்கு. இதையறிந்து அவருக்கு ஹார்ட் அட்டாக்கோ என்று பதறிப்போன முதல்வர் ஸ்டாலின், அன்பில் மகேஷை தொடர்புகொண்டு, தைரியமாக இரு என்று சொல்லிவிட்டு, அவரை உடனடியாக பிளைட்டில் சென்னைக்கு அழைத்து வரும்படி,தர்மபுரி மா.செ. பழனியப்பனிடம் தெரிவித்தார். அங்கிருந்த மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், சென்னையை விட பெங்களூர் பக்கம் என்பதால், அங்குள்ள நாராயணா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக முதல்வருக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கு. பெங்களூர் மருத்துவமனையில்தான் அமைச்சருக்கு ஹார்ட் அட்டாக் இல்லை என்பது உறுதியாகி இருக்கிறது. இதன் பின்னரே முதல்வர் ஸ்டாலினும், அமைச்சர் உதயநிதியும் நிம்மதியடைந் தார்களாம்.''’’

""நாங்குனேரி விவகாரம் தமிழகத்தையே அதிர வச்சிருக்கே?''’’

dd

""நாங்குநேரி அரசு பள்ளி மாணவர்களிடம் வெளிப்பட்ட சாதி வன்மமும் கொடூரத் தாக்குதலும் தமிழகத்தையே திகிலில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த நிலையில், மாணவர் களிடையே நல்லிணக்கம் உருவாக்குவது குறித்து ஆராயவும், அங்கே நிலவும் தீவிர நிலைக்குத் தீர்வு காணவும் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒருநபர் ஆணையத்தை அமைத்திருக்கிறார் முதல் வர். பொதுவாக, தென் மாவட்டங்களில் சாதிய மோதல்கள் அடிக்கடி ஏற்படுவதால், அங்கே நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர, கடந்த 30 ஆண்டுகாலமாக வட இந்திய ஐ.பி.எஸ். அதிகாரிகளைத்தான் மாவட்ட எஸ்.பி.க்களாக நியமித்து வந்தார்கள். காரணம், அப்பகுதியைச் சேர்ந்த சாதிக்கார அதிகாரிகளை அங்கே அனுப்பினால், அவர்கள் குறிப்பிட்ட சாதிக்கு ஆதரவாக செயல்படக்கூடும் என்பதால்தான் இந்த முறையைக் கடைப்பிடித்தனர். ஆனால் சமீபகால மாக, இந்தமுறை சரிவரக் கடைப்பிடிக்கப் படாததால்தான், இதுபோன்ற சாதி மோதல்கள் அதிகரிப்பதாக பலரும் கவலையோடு தெரிவிக்கிறார்கள். மேலும் இந்த நாங்குநேரி விவகாரத்தில், காங்கிரஸ் பிரமுகர் ஒருவரும் விளையாடியிருப்பதாக தகவல்கள் வருகின்றன. இதை அரசு உடனடியாக கவனிக்காவிட்டால் நிலைமை தீவிரமாகலாம் என்றும் சொல் கிறார்கள்.''’’

""பா.ஜ.க.வில் அண்ணாமலைக்கும் அமர்பிரசாத் ரெட்டிக்கும் மீண்டும் மோதல் என்கிறார்களே?''’’

rang

""பா.ஜ.க.வில் அண்ணாமலைக்கும் அமர்பிரசாத் ரெட்டிக்கும் மீண்டும் உரசல் ஏற்பட்டிருக்கிறது. அண்ணாமலை மேற்கொண்டி ருக்கும் நடைபயணத்துக்குக் கூட்டம் கூட்டாத தோடு, கலெக்ஷனில் மட்டுமே அதிக ஆர்வம் காட்டியதாலும், அது தொடர்பான கணக்கு வழக்குப் பிரச்சினையாலும் அமருக்கும் அண்ணாமலைக்கும் உரசல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அமரை அங்கிருந்து துரத்திவிட்ட அண்ணாமலை, அவரால் அறிமுக மான கேரள நண்பர்கள் படையை மட்டும் தன் உதவிக்கு வைத்திருக்கிறாராம். அந்த டீம்தான் இப் போது அண்ணா மலையின் பாத யாத் திரைக்கான பயண ஏற்பாடுகளைப் பார்த் துக்கொள்கிறதாம். அமரால்தான் திருச்சி சூர்யாவிற்கும் அண் ணாமலைக்கும் மோதல் ஏற்பட்ட தாம். இப்போது, அமரைக் கடுப்பாக்க நினைக்கும் அண்ணாமலை, திருச்சி சூர்யாவிற்கு மீண்டும் முக்கியத்துவம் தர நினைக்கிறார் என்கிறார்கள்.''’’

""விரைவில் ஐ.ஏ.ஏஸ். அதிகாரிகளின் மாற்றம் இருக்கும்னு சொல்லப்படுகிறதே?''’’

""அண்மையில் நடந்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றத்தைத் தொடர்ந்து, அடுத்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் மாற்றமும் நடக்க இருக்கிறது. தொழில்துறை செயலாளராக இருக்கும் கிருஷ்ணன், ஒன்றிய அரசுப்பணிக்கு மாற விரும்பி, அதற்கான மூவ்களில் இருக்கிறார். அதனால் அவரது பதவியைக் குறிவைத்து, இப்போதே ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடையே போட்டி அதிகம் தென்படுகிறது. இந்தப் பதவிக்கான ரேஸில், சிறுதொழில்துறைச் செயலாளராக இருக்கும் அருண்ராய்க்கு வாய்ப்பு அதிகம் என்கிறார்கள்.''’’

""நானும் என் காதுக்கு வந்த ஒரு முக்கிய மான தகவலைப் பகிர்ந்துக்கறேன். தமிழக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜின் மகனும், அவர் பி.ஏ.செந்திலும் ஏகத்துக்கும் வரம்பு மீறிச் செயல்படுகிறார்களாம். குறிப்பாக அமைச்சரின் பி.ஏ.செந்தில், ஆவினில் நடக்கும் இட மாறுதல்களில் அமைச்சருக்குத் தெரியாம லே புகுந்து விளையாடி வருகிறாராம். இது குறித்த புகார்கள் கோட்டைவரை முட்டி மோதுகின்றன. விரைவில் செந்திலின் வரம்பு மீறலுக்கு ஆதாரமான ஆடியோ ஒன்றும் வெளியாகலாம் என்கிறார்கள்.''

nkn160823
இதையும் படியுங்கள்
Subscribe