2022 ஜூலை 16-19 நக்கீரன் இதழில் வெளிவந்த, பாரத் கனரக மின் சாதனங்கள் உற்பத்தி நிறுவன சொசைட்டி செய்தி சம்பந்தமாக, பாதிக்கப்பட்ட பெல் பைப்பிங் சென்டர் தி.நகர் எம்ப்ளாயீஸ் வெல்ஃபேர் சொசைட்டியின் தலைவர் திரு ஏ.பாண்டியன், ஆர்.கோவிந்தசாமி, பி.டி.ஹேமச்சந்திரன் போன்றவர்களுடன் ராணிப்பேட்டை, திருச்சியைச் சேர்ந்த சொசைட்டி உறுப்பினர்களும் முக்கிய ஆவணங்களுடன் நம்மைச் சந்தித்தார்கள்.
2012ஆம் ஆண்டு முதல் 2019வரை எஸ்.தங்கராஜ் சொசைட்டி தலைவராக இருந்தபோது, 27.09.2012 மற்றும் 23.05.2014 தேதிகளில், தாழம்பூர் சி.சத்திய நாராயண ரெட்டியிடம் 27 ஏக்கர் நிலத்தை பெல் சொசைட்டிக்கு விற்பனை ஒப்பந்தம் செய்தனர். 27.09.2012 தேதி முதல் 14.12.2018 தேதிவரை, 257 சொசைட்டி உறுப்பினர்கள் உழைத்துச் சேர்த்த 43,17,27,500 ரூபாய் தங்கராஜ் மூலமாக எஸ்.என். ரெட்டிக்கு வழங்கப்பட்டது.
பெருந்தொகை பெற்றுக்கொண்ட பின்னும் நிலம் சொசைட்டிக்கு விற்கப்படவில்லை. 02.06.2016 மற்றும் 25.07.2016 ஆகிய தேதிகளில் முறையே Deed of Assurance மற்றும் Deed of Understanding ஆகிய இரு ஒப்பந்தங்களை ஏற்படுத்திக்கொண்ட தங்கராஜ், சொசைட்டியால் அளிக்கப்பட்ட மேற்கண்ட பணத்தில் 35,20,00,000/- ரூபாயை தங்கராஜே திரும்பப் பெற்றுக்கொண்ட தகவலை ஆதாரத்துடன் வெளியிட்டார் எஸ்.என்.ரெட்டி.
இரு ஒப்பந்தங்களும் தன்னால் ஏற்படுத்தப்படவில்லை என் றும், என் கையெழுத்து இல்லை என்றும் தங்கராஜ் வாதிடவே, அவை FORENSIC & BIOMETRIC INVESTIGATION துறைக்கு அனுப்பப்பட்டு, அது தங்கராஜ் கையெழுத்துதான் என்று தாழம்பூர் டி.எஸ்.பி. முன்பு ஊர்ஜிதமானது. சத்தியநாராயண ரெட்டியிடம் இருந்து 35.20 கோடி ரூபாயை தங்கராஜ் திரும்பப் பெற்றார் என்பது 05.12.2019ல் வெளியான சென்னை சிட்டி சிவில் கோர்ட் தீர்ப்பிலும் ஊர்ஜிதம் செய்யப்பட்டது.
எஸ்.என்.ரெட்டியிடம் இருந்து தங்கராஜ் பெற்ற பணம் முழுவதையும் ஜெயகுமார் மற்றும் தங்கராஜ் மகன் சம்புகன் உட்பட மேலும் சிலர் இணைந்து கையாடல் செய்ததோடு, அனாதீன நிலம் என்பதை மறைத்து எஸ்.என்.ரெட்டிக்கு சொந்த மான நிலம்தான் என போலி ஆவணங்கள் உருவாக்கியுள்ளார்கள்.
22.03.2019 தேதியில் தங்கராஜ் தன்னுடைய மகன் சம்புகன் பெயரில் போலியாக உருவாக்கப்பட்டGN CONTRACTORS & DEVELOPERS என்ற நிறுவனத்திற்கு எவ்வித கார ணமும் இல்லாமல் சொசைட்டி பொருளாளர் விடுப்பில் இருந்தபோது லாக்கரில் இருந்து காசோலையை திருடி 1,99,50,000/- ரூபாயை சொசைட்டி வங்கிக் கணக்கில் இருந்து யாருக்கும் தெரியாமல் எடுக்க முயற்சி செய்து வங்கி மேலாளரிடம் கையும் களவுமாக சிக்கிக்கொண்டுள்ளார். சொசைட்டி சார்பில் போலி கையெழுத்துக்கள் மூலம் சில ரிக்கார்டுகள் தயார் செய்துள்ளார். அவர்களில் கருணாகரன், சத்தியமூர்த்தி இருவரும் அந்தக் கையெழுத்து தங்களுடையதல்ல என்று கோர்ட்டில் அபிடவிட்டே தாக்கல் செய்துள்ளார்கள்.
முன்னாள் தாழம்பூர் ஊராட்சி மன்றத் தலைவர் தேவசித்தம் வசம் ஒரு கோடியே எண்பத்துஐந்து லட்சம் ரூபாயை ரெட்டியிடம் வாங்கிக் கொடுத்ததாகக் கணக்குக் காட்டியதாக தங்கராஜ் கூறியதைப் பற்றி சொசைட்டியினர் தேவசித்தத்திடம் விசாரித்தபோது, அவரோ நிலம் பட்டா வேலைகளுக்காக இருபது லட்சம் மட்டுமே வாங்கியதாகச் சொல்லியிருக்கிறார்.
தங்கராஜோ, "இதயநோய் சிகிச்சை எடுத்தபின் வருகிறேன்' என்றவர் திரும்ப வரவே இல்லை. அவருடைய வீட்டுக் காவலுக்கு அடியாட்கள் நியமித்தவர் நாளடைவில் தலைமறைவாகிவிட்டார்.
சொசைட்டி உறுப்பினர்கள் சிறப்பு பொது மகாசபைக் கூட்டம் 03.11.2019 அன்று கூட்டி, புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு 9 ஏக்கர் நிலம் டி.டி.சி.பி. ஒப்புதல் பெற்று 82 உறுப்பினர்களுக்கு பத்திரப்பதிவு செய்யப்பட் டது. மேலும் 6 ஏக்கர் டி.டி.சி.பி. ஒப்புதல் பெற்று 45 உறுப் பினர்களுக்கு பிரித்தளிக்கப்பட்டு பதிவு செய்யக் காத் திருந்த நிலையில் வருவாய்த்துறை கூடுதல் தலைமை செய லாளர் ஜெயக்கொடி உத்தரவால் நிறுத்தப்பட்டது. மேலும் 9 ஏக்கர் டி.டி.சி.பி. அப்ரூவலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
சொசைட்டிக்கு எதிரான பல்வேறு நடவடிக்கை களில் ஈடுபட்டதால் 02.11.2020 அன்று, தங்கராஜ் கே.ஜெயக்குமார், கே.இரவி, எஸ்.ராமதாஸ் ஆகியோர் விசாரணைக்குழு முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டும் அவர்கள் ஆஜராகாததால் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டனர்.
சொசைட்டி உறுப்பினர்களில் சிலர், தங்கராஜ் மீது புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி நிர்வாகிகளிடம் அளித்த புகாரின் பெயரில் விசாரணைக்குழு விசாரணை நடத்தி... நிலமோசடி, சொசைட்டியின் பண மோசடி உறுதி செய்யப்பட்டதால், அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நிரந்தரமாக தங்கராஜ் நீக்கப்பட்டார்.
ஆள் கடத்தலுக்கும் சொசைட்டிக் கும் சம்பந்தமில்லை. அது பொய்யாக ஜோடித்த சம்பவம். சொசைட்டி பணத்தை கொள்ளை அடிப்பதையே கொள்கையாகக் கொண்டு செயல்பட்டு தன்னுடன் 40 ஆண்டு காலமாகப் பணிபுரிந்து சிறுகச் சிறுக சேர்த்த பெல் தொழிலாளர்களின் சேமிப்பை முழுவதுமாக கொள்ளையடித்து மோசடி, நம்பிக்கைத் துரோகம் செய்து, 257 குடும்பங்களை ஏமாற்றி தலைமறைவான கிரிமினல் குற்றவாளி மட்டுமல்ல, சக தொழிலாளர்கள் பணத்தில் ஆடம்பரமாகச் செலவு செய்து சொகுசு வாழ்க்கை நடத்தியவர்தான் இந்த தங்கராஜ் என்கிறார்கள்.
அனாதீன நிலம் என்பதை மறைத்து விற்பனை ஒப்பந்தம் போட்டு சொசைட்டி உறுப்பினர்களை மாட்டிவிட்டதோடு அதிலிருந்து மீள்வதற்காக உதவி செய்ய வந்த அன்றைய மதுரவாயல் அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் தேவதாஸ் மூலம் செய்யப்பட்ட 102 பிளாட்டுகள் ரிஜிஸ்ட் ரேசனும் தங்கராஜ் போட்ட ‘ரிட்’ காரண மாக இடை நிறுத்தம் செய்யப்பட்டது.
இது விசயமாக நேர்மையான ஒரு பெண் ரியல் எஸ்டேட் அதிபரிடம் கேட்டபோது... "ரியல் எஸ்டேட் தொழிலில் காழ்ப்புணர்வு காரணமாக இந்த தங்கராஜ் அவரது மகன் சம்புகன் ஆகியோர் தங்கள் நிறுவனத்தை உள்ளிழுத்து விட்டனர்'' என்றும், "மேற்கண்ட தாழம்பூரை ஒட்டி காஸா கிராண்ட் கட்டுமான நிறுவனத்தின் பெவிலியன், எலைட் மற்றும் டி.எல்.எப், கே.ஜி.பில்டர்ஸ், நேவி பிராஜக்ட் என்று பல கட்டுமான நிறுவனங்களில் முதலீடு செய்த நடுத்தட்டு மக்களும் பட்டா தள்ளுபடி செய்யப்பட்டதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்கள்'' என்றும் தனது வருத்தத்தைப் பதிவு செய்கிறார்.
"இந்த 257 பேரின் குடும்பங்களை மட்டுமன்றி, தாழம்பூர் பகுதி மக்களை முந்தைய அ.தி.மு.க. அரசின் பட்டா தள்ளுபடி என்ற அரசு சுற்றறிக்கையில் இருந்து விலக்களித்து, திராவிட மாடல் அரசை நடத்தும் இன்றைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் காப்பாற்ற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது'' என்கிறார்.
பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக நக்கீரனின் வேண்டுகோளும் அதுவே.
-சுந்தர் சிவலிங்கம்