ஆன்மிகமா? வணிகமா? -திணறுது தென்காசி!

dd

"தமிழ்நாட்டிலுள்ள கோவில் நகரங்களில், ரத வீதிகளும், மாசி வீதிகளும், ஆன்மிகப் பாதையிலிருந்து விலகிச் சென்றுவிட்டன. தென்காசியில் உள்ள பிரசித்தி பெற்ற உலகம்மன் உடனுறை காசி விஸ்வ நாதர் கோவில் மாசி வீதிகளும் ஆன்மிகப் பொலிவை முற்றிலும் இழந்து, வணிகத்தை மட்டுமே தூக்கிப் பிடிக்கின்றன. அதற்காக, பொதுமக்களுக்கு இறை பக்தி குறைந்துவிட்டது என்ற முடிவுக்கு வந்து விடமுடியாது.

மாசித் திரு விழாவின்போது கோவில் தேர் வலம்வரும் மாசி வீதிகளில், எங்கிருந்தெல்லாமோ பொதுமக்கள் வந்து, தங்களது பக்தி உணர்வை வெளிப்படுத்தத் தவறுவதில்லை. ஆனாலும், மாசி வீதி உருவானதன் நோக்கம் சிதைந்துபோனது, பெரும் உறுத்தலாக இருக்கிறது''’என பண்டைய பண்பாட்டை மனதில் தேக்கியவாறு ஆதங்கப்பட்டார், தென்காசியில் வசிக்கும் கவிஞர் விக்கிரமாதித்யன்.

ff

அது என்ன பண்டைய பண்பாடு?

"தோண்டியெடுத்து கண்டறியப்பட்ட 2600 ஆண்டுகள் பழமையான கீழடி நாகரிகத்தின் வாயிலாக, ஆதித்தமிழர்கள் ஆன்மிக நம்பிக்கை இல்லாத, மதமற்றவர

"தமிழ்நாட்டிலுள்ள கோவில் நகரங்களில், ரத வீதிகளும், மாசி வீதிகளும், ஆன்மிகப் பாதையிலிருந்து விலகிச் சென்றுவிட்டன. தென்காசியில் உள்ள பிரசித்தி பெற்ற உலகம்மன் உடனுறை காசி விஸ்வ நாதர் கோவில் மாசி வீதிகளும் ஆன்மிகப் பொலிவை முற்றிலும் இழந்து, வணிகத்தை மட்டுமே தூக்கிப் பிடிக்கின்றன. அதற்காக, பொதுமக்களுக்கு இறை பக்தி குறைந்துவிட்டது என்ற முடிவுக்கு வந்து விடமுடியாது.

மாசித் திரு விழாவின்போது கோவில் தேர் வலம்வரும் மாசி வீதிகளில், எங்கிருந்தெல்லாமோ பொதுமக்கள் வந்து, தங்களது பக்தி உணர்வை வெளிப்படுத்தத் தவறுவதில்லை. ஆனாலும், மாசி வீதி உருவானதன் நோக்கம் சிதைந்துபோனது, பெரும் உறுத்தலாக இருக்கிறது''’என பண்டைய பண்பாட்டை மனதில் தேக்கியவாறு ஆதங்கப்பட்டார், தென்காசியில் வசிக்கும் கவிஞர் விக்கிரமாதித்யன்.

ff

அது என்ன பண்டைய பண்பாடு?

"தோண்டியெடுத்து கண்டறியப்பட்ட 2600 ஆண்டுகள் பழமையான கீழடி நாகரிகத்தின் வாயிலாக, ஆதித்தமிழர்கள் ஆன்மிக நம்பிக்கை இல்லாத, மதமற்றவர்களாக வாழ்ந்தார்கள் எனக் கூறப்படும் நிலையில், பொது ஊழிக்கு முந்தைய 1700-ஆம் ஆண்டுவாக்கில் வேதகால பண்பாடு தோற்றம் பெற்றதாகச் சொல்லப்படுகிறது. ஆரியர்கள் வருகைக்குப் பின்பே, வைதீக மதம், ஸநாதன தர்மம் என்பதெல்லாம் மக்களிடம் புகுத்தப்பட்ட நிலையில், மேலைநாட்டினரால் உச்சரிக்கப்பட்ட ‘இந்து’ என்ற மதப்பெயர் இன்றளவும் நிலைத்து நிற்கிறது.

பக்தி மார்க்கத்தை ஒழுக்கம் சார்ந்ததாக மக்கள் கடைப்பிடித்துவந்த நிலையில், வழிபாட்டு மையமாக கோவிலும், அதனைச் சுற்றி நாற்கர வடிவில் தெருக்களும் பிரிக்கப்பட்டு, மன்னர்களின் ஏற்பாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த நகரங்கள் உருவாயின. கோவிலுக்குள் செல்லமுடியாத முதியவர்கள், நோயாளிகள், கோவிலுக்கு வெளியே தெய்வ விக்கிரகங்களைத் தரிசிப்பதற்காகவும், பலதரப்பட்ட மக்கள் ஒற்றுமையாக வடம்பிடித்து தேரினை இழுப்பதற்காகவுமே, கோவிலைச் சுற்றி ரத வீதிகளும், மாசி வீதிகளும் நகரமைப்பில் ஏற்படுத்தப்பட்டன. இதிலும் ஸநாதனம் நுழைந்தது. உயர்சாதியினர் கோவிலுக்கு அருகிலுள்ள தெருக்களிலும், ஏழைகள் மற்றும் பிற்பட்ட படிநிலையிலுள்ள மக்கள் தொலைவிலுள்ள தெருக்களிலும் குடியமர்த்தப்பட்டனர். தேர் இழுத்துவரப்படும் வீதிகளில் குடியிருப்பவர்கள், வீட்டு வாசலில் வண்ணக் கோலம் போட்டு, வழிபாட்டுப் பொருட்களுடன் வாசலில் நிற்பதை வழக்கமாகக் கொண்டி ருந்தனர்.

ஆன்மிகத்தின் பெயரால் சிறப்புமிக்கவர்களாகக் கருதப்பட்டு, நகரத்தின் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் வசித்த உயர்சாதியினர் பலரும், தென்காசியில் என்ன செய்திருக்கிறார்கள் தெரியுமா? பணம்தான் பிரதானமென, மிகக் கூடுதலான விலைக்கு தங்களது வீடுகளை வியாபாரிகளுக்கு விற்றுவிட்டனர். கோவிலுக்கும், சாமி வலம்வரும் தேருக்கும் மரியாதை செய்துகொண்டிருந்த அந்த வீடுகளெல்லாம் இடிக்கப்பட்டு, பெரிய பெரிய கடைகளாகிவிட்டன. தென்காசியில் மட்டுமல்ல, மதுரை, கும்பகோணம் போன்ற கோவில் நகரங்களிலும் இதேநிலைதான்.

ff

தென்காசி காசி விஸ்வநாதர் கோவில், கி.பி.1445-ல் பராக்கிரம பாண்டிய மன்னரால் கட்ட ஆரம்பிக்கப்பட்டது. கி.பி. 17-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தீக்கோளினால் சிதைந்த இக்கோவிலின் கோபுரம், 1967 வரையிலும் இரண்டாகப் பிளவுபட்ட மொட்டைக் கோபுரமாகவே இருந்தது. பா.சிவந்தி ஆதித்தன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் முயற்சியால், 1990-ல் ராஜகோபுரம் அமைக்கப்பட்டு குடமுழுக்கு விழா நடந்தது. கோவிலின் பெயராலேயே தென்காசி என்றழைக்கப்படும் ஆன்மிகம் தழைத்தோங்கிய இந்த ஊரில், தற்போது கடைகளும் வியாபாரமும் வியாபித்திருக்கிறது. ஆன்மிகப் புரிதலே இல்லாமல், 15 வருடங்களுக்குமுன் பிரிவினை மோதல்களும் உயிர்ப்பலிகளும்கூட நிகழ்ந்திருக்கின்றன.

விக்கிரமாதித்யன் நம்மிடம் “"குற்றாலத்தின் குளுகுளு அருவிகளும், செழித்தோங்கும் விவசாயமும் தென்காசி மாவட்டத்தின் சிறப்புகளாக இருந்தபோதிலும், மாவட்டத் தலைநகரான தென்காசியில் அரசுக் கல்லூரி அமையப்பெறாததும், சொல்லிக்கொள்ளும் அளவுக்கு தொழில் வளர்ச்சி இல்லாததும், ஊருக்குள் வசிப்பதற்கு வீடுகள் கிடைக் காததும், அபார்ட்மெண்ட் வீடுகள் கட்டுவதற்கு யாரும் முன்வராததும், கடந்த காலங்களில் பீட்டர் அல்போன்ஸ், சரத்குமார், கருப்பசாமி பாண்டியன், அண்ணாமலை போன்ற செல்வாக்கு மிக்க எம்.எல்.ஏ.க்களைப் பெற்றி ருந்தும், எவ்வித முன்னேற்றமும் காணாத தொகுதியாகவே தென்காசி இருக்கிறது''’என குறைகளையும் பட்டியலிட்டார்.

தென்காசி காங்கிரஸ் எம்.எல்.ஏ. பழனி நாடாரை தொடர்புகொண் டோம். “"தென்காசிக்கு வேளாண் கல்லூரி கேட்டு மனு கொடுத்திருக்கிறோம். ஆன் மிகத்துல இருந்து வியாபாரத்து பக்கம் தென்காசி திரும்பிருச்சா? அதைப் பத்தி சொல்லுறதுக்கு என்கிட்ட கருத்து இல்ல. தென்காசி வளர்ச்சி இல்லாத ஊருன்னு சொன்னா எப்படி? என்ன வளர்ச்சி இல்லையாம்? கடைகள் இருந்தாத்தானே வியாபாரம் விக்கும். எதையாவது வித்தாத்தான வளர்ச்சி வரும். வியாபாரம் பண்ணுறோம். வாங்க வாங்கன்னு கூப்பிடறாங்க. இதை வளர்ச்சி இல்லைன்னு எப்படிச் சொல்ல முடியும்?''’என கேட்டார்.

அதெல்லாம் ஒரு காலம் என்று சொல்லும் அளவுக்கு ஆன்மிகம் சார்ந்த விஷயங்களும் மாறிக் கொண்டே இருக்கின்றன.

nkn010223
இதையும் படியுங்கள்
Subscribe