டுமலை விஷயம் பா.ஜ.க.வை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அவர் பழனிக்குப் பக்கத்தில் சேம்பர் நடத்தும் விவகாரம் முன்பே தெரிந் திருந்தாலும் அதைப்பற்றி லேட்டாகத்தான் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். நூற்றுக் கணக்கான கோடி ரூபாய் அந்த சேம்பரில் இருந்து தமிழகம், கர்நாடகம், கேரளா, ஆந்திரா போன்ற தென் மாநிலங்களுக்கு செல்கிறது என வருமானவரித் துறையின் புலனாய்வுப்பிரிவு கண்டுபிடித்தது.

இந்தத் தகவல் கோவையி லுள்ள பா.ஜ.க.வின் பெண் தலைவருக்கு தெரியவந்தது. அவர் இதை மத்திய நிதியமைச்சர் நிர்மலாவுக்கு பாஸ் செய்தார். ஏற் கெனவே கோவை அன்னபூர்ணா அதிபரை நிர்மலாவும், வானதியும் சேர்ந்து அசிங்கப் படுத்தியதை ஆடுமலை லண்டனி லிருந்து எதிர்த்துப் பேசினார். அதனால் கடுப்பிலிருந்த நிர்மலாவும் வானதியும் இந்தத் தகவல் மீது நடவடிக்கை எடுக்கலாமா என அமித்ஷாவைக் கேட்டனர். அந்த சேம்பரை நடத்தும் செந்தில் தி.மு.க. அமைச்சர் ஒருவ ருக்கு வேண்டிவர். அவர் திருப்பூரில் நடத்தும் ரியல் எஸ்டேட் வியாபாரத் தின் தொடக்க விழாவுக்கு தி.மு.க. பிரமுகர்கள் பெரிய அளவில் கலந்து கொண்டிருக்கிறார்கள். எனவே, “அந்த சேம்பரில் மணல் செந்திலுக்கு பார்ட்னராக இறங்கும் ஆடுமலையின் மச்சான் சிவக்குமாரை தொடாதீர்கள். ஆனால், செந்தில் மேல் நடவடிக்கை எடுக்க தடை எதுவும் இல்லை” என அமித்ஷா ஓகே சொன்னார்.

a

ரெய்டு நடவடிக்கைகள் பாய்ந் தன. ரெய்டில் கோடிகள் மதிப்புள்ள நிலத்தை லட்சங்களில்தான் விலையுள்ளது என போலி மதிப்பு காட்டி, அதே இடத்தில் செந்தில் கோழிப்பண்ணை நடத்தியதை அடிப்படையாக வைத்து, வருவாய்த்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை, அந்த நிலத்தை குறைந்த விலைக்கு மோசடியாகப் பதிவு செய்து கொடுத்திருக் கிறார்கள். அந்த நிலத்தின் மொத்த மதிப்பு 50 கோடி ரூபாய். அதில் தமிழக அரசிடமிருந்து 5 ணீ கோடி ரூபாய்க்கு லோன் வாங்கியிருக் கிறார்கள். போர் நடந்து கொண்டிருக்கும் உக்ரைனிலிருந்து கல் அறுக்கும் இயந்திரத்தை சட்டவிரோதமாக இறக்குமதி செய்திருக் கிறார்கள். கல் குவாரிகள் நிறைந்த அந்தப் பகுதியில் பள்ளம் தோண்டி, மண் கருங்கல் லாரி லாரியாக விற்பனை செய்திருக்கிறார்கள். செம்மண் நிறைய கிடைக்கும் அந்தப் பகுதியில் லோடு லோடாக செம்மண் விற்றிருக்கிறார்கள். செங்கல் சூளைகளில் கடந்த இரண்டு ஆண்டு களில் மட்டும் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள களிமண்ணை மணல் மாஃபியா கரிகாலன், ஆடுமலை மச்சான் சிவக்குமாருக்கும், செந்திலுக்கும் இலவசமாக அளித்திருக்கிறார். அங்கிருந்து கோடிக்கணக்கான மதிப்புள்ள செங்கல்கள் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது.

இவையெல்லாம் எந்தக் கணக்கு வழக்குகளும் இல்லாமல் விற்கப்பட்டிருக்கிறது. இதற்காக ‘"அண்ணா’லாரி சர்வீஸ்' என்கிற லாரி கம்பெனியில் லாரிகள் வாங்கி தொழிலை நடத்தியிருக்கிறார்கள். இந்திய அளவில் அதானியின் பெயர் போல தமிழகத்தில் ஆடுமலையின் பெயர் இடம்பெற வேண்டுமென நடத்தப்பட்ட இந்த சேம்பரில் மட்டும் 240 கோடி ரூபாய் அளவுக்கு வரிஏய்ப்பு நடந்துள் ளது. அத்துடன் ரெய்டின்போது பத்து கோடி ரூபாய் பணமாகவே அதிகாரிகள் கைப்பற்றி யிருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பில் சீட்டுக் கம்பெனிகள் நடத்திய விவரமும் அதிகாரிகளிடம் சிக்கியுள்ளது.

Advertisment

இவையனைத்தும் மாநில தி.மு.க. அமைச்சர்கள் சிலர் உதவியுடன் நடந்துள்ளது. தி.மு.க. அரசு இவர்களைப் பார்த்துப் பயந்து வேகவேகமாக இவர்களுக்கு தேவையானதை செய்து கொடுத்திருக்கிறது என்பதை வரு மானவரித்துறையினர் கண்டுபிடித்திருக் கிறார்கள். ரியல் எஸ்டேட் வியாபாரத்திலும் கொடிகட்டிப் பறந்த ஆடுமலை மச்சான் சிவக்குமார், மணல் செந்தில் ஜோடி கொங்குமண்டலப் பகுதிகளிலும், திருச்சியில் புது பஸ் ஸ்டாண்ட் கட்டும் பகுதியிலும் பெருமளவில் நிலங்கள் வாங்கிப் போட்டி ருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு தி.மு.க. அமைச்சர் வாங்கிய நிலத்துக்குப் பக்கத்திலேயே 200 ஏக்கர் நிலம் இவர்கள் கையில் இருக்கிறது. அதை எவ்வளவு விலைக்கு வாங்கினார்கள் என்பது பற்றி எந்த ரிக்கார்டும் இல்லை. இவை அனைத்தும் தி.மு.க. அமைச்சர்கள் சிலர் உதவியுடன் நடை பெற்ற வியாபாரங்கள் என வருமானவரித் துறை அறிக்கை அளித்தது என்பது நிர்மலா சீதாராமனை யும் அமித்ஷாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி யுள்ளது.

“இந்த ரெய்டு கள் வேகமாக நடந்துகொண்டிருக் கும்போது ஆடுமலை ஹைதராபாத்துக்கு சென்றுவிட்டார். அங்கிருந்து திடீரென நண்பர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என அகமதாபாத்துக்கு பறந்தார். அங்கு வந்த அமித்ஷாவை நேரில் சந்தித்த ஆடுமலை, "நான் எந்தத் தவறும் செய்யவில்லை. எனது குடும்ப உறுப்பினர்கள் எனது பெயரை பயன்படுத்தி தவறு செய்திருக்கிறார்கள்''’என விளக்கமளித்தார். அமித்ஷாவோ ஆடுமலை, அவரது மனைவி அகிலா, மச்சான் சிவக்குமார், மாமனார் ஆகியோர் சேர்த்த சொத்துக்களின் விவரத்தைப் பற்றி விரிவாகச் சொல்லி, "இந்த சொத்துக்கள் எல்லாம் தி.மு.க. அமைச்சர்களின் உதவியோடு நீ சேர்த்த சொத்துக்கள். இதற்காகத்தான் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வேண்டாம் என நாடகம் ஆடுகிறாயா?''’என திருப்பிக் கேட்டு எச்சரித்தார். மூக்குடைந்துபோன ஆடுமலை அங்கிருந்து சோகமாக ஹைதராபாத்துக்கே திரும்பினார். அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்கும் வேலைகள் தீவிரமடைந்துள்ளன. ஆடுமலையை நீக்கினால் கூட்டணி ஓகே என அ.தி.மு.க. தலைமை சிக்னல் அளித்துள்ளது. இப்படி அனைத்து விதத்திலும் வசமாக சிக்கிக்கொண்ட ஆடுமலையின் தி.மு.க. தொடர்புகள் எங்களையே அதிர்ச்சிக்குள் ளாக்கியுள்ளது என்கின்றது பா.ஜ.க.வின் கமலாலய வட்டாரங்கள்.

Advertisment