ராங்கால்! கூட்டணி! கவர்னரை சந்தித்த பிரேமலதா! துரத்திய டெல்லி! ரெய்டு பயம்! நிர்மலா சீதாராமனை சந்தித்த அதிமுக!

ss

"ஹலோ தலைவரே, காவல்துறை அதிகாரிகள் மாநாடு முதல்வர் தலைமையில் மிகுந்த உற்சாகத்தோடு நடந்திருக்கிறது.''”

"ஆமாம்பா, காவல்துறை மீது மக்கள் கொண் டிருக்கும் நம்பிக்கையை காப்பாற்றுவது அவ சியம்னு அதில் முதல்வர் வலியுறுத்தியிருக்காரே''”

"உண்மைதாங்க தலைவரே, குற்றவாளிகளுக்கு உடனடியாக உரிய தண்டனைகளைப் பெற்றுத் தந்தால்தான் மக்களுக்கு காவல்துறை மீது மரி யாதை வரும்னு முதல்வர் இதில் கேட்டுக்கொண்டி ருக்கிறார். இந்தக் கூட்டத்தில், சுவாரஸ்யமான விவாதங்களும் நடந்திருக்கு. குறிப்பாக, உள்துறைச் செயலாளரான அமுதா ஐ.ஏ.எஸ்., காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து லேசாக விமர்சனத்தை வைத்துவிட்டு, திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைகள் தீர்க்கப்படுவதில்லைன்னு சொல்லியிருக்கார். உடனே இதற்கு பதில் சொன்ன ஏ.டி.ஜி.பி. அருண், கடந்த ஆட்சியைவிட இப்போது எந்த அளவிற்கு கிரைம் ரேட் குறைந்திருக்கிறது என்று புள்ளிவிபரத்தோடு சொன்னதுடன், திருவாரூர் மாவட்டத்தில் நடந்த காவல்துறை முகாம்கள் குறித்தும், அங்கு பெறப்பட்ட புகார் மனுக்கள் குறித்தும், அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் விவரித்து, அனைவரையும் கைத்தட்ட வைத்துவிட்டாராம்.

"சரிப்பா, கவர்னர் ரவியை தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா சந்தித்தது பற்றி புதுப் புது தகவலா வருதே?''”

gg

"ஆமாங்க தலைவரே, கவர்னர் ரவியை தே.மு.தி.க.வின் பொருளாளரான பிரேமலதா அண்மையில் சந்தித்தார். அப்போது, காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவே அவர் கவர்னரை சந்தித்ததாக வெளியே தெரிவிக்கப்பட்டது. ஆனால் உண்மை யில், அவர் பா.ஜ.க. கூட்டணி பற்றி பேசத்தான் கவர்னரை சந்தித்தாராம். அதாவது, அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி முறிந்துள்ள நிலையில், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க விரும்பிய பிரேமலதா, அண்ணாமலையிடம் பேசுவதைவிட, டெல்லி தலைமையிடம், தான் பேசவேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார். டெல்லியைத் தொடர்புகொள்ள அவருக்கு வேறு நம்பிக்கை யான சோர்ஸ் கிடைக்காததால், கவர்னர் ஆர்.என்.ரவி மூலம் டெல்லியுடன் பேச முடி வெடுத்தாராம். அதனால்தான், காவரி விவகாரம் என்ற சாக்கில் அவர் கவர்னரை சந்திக்க ராஜ்பவன் போனார் என்கிறது தே.மு.தி.க. தரப்பு.''”

"என்னப்பா இது? கவர்னரை அவர் என்ன அரசியல் புரோக்கர்னு நினைச்சிட்டாரா?''”

"இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்றதுன்னு எனக்குத் தெரியலைங்க தலைவரே. ஆனால் அப்போது ராஜ்பவனில் நடந்ததை மட்டும் சொல்றேன். கவர்னரை சந்தித்த பிரேமலதா, நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் தற்போதைய அரசியல் நில வரம் பற்றியெல்லாம் விவாதித் தாராம். பா.ஜ.க.வுடன் கடந்த காலங்களில் தாங்கள் கூட்டணி வைத் திருந்தது தொடங்கி தற்போதைய சூழல் வரை விளக்கிய அவர

"ஹலோ தலைவரே, காவல்துறை அதிகாரிகள் மாநாடு முதல்வர் தலைமையில் மிகுந்த உற்சாகத்தோடு நடந்திருக்கிறது.''”

"ஆமாம்பா, காவல்துறை மீது மக்கள் கொண் டிருக்கும் நம்பிக்கையை காப்பாற்றுவது அவ சியம்னு அதில் முதல்வர் வலியுறுத்தியிருக்காரே''”

"உண்மைதாங்க தலைவரே, குற்றவாளிகளுக்கு உடனடியாக உரிய தண்டனைகளைப் பெற்றுத் தந்தால்தான் மக்களுக்கு காவல்துறை மீது மரி யாதை வரும்னு முதல்வர் இதில் கேட்டுக்கொண்டி ருக்கிறார். இந்தக் கூட்டத்தில், சுவாரஸ்யமான விவாதங்களும் நடந்திருக்கு. குறிப்பாக, உள்துறைச் செயலாளரான அமுதா ஐ.ஏ.எஸ்., காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து லேசாக விமர்சனத்தை வைத்துவிட்டு, திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைகள் தீர்க்கப்படுவதில்லைன்னு சொல்லியிருக்கார். உடனே இதற்கு பதில் சொன்ன ஏ.டி.ஜி.பி. அருண், கடந்த ஆட்சியைவிட இப்போது எந்த அளவிற்கு கிரைம் ரேட் குறைந்திருக்கிறது என்று புள்ளிவிபரத்தோடு சொன்னதுடன், திருவாரூர் மாவட்டத்தில் நடந்த காவல்துறை முகாம்கள் குறித்தும், அங்கு பெறப்பட்ட புகார் மனுக்கள் குறித்தும், அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் விவரித்து, அனைவரையும் கைத்தட்ட வைத்துவிட்டாராம்.

"சரிப்பா, கவர்னர் ரவியை தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா சந்தித்தது பற்றி புதுப் புது தகவலா வருதே?''”

gg

"ஆமாங்க தலைவரே, கவர்னர் ரவியை தே.மு.தி.க.வின் பொருளாளரான பிரேமலதா அண்மையில் சந்தித்தார். அப்போது, காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவே அவர் கவர்னரை சந்தித்ததாக வெளியே தெரிவிக்கப்பட்டது. ஆனால் உண்மை யில், அவர் பா.ஜ.க. கூட்டணி பற்றி பேசத்தான் கவர்னரை சந்தித்தாராம். அதாவது, அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி முறிந்துள்ள நிலையில், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க விரும்பிய பிரேமலதா, அண்ணாமலையிடம் பேசுவதைவிட, டெல்லி தலைமையிடம், தான் பேசவேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார். டெல்லியைத் தொடர்புகொள்ள அவருக்கு வேறு நம்பிக்கை யான சோர்ஸ் கிடைக்காததால், கவர்னர் ஆர்.என்.ரவி மூலம் டெல்லியுடன் பேச முடி வெடுத்தாராம். அதனால்தான், காவரி விவகாரம் என்ற சாக்கில் அவர் கவர்னரை சந்திக்க ராஜ்பவன் போனார் என்கிறது தே.மு.தி.க. தரப்பு.''”

"என்னப்பா இது? கவர்னரை அவர் என்ன அரசியல் புரோக்கர்னு நினைச்சிட்டாரா?''”

"இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்றதுன்னு எனக்குத் தெரியலைங்க தலைவரே. ஆனால் அப்போது ராஜ்பவனில் நடந்ததை மட்டும் சொல்றேன். கவர்னரை சந்தித்த பிரேமலதா, நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் தற்போதைய அரசியல் நில வரம் பற்றியெல்லாம் விவாதித் தாராம். பா.ஜ.க.வுடன் கடந்த காலங்களில் தாங்கள் கூட்டணி வைத் திருந்தது தொடங்கி தற்போதைய சூழல் வரை விளக்கிய அவர், பா.ஜ.க.வுடன் மீண்டும் கூட்டணி அரும்பவேண்டும் என்ற தங்கள் ஆசையையும் தெரிவித் திருக்கிறார். இதைக்கேட்ட கவர்னர், "பா.ஜ.க.விடம் என்ன எதிர்பார்க்கிறீர் கள்?' என்று கேட்க, பிரேமலதாவோ, "கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு அடுத்த 2வது இடத்தை எங்களுக்குத் தருவதோடு, எங்கள் கட்சிக்கு 12 சீட்டுகளை ஒதுக்க வேண்டும். அதோடு தேர்தல் செலவு களுக்கான பண உதவியையும் பா.ஜ.க. செய்யவேண்டும்' என்று பட்டியலிட் டாராம். இதை கவர்னர் அப்படியே டெல்லிக்கு ரிலே செய்ய, இதைக்கேட்டு கடுப்பான டெல்லி, "அவர்கள் கேட்டதை எல்லாம் தருவதற்கு வாய்ப்பில்லை என்று சொல்லிவிடுங்கள்' என்று பதில் அனுப்பியதாம். இதைக் கேட்டு டென்சன் ஆன பிரேமலதா, இப்போது பா.ஜ.க.வை விமர்சிக்கத் தொடங்கியிருக்கிறார்.''”

"கவர்னரின் புதிய முதன்மை செயலாளராக கிர்லோஷ்குமார் நியமிக்கப்பட்டிருக்கிறாரே?''”

rr

"தமிழக கவர்னர் ஆர்.என் ரவியின் முதன்மைச் செயலாளராக இருந்த ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல், கடந்த வாரம் ஒன்றிய அரசுப்பணிக்கு மாற்றலானதால், தற்போது கவர்னரின் புதிய செயலாளராக கிர்லோஷ்குமார் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டிருக்கிறார். ஏற்கனவே இருந்த ஆனந்தராவ், ராஜ் பவன் ரகசியங்களை வெளியே கசிய விடுகிறார் என்று சந்தேகப்பட்டுதான், அவரை மாற்றும்படி கவர்னர் தமிழக அரசிடம் கேட்டுக்கொண் டிருந்தார். தற்போது நியமிக்கப் பட்டிருக்கும் கிர்லோஷ்குமார், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்றும் வாரியத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தவர். நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்த இவரை கவர்னரே தமிழக அரசிடம் கேட்டுப் பெற்றிருக்கிறாராம். 2001ஆம் வருட பேட்ச் அதிகாரியான இந்த கிர்லோஷ்குமார், கர்நாடகத்தைச் சேர்ந்தவர். ராஜ்பவனில் நடக்கும் செலவின ஊழல்களை இந்த கிர்லோஷ்குமாரால் தடுக்கமுடியுமா? என்கிற கேள்வி, கோட்டை வட்டாரங்களில் எதிரொலிக்கிறது.''”

"அ.தி.மு.க.வை உடைக்க சதி நடப்பதாக அங்கே புகைகிறதே?''

11

"ஆமாங்க தலைவரே, அ.தி.மு.க.வில் எடப்பாடியிடம் இருக்கும் அதிகாரத்தைக் கைப்பற்றவேண்டும் அல்லது தன் ஆதரவாளர்களைத் திரட்டி கட்சியை உடைக்கவேண்டும் என்று மாஜி மந்திரியான வேலுமணி பரபரத்து வருகிறாராம். இந்த நிலையில், இவரது சகோதரர் அன்பரசன் இல்லத் திருமண விழா ஐந்து நாள் விழாவாக ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது. காரணம், அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மண விழாவிற்கு வரும் அ.தி.மு.க. பிரமுகர் களை, தனித்தனியே உபசரித்து, அவர்களை தன் வசப்படுத்துவதற்காகவே வேலுமணி இப்படி யொரு ஏற்பாட்டைச் செய்தாராம். அதேபோல் அனைவருக்கும் நேரடியாகவே சென்று அழைப்பையும் அவர் வைத்தாராம். மேலும் வேலுமணிக்கு ஆதரவாக ஈஷா மைய ஜக்கியும், பா.ஜ.க.வில் இருக்கும் பியூஷ்கோயலும், மாஜி மந்திரியான தங்கமணியும் கைகோத்துக்கொண்டு செயல்படுகிறார்களாம். இதையெல்லாம் கண்டு கொதித்துப்போன எடப்பாடி, வேலுமணியை அழைத்து, ’"நீ என்னவெல் லாம் செய்கிறாய் என்பது எனக்குத் தெரியும். நீ என்ன செய்தாலும் என்னை கவிழ்க்கவும் முடியாது, அ.தி.மு.க.வின் அதிகாரத்தைக் கைப்பற்றவும் முடியாது'’ என்று பகிரங்கமாகவே சவால்விட்டு எச்சரித்தா ராம். மேலும், "இனி வேலுமணியின் படத்தைப் போட்டு கட்சிக்காரர்கள் போஸ்டர் அடிக்கக்கூடாது' என்ற உத்தரவையும் எடப்பாடி பிறப்பித்திருக்கிறாராம். இந்த விவகாரம் அ.தி.மு.க.வில் பெரிதாகப் புகைகிறது.''”

"அ.தி.மு.க. மாஜி மந்திரி எம்.சி.சம்பத், எடப்பாடி மீது மனவருத்தத்தில் இருக்கிறாரே?''”

rr

"ஆமாங்க தலைவரே... கடலூர், பண்ருட்டி சட்டமன் றத் தொகுதிகளை உள்ளடக்கிய பகுதிக்கு, மாஜி மந்திரியான எம்.சி சம்பத் மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். இவருக்கும் பண்ருட்டி முன்னாள் எம்.எல். ஏ.வான சத்யா மற்றும் அவர் கணவரான பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலால், சம்பத்தை கடந்த தேர்தலில் சத்யா தரப்பு தோற்கடித்தது. இதைத் தொடர்ந்து, சம்பத் எழுப்பிய புகாரால், அ.தி.மு.க.விலிருந்து அப்போது சத்யா நீக்கப்பட்டார். அப்படிப்பட்டவரை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொண்டதாக எடப்பாடி தற்போது அறிவித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து தனது ஆதரவாளர்களைத் திரட்டிக்கொண்டு பேரணியாகச் சென்று, பண்ருட்டியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தார் சத்யா. இவரது ரீ என்ட்ரி, மாஜியான எம்.சி.சம்பத்தை அதிர வைத்திருக்கிறது. இதனால் எடப்பாடி மீது மனவருத்தத்தில் இருக்கும் அவர், அடுத்தமுறையும் தன்னை சத்யா தரப்பு கவிழ்த்தால் என்ன பண்ணு வது என்ற கவலையிலும் மூழ்கியிருக்கிறாராம். இது டெல்டா பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.''”

"பா.ஜ.க. அண்ணாமலை பலத்த அப்செட்டில் இருக்கிறாராமே?''”

’"அண்மையில் டெல்லி அவசரமாக அழைத்ததால், தனது ‘பிரச்சார யாத்திரையைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு டெல்லிக்குப் பறந்த அண்ணாமலையை, பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் சந்திக்க மறுத்துவிட்டார்களாம். காரணம், அ.தி.மு.க.வுடனான உறவை அண்ணாமலை முறித்ததில் அவர்களுக்கு உடன் பாடு இல்லையாம். மேலும், இப்படிப்பட்டவரை வைத்துக்கொண்டு எப்படி தமிழகத்தில் தேர்தலை தைரியமாக சந்திக்க முடியும்? என்று பா.ஜ.க.வின் தேசியத் தலைவரான நட்டாவிடம் அவர்கள் கடு மையாகக் கேட்டனராம். இதனால், அண்ணா மலையின் போக்கைக் கடுமையாகக் கண்டித்தாராம் நட்டா. இப்படி டெல்லியின் ஒட்டு மொத்த கோபத்தையும் சம்பாதித்த தில் அப்செட்டான அண்ணாமலை, சென்னை திரும்பியதும் உடல்நிலை சரியில்லை என்று படுத்துவிட்டா ராம்.''

"பா.ஜ.க.வின் கூட்டணியை அ.தி.மு.க. முறித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் அ.தி.மு.க. புள்ளிகள் சிலர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதா ராமனை சந்தித்திருக்கிறார்களே?''

"கோவை கொடீசியாவில் நடந்த நலத்திட்ட விழாவில் பங் கேற்க வந்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, அ.தி.மு.க. வைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களான பொள்ளாச்சி ஜெயராமன், அமுல் கந்தசாமி, ஏ.கே.செல்வராஜ் ஆகி யோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றதோடு அவரை சந்தித்துப்பேசினர். அப்போது "பா.ஜ.க.வுக் கும் அ.தி.மு.க.வுக்கும் இடையிலான கூட்டணி முறிவால், எங்கள் மீது அமலாக்கத்துறை நட வடிக்கை பாயுமா?' என்று கவலையோடு கேட்டார் களாம். அதற்கு நிர்மலா சீதாராமன், "அது குறித்து எங்கள் தேசியத் தலைமைதான் முடிவெடுக்கும். கூட்டணி குறித்து நீங்கள் எல்லாம் என்ன முடிவெடுத்திருக்கிறீர்கள்?' என்று திருப்பிக் கேட்டாராம். "கூட்டணி பற்றி எடப்பாடிதான் முடிவெடுக்கவேண்டும். எங்கள் கையில் எதுவும் இல்லை' என்றபடி அவர்கள் ஆதங்கத்தோடு விடைபெற்றார்களாம். இதற்கிடையே அமலாக் கத்துறை பழிவாங்கும் நோக்கில் செயல்படக் கூடாது என்று உச்சநீதிமன்றம் சொல்லியிருப்பதால், செந்தில்பாலாஜிக்கு விரைவில் ஜாமீன் கிடைக்கும் என்று கருதுகிறது தி.மு.க. தரப்பு.''”

"தி.மு.க.வில் ஒரு முக்கியமான மாற்றம் ஏற்பட்டிருக்கிறதே?''”

"தி.மு.க.வில், ஸ்டாலினின் மருமகன் சபரீச னின் ’பென்’ அமைப்புதான், பிரசாந்த் கிஷோரின் ’ஐபேக்கிற்குப் பிறகு அதன் தேர்தல் வியூகங்களை வகுத்துவந் தது. கட்சித் தலைமைக்காக அது பல்வேறு கருத்துக் கணிப்புகளை யும் நடத்தி, மக்களின் நாடித் துடிப்பையும் அது கவனித்தது. அதேபோல் சபரீசன், ஆட்சி நிர்வாகத்திலும் பார்வை செலுத்தி, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரி களின் செயல்பாட்டினையும் கவனித்து வந்தார். இந்த நிலையில், சபரீசனின் அனைத்து செயல்பாடுகளையும் ஸ்டா லின் குறைத்துவிட்டாராம். கடந்த ஒரு மாத காலமாக இளைஞரணி உதயநிதியின் அரசியல் வியூக அமைப்பாளராக செயல்படத் தொடங்கியிருக்கும் சுனிலின் கை, தற்போது தி.மு.க.விலும், அரசு நிர்வாகத்திலும் ஓங்கி வருகிறதாம்.''”

"தமிழகத்தில் சாதிவாரி கணக் கெடுப்பை நடத்தணும்னு பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுக்குதே?''”

"இங்கு மட்டுமில்லீங்க தலைவரே, சாதிவாரி கணக்கெடுப்புகளை நடத்த வேண்டும்; அதுதான் உண்மையான சமூக நீதி என்கிற குரல்கள் இந்தியா முழுவதும் எதிரொலித்துவரும் நிலையில், தங்கள் மாநிலத்தில் முதன்முதலாக சாதிவாரி கணக்கெடுப்பினை நடத்தி, கைத்தட்ட லைப் பெற்றுக்கொண்டிருக்கிறார் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார். இதற்கு இந்தியா முழுவதிலுமிருந்து அவருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. இந்தக் கணக்கெடுப்பை ஒன் றிய அரசுதான் எடுக்கவேண்டும் என்று சில மாநிலங்கள் சொல்லிவரும் நிலையில், இது மாநில அரசின் பணி என்று பிர கடனப்படுத்திவிட்டு, அந்தக் கணக்கெடுப் பை எடுத்துக்காட்டியிருக்கிறார் நிதிஷ். இதற்கிடையே, பீகாரைத் தொடர்ந்து ஒடிஷா, கர்நாடகா மாநிலங்களும் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்துள்ளன. இந்த விசயத்தில் பீகாரை முன்மாதிரியாகக் கொண்டு, தமிழகத்திலும் சாதிவாரி கணக் கெடுப்பை நடத்த முதல்வர் ஸ்டாலின் முன்வர வேண்டும் என இப்போது தி.மு.க.வின் தோழமைக்கட்சிகளும் வலியுறுத்தத் தொடங்கியுள்ளன.''”

"சுகாதாரத்துறையான மக்கள் நல்வாழ்வுத்துறையில் சலசலப்பு தெரியுதே?''”

"தற்போது தமிழகம் முழுக்க சுகாதாரத் துறையில் ஆர்.சி.ஹெச். எனப்படும் தூய்மை பணியாளர்கள் அண்மை யில் பணி நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள். பல மாவட் டங்களில் அவர்களது இருப்பிடத்தை விட்டு 100 கி.மீ.க்கும் அப்பால் அவர்களுக்கு பணி கொடுக்கப்பட்டுள்ளது. குறிப் பாக, ஈரோடு மாவட்டத்தில் புதிதாக போஸ்டிங் போடப் பட்ட 30 பேருக்கும் தொலைதூரப் பகுதிகளில் பணி வழங் கப்பட்டிருக்கிறது. இதனால் அவர்கள் எல்லா வகையிலும் படாதபாடுபட்டு வருகின்றனர். ஏற்கெனவே அவர்கள் பணி செய்த பகுதியிலேயே அவர்கள் நியமனம் செய்யப்படாததற்குக் காரணம், இப்படி தொலை தூரங்களுக்கு அலைக்கழித்தால்தான், இடம் மாறுதல் கேட்டு அவர்கள் லஞ்சம் கொடுக்க முன்வருவார்கள் என்று அதிகாரிகள் தரப்பு கணக்குப் போடுகிறதாம். ஒரு நபருக்கு ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்ச ரூபாய் வரை டிமாண்ட் வைக்கிறார் களாம். துறை அமைச்சர், லஞ்ச விவகாரம் தலையெடுக்கக்கூடாது என்று கடுமைகாட்டி வரும்போதும், பல மாவட்டங்களிலும் உள்ள சுகா தாரத்துறை மாவட்டத் துணைஇயக்கு னர்கள், இப்படி வசூல் வேட்டையில் இறங்கிவருகிறார்கள் என்கிற குற்றச்சாட்டுகள் பலமாக எழுந்துவருகின்றன.''”

"நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக் கறேன். தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரியை மாற்ற வேண்டும் என்று அக்கட்சியில் இருக் கும் சீனியர்கள் வரை கொடிபிடிக்கிறார்கள். அதனால் அடுத்து யாரை நியமிக்கலாம் என்ற ஆலோசனையில் ராகுல் ஈடுபட்டு வருகிறாராம். இந்த நிலையில், அந்தப் பதவியைத் தனக்கு வாங்கித்தரச் சொல்லி, ராகுலுக்கு நெருக்கமான கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபாலை, தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் அணுகியிருக்கிறாராம். பில்டிங் காண்ட்ராக்ட ரான இவர், அன்பளிப்புகளைக் கொடுத்து மேலிட நபர்களை வளைப்பதில் கில்லாடி என்கிறார்கள் கதர் சட்டைக்காரர்கள். அந்த வகையில் வேணுகோபாலுக்கு, அவரது மாநிலமான கேரளத்திலேயே ஒரு பங்களா கட்டித் தருவதாக டீலிங் பேசிவருகிறார் ரூபி என்கிற டாக்கும் அடிபடுகிறது.''

nkn071023
இதையும் படியுங்கள்
Subscribe