பா.ஜ.க.வுடனான கூட்டணியை அ.தி.மு.க. முறித்துக்கொண்டதில் அ.தி.மு.க.வில் உற்சாகம் கரைபுரண்டோடுகிறது. இந்த முடிவை தமிழகம் முழுதும் அ.தி.மு.க. கொண்டாடி வந்தாலும், கூட் டணி முறிந்ததற்குப் பிறகு பா.ஜ.க. தலைமை யையோ அல்லது அண்ணாமலை யையோ அ.தி.மு.க. தலைவர்கள் விமர்சிக்காமல் இருப்பதில்தான் எடப்பாடி மீது சந்தேகம் கொள்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். இந்த நிலையில், தேர்தலை எதிர்கொள் வதற்கான அடுத்தகட்ட மூவ்களில் இறங்கியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
மா.செ.க்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?
கூட்டணி குறித்து முடிவு எடுப்பதற்காக மா.செ.க் கள் கூட்டத்தை 25-ந் தேதி கூட்டியிருந்தார் எடப்பாடி பழனிச்சாமி. கூட்டம் மதியம் 3:45-க்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் மதியம் 2 மணியிலிருந்தே தலைமைக் கழகத்தில் கட்சி யினர் குவியத்தொடங்கினர். 3:30-க் கெல்லாம் முன்னாள் அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள், மா.செ.க்கள் எல்லோரும் வந்துவிட்டனர். எடப்பாடிக்காக காத்திருந்தனர். 4:15-க்கு வந்தார் எடப்பாடி. தனது அறைக்கு சென்றார். கூட்டத்தில் வாசிக்க வேண்டிய தீர்மானம் அவரிடம் இருந்தது. கே.பி.முனு சாமியை தனது அறைக்கு அழைத்த எடப்பாடி, அவர் வந்ததும் அவரிடம் தீர்மானத்தைக் கொடுத்து "சரியாக இருக்கிறதா?' என கவனிக்கச்சொன்னார். வாசித்துப் பார்த்து விட்டு,”"சரியாக இருக்கிறது; போதும்'’என்றிருக் கிறார் முனுசாமி. அதேபோல, சி.வி.சண்முகத்தை யும் அழைத்து தீர்மானத்தைக் காட்ட, அவரும், "சரியாக இருக்கிறது. நேரமாகிக் கொண்டிருக் கிறது. கூட்டத்துக்குப் போகலாமே'’என்று சொல்ல, கூட்ட அரங்கத்துக்குச் சென்றனர். அப்போது நேரம் 4:35.
கூட்டத்தை முறைப்படி துவக்கிய அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், இந்த கூட்டம் எந்த சூழலில் கூட்டப் பட்டுள்ளது என்பதைச் சுருக்கமாகச் சொன்னார். மேலும், கூட்டணி குறித்து முடிவு எடுக்கும் அதிகாரத்தை பொதுச்செயலாளருக்கு (எடப்பாடி) வழங்கும் முடிவை உசேன் சொன்னதை ஜெயக்குமார் வழிமொழிய, கைதட்டி வரவேற்றனர் மா.செ.க்கள்.
பிறகு, தயாரிக்கப்பட்டிருந்த தீர்மானத்தை வாசிக்கும்படி எஸ்.பி. வேலுமணியை கேட்டுக் கொண்டார் எடப்பாடி. தீர்மானத்தை வாசிக்கத் தொடங்குவதற்கு முன்னதாக,”"கட்சி எடுக்கும் எந்த முடிவுக்கும் கட்டுப்படு வேன். கட்சியின் விருப்பம்தான் என் விருப்பம்'’எனச் சொல்லி விட்டு, பா.ஜ.க.வுடனான கூட்டணியிலிருந்து விலகும் தீர்மானத்தை வாசித்தார் வேலுமணி. அதனை ஆதரிக்கும் வகையில்,”"என் விருப்பமும் இதுதான்'’என்பதை திரும்பத் திருப்ப 2, 3 முறை அழுத்தமாகச் சொன்னார்.
எடப்பாடி மைக் பிடித்தப
பா.ஜ.க.வுடனான கூட்டணியை அ.தி.மு.க. முறித்துக்கொண்டதில் அ.தி.மு.க.வில் உற்சாகம் கரைபுரண்டோடுகிறது. இந்த முடிவை தமிழகம் முழுதும் அ.தி.மு.க. கொண்டாடி வந்தாலும், கூட் டணி முறிந்ததற்குப் பிறகு பா.ஜ.க. தலைமை யையோ அல்லது அண்ணாமலை யையோ அ.தி.மு.க. தலைவர்கள் விமர்சிக்காமல் இருப்பதில்தான் எடப்பாடி மீது சந்தேகம் கொள்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். இந்த நிலையில், தேர்தலை எதிர்கொள் வதற்கான அடுத்தகட்ட மூவ்களில் இறங்கியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
மா.செ.க்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?
கூட்டணி குறித்து முடிவு எடுப்பதற்காக மா.செ.க் கள் கூட்டத்தை 25-ந் தேதி கூட்டியிருந்தார் எடப்பாடி பழனிச்சாமி. கூட்டம் மதியம் 3:45-க்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் மதியம் 2 மணியிலிருந்தே தலைமைக் கழகத்தில் கட்சி யினர் குவியத்தொடங்கினர். 3:30-க் கெல்லாம் முன்னாள் அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள், மா.செ.க்கள் எல்லோரும் வந்துவிட்டனர். எடப்பாடிக்காக காத்திருந்தனர். 4:15-க்கு வந்தார் எடப்பாடி. தனது அறைக்கு சென்றார். கூட்டத்தில் வாசிக்க வேண்டிய தீர்மானம் அவரிடம் இருந்தது. கே.பி.முனு சாமியை தனது அறைக்கு அழைத்த எடப்பாடி, அவர் வந்ததும் அவரிடம் தீர்மானத்தைக் கொடுத்து "சரியாக இருக்கிறதா?' என கவனிக்கச்சொன்னார். வாசித்துப் பார்த்து விட்டு,”"சரியாக இருக்கிறது; போதும்'’என்றிருக் கிறார் முனுசாமி. அதேபோல, சி.வி.சண்முகத்தை யும் அழைத்து தீர்மானத்தைக் காட்ட, அவரும், "சரியாக இருக்கிறது. நேரமாகிக் கொண்டிருக் கிறது. கூட்டத்துக்குப் போகலாமே'’என்று சொல்ல, கூட்ட அரங்கத்துக்குச் சென்றனர். அப்போது நேரம் 4:35.
கூட்டத்தை முறைப்படி துவக்கிய அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், இந்த கூட்டம் எந்த சூழலில் கூட்டப் பட்டுள்ளது என்பதைச் சுருக்கமாகச் சொன்னார். மேலும், கூட்டணி குறித்து முடிவு எடுக்கும் அதிகாரத்தை பொதுச்செயலாளருக்கு (எடப்பாடி) வழங்கும் முடிவை உசேன் சொன்னதை ஜெயக்குமார் வழிமொழிய, கைதட்டி வரவேற்றனர் மா.செ.க்கள்.
பிறகு, தயாரிக்கப்பட்டிருந்த தீர்மானத்தை வாசிக்கும்படி எஸ்.பி. வேலுமணியை கேட்டுக் கொண்டார் எடப்பாடி. தீர்மானத்தை வாசிக்கத் தொடங்குவதற்கு முன்னதாக,”"கட்சி எடுக்கும் எந்த முடிவுக்கும் கட்டுப்படு வேன். கட்சியின் விருப்பம்தான் என் விருப்பம்'’எனச் சொல்லி விட்டு, பா.ஜ.க.வுடனான கூட்டணியிலிருந்து விலகும் தீர்மானத்தை வாசித்தார் வேலுமணி. அதனை ஆதரிக்கும் வகையில்,”"என் விருப்பமும் இதுதான்'’என்பதை திரும்பத் திருப்ப 2, 3 முறை அழுத்தமாகச் சொன்னார்.
எடப்பாடி மைக் பிடித்தபோது, என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு கூட்டத்தில் இருந்தது. அதாவது, "டெல்லியில் அமித்ஷாவுட னான சந்திப்பில் நடந்தது பற்றி எதையும் அவர் வெளிப்படுத்தவில்லை; கலந்தாலோசிக்கவும் இல்லை. அதனால், இந்த கூட்டத்தில் அதனை விவரிப்பார்' என எதிர்பார்த்தனர். அதைப்பற்றி எதையும் பேசாத எடப்பாடி பழனிச்சாமி, "இப்படி ஒரு முடிவை எடுத்ததற்காக எந்த விலையையும் கொடுக்க நாம் தயாராக இருக்கிறோம். மிரட்டியெல்லாம் நம்மை பணியவைக்க முடியாது. அவர்களுடன் கூட்டணி யில் இருந்ததால்தான் அ.தி.மு.க.வின் சொத்தான சிறுபான்மையின மக்களின் ஆதரவை நாம் இழந்தோம். இனி அந்த ஆதரவு நமக்கு கிடைக்கும். இதனை அந்த மக்களிடம் எடுத்துச் செல்லுங்கள்''’என்று சுருக்கமாக பேசி முடித்தார்.
அவர் பேசும்போது "பா.ஜ.க., மோடி, அண்ணாமலை ஆகிய வார்த்தைகளை உச்சரிக்க வில்லை. எடப்பாடி பேசி முடித்தும், "முடிவை பத்திரிகையாளர்களிடம் முறைப்படி தெரிவித்து விடுங்கள்' என்று கே.பி.முனுசாமியை எடப்பாடி கேட்டுக்கொள்ள, வெளியே வந்தார் முனுசாமி. அவருடன் வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட மாஜிக்களும் வந்தனர். கூட்டணி முறிவை முறைப்படி அறிவித்தார் கே.பி.முனுசாமி.
எடப்பாடியிடம் எகிறிய மா.செ.!
கூட்டணி முறிவை முறைப்படி அறிவித்த பிறகு, மா.செ.க்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, "உள்ளாட்சித் தேர்தலின்போது அவர் களுடன் (பா.ஜ.க.) நடந்த பேச்சுவார்த்தையில், தகுதிக்கு மீறி ஆசைப்பட்டார்கள். அதை நாம் எடுத்துச் சொன்னோம். நன்றி சொல்லி கூட்டணி யை முறித்துக்கொண்டு போனார்கள். இப்போதும் கூட தகுதிக்கு மீறி சீட்டுகள் கேட்கிறார்கள். என்ன செய்வது?'' என்றவர், "தேர்தலை பலமாக எதிர்கொள்ள வேண்டும். ஆனால், பூத் கமிட்டிகளை அமைக்கச் சொல்லி தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டிருந்தும் பல தொகுதிகளில் பூத் கமிட்டி அமைக்கவில்லை. எனக்கு வருத்தமாக இருக்கிறது. சென்னையில் சுத்தமாக சுணங்கிப் போயிருக்கிறீர்கள்'' என்று சொல்ல... ஒரு மா.செ. எழுந்து வந்து எடப்பாடியின் முகத்துக்கு நேராக கையை நீட்டி, "சென்னையை குற்றம் சொல்லாதீர்கள். உங்கள் சேலம் மாவட்டத்திலும் அப்படித்தான் இருக்கிறது. பூத் கமிட்டியில் உள்ளவர்கள் ஒவ்வொருவரும் தினமும் 1000 ரூபாய் கேட்கிறார்கள். எங்கே போவது? நீங்கள் கொடுத்து உதவுங்கள். இந்த முறை தேர்தல் செலவுகளை கட்சி தலைமைதான் பார்த்துக்கொள்ள வேண்டும்'' என்றெல்லாம் எகிறியிருக்கிறார். அதில் அதிர்ச்சி யடைந்த எடப்பாடி, "நாம் ஆட்சியில் இருக்கும் போது டாஸ்மாக் பார்களை உங்களிடமே விட்டுவிட்டேன். கட்சிக்காரர்களுக்கு கொடுத்து நீங்கள் அதை நடத்தாமல் தி.மு.க.வினரிடம் விற்றுவிட்டீர்கள். இப்போது புலம்பினால் எப்படி?'' என்று குற்றம்சாட்டினார். ஆக, கட்சித் தலைமையிடமிருந்து காசு பெயர்ந்தால் மட்டுமே தேர்தல் வேலைகளை செய்ய தயாராக இருக்கிறார்கள் மா.செ.க்கள்.
எடப்பாடியை எதிர்க்கும் மாஜிக்கள்!
அ.தி.மு.க.வில் பா.ஜ.க. ஆதரவு, எதிர்ப்பு என இரு அணிகள் இருக்கிறது. பா.ஜ.க.வுக்கு எதிராக பெரும்பான்மை மாஜிக்கள் அரசியல் செய்தாலும் தங்கமணி, வேலுமணி, புதுக்கோட்டை விஜயபாஸ் கர், ராஜேந்திரபாலாஜி உள்ளிட்ட வழக்குகளை எதிர்கொள்ளும் மாஜிக்கள் பலரும் பா.ஜ.க.வுடன் கூட்டணி தொடர வேண்டும் என்கிற மனநிலையில் இயங்கி வருபவர்கள். இதில் தங்கமணி, வேலுமணி, விஜயபாஸ்கர் மூவரும் பா.ஜ.க. தலைமையுடன் நெருக்கமாக இருந்து வருபவர்கள். கூட்டணி முறிவை எடுப்பதற்கு முதல்நாள் வரை தங்கமணி யும் வேலுமணியும், "தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. அவசரம் காட்ட வேண் டாமே' என எடப்பாடியிடம் வலியுறுத்தியபடியே இருந்தனர். அதை எடப்பாடி ஏற்கவில்லை. அதனால், "எல்லோருடைய ஆதரவும் கூட்டணி முறிவை நோக்கியே இருப்பதால் நாமும் அதில் முரண்பட வேண்டாம். முறிவை ஆதரிப்போம்' என தங்கமணியிடம் வேலுமணி தெரிவித்திருக் கிறார். அதேசமயம் இருவரும் இணைந்து "பா.ஜ.க. தலைமையிடம், கூட்டணியை முறிக்கும் முடிவை எடப்பாடி எடுத்துவிட்டார். மா.செ.க்கள் கூட்டத்தில் அதற்கான தீர்மானம் நிறைவேறப் போகிறது. நாங்கள் என்ன செய்யட்டும்?' என 25-ந் தேதி காலையில் தெரிவித்திருக்கிறார்கள். அதற்கு பா.ஜ.க. தலைமை, "என்ன முடிவாக இருந்தாலும் அதை ஆதரியுங்கள்; முரண்பட வேண்டாம்' என்று அறிவுறுத்தியுள்ளனர். அதன்படியே இருவரும் தீர்மானத்தை ஆதரித்திருக்கிறார்கள். கூட்டணி குறித்த முடிவை அறிவித்தபோதும், ஆதரித்த போதும் இறுக்கமாகவே வேலுமணியும், தங்கமணியும் இருந்தனர். கூட்டம் நடந்து முடிந்த 25-ந் தேதி இரவு, தங்கமணியையும் வேலுமணி யையும் தொடர்புகொண்டு அவரது ஆதரவாளர் கள் பேசியிருக்கிறார்கள். அப்போது, "பொறுமை யாக இருங்கள். முடிவு நிரந்தரமா? என தெரியாது. இப்போதைக்கு பா.ஜ.க.வுக்கு எதிராக எந்த ரியாக்ஷனையும் காட்டிக்க வேண்டாம். எதுவாக இருந்தாலும் நாங்கள் சொல்கிறோம்' என்று அட்வைஸ் செய்துள்ளனர்.
அமித்ஷாவின் பலே திட்டம்!
"கூட்டணி முறிவை நோக்கி எடப்பாடியை தள்ளியவர் அமித்ஷா. இதற்கு காரணம் அமித்ஷா வுக்கு கிடைத்த ஒரு சர்வே ரிப்போர்ட்தான்' என்கிறார்கள் பா.ஜ.க.வின் மேலிட தொடர்பாளர் கள். அவர்களிடம் நாம் பேசியபோது, "அ.தி.மு.க. வுடனான கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு பலன் கொடுக்குமா? என்று பொலிட் டிக்கல் இண்டலெக்சுவல்ஸ்களை வைத்து ஒரு சர்வே எடுத்திருக்கிறார் அமித்ஷா. சர்வே முடிவுகளின் அடிப்படையில் சில புள்ளிவிபரங் களைத் தந்துள்ளனர். அதில், பா.ம.க., தே.மு.தி.க., ஓ.பி.எஸ்., தினகரன் உள்ளிட்ட அனைவரையும் வெறுக்கிறார் எடப்பாடி. அவர் விரும்பும் கட்சிகள் மட்டுமே கூட்டணிக்குள் இருக்க வேண்டும் என திட்டமிடுகிறார் அந்த வகையில் அ.தி.மு.க. வுடனான கூட்டணி பா.ஜ.க.வுக்கு வெற்றியைத் தராது. அதனால் தமிழகம் முழுவதும் பரவலாக பா.ஜ.க. போட்டியிடுகிற மாதிரி அதிக எண்ணிக்கையில் நிற்க வேண்டும். தமிழகத்தில் வாக்கு வங்கி வைத்துள்ள சமூக ரீதியிலான கட்சி களை கூட்டணிக்குள் இணைக்க வேண்டும். அது நடந்தால், பா.ஜ.க.வின் வாக்கு சதவீதம் 10 சதவீதத்தை தாண்டும். அது 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பா.ஜ.க.வுக்கு வலிமையை கொடுக்கும்,
மேலும், 2014 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. தலைமையில் கூட்டணி அமைந்தது. அதில் பா.ம.க., ம.தி.மு.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் இருந்தன. அப்போது பா.ஜ.க. கூட்டணி 18 சதவீத வாக்குகளை பெற்றதுடன் கன்னியகுமாரி மற்றும் தர்மபுரி ஆகிய 2 தொகுதி களையும் ஜெயித்தது. இத்தனைக்கும் கலைஞர், ஜெயலலிதா எனும் இரண்டு பெரிய ஆளுமைகள் இருந்தபோதே 18 சதவீத வாக்குகள் பெற்றது பா.ஜ.க. கூட்டணி. அந்த 18 சதவீதமும் மோடி பிரதமராக வேண்டும் என்கிற வாக்குகள். கலைஞர், ஜெயலலிதா இல்லாத நிலையில் 2019-ல் அ.தி. மு.க.வுடன் கூட்டணி வைக்கிறது பா.ஜ.க. இதில் ம.தி.மு.க.வை தவிர மற்ற கட்சிகள் அப்படியே இருக்கின்றன. இந்த தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி 30 சதவீத வாக்குகளை பெறுகிறது. ஆக, 12 சதவீத வாக்குகள்தான் கூடுதலாக கிடைத்துள் ளது. ம.தி.மு.க. இல்லையென்பதால் 2 சதவீத வாக்குகளை 18 சதவீதத்தில் குறைத்துக்கொண்டு அதனை அ.தி.மு.க.வுடன் இணைத்தால் 14 சதவீத வாக்குகள்தான் 2019-ல் கூடுதலாக கூட்டணி பெற் றுள்ளது. அந்த வகையில், 2019-ல் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணிக்கு கிடைத்த 30 சதவீதத்தில் அ.தி.மு.க. வின் வாக்கு பலம் 14 சதவீதம் மட்டுமே. மீதமுள்ள 16 சதவீதமும் ப்ரோ மோடிக்கு விழுந்த வாக்குகள். அப்படியிருக்கையில் அ.தி.மு.க. கூட்டணியில் வெறும் 5 சீட்டு, 8 சீட்டுன்னு பா.ஜ.க. நிற்பதில் அரசியல் இல்லை. அர்த்தமும் இல்லை. இதையும் தாண்டி, அ.தி.மு.க.வுக்கு பக்கபலமாக இருந்த முக் குலத்தோர் வாக்குகளை சசிகலா, ஓ.பி.எஸ்., தினகரன் ஆகியோரை இணைக்காததால் அ.தி.மு.க. இழக் கிறது. அதையும் கணக்கிட்டால் 14 சதவீதம் என்பது மேலும் குறைகிறது. அதனால், அ.தி.மு.க.வுக்கு 12 சீட்டுகளும், பா.ஜ.க. மற்றும் பா.ஜ.க. சேர்க்க நினைக்கும் கட்சிகளுக்கும் இணைந்து 28 சீட்டுகளும் கேட்டுப் பெறுவதே சிறந்தது. அந்த வகையில் இரட்டை இலக்கத்தில் பா.ஜ.க. போட்டியிட வேண்டும். இது நடந்தால் பா.ஜ.க.வின் எதிர்காலத்துக்கு நல்லது. இது நடக்காத பட்சத்தில் பா.ம.க., தே.மு.தி.க., தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம், அ.ம.மு.க. (தினகரன்), ஓ.பி.எஸ். உள்ளிட்ட ஒத்த சிந்தனையுள்ளவர்களை இணைத்து பா.ஜ.க. தலைமையில் கூட்டணி உருவானால் 22 சதவீத வாக்குகளை பெறுவதுடன் பா.ஜ.க. கூட்டணி 6 தொகுதிகளில் வெற்றி பெறவும் வாய்ப்பு இருக்கிறது. 10 தொகுதிகளில் இரண்டாவது இடத்தை பிடிக்கும். அ.தி.மு.க.வை பல இடங்களில் 3-வது இடத்துக்கு தள்ளமுடியும் என அந்த சர்வே ரிப்போர்ட் சொல்லியிருக்கிறது. இதனடிப்படையில்தான் எடப்பாடியுடன் சீட்டுகளின் எண்ணிக்கையை பேசினார் அமித்ஷா. ஆனால், அதை ஏற்காமல் கூட்டணியை முறித்துக்கொண்டிருக்கிறார்கள். தேர்தல் நெருங்கும் சமயத்தில் இந்த முடிவுக்காக எடப்பாடி வருந்துவார்''’என்கிறார்கள் பா.ஜ.க.வின் மேலிட தொடர்பாளர்கள்.
எடப்பாடியின் அடுத்த மூவ்!
பாஜ.க.வுடன் கூட்டணியை வெளிப்படை யாக முறித்து கொண்டாலும், கட்சியினரின் விருப்பத்துக்காக எடுக்கப்பட்ட முடிவு இது. கோபம் கொள்ள வேண்டாம். தேர்தலுக்கு பிறகும் எங்களின் ஆதரவு பா.ஜ.க.வுக்குதான் என்கிற மெசேஜை டெல்லிக்கு அனுப்பியிருக்கிறார். அதனை அனுப்பி வைத்த கையோடு, கட்சியில் புதிய மா.செ.க்களையும் மாநில நிர்வாகிகளையும் நியமித்து வருகிறார் எடப்பாடி. வன்னியர் சமூகம் அடர்த்தியாக நிறைந்த வடமாவட்டங்களை உடைத்து மாற்று சமுகத்தினருக்கு மா.செ. வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்ட அ.தி.மு.க.வில் 2 மா.செ.க்கள் இருந்தனர். இதனை 5 மாவட்டமாக உடைத்து வன்னியர் சமூகத்துக்கு 2 மா.செ.க்களும், முதலியார் சமூகத்துக்கு 3 மா.செ.க்களும் கொடுத்துள்ளார். இதனால் அ.தி.மு.க.விலுள்ள வன்னியர் சமூகம் எடப்பாடிக்கு எதிராக கொந்தளிக்கிறது. தேர்தலுக்காக மாவட்டங்களை உடைத்து மா.செ.க்களை உருவாக்கும் எடப்பாடியின் இந்த அரசியல் மூவ் பரவலாக அதிர்ப்தியை உருவாக்கி வருகிறது என்கிறார் அ.தி.மு.க. சீனியர்கள்.
இதற்கிடையே, அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி முறிவு தங்களுக்கே சாதகம் என்று பாஜக தலை மையும், இந்த கூட்டணி முறிவு சந்தர்ப்பவாதம் என்பதால் சிறுபான்மையின சமூக வாக்குகள் தங்கள் கூட்டணியை விட்டு எங்கும் செல்லாது ; 40-க்கு 40 இடங்களையும் நாங்கள்தான் வெல்வோம் என்று தி.மு.க. தலைமையும் நம்பிக்கை கொண்டு அரசியல் சதுரங்கத்தை ஆடத் துவங்கியுள்ளன.