ஆபாச குற்றச்சாட்டுகள்! -திருச்சி பெரியார் கல்லூரி களேபரம்!

ss

"கல்லூரி நேரமான காலை 9.30 மணியிலிருந்து மதியம் 2.30 மணிவரை மட்டுமே பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கல்லூரிக்குள் இருக்கவேண்டும். அதற்குமேல் பணியாற்ற விரும்பினால், அந்தந்த துறைத் தலைவர்களிடம் உரிய அனுமதி பெறவேண்டும்' ’

gg

-இப்படி ஒரு சுற்றறிக்கையை திருச்சி தந்தை பெரியார் கல்லூரியின் பொறுப்பு முதல்வரும் தமிழ்த்துறைத் தலைவருமான வாசுதேவன் கடந்த 9ஆம் தேதி அனுப்ப, "என்னய்யா அது... கல்லூரிக்குள் இருக்க பேராசிரியர்களுக்கே கெடுபிடியா?'’என்கிற விமர்சனங்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

எதனால் இப்படி ஒரு சுற்றறிக்கை என விசாரித்தபோது...

"கல்லூரிக்குள்ளேயே ஆபாசக் கூத்தடிப்பு கள், சாதி ரீதியான பிரச்சினைன்னு, இந்த பெரியார் கல்லூரி பேரையே கெடுக்குறாங்க. அதனால்தான் பிரின்ஸிபல் இப்படி ஒரு சுற்றறிக்கையை ரிலீஸ் செய்திருக் கிறார்''’என்றார்கள், நாம் சந்தித்த சில மாணவர்கள்.

நம்மிடம் இது தொடர்பாகப் பேசிய ஒரு பேராசிரியர், "இந்த கல்லூரியில் ரெண்டு வருசத்துக்கு முன் ஆங்கிலத்துறையின் தலைவ ராக இருந்த ஜெயகுமார

"கல்லூரி நேரமான காலை 9.30 மணியிலிருந்து மதியம் 2.30 மணிவரை மட்டுமே பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கல்லூரிக்குள் இருக்கவேண்டும். அதற்குமேல் பணியாற்ற விரும்பினால், அந்தந்த துறைத் தலைவர்களிடம் உரிய அனுமதி பெறவேண்டும்' ’

gg

-இப்படி ஒரு சுற்றறிக்கையை திருச்சி தந்தை பெரியார் கல்லூரியின் பொறுப்பு முதல்வரும் தமிழ்த்துறைத் தலைவருமான வாசுதேவன் கடந்த 9ஆம் தேதி அனுப்ப, "என்னய்யா அது... கல்லூரிக்குள் இருக்க பேராசிரியர்களுக்கே கெடுபிடியா?'’என்கிற விமர்சனங்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

எதனால் இப்படி ஒரு சுற்றறிக்கை என விசாரித்தபோது...

"கல்லூரிக்குள்ளேயே ஆபாசக் கூத்தடிப்பு கள், சாதி ரீதியான பிரச்சினைன்னு, இந்த பெரியார் கல்லூரி பேரையே கெடுக்குறாங்க. அதனால்தான் பிரின்ஸிபல் இப்படி ஒரு சுற்றறிக்கையை ரிலீஸ் செய்திருக் கிறார்''’என்றார்கள், நாம் சந்தித்த சில மாணவர்கள்.

நம்மிடம் இது தொடர்பாகப் பேசிய ஒரு பேராசிரியர், "இந்த கல்லூரியில் ரெண்டு வருசத்துக்கு முன் ஆங்கிலத்துறையின் தலைவ ராக இருந்த ஜெயகுமார், தன்னிடம் டாக்டர் பட்டம் பயிலும் மாணவி ஒருவரை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக முதல்வரின் தனிப் பிரிவுக்கு புகார் மனு போயிருக்கு. அந்த மனுவை விசாரித்த குழுவின் அறிக்கையின் படி, துறைத்தலை வர் ஜெயகுமார், இங்கிருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் இப்ப பேராசிரியர்கள் மத்தியில் தவறான உறவுகள் இருப்பதாகப் புகார்கள் கிளம்பி இருக்கு. அதனால்தான், கல்லூரி முடிஞ்சா எல்லோரும் இடத்தைக் காலி பண்ணுங்கன்னு சொல்ற மாதிரி, சுற்றறிக்கையை அனுப்பியிருக்கார் பிரின்சிபல்''’என்றார் கிசுகிசுப் பாய்.

இப்போதைய பிரச்சினை என்ன? என அவரிடம் விடாமல் நாம் துருவியபோது...”

ss

"சொல்றேன் சார், இங்க வரலாற்றுத் துறையில் பணியாற்றும் பேராசிரியர் சேவியர் என்பவரும், அதே துறையில் பணியாற்றும் கல்பனாதேவி என்பவரும் இங்கிருக்கும் வரலாற்று துறைக்கான ஆசிரியர்கள் அறையில் எல்லை மீறி நடக்கறாங்களாம். இதை எதிர்பாராதவிதமாக வரலாற்றுத் துறையின் தலைவர் ஜெயகுமார் நேரில் பார்த்து, அவர்களைக் கடுமையாகக் கண்டிச்சிருக் கார். இதேபோல் அந்த பேராசிரியர் சேவியரும், முனைவர் பட்டத்திற்கு பயின்றுவரும் மாணவி ஒருவரும் தனிமையில் இருந்ததோடு, ஒருவருக்கு ஒருவர் உணவினை ஊட்டிவிட்டுக் கொண்டும், நெருக்கமாக இருந்தாங்களாம். இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் பலவும் வந்துக்கிட்டே இருந்த தால், இப்படியொரு சுற்றறிக்கை'' என்றார்.

நாம் புகாரில் சிக்கிய பேராசிரியர் சேவியரை தொடர்புகொண்டு விசாரித்தபோது...

"யாரே ஒரு சில பேராசியர்கள் மீதான காழ்ப்புணர்ச்சியில்தான் பிரின்சிபல், இதுபோன்ற சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார். என் மீது தேவையில்லாத புகாரை சிலர் எழுப்பியிருக் கிறார்கள். இந்த விவகாரத்தில் ஒரு பெண் பேராசிரியரைத் தொடர்புபடுத்துவது அவருடைய பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்''’என்றார் காட்டமாய்.

"உங்கள் மோசமான நடவடிக்கையால், உங்கள் மனைவியே கல்லூரிக்கு வந்து உங்களிடம் சண்டை போட்டார் என்கிறார்களே...?'' என நாம் கேள்விப்பட்ட விவகாரம் குறித்தும் அவரிடமே கேட்டோம்.

இதற்கு சேவியர், "அதற்குக் காரணம் என்னுடைய நண்பனான செல்வநாதன். அவர்தான் இந்தப் பிரச்சனையை என் மனைவியிடம் கூறியிருக்கிறார். என்னிடம் சண்டை போட்ட என் மனைவி, அன்பிறகு உண்மையை அறிந்து அமைதியாகிவிட்டார்''’என்றார் கூலாய்.

இவர் முசிறியில் பணியாற்றியபோது, தன்னிடம் பயின்ற மாணவியை பாலியல் ரீதியாக அணுகி, கடைசியில் அவரையே திருமணம் செய்துகொண்டதாகவும் சிலர் கூற, இது குறித்தும் அவரிடமே கேட்டோம். சேவியரோ, "இதெல்லாம் பழைய விஷயம். அதை எதற்கு இப்போது பேச வேண்டும்?'' என்று முடித் துக்கொண்டார்.

ss

இந்த சேவியர்- கமலா தேவி விவகாரம் குறித்து துறை தலைவர் ஜெயகுமா ரிடம், நாம் விசாரித்த போது... "அது அவர்களுடைய தனிப் பட்ட விஷயம். அதில் நான் தலையிட விரும்பவில்லை. ஆனால் இதுபோன்ற புகார்கள் வந்ததால், அவர் கள் மீது விசாரணை நடத்தப்பட்டு வரு கிறது. ஏற்கனவே இருந்த பிரின்ஸிபலால் கண்டிக்கப்பட்டும் கூட, மீண்டும் மீண்டும் இதுபோன்ற விஷயங்கள் நடைபெறுவது துரதிர்ஷ்டவசமானது'' என்றார் எரிச்சலாக.

பேராசிரியர் கல்பனா தேவியை நாம் தொடர்புகொண்டபோது, "பேராசிரியர் சேவியர் எனக்கு ஒரு நல்ல குடும்ப நண்பர். அவருடைய வீட்டில் உள்ள அனைவரையும் எனக்கு நன்றாகத் தெரியும். எனக்கும் அவருக்கும் கொள்கைரீதியான நட்பு அதிகம். ஆனால் அதை எங்களுடைய துறை தலைவர் தவறுதலாக திரித்து, இப்படிப்பட்ட பிரச்சனையை கொண்டுவருகிறார். வரலாற்றுத்துறை தலைவருக்கும், சேவியருக்குமான பிரச்சினையில் என்னை உள்ளே நுழைத்து என்னுடைய பெயருக்குக் களங்கம் விளைவிக்கிறார். அதற்குக் காரணம் நான் இந்து பறையர் என்ப தாலும், சேவியர் பறையராகவும், கிறிஸ்தவராகவும் இருப்பதாலும் எங்களைப் பழி வாங்குகிறார். இந்த பிரச்சினையால், எங்களுடைய துறையில் என்னுடைய வகுப்பில் பல்கலைக்கழக அளவில் சிறப்பாக பயிலும் மாணவர்கள் 5 பேரை, துறைத் தலைவர் திட்டமிட்டு தேர்வில் பெயிலாக்கி யிருக்கிறார். நான் இது தொடர்பாக உயர்கல்வி துறை இயக்குநருக்கும், முதல்வருக்கும், மனு அனுப்பியுள்ளேன்''’என்றார்.

கல்வி கற்பிக்கும் கல்லூரியில் ஆபாசக் கூத்தடிப்புகள், தப்புத்தாள உறவுகள், சாதி -மத சச்சரவுகள் என்று ஏகத்துக்கும் ஒழுங்கீனங்கள் கோலோச்சுவது சரிதானா? அதிலும் பெரியார் பெயரிலான கல்லூரியிலேயே இப்படியா?

nkn170824
இதையும் படியுங்கள்
Subscribe