"ஹலோ தலைவரே, சட்ட மன்றத்தில் தி.மு.க. அரசுக்குக் குடைச்சல் கொடுக்க, எதிர்க்கட்சி யான அதி.மு.க ரெடியாகுது.''’
"ஆமாம்பா, 6-ந் தேதி சட்ட மன்றம் கூடுவதால், அந்தப்பக்கம் பரபரப்பான வியூகங்கள் ஆரம்பிச்சிருக்கு.''
"உண்மைதாங்க தலைவரே, சட்ட மன்றக் கூட்டம் வரும் மே 10-ஆம் தேதிவரை நடக்க இருக்குது. இதில், துறைவாரியான மானியக் கோரிக் கைகள் நிறை வேற்றப்பட உள்ளன. இந்தக் கூட்டத்தொடரில் ஏகப்பட்ட கேள்விகளை வைத்து கலகக் குரல் எழுப்ப அ.தி.மு.க. திட்டமிட்டிருக்கு. குறிப்பா, பிரதமரை டெல்லியில் சந்தித்த முதல்வர் நீட் தேர்வை விலக்க, உத்தர வாதம் வாங்கி வந்தாரா? வரி இல்லாத பட்ஜெட் என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் தி.மு.க. அரசு, இரவோடு இரவாக சொத்து வரியை கிடுகிடுவென உயர்த்தியது ஏன்? என்றெல்லாம் குரல் எழுப்புவதோடு, வன்னியர் சமூகத்துக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டுச் சட்டம் ரத்தானதற்கு தி.மு.க. அரசே காரணம் என்றும் குற்றச் சாட்டை வைக்கப் போறாங்களாம். பா.ம.க. தரப்பும் தங்கள் உள் இட ஒதுக்கீடு பற்றி வலியுறுத்தத் தயாராகுது.''
"இதுக்காகத்தான் பா.ம.க. எம்.பி. அன்புமணி, முதல் வரை சந்திக்க அப்பாயின்ட்மெண்ட் கேட்டிருக்கிறாரா?''
"ஆமாங்க தலைவரே, இந்த சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பின ரின் சமூக நிலையை அறியவும், வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கவும் புதிதாக ஆணையம் அமைக்கணும்னு பா.ம.க. தரப்பில் வலியுறுத்த இருக்கிறார்கள். இதற்கிடையே, இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் தங்கள் கட்சியின் மனநிலை குறித்து விளக்கவும், மருத்துவர் ராமதாஸின் விருப்பங் கள் குறித்து விவரிப்பதோடு, இந்த இட ஒதுக்கீட்டு விவகா ரத்தில் சட்ட ரீதியாக அடுத்து என்ன செய்யலாம் என்று கலந்து ஆலோசிக்கவும், முதல் வரை சந்திக்க விரும்பு கிறாராம் அன்பு மணி. அதற்காகத் தான் அவர் முதல் வரிடம் அப்பா யின்ட்மெண்ட்டைக் கேட்டிருக்கிறார்.''
"இந்தக் கூட்டத் தொடரில் புதிய மாவட்டம் ஒன்றின் உதயம் பற்றிய அறிவிப்பும் வரப் போகுதே?''
"ஆமாங்க தலைவரே, கோவை, திருப்பூர்,
"ஹலோ தலைவரே, சட்ட மன்றத்தில் தி.மு.க. அரசுக்குக் குடைச்சல் கொடுக்க, எதிர்க்கட்சி யான அதி.மு.க ரெடியாகுது.''’
"ஆமாம்பா, 6-ந் தேதி சட்ட மன்றம் கூடுவதால், அந்தப்பக்கம் பரபரப்பான வியூகங்கள் ஆரம்பிச்சிருக்கு.''
"உண்மைதாங்க தலைவரே, சட்ட மன்றக் கூட்டம் வரும் மே 10-ஆம் தேதிவரை நடக்க இருக்குது. இதில், துறைவாரியான மானியக் கோரிக் கைகள் நிறை வேற்றப்பட உள்ளன. இந்தக் கூட்டத்தொடரில் ஏகப்பட்ட கேள்விகளை வைத்து கலகக் குரல் எழுப்ப அ.தி.மு.க. திட்டமிட்டிருக்கு. குறிப்பா, பிரதமரை டெல்லியில் சந்தித்த முதல்வர் நீட் தேர்வை விலக்க, உத்தர வாதம் வாங்கி வந்தாரா? வரி இல்லாத பட்ஜெட் என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் தி.மு.க. அரசு, இரவோடு இரவாக சொத்து வரியை கிடுகிடுவென உயர்த்தியது ஏன்? என்றெல்லாம் குரல் எழுப்புவதோடு, வன்னியர் சமூகத்துக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டுச் சட்டம் ரத்தானதற்கு தி.மு.க. அரசே காரணம் என்றும் குற்றச் சாட்டை வைக்கப் போறாங்களாம். பா.ம.க. தரப்பும் தங்கள் உள் இட ஒதுக்கீடு பற்றி வலியுறுத்தத் தயாராகுது.''
"இதுக்காகத்தான் பா.ம.க. எம்.பி. அன்புமணி, முதல் வரை சந்திக்க அப்பாயின்ட்மெண்ட் கேட்டிருக்கிறாரா?''
"ஆமாங்க தலைவரே, இந்த சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பின ரின் சமூக நிலையை அறியவும், வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கவும் புதிதாக ஆணையம் அமைக்கணும்னு பா.ம.க. தரப்பில் வலியுறுத்த இருக்கிறார்கள். இதற்கிடையே, இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் தங்கள் கட்சியின் மனநிலை குறித்து விளக்கவும், மருத்துவர் ராமதாஸின் விருப்பங் கள் குறித்து விவரிப்பதோடு, இந்த இட ஒதுக்கீட்டு விவகா ரத்தில் சட்ட ரீதியாக அடுத்து என்ன செய்யலாம் என்று கலந்து ஆலோசிக்கவும், முதல் வரை சந்திக்க விரும்பு கிறாராம் அன்பு மணி. அதற்காகத் தான் அவர் முதல் வரிடம் அப்பா யின்ட்மெண்ட்டைக் கேட்டிருக்கிறார்.''
"இந்தக் கூட்டத் தொடரில் புதிய மாவட்டம் ஒன்றின் உதயம் பற்றிய அறிவிப்பும் வரப் போகுதே?''
"ஆமாங்க தலைவரே, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பகுதி களில் சிலவற்றைப் பிரித்து பொள்ளாச்சியை தலைமையிட மாக கொண்டு ஒரு புதிய மாவட்டத்தை உருவாக்கணும்கிற கொங்கு மக்களின் நீண்ட காலக் கோரிக்கை நிறைவேறப் போகுது. அதற்கான அறிவிப்புதான் இதில் வர இருக்கிறது. இதற்கிடையே அந்தப் புதிய மாவட்டத்தின் தலைநகராக பொள்ளாச்சிக்குப் பதில் உடுமலைப்பேட்டை அல்லது பழனி இருக்கவேண்டும் என்கிற கோரிக்கையை அந்த பகுதியில் உள்ள தி.மு.க.வினர் வைக்க ஆரம்பிச்சிட்டாங்க.''
"மாவட்டம் உருவாகும் முன்பாகவே, அதுக்கு மாவட்ட பொறுப்பாளர் யார்ங்கிற விறுவிறுப்பு தி.மு.க.வில் தொடங்கி இருக்குதே?''
"அதுவும் உண்மைதாங்க தலைவரே, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி, கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலைப் பேட்டை ஆகிய நகரங்களின் எல்லைகளை ஒருங்கிணைத்து அந்த மாவட்டம் உருவாக வேண்டும் என்றும், இந்த எல்லைகளுக்கு மையப் பகுதியான உடுமலை யையே தலைநகராக்கணும் என்றும் இன்னொரு தரப்பு குரல் எழுப்புது. அதற்குள், இந்தப் புதிய மாவட்டம் அமைக்கப்பட்டால், கமல் கட்சியில் இருந்து வந்திருக்கும், தி.மு.க.வின் தொழில் நுட்ப அணி இணைச் செயலாளர் மகேந் திரனை, அந்த மாவட்டத்துக்குப் பொறுப்பாளராக ஆக்கணும்னு இப்பவே காய்கள் நகர்த்தப்படுது. அந்தப் பதவி கிடைக்காவிட்டால், ஜூலையில் நடக்க இருக்கும் ராஜ்யசபா தேர்தலில், மகேந்திரனுக்கு நாடாளுமன்றம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும்னும் எதிர்பார்ப்பு இருக்குது...''
"தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியைக் குறிவைத்து பா.ஜ.க. அண்ணாமலை வரிஞ்சு கட்டறாரே?''
"ஆமாங்க தலைவரே, மின்துறை அமைச்சரை விட்டேனா பார்ன்னு சொல்லும் பா.ஜ.க. அண்ணாமலை, அமைச்சர் தொடர்பான விவகாரங் களை தோண்டித் துருவிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் அமலாக்கத்துறை எடுத்த ஆக்சனுக்கும் அண்ணாமலை தான் காரணம் என்கிறார்கள். அதாவது, அ.தி.மு.க. ஆட்சி யில் போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது, கண்டக்டர், டிரைவர் வேலைகளுக்குப் பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக அவர் மீது 3 வழக்குகள் போடப்பட்டன. இதில் ஒரு வழக்கில், பணம் கொடுத்தவர்களுக்கு பணத்தை செட்டில் பண்ணிவிட்டதால் அவர்கள் வழக்கை வாபஸ் பெற்றுவிட்டனர். மீதமுள்ள வழக்குகள் குறித்தும் அமலாக்கத்துறை விசாரிக்குது.''
"அதற்கான ஆவணங்களை சிறப்பு நீதிமன்றம் அமலாக்கத் துறைக்குத் தர மறுத்ததே?''
"உண்மைதாங்க தலைவரே, சிறப்பு நீதிமன்றம், செந்தில் பாலாஜி தொடர்பான ஆவணங்களைத் தர மறுத்ததை எதிர்த்து, அமலாக்கத்துறை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. உயர்நீதிமன்றமோ, சிறப்பு நீதிமன்றத்தின் உத்தர வை ரத்து செய்ததோடு, அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறை பார்வை யிடவும் அதனைக் குறிப் பெடுத்துக் கொள்ளவும் அனுமதித்து உத்தரவு பிறப்பித் துள்ளது. இது அமைச்சரை அதிர்ச்சி யடைய வைத்திருக்கிறதாம். காரணம், அமலாக்க துறை வழக்கு ஆவணங் களைக் குறிப்பெடுத்த பிறகு, விசா ரணை நடத்த அமைச்சருக்கு சம்மன் அனுப்ப ரெடியாகுதாம். இதற்கெல்லாம் பின்னால் இருந்து புஷ் பண்ணுவது அண்ணாமலைதானாம்.''
"இப்படி அமைச்சருக்கு செக் வைக்கும் அண்ணாமலை, தனக்குத் தானேயும் ஆப்பு வச்சிக்கிட்டாரே?''’
"சரியாச் சொல்றீங்க தலைவரே, அண்ணாமலை தங்கள் கட்சிப் பிர முகர்கள் எவரையும் நம்புவதில்லை யாம். அதற்கு பதில், சென்னை அண்ணாநகரில் இருக்கும் ஒரு மீடியா நிறுவனத்தின் அட்வைஸை யே கேட்டு வருகிறார். அந்த நிறு வனம் கொடுத்த தவறான தகவலின் அடிப்படையில், ஸ்டாலின் துபாய்க்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் எடுத்துச் சென்றதாக நக்கீரனும் இன்னொரு பத்திரிகையும் எழுதி யிருக்கின்றன என்று, உண்மைக்குப் புறம்பான தகவலை வெளியிட்டு, சிக்கலில் மாட்டிக்கிட்டாரு. நக்கீரன் அப்படி எதுவும் எழுத லைங்கிறது அவர் புத்திக்குத் தாமதமாய் உறைக்க, இப் போது அவர், ’யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்’ என்ற பாடலை தன்னந்தனியே பாடிக்கொண்டிருக்கிறார்.''
"சசிகலாவுக்கும் எடப் பாடிக்கும் இடையே புது விதமா ஒரு யுத்தம் நடக்குதே?''
"உண்மைதாங்க தலை வரே, எடப்பாடி உள்ளிட்ட அ.தி.மு.க. தலைமையைப் பதறவைக்கும் விதமாக சசிகலா ஒரு பக்கம் அதிரடி கிளப்பி வருகிறார். அக்கட்சியில் உள்ளவர்களுக்கு சிலர் மூலம் தூதுவிட்டு வளைக்கத் தொடங்கினார். இப்போது அவர் நேரடியாகவே அ.தி. மு.க.வில் உள்ள வன்னிய சமூகப் பிரமுகர்களான சி.வி. சண்முகம், தர்மபுரி அன்பழ கன் உள்ளிட்டவர்களுடன் தொடர்புகொண்டு பேசிவரு கிறார். இதனால் கடுப்பான எடப்பாடியோ, சசிகலாவிடம் மென்மைப் போக்கைக் கடைப்பிடித்து வரும் பா.ஜ.க. வை, தன் பக்கம் வளைக்கும் முயற்சியில் இறங்கிவிட்டார். இதற்காக சசியிடம் நட்பு பாராட்டி வந்த பா.ஜ.க. அண்ணாமலையை, கவுண்டர் சமூகம் என்ற வலையை வீசி வளைத்துவிட்டார். அதனால் அண்ணாமலை இப்போது, சசிகலாவை அ.தி.மு.க.வில் நாம் சேரவிடக்கூடாது என்று தங்கள் தலைமைக்கு பிரஷர் கொடுக்க ஆரம்பித்துவிட் டாராம். இதனால் சசிகலா படு அப்செட்டில் இருக்கிறார்.''
"ஸ்டாலின் டெல்லி விசிட்டால் காங்கிரஸ் சைடில் குழப்பமாமே?''
"பஞ்சாபில் காங்கிரசிடம் இருந்த ஆட்சியை, ஆம் ஆத்மி கைப்பற்றியதால், கெஜ்ரிவால் மீது ஏகக் கடுப்பில் இருக்கிறது அந்தக் கட்சி. ஏற்கனவே டெல்லியிலும் காங்கிரஸ் ஆம் ஆத்மி யிடம் தான் தனது ஆட்சியைப் பறிகொடுத்தது. அதனால் கெஜ்ரிவால்தான் அந்தக் கட்சிக்கு பரம விரோதி. இந்த நிலையில் டெல்லி சென்ற தமிழக முதல்வர் ஸ்டாலின், கெஜ்ரிவாலை சந்திக்கப்போகிறார் என்ற செய்தி வந்தபோது அதை சோனியா விரும்பவில்லையாம். இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் எதிர்பாராதவிதமாக சோனியாவை ஸ்டாலின் சில நிமிடங்கள் தற்செயலாகச் சந்தித்த நிலையில், அவரது தனிச்சந்திப்பு நடக்கும் என்ற எதிர்பார்ப்புக்கு நடுவே, அவர் கெஜ்ரிவாலைப் போய் சந்தித்தார். அங்கு மாடல் பள்ளிகளைப் பார்வையிட்டு விட்டு கெஜ்ரிவாலைப் வெகுவாகப் பாராட்டியதோடு, தமிழகத்திலும் இது போன்ற பள்ளிகளைத் திறப்போம் என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறார். இந்த சந்திப்பால் அதிர்ச்சியில் இருக்கும் காங்கிரஸ், தன்னைக் கழற்றி விட்டு விட்டு, புதிய தேசிய அணி ஒன்றை உருவாக்க ஸ்டாலின் முயற்சிக்கிறாரோ என்று குழம்பிப் போயிருக்கிறதாம்.''
"காவல்துறையிலும் சலசலப்பு கேட்குதே?''
"ஆமாங்க தலைவரே, சென்னை உளவுத்துறை டி.சி.யாக அரவிந்தனை நியமித்திருக்கிறது தி.மு.க. அரசு. இவர், கடந்த ஆட்சிக் காலத்தில் எடப்பாடிக்கு விசுவாசமாக நடந்துகொண்டவர். குறிப்பாக, அப்போதைய உளவுத்துறை ஐ.ஜி. சத்தியமூர்த்திக்கு வலதுகரம் போல் இருந்தவர். அந்த நட்பு இப்போதும் நகமும் சதையுமாகத் தொடர்கிறதாம். போன ஆட்சியில் திருவண்ணாமலை எஸ்.பி.யாக ஒரு அசைன்மெண்ட்டோடு அரவிந்தன் அனுப் பப்பட்டாராம். அங்குதான் மாற்றங்கள் நடந்ததாம். இத்தனைக்கும், சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் வருமான வரித்துறை வேலுவைக் குறிவைத்து ரெய்டு நடத்தியதற்குக் காரணமாக இருந்தவர் அரவிந்தன்தான் என்று தி.மு.க. உடன்பிறப்புகளே அடித்துச் சொல்கிறார்கள். அப்படிப்பட்ட அதிகாரியை, சென்னை உளவுத்துறைக்குக் கொண்டு வந்திருப்பதால், அரசின் ரகசியங்கள் எளிதாக எதிர் முகாமுக்கும் போகும் என்று காவல் துறையிலேயே டாக் அடிபடுகிறது.''
"சென்னை மாநகராட்சி கமிஷனராக இருக்கும் ககன்தீப்சிங் பேடியின் பதவி குறிவைக்கப்பட்டிருக்கே?''
"ஆமாங்க தலைவரே, ககன்தீப்சிங் பேடியை மாற்றிவிட்டு, இந்துசமய அறநிலை யத்துறை ஆணையரும் துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு நெருக்கமானவருமான குமரகுருபரனை புதிய கமிஷனராக நியமிக்க, ஒரு முயற்சி நடக்குது. இதற்கிடையே, இதே மாநகராட்சியின் தலைமைப் பொறியாளராக இருந்து ஊழல் விவகாரத்தில் சிக்கி, அங்கிருந்து தூக்கியடிக்கப்பட்ட நந்தகுமார், தன் மீது குற்றமில்லை என்பதை நிரூபித்து மறுபடியும் அதே இடத்துக்கே வருவேன்னு சபதம் செய்திருக்கிறாராம்.''
"நானும் ஒரு முக்கியமான தகவலை உன் மூலம் பகிர்ந்துக்கறேன். கடந்த நக்கீரன் இதழில், ’மந்திரி மீது முதல்வர் ஆக்சன்’ என்ற தலைப்பில் வெளியான அட்டைப்படச் செய்தியில், தலைமைச் செயலாளர் பற்றிப் பதிவான செய்திகள் தவறானவை என்று கோட்டை அதிகாரிகள் தரப்பு மறுப்பு தெரிவிக்கிறது. மேலும், முதல்வர் ஸ்டாலினின் எண்ணங்களுக்கு ஏற்ப இயங்கி வருபவர் தலைமைச் செயலாளர் என்றும், கடந்த 10 மாதங்களில் அவர் மீது எந்த விமர்சனமும் வந்ததில்லை என்றும் அந்தத் தரப்பு தெரி விக்கிறது. முதல்வர் தரப்பிலும், தலைமைச் செயலாளர் சிறப்பாக செயல்படுகிறார்னு சொல்றாங்க.''