பா.ஜ.க.வில் உள் கட்சித் தேர்தல் தொடங்கி யிருக்கும் நிலையில், அ.தி.மு.க. வுடன் பா.ஜ.க. கூட்டணி வைத்தால் தோற்றுப்போவோம் என்று மேலிடத்தில் புள்ளிவிபரங்களுடன் போட்டுக் கொடுத்து விட்டு வந்துள்ளார் ஆடுமலை.
அமித்ஷா மற்றும் ஜே.பி.நட்டா தலைமையில் நடந்த பா.ஜ.க.வின் உள்கட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சமீபத்தில் டெல்லி சென்றிருந்த ஆடுமலையிடம், தமிழக அரசியல் நிலவரம், தமிழக பா.ஜ.க.வின் உள்கட்சித் தேர்தல், சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி உள்ளிட்ட விவகாரங்களை அமித்ஷா, நட்டா, நிர்மலா சீதாராமன் ஆகியோர் விசாரித்திருக்கிறார்கள். குறிப்பாக, அ.தி.மு.க.வுடன் கூட்டணி பற்றிதான் அதிகளவில் பேசப்பட்டுள்ளன. அந்த விபரங்கள்தான் பா.ஜ.க.வின் அறிவுஜீவிகள் மத்தியில் பரபரப்பாக விவாதிக்கப் படுகின்றன.
இதுகுறித்து அறிவுஜீவிகள் தரப்பில் விசாரித்தபோது, "அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணி மீண்டும் உருவாக வேண்டும்னு பா.ஜ.க. மேலிடம் முயற்சித்து வருகிறது. நிர்மலா சீதாராமன் இதில் உறுதியாக இருக்கிறார். காரணம், தமிழக பா.ஜ.க. தலைவர்கள் பலரும் அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணியை நிர்மலாவிடம் வலியுறுத்தி வருகிறார்கள். அவர்களின் கருத்தைத்தான் அமித்ஷாவிடம் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகிறார் நிர்மலா.
இந்த பின்னணியில்தான் ஆடுமலை யிடம் விசாரித்தனர். அப்போது, அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணி மீண்டும் அமைந்தால் 100 சதவீதம் நாம் தோற்றுப் போவோம். கள நிலவரத்தின் அடிப்படையில்தான் இதனைச் சொல்கிறேன். கொங்கு மண்டலத்தில் கொங்கு வேளாள கவுண்டர்கள் எடப் பாடிக்கு எதிராக இருக்கிறார்கள். அந்த வாக்குகள் தி.மு.க. அணிக்கு கன் சாலிடேட் டாகிடும். அதை நாம் தடுக்க முடி யாது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் குறைஞ்ச ஓட்டுகளை அ.தி.மு.க. வாங்கி யிருக்கிறது. 3 சதவீத வாக்குகள் குறைஞ்சிருக்கு. சீமான் 2 சதவீத வாக்குகள் அந்த இடைத்தேர்தலில் கூடுதலாக வாங்கியிருக்கிறார். அருந்ததியர், பறையர், நாயுடு, செங்குந்தர் ஆகிய சமூகத்தினரின் வாக்குகள் எடப்பாடிக்கு கிடைப்பதில்லை, கிடைக்கப்போவதும் இல்லை.
வன்னியர் அல்லாதவர்கள் மத்தியிலும் அவருக்கு பலத்த எதிர்ப்பு இருக்கிறது. இது அவருக்குத் தெரிந்ததால்தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை எடப்பாடி புறக்கணித்தார். அதேபோல, நாடார் பெல்ட்டிலும் அவருக்கு செல்வாக்கில்லை. கன்னியாகுமரியில் 4 சத வீதம், நெல்லையில் 8 சதவீதம், தூத்துக்குடியில் 15 சதவீதம் என குறைந்த வாக்குகளை வாங்கி 3 எம்.பி. தொகுதியிலும் டெபாசிட் இழந்துள் ளது அ.தி.மு.க. இது எடப்பாடியின் தலை மையால் வந்த வினை.
டெபாசிட் இழக்க வைத்த நாடார் சமூகம், எடப்பாடியை சி.எம். என்று பா.ஜ.க. முன்னிறுத்தினால் ஏற்றுக்கொள்ளமாட்டார் கள். பா.ஜ.க.வையும் புறக்கணிப்பார்கள். சீமான் பின்னால் நாடார் சமுதாயத்தினர் போவதற்கும் வாய்ப்பாக அமைஞ்சிடும். அதேமாதிரி சசிகலா, ஓ.பி.எஸ்., தினகரனை எடப்பாடி புறக்கணிக் கிறார் என்பதால்தான் கடந்த தேர்தலில் முக்கு லத்தோர் சமூகத்தினரின் வாக்குகள் நமக்கு கணிசமாகக் கிடைத்தன. அதனால், எடப்பாடி யை முன்னிறுத்தி களமிறங்கினால் முக்குலத் தோர் ஓட்டும் நமக்கு எதிராகத்தான் போகும்.
அப்படி எதிராகப் போகும் முக்குலத்தோர் வாக்குகளை தி.மு.க. பக்கம் திருப்ப அச்சமூகத் தினருக்கு போதிய பிரதிநிதித்துவம் தந்து மு.க.ஸ்டாலின் வியூகம் வகுத்து வெச்சிருக்கிறார். ஆக, எடப்பாடியை சி.எம். கேண்டிடேட் என நாம் சொன்னால், 18 சதவீத வாக்குகளை நமது என்.டி.ஏ. கூட்டணிக்குத் தந்த மேற்கண்ட இந்த 4 தரப்பும், மு.க.ஸ்டாலினையும், தனித்துப் போட்டியிடும் சீமானையும் தான் ஆதரிக்கும்.
தொடர்ச்சியாக தனித்துப் போட்டியிட்டு சமீபத்தில் 8 சதவீத வாக்குகளை சீமான் பெற்றிருப்பது சாதாரண விசயமில்லை. இதனை அலட்சியமாக நாம் பார்க்கவும்கூடாது. அதனால், எடப்பாடியை சி.எம். என சொல்லி அ.தி.மு.க.வுடன் நாம் கூட்டணி வைத்தால் நமக்கு படுதோல்விதான் கிடைக்கும். இதுதான் தற்போதைய தமிழகத்தின் களச்சூழல்’ என்றெல்லாம் விவரித்து, அது குறித்த தனது ரிப்போர்ட்டையும் அமித்ஷாவிடம் ஆடுமலை கொடுத்துள்ளார்.
ஆடுமலையின் இந்த பேச்சில் அமித்ஷா வும், நிர்மலா சீதாராமனும் சற்று ஆடித்தான் போனார்கள். எடப்பாடியுடன் கூட்டணி அமைத்து தோற்றுப்போனால் நாம்தான் பொறுப்பேற்க வேண்டுமே என்ற யோசனையும் அவர்களுக்குள் வந்துவிட்டது” என்று விவரிக்கின்றனர் பா.ஜ.க. அறிவுஜீவிகள்.
மேலும் விவாதம் நடந்தபோது, "தனித்து போட்டியிடுவதுதான் கட்சியை வளர்க்கும் ஒரே வழி. எனக்கு சுதந்திரமாக இயங்க அனுமதி கொடுங்கள். அதெல்லாம் முடியாது, அ.தி. மு.க.வுடன் தான் கூட்டணி என கட்சித் தலை மை முடிவு செய்தால், எடப்பாடியை சி.எம். கேண்டிடேட்டாக அறிவிக்காமல், அ.தி.மு.க. வுக்கு 117, பா.ஜ.க. தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணிக்கு 117 என சீட் ஷேரிங்கை பேசுங் கள். என்.டி.ஏ. கூட்டணியில் 117 இடங்களை நமக்கும் தோழமை கட்சிகளுக்கும் பகிர்ந்து கொடுக்கலாம். மகாராஷ்டிரா தேர்தல் பங்கீடு போல தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சி.எம். கேண்டிடேட்டை தேர்வு செய்யலாம். இதற்கு எடப்பாடி ஓ.கே.ன்னா எந்த பிரச்சனையும் இல்லை. எடப்பாடியை சி.எம். என முன் னிறுத்துவதுதான் இங்கு பிரச்சினை. அப்படி முன்னிறுத்தியதால்தான் 45 சதவீதம் இருந்த அ.தி.மு.க. இன்றைக்கு 20 சதவீதத்திற்குப் போய் விட்டது, அதனால், அவரை சி.எம். என்றால் மேற்கண்ட 4 தரப்பும் ஏற்கமாட்டார்கள் என்பதையும் சொல்லி அமித்ஷாவிடம் டபுள்கேம் ஆடியிருக்கிறார் ஆடுமலை என்று சந்திப்பில் நடந்ததை சுட்டிக்காட்டுகிறார்கள்.
இதனையறிந்ததால்தான், "இரட்டை இலையை முடக்கினாலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை' என சத்தமாகச் சொல்லத் தொடங்கியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
-இளையர்