காட்டுப் பன்றிகளால் அழிந்துவரும் விவசாயம்! அதிகாரிகள் மெத்தனம்!

ss

திண்டுக்கல் மாவட்டத் தின் தலைநகரமான திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியைத் தவிர ஆத்தூர், ஒட்டன் சத்திரம், பழனி, நிலக் கோட்டை, நத்தம், வேடசந் தூர் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளும் விவசாய பூமியாக இருந்துவருகின்றன.

கடந்த சில வருடங் களாகவே மழை பெய்துவரு வதால் விவசாயமும் பரவலாக மாவட்டம் முழுவதும் செழிப் பாக இருந்துவருகிறது. ஆனால் விவசாய நிலங்களுக்குள் காட்டுப் பன்றிகள் படை யெடுத்து விளைந்திருக்கும் பொருட்களைச் சேதப்படுத்து வதால் ஆத்தூர், ஒட்டன்சத்தி ரம், பழனி, நிலக்கோட்டை பகுதி விவசாயிகள் பாதிக் கப்பட்டு வருகிறார்கள்.

ff

எல்லைப்பட்டியைச் சேர்ந்த விவசாயி முனியப்பன், "எங்கள் பகுதியிலுள்ள கோபி நாதசுவாமி திருக்கோவில் மலையடிவாரப் பகுதியில்தான் காட்டுப் பன்றிகள் தங்கிக் கொண்டு இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக விளை நிலங்களுக்குள் புகுந்து விளை பொருட்களை அழித்துவரு கின்றன. மக்காச்சோளம் உள் பட காய்கறிகள் பயிரிடுவதற் காக பாத்தி கட்டி, தண்ணீர் விட்டு நடவுசெய்த சில நாட் களிலேயே பயிரிட்ட செடி களின் வாசம் பிடித்து இந

திண்டுக்கல் மாவட்டத் தின் தலைநகரமான திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியைத் தவிர ஆத்தூர், ஒட்டன் சத்திரம், பழனி, நிலக் கோட்டை, நத்தம், வேடசந் தூர் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளும் விவசாய பூமியாக இருந்துவருகின்றன.

கடந்த சில வருடங் களாகவே மழை பெய்துவரு வதால் விவசாயமும் பரவலாக மாவட்டம் முழுவதும் செழிப் பாக இருந்துவருகிறது. ஆனால் விவசாய நிலங்களுக்குள் காட்டுப் பன்றிகள் படை யெடுத்து விளைந்திருக்கும் பொருட்களைச் சேதப்படுத்து வதால் ஆத்தூர், ஒட்டன்சத்தி ரம், பழனி, நிலக்கோட்டை பகுதி விவசாயிகள் பாதிக் கப்பட்டு வருகிறார்கள்.

ff

எல்லைப்பட்டியைச் சேர்ந்த விவசாயி முனியப்பன், "எங்கள் பகுதியிலுள்ள கோபி நாதசுவாமி திருக்கோவில் மலையடிவாரப் பகுதியில்தான் காட்டுப் பன்றிகள் தங்கிக் கொண்டு இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக விளை நிலங்களுக்குள் புகுந்து விளை பொருட்களை அழித்துவரு கின்றன. மக்காச்சோளம் உள் பட காய்கறிகள் பயிரிடுவதற் காக பாத்தி கட்டி, தண்ணீர் விட்டு நடவுசெய்த சில நாட் களிலேயே பயிரிட்ட செடி களின் வாசம் பிடித்து இந்த காட்டுப் பன்றிகள் நடவுசெய் ததை மூக்கை வைத்து நோண்டி நோண்டி அழித்துவிடுகின்றன. அதுபோல் வெள்ளைச் சோளத் தட்டையையும் கதிர் முளைத்த உடனேயே தின்று அழித்து விடுகிறது. மற்ற பகுதிகளில் வெள்ளைச் சோளத் தட்டை முளைத்திருந்தாலும்கூட காட்டுப்பன்றிகளின் வாடை பட்டதினால் மாடுகள்கூட இந்த தீவனத்தைத் தின்ப தில்லை. இப்பகுதியில் இருக் கும் எல்லைப்பட்டி, இராம லிங்கம்பட்டி, பங்காருபுரம், எர்னம்பட்டி, புதுப்பட்டி, குளத்துப்பட்டி, முத்தனம் பட்டி உள்பட சில கிராமங் களில் இருக்கும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதைப் பற்றி வனத்துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டு மனு கொடுத்தும்கூட எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை. பகல் நேரங்களில்கூட இந்த காட்டுப் பன்றிகள் விவசாய நிலங்களைச் சேதப்படுத்து கின்றன. தனியாக விவசாயிகள் சென்றால் அவர்களைத் தாக்க வருகின்றன''’என்றார்.

பள்ளபட்டியைச் சேர்ந்த மல்லையநாயுடுவிடம் கேட்டபோது, "இப்பகுதியி லுள்ள ஆடலூர், பன்றிமலை, தோணிமலை பகுதியிலிருந்துதான் காட்டுப் பன்றிகள் இறங்கிவந்து விவசாய நிலங் களை அழித்துவருகின்றன. ஏற்கனவே காட்டு யானைகள் தொந்தரவு இருந்தது. அதை ஓரளவிற்கு வனத்துறையினர் கட்டுப்படுத்தியிருக்கிறார்கள். இந்த காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த வனத்துறையினர் ஆர்வம்காட்டுவதில்லை. தினசரி பத்து முதல் பதினைந்து பன்றிகள் இப்பகுதியிலுள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து தக்காளி, வெங்காயம், கத்திரி, மக்காச்சோளப் பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. மக்காச்சோளம் கதிர் விடும் போது அந்த தட்டைகளை வளைத்து கதிரை மட்டும் தின்றுவிட்டுப் போய்விடுகிறது. இதனாலேயே கடந்த ஆண்டு எனக்கு 30 மூட்டை இழப்பு ஏற்பட்டுள்ளது. என்னிட முள்ள நான்கரை ஏக்கரில் விவசாயம் செய்தும், பலனில் லாத நிலையில் இருந்துவரு கிறேன். ஏற்கனவே விவசாயத் தில் லாபம் பெரிதாக வருவ தில்லை. தற்போது காட்டுப் பன்றிகளும் விவசாயிகளுக்கு நட்டமேற்படுத்தி வருகின் றன''’என்று கூறினார்.

ff

"தெத்துப்பட்டியில் பாசனம் மூலம் தென்னை மரம், கரும்பு, வாழை, மக்காச்சோளம், குச்சி வள்ளிக்கிழங்கு இப்படி சில விளைபொருட்களை பயிரிட்டு வருகிறார்கள். கடந்த மூன்று வருடங்களாகவே இப்பகுதி களில் தொடர்ந்து காட்டுப் பன்றிகள் விளைநிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. கிட்டத்தட்ட 900 ஏக்கர் விவசாய நிலங்கள் இந்த காட்டுப்பன்றிகள் மூலம் பாதிக்கப்பட்டுள்ளன. இதைப்பற்றி இப்பகுதியிலுள்ள கன்னிவாடி வனச்சரகத்தில் முறையிட்டால் காட்டுப்பன்றி களை நீங்களே விரட்டியடி யுங்கள் என்று சொல்கிறார்கள். ஒவ்வொரு காட்டுப் பன்றியும் மாடு அளவுக்கு உயரமாக இருக்கிறது. அதை நாங்கள் எப்படி விரட்டமுடியும்? நாங்கள் போனாலே எங்க ளைத் தாக்கவருகிறது. இந்த காட்டுப் பன்றிகள் விவசாய நிலங்களுக்குள் வராத அள விற்கு மருந்து இருக்கிறதாம். அந்த மருந்தை நிலங்களை சுற்றிப் போட்டால் ஆறு மாதத்திற்கு காட்டுப் பன்றிகள் வராதாம். அந்த மருந்தை கடையில் வாங்கச் சொல்கிறார் களே தவிர வனத்துறையின ரோ, வேளாண்மைத் துறை யோ அதை விவசாயிகளுக்கு கொடுக்க ஆர்வம் காட்டுவ தில்லை. முதல்வரும் எங்கள் பகுதி அமைச்சரும் இந்த காட்டுப்பன்றிகளை ஒழிப் பதற்கு நடவடிக்கை எடுக்க வனத் துறைக்கு உத்தரவிட வேண்டும். இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் போராட்டத்தில்தான் இறங்க வேண்டும்''’என்றார் தெத்துப்பட்டி பாசன விவசாய சங்கத் தலைவரான சந்தமன நாயக்கன்பட்டியைச் சேர்ந்த மகாலிங்கம்.

இதுசம்பந்தமாக கன்னி வாடி வனத்துறை ரேஞ்சர் ஆறுமுகத்திடம் கேட்டபோது, “"இப்பகுதிகளிலுள்ள விவசாய நிலங்களுக்குள் யானைகள், காட்டுப் பன்றிகள் செய்த சேதத்தைக் கணக்கெடுத்து அவர்களுக்கு நிவாரண உதவி வழங்கி வருகிறோம். விவசாய நிலங்களுக்குள் காட்டுப் பன்றிகள் புகுந்து சேதப்படுத்து வதாக எங்களிடம் யாரும் சொல்வதில்லை. காட்டுப் பன்றிகள் மீது நடவடிக்கையும் எடுக்கமுடியாது. அதை நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. விவசாயிகள்தான் தங்கள் விவசாய பொருட் களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். “நில்போ” எனும் மருந்து காட்டுப் பன்றி களை கட்டுப்படுத்துவதற்காக கடைகளில் விற்பனை செய் கிறார்கள். அதை இலவசமாக வெல்லாம் அரசு வழங்க வில்லை. விவசாயிகள் வாங்கிப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்''’என்றார்.

காட்டுப்பன்றிகளைக் கட்டுப்படுத்த அரசு தரப்பிலும் விவசாயிகளுக்கு உதவ வேண்டும்.

-சக்தி

nkn191024
இதையும் படியுங்கள்
Subscribe