ஊரடங்குக்கு முன்பு டெல்டா மாவட்டங்களுக்கு விசிட் அடித்து, காவிரி காப்பாளர் என்ற பட்டத்தை சூட்டிக்கொண்டார் முதல்வர் எடப் பாடி. அப்போது அவரை வரவேற்ற விவசாயிகள் கூட இப்போது கொரோனா ஆய்வுப்பணிக்காக 27ந் தேதி முதல்வர் வருவதை ரசிக்கவில்லை. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று அறிவித்துவிட்டு, அதற்கு நேரெதிரான வேலைகள் நடப்பதாக விவசாயிகள் குமுறுகிறார்கள்.
சீர்காழியை அடுத்த கொள்ளிடம் ஒன்றிய கிழக்குப்பகுதிகளில் ஓ.என்.ஜி.சி. சார்பில் மாதானம் திட்டம் என்ற பெயரில் 20க்கு மேற் பட்ட ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் எடுக்கப்படு கிறது. அதனை வர்த்தக நிறுவனங்களுக்கு கொண்டு செல்லும் விதமாக, வேட்டங்குடியில் இருந்து மேமாத்தூர் வரை 32 கிலோமீட்டர் தொலைவிற்கு விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் அமைப்பதற்கான வேலைகளை கெயில் நிறுவனம் மீண்டும் துவங்கியிருக்கிறது.
விவசாயத்திற்கு எதிரான திட்டங்களைக் கண்டித்துப் போராட்டம் நடத்திவரும் முக்குலத் த
ஊரடங்குக்கு முன்பு டெல்டா மாவட்டங்களுக்கு விசிட் அடித்து, காவிரி காப்பாளர் என்ற பட்டத்தை சூட்டிக்கொண்டார் முதல்வர் எடப் பாடி. அப்போது அவரை வரவேற்ற விவசாயிகள் கூட இப்போது கொரோனா ஆய்வுப்பணிக்காக 27ந் தேதி முதல்வர் வருவதை ரசிக்கவில்லை. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று அறிவித்துவிட்டு, அதற்கு நேரெதிரான வேலைகள் நடப்பதாக விவசாயிகள் குமுறுகிறார்கள்.
சீர்காழியை அடுத்த கொள்ளிடம் ஒன்றிய கிழக்குப்பகுதிகளில் ஓ.என்.ஜி.சி. சார்பில் மாதானம் திட்டம் என்ற பெயரில் 20க்கு மேற் பட்ட ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் எடுக்கப்படு கிறது. அதனை வர்த்தக நிறுவனங்களுக்கு கொண்டு செல்லும் விதமாக, வேட்டங்குடியில் இருந்து மேமாத்தூர் வரை 32 கிலோமீட்டர் தொலைவிற்கு விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் அமைப்பதற்கான வேலைகளை கெயில் நிறுவனம் மீண்டும் துவங்கியிருக்கிறது.
விவசாயத்திற்கு எதிரான திட்டங்களைக் கண்டித்துப் போராட்டம் நடத்திவரும் முக்குலத் துப் புலிகள் அமைப்பின் தலைவர். ஆறு.சரவணன், ""கடந்த ஏழுமாதங்களுக்கு முன்பு டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து பாரட்டுப்பெற்றுக் கொண்டார் பழனிச்சாமி. ஆனால், மக்கள் போராட்டத்தினால் நிறுத்தி வைக்கப்பட்ட குழாய் பதிக்கும் பணிகளை கெயில் நிறுவனம் கொரோனா ஊரடங்கு காலத்தில் அவசரகதி யில் இரவோடு இரவாக செய்ய தொடங்கியிருப்பது வேதனை யளிக்கிறது. இதுபோன்ற பெரும்திட்டங்களை செயல் படுத்தும்போது அந்தப்பகுதி மக்களின் கருத்துகளைக் கேட்பது அவசியம் என உச்சநீதிமன்றம் கூறியிருப்பதை மத்திய அரசும், காவிரி பாதுகாவலராக பாராட்டுப் பெற்ற முதல்வர் பழனிச்சாமியும் கவனத்தில் கொள்ளவில்லை. நாட்டின் வளர்ச்சி என்கிற பெயரில் விவசாயிகள் வயிற்றில் அடிப்பது வேதனையளிக்கிறது'' என்கிறார்.
திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடி, கும்பகோணம் சாலையில் உள்ள போழக்குடியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்திற்கு காயவைத்த நெல்லைக் கொண்டு வந்தனர் விவசாயிகள். ஆனால் மறுநாளும் காயவைக்கச் சொன்னதால், நெல் மூட்டைகளை இரவில் காவல் காத்துவந்த பெரியவர் கலியமூர்த்தியின் நிலை பரிதாபமாக இருந்தது. தஞ்சை மாவட்டம் கஞ்சனூர், துகிலி, உள்ளிட்ட இடங்களில் நெல்லை காயவைத்துக்கொண்டிருந்த விவசாயிகள் மாரிமுத்து, திருக்கோடிக்காவல் பன்னீர் உள்ளிட்டோர், ""இந்த ஆண்டு நல்ல விளைச்சல் இருந்தது. ஆனால் நாசமா போன மழை வந்து மொத்தத்தையும் நாசமாக்கிடுச்சி. வயலில் கொட்டி முளைத்தது போக கிடைத்ததை கொண்டு வந்தோம், இங்க ஈரப்பதமா இருக்குன்னு காய வைக்க சொல்றாங்க, காய வைப்பதற்கு இடவசதி கிடையாது. கிடைக்கும் இடங்களைத் தேடிச் சென்று வெயில் பார்த்து காய வைக்கனும், பிறகு நெல்லை காட்டி டோக்கன் வாங்கனும், அதன் பிறகு நெல்லை விற்க பத்து நாள் 12 நாட்கள் கூட ஆகும், அத்தனை நாட்களுக்கும் நனைந்திடாம, திருடுபோய்விடாம பாதுகாக்கனும். அதோடு 40 கிலோ சிப்பத்திற்கு 40 ரூபாய் முன்கூட்டியே கொடுத்தால்தான் டோக்கனே கிடைக்கும், ஆக வயலில் பாதி, வாகன செலவு மீதி என கணக்கு போட்டால் கடன் தான் மிஞ்சும்'' என்கிறார்கள் கண்கலங்கியபடி..
பணப்பயிர் என்று அழைக்கப்படும் பருத்தி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு இந்த ஆண்டு போதிய விலை இல்லாமலும், விற்கமுடியாமலும் வாரக்கணக்கில் காத்திருக்கும் சூழலே நிலவுகிறது. இதுகுறித்து குத்தாலம் தனசேகரன் கூறுகையில், ""ஒவ்வொரு ஆண்டும் திருப்பூர், ஒசூர், குஜராத், சூரத் என பல இடங்களில் இருந்து தனியார் வியாபாரிகள் ஒவ்வொரு கிராமத்திற்கும் வந்து, பருத்தியை கொள்முதல் செய்வாங்க, போதிய விலை இல்லன்னாலும், நஷ்டம் வராது, இந்த ஆண்டு கொரானா ஊரடங்கால் தனியார் வியாபாரிகள் வரல, அதனால உள்ளூர் வியாபாரிகள் 28 ரூபாய் நிர்ணயித்து அடிமாட்டு விலைக்கு வாங்குறாங்க, அரசாங்கம் 5,800 ரூபாய் நிர்ணயம் செய்தாலும் அவர்கள் அதை மதிக்கல. அரசு ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொண்டுவந்தால் பருத்தியை விற்பனை செய்வதற்குள்ளே தாயிடம் குடித்தபாலை மீண்டும் கக்கிவிடும் நிலைமையாகுது.
வியாழக்கிழமை இரவு துவங்கும் கமிட்டிக்கு, திங்கள்கிழமை காலையிலேயே வரிசையில் டிராக்டரிலோ, டெம்போவிலோ ஏற்றிவந்து வரிசையில் நிற்கவேண்டிய நிலமையாகுது. நான்கு நாட்களுக்கும் வாகனத்திற்கு வாடகை கொடுக்கணும். விற்பனை செய்த பருத்திக்கான பணம் கிடைக்க ஒன்றரை மாதம் ஆகிடுது'' என்கிறார் வேதனையுடன்.
மேட்டூரில் தண்ணீர் திறக்கப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது, ஆனாலும் கடை மடை பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை, என விவசாயி கள் போராட்டம் நடத்தியபடிதான் இருக்கிறார்கள். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதி விவசாயிகள் கூறுகையில்,’’""தண்ணீர் திறந்துவிட்டு விட்டு ஆறுகள், வாய்க்கால்கள், மதகுகளை புனரமைப்பதற்கு, தூர்வாருவதற்கு டெண்டர் விடுவதுதான் இந்த குளறுபடிகளுக்கு காரணம். இன்னும் கட்டுமானபணிகளும், தூர்வாரும் பணிகளும் நடந்து கொண்டுதான் இருக்கிறது, ஒப்பந்தக்காரர்களிடம் கையூட்டு வாங்கிக்கொண்ட அதிகாரிகள் தண்ணீர் திறக்க தயங்குறாங்க. இதையெல்லாம் கண்டுகொள்ளாத முதல்வர் எப்படி காவிரி பாதுகாவலராக இருக்கமுடியும்'' என்கிறார்கள் கோபமாக.
-க.செல்வகுமார்