அ.தி.மு.க. Vs மா.கம்யூ! சூடுபிடிக்கும் மதுரை தேர்தல் களம்!

ss

ddதுரை பாராளுமன்ற தேர்தல் களம் தமிழ்நாட்டில் முக்கியத்துவம் வாய்ந்தது. இங்கு யார் வெற்றிபெறுகிறார்களோ அந்தக் கூட்டணிதான் தமிழ்நாட்டில் அதிக இடங்களில் வெற்றிவாகை சூடும் என்ற சென்டிமெண்ட் உண்டு.

மதுரை பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் கடந்த முறை அ.தி.மு.க. ராஜ்சத்தியனை 1 லட்சத்து 39 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அவரது கொரோனா காலச் செயல்பாடுகள், டெல்லி பாராளுமன்றத்தில் அவரது வாதம், கீழடி முதல் மக்கள்நலப் பிரச்சனைகளில் அவர் காட்டும் அக்கறைவரை அனைத்துக் கட்சியினரையும் திரும்பிப் பார்க்கவைத்தது.

ஆனால் அழகிரிக்குப் பிறகு தி.மு.க.வுக்கு மதுரை எம்.பி. வாய்ப்பு கிடைக்காமலே இருப்பது கட்சிப் பொறுப்பாளர்கள், தொண்டர்களுக்கு ஏமாற்றமளிப்பதாக இருக்கிறது. இந்தமுறை மதுரையை தி.மு.க.வுக்கு ஒதுக்கவேண்டும் என்று போர்க்கொடி தூக்கினர். தொகுதியில் எந்தப் பகுதியில் வாக்கு குறைகிறதோ அப்பகுதியின் மா.செ. பதவி பறிக்கப்படும் என

ddதுரை பாராளுமன்ற தேர்தல் களம் தமிழ்நாட்டில் முக்கியத்துவம் வாய்ந்தது. இங்கு யார் வெற்றிபெறுகிறார்களோ அந்தக் கூட்டணிதான் தமிழ்நாட்டில் அதிக இடங்களில் வெற்றிவாகை சூடும் என்ற சென்டிமெண்ட் உண்டு.

மதுரை பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் கடந்த முறை அ.தி.மு.க. ராஜ்சத்தியனை 1 லட்சத்து 39 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அவரது கொரோனா காலச் செயல்பாடுகள், டெல்லி பாராளுமன்றத்தில் அவரது வாதம், கீழடி முதல் மக்கள்நலப் பிரச்சனைகளில் அவர் காட்டும் அக்கறைவரை அனைத்துக் கட்சியினரையும் திரும்பிப் பார்க்கவைத்தது.

ஆனால் அழகிரிக்குப் பிறகு தி.மு.க.வுக்கு மதுரை எம்.பி. வாய்ப்பு கிடைக்காமலே இருப்பது கட்சிப் பொறுப்பாளர்கள், தொண்டர்களுக்கு ஏமாற்றமளிப்பதாக இருக்கிறது. இந்தமுறை மதுரையை தி.மு.க.வுக்கு ஒதுக்கவேண்டும் என்று போர்க்கொடி தூக்கினர். தொகுதியில் எந்தப் பகுதியில் வாக்கு குறைகிறதோ அப்பகுதியின் மா.செ. பதவி பறிக்கப்படும் என்று முதல்வர் எச்சரித்திருப்பதால் கட்சிப் பொறுப் பாளர்கள் களத்தைச் சூடுபிடிக்க வைக்கிறார்கள். தவிரவும், மதுரையில் உதயநிதியின் பிரச் சாரத்தில் திரண்ட கூட்டம் கூட் டணிக்கு நம்பிக் கையை அதிகரித்திருக்கிறது.

d

இவருக்கு அடுத்த இடத்தில் தன் பண பலத்தால் பின்னாலே விரட்டிவருகிறார் அ.தி.மு.க.வின் டாக்டர் சரவணன். வழக்கமாக, மதுரையில் எப்போதும் எம்.பி. சீட் யாருக்கு என தி.மு.க., அ.தி.மு.க.வில் கடும் போட்டி நடக்கும். மதுரை மாவட்டச் செயலாளர்கள் செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா, உதயகுமார் வீடுகளில் தொண்டர்கள் கூட்டம் அலைமோதும். ஆனால் இம்முறை அப்படி ஒரு பரபரப்பு நிகழ்வுகள் எதுவும் நடைபெறவில்லை. மூன்று மாவட்டச் செயலாளர்களும் தங்களது வாரிசுகளுக்கோ, வேண்டியவர்களுக்கோ சீட் கேட்டு தலைமைக்கு அழுத்தம்கொடுக்கவில்லை. இதுகுறித்து யாரிடம் கேட்டாலும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. போனமுறை ராஜன் செல்லப்பா மகன் சத்யன் நின்று தோற்றுப்போனார். இந்தமுறை தேர்தல் அறிவிப்பு வந்த அடுத்தநாளே அ.தி.மு.க. தலைவர் எடப்பாடி டாக்டர் சரவணனை மதுரை பாராளுமன்ற வேட்பாளராக அறிவிக்க, பெரும் உற்சாகத்தோடு களத்தில் பம்பரமாகச் சுழன்று, வட்டம், ஒன்றியம், மாவட்டத் தலைவர்களை நேரில் சென்று பார்த்து அவர்களுக்குச் செய்யவேண்டியதைச் செய்து, தனக்கு ஆதரவான மனநிலையை ஏற்படுத்தியிருக்கிறார்.

"அ.தி.மு.க.வின் 10 ஆண்டு கால ஆட்சியில் நிறைவேற்றிய திட்டங்களைக் கூறி வாக்கு கேட்போம். குறிப்பாக மதுரைக்கு 8000 கோடியில் செய்யப் பட்டுள்ள திட்டங் களைக் கூறி மக்களிடம் வாக்கு கேட்போம். தி.மு.க.வின் 33 மாத கால ஆட்சியில் கொடுக்கப்பட்ட பொய்யான வாக்குறுதிகளால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். சு.வெங்கடேசன் மக்களைச் சந்திப்பதே இல்லை, ஒரு ட்விட்டர் அரசியல்வாதியாக மட்டுமே செயல்பட்டு வருகிறார். இவரை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்''’ என்றார் உற்சாகமாக.

வேட்பாளர் இராம சீனிவாசனுக்கும் மதுரை மாவட்டச் செயலாளரான சுசீந்திரனுக்கும் ஏழாம் பொருத்தம். அதனால்தான் மதுரையே வேண்டாம் என்று இரண்டு வருடங்களுக்கு முன்பே விருதுநகரில் தேர்தல் வேலையை ஆரம்பித்து விட்டார். விருதுநகர் கொடுப்பதாக டில்லி தலைமை உறுதி அளித்திருந்ததால் சுவர் விளம்பரம் வரை முழுமையாகப் பண்ணியிருந்தார். இந்த நிலையில் திடீரென ராதிகா சரத்குமாருக்காக இவரைக் கழட்டிவிட்டனர்.

dd

மதுரையைப் பொறுத்தவரை பூத் கமிட்டியில் பூத்திற்கு 2 நபர் என்று 1924 பூத் கமிட்டி நியமித்து, ஒழுங்காக வேலை செய்கிறார்களா என்று கண்காணிக்க ஆர்.எஸ்.எஸ். அமைப்பிலிருந்து சக்தி கேந்திரா என்ற விங்க் ஏற்படுத்தி 5 பூத் கமிட்டிக்கு ஒரு பொறுப்பாளர் என்று நியமித்து, இவர்கள் மூலம் கட்சிக்காரர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்டணி பலம் இல்லாதது, சொந்தக் கட்சியினரின் ஒத்துழைப்பு இல்லாதது எனத் தடுமாற்றம் தெரிகிறது. சவுராஷ்ட்ரா சமூகத்தின் 65 ஆயிரம் வாக்குகள் பெரும்பாலும் பா.ஜ.க.வுக் குத்தான் என்று பேச்சு இருந்தாலும் சவுராஷ்ட்ரா சமூகத்தைச் சேர்ந்த மாவட்ட மகளிரணிச் செயலாளர் மகாலெட்சுமி டில்லியில் 6 மாதமாக முகாமிட்டும் அவருக்கு சீட் கிடைக்காதது அந்த சமூகத்தினர் மத்தியில் அதிருப்தி ஏற் படுத்தியுள்ளது.

பா.ஜ.க. வேட்பாளர் இராம சீனிவாசன் கூறுகையில், "தி.மு.க., அ.தி.மு.க. அல்லாத புதிய அரசியல் அதிசயம் மதுரையில் நடைபெற உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் மோடி அலை வீசத்தொடங்கியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் செய்த சாதனை என்பது கீழடியில் நடிகர் சூர்யா, ஜோதிகாவை வைத்து படப்பிடிப்பு நடத்தியதுதான் பா.ஜ.க.வில் எந்தவித அதிருப்தியும் இல்லை. இந்தமுறை திராவிடக் கட்சிகள் அதிர்ச்சி அடையும்படி தேர்தலில் மக்கள் திருப்பத்தை ஏற்படுத்துவார்கள்''’ என்றார்.

நாம் தமிழர் சார்பாக யாதவா கல்லூரி பேராசிரியரான சத்யாதேவி மோகன் நிறுத்தப்பட்டிருக்கிறார். கோனார் சமூகத்தைச் சேர்ந்த இவர் பரவரலாக அறியப்படாதவர் என்பதே பின்னடைவுதான்.

தற்போதைய நிலவரத்தின்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனின் வெற்றிக்காக தி.மு.க. தோள்தட்டி துணைநிற்கிறது. அ.தி.மு.க. சரவணனோ பதிலுக்கு சளைக்காமல் வாள்சுழற்றுகிறார். பா.ஜ.க.வோ இடையில் நுழைவதற்கான தருணத்தை எதிர்பார்த்து நிற்கிறது.

nkn300324
இதையும் படியுங்கள்
Subscribe