நாகையில் கட்டப்பட்டுவரும் சமத்துவபுர வீடுகள் தரமில்லாமல் கட்டப்படுவதாகவும், கட்டுமானப் பணிகள் நடக்கும்போதே மேல்தளம் முதல் சுவர்கள் வரை இடிந்துவிழுவதாகவும் அங்குள்ள மக்கள் வேதனைப்படுகின்றனர்.
தமிழகத்தின் நெடுஞ்சாலைகளில் பயணம்செய்யும்போது ஆங்காங்கே பிரம்மாண்டமான ஆர்ச், அதன் அருகே பெரியார் சிலை இருந்தால் அதுதான் சமத்துவபுரம். கலைஞர் தமிழக முதல்வராக இருந்தபோது எத்தனையோ திட்டங்களைக் கொடுத்திருந்தாலும், அவற்றில் முத்தாய்ப்பான ஒரு திட்டம் என்றால் அது சமத்துவபுர திட்டம் என்றே யோசிக்காமல் கூறலாம்.
நகரங்களை ஒட்டிய கிராமப் பகுதியில் அரசு சார்பிலேயே சுமார் 8 முதல் 10 ஏக்கர் நிலம்வரை ஒதுக்கீடு செய்து அதில் 100 வீடுகளைக் கட்டி தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 40 வீடுகளும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 25 வீடுகளும், பிற்பட்ட வகுப்பினருக்கு 25 வீடுகளும், இதர வகுப்பினருக்கு 10 வீடுகள் என ஒதுக்கீடு செய்யப் பட்டன. இவர்கள் அனை வருமே ஏழைகள் என்பதே இந்தத் திட்டத்திற்கான சிறப்பு. இவர்களுக்கென பொதுவான சமூகநலக்கூடம், பொது குடிநீர்க் குழாய்கள், பொதுவான நூலகம், பொது வான மயானம், பொதுவான கழிப்பிடம் என அனைத்தும் அரசு செலவில் பொது வாகவே அமைத்துக் கொடுக்கப்பட்டன.
2007-ஆம் ஆண்டு தென்மாவட்டங்களில் போக்குவரத்துக் கழகங் களுக்கு பெயர்சூட்டுவதில் எழுந்த மோதல்கள், அதனைத் தொடர்ந்து நடந்த சாதியக் கலவரங்களுக்கு முடிவு கட்டிடவும், சமூக நல்லிணக்கத்தை உருவாக்கிடவும் கலைஞரின் மூளையில் உதித்த திட்டம்தான் சமத் துவபுரம். இந்தத் திட்டம் செயல்பாட்டுக்குவந்து சுமார் இருபத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. இடையில் தொடர்ந்து பத்தாண்டுகள் ஆட்சியிலிருந்த அ.தி.மு.க. அரசு சமத்துவபுரங்களை கண்டு கொள்ளவே இல்லை. மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், தமிழ்நாட்டின் முதல்வராகப் பொறுப் பேற்ற முதல்வர் ஸ்டாலின் சமத்துவபுரங்களை சீர்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்துவருகிறது.
அந்தவகையில் நாகை மாவட்டம் பனங்குடி யில் முற்றிலும் பழுதடைந்த 92 வீடுகளை இடித்து விட்டு புதிய வீடுகளைக் கட்டிக்கொடுக்க தலா நான்கு லட்சத்து ஏழாயிரம் ரூபாய் வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கட்டுமானப் பணிகள் கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. இந்தப் பணிகள் ஆமைவேகத்தில் நடப்பதோடு தரமில்லாமல் கட்டப்படுவதால் பல வீடுகளின் கான்கிரீட் மேல்தளம் இடிந்து விழுந்து கட்டுமானத்தின் உறுதித் தன்மையை கேள்விக்குறியாக்கி வருகிறது. சுவர்களில் பூசப்பட்ட சிமெண்ட் காரைகள் கட்டிமுடிப்பதற்குள் பெயர்ந்து விழுகிறது. இது ஒருபுறம் இருக்க பல வீடுகளில் மேல்தளத்தில் தேங்கிய லேசான மழைநீர்கூட வீட்டிற்குள் கசிகிறது. அரசு போதுமான நிதி ஒதுக்கியிருந்தும், ஒப்பந்தக்காரர் கடமைக்கு கட்டிக்கொடுப்பதுபோல தெரிகிறது என அதிர்ச்சியடைந்த மக்கள், நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜிடம் புகார் தெரிவித்தனர். வீடுகளை ஆய்வு செய்த ஆட்சியர் தரம் இல்லாமல் கட்டப்பட்ட வீடுகளை இடித்துத் தள்ளிவிட்டு அதனைச் சரி செய்யவேண்டும் என ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டார். ஒப்பந்தக்காரர் திருத் துறைப்பூண்டி அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் என்பதால் ஆட்சியரின் உத்தரவை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் கலைஞரின் கனவுத் திட்டத்திற்கு வேட்டுவைத்து வருகிறார் என்கிறார்கள் அங்குள்ள மக்கள்.
சமத்துவபுரத்திற்குள் பயணித்தோம், அங்கு குடியிருந்துவரும் தேன்மொழி, “"சொந்த இடமோ, வீடோ இல்லாத எங்களைப் போன்ற ஏழைகளின் நிலைமை யைப் புரிந்துகொண்டு சமத்துவபுரம் அமைத்து, வீடுகொடுத்து நிம்மதியாக்கி னார் கலைஞர். கால்வயிற்றுக் கஞ்சிகுடித் தாலும், நிம்மதியாக சொந்த இடத்துல தூங்கி எழுந்தோம். கஜா புயலின்போது வீடுகள் முழுக்க சேதமாகி ஒழுக ஆரம்பிச்சிடுச்சி. அ.தி.மு.க. ஆட்சியில் சரிசெய்யச் சொல்லி பலமுறை மனுகொடுத்தோம். அவங்க திரும்பிக்கூட பார்க்கல. ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததும் எங்களின் நிலைமை யை புரிந்து நிதி ஒதுக்கினார். ஒவ்வொரு வீட்டிற்கும் போதுமான நிதி ஒதுக்கியும் பாதிகூட செலவழிக்காமல் தரமில்லாமல் கட்டுறாங்க. முன்பு கட்டிக்கொடுத்த வீடு 23 வருஷம் ஒரு தொல்லை யும் கொடுக்காம ஓடிருச்சு. இப்ப தரமில்லாத வீடைக் கட்டித்தந்து எங்களைப் பழி வாங்க றாங்க''’என்கிறார் கலங்கியபடி.
கட்டுமானப் பணிகள் நடந்துவரும் வீட்டிற்கு நடுவே படுத்திருந்த வயதான பாட்டி பாப்பாத்தி யிடம் பேச்சுக்கொடுத்தோம். "இந்த இடத்தவிட்டா எங்களுக்கு வேற இடம் இல்லப்பா, நாலுமாசத்துல கட்டித் தந்துடுவோம்னு சொன்னாங்க. ஒருவருச மாகுது பாதி வீடுகள்கூட வேலைமுடியல. சில பேர் வாடகை வீட்டுல இருக்காங்க, வேலை கிடைக் கிறதே குதிரைக் கொம்பா இருக்கு. நூறுநாள் வேலையை நம்பிதான் ஜீவனமே நடக்குது, இதுல வாடகை வீட்டுக்கு எப்படி பத்தாயிரம் அட்வான்ஸ் கொடுக்கமுடியும். மாசம் வாடகையா நாலாயிரம் கொடுக்கமுடியும், அதனாலதான் இங்கேயே கிடக்கிறேன்''’என்கிறார்.
எம்.சாண்ட் அதிகமாக கொட்டி கலவை போடுவதைக் கண்டு ஆத்திரத்தோடு பேசிக் கொண்டிருந்த கலையரசியிடம் கேட்டோம். "இப்ப கட்டுகிற வீடுங்க எல்லாமே கட்டும் போதே இடிந்துவிழுது. கைய வச்சாலே பொலபொலன்னு கொட்டுது. ஒப்பந்தக்காரரிடம் கேட்டால் நாங்க பேசுறத கண்டுக்கவே மாட்டேங்குறார். வேலை செய்பவர்களோ ஓசி யிலதானே கட்டிக்கொடுக்கிறோம்னு அலட்சியமா பேசுறாங்க''’என்கிறார் வேதனையுடன்.
மாற்றுத்திறனாளி கணேச னிடம் கேட்டபோது, "அப்ப கட்டிய வீட்டிற்கும் இப்ப கட்டுகிற வீட்டிற் கும் ரொம்பவே தரம் வித்தியாசம் இருக்கு. அப்போ கட்டிய வீடுகள் தரமா இருந்துச்சி, இப்ப கடமைக்கு கட்டுறாங்க. ஒப்பந்தக்காரர் அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளராக இருப்பதால் வீடுகளை தரமில்லாமல் கட்டுகிறார். கலைஞரின் திட்டத்தை குறைசொல்லவைக்கும் வகையில்தான் வேலைகளைச் செய்யுறாங்க. வீடுகளுக்கு மின்னிணைப்பு செய்வதற்கு பயனாளிகளிடமே ஒப்பந்ததாரர் 10 ஆயிரம் பணம் கேட்குறாங்க. தி.மு.க. ஆட்சிக்கு வரும்பொழுது சமத்துவபுரம் வீட்டின் மீது தனிக்கவனம் செலுத்துவது வழக்கம். எங்க சமத்துவபுரத்தில் நடந்துவரும் தரமற்ற கட்டுமான விவகாரத்தில் அரசு கவனம் செலுத்தாமல் மௌனம் காத்துவருவது வேதனையா இருக்கு. பூஜைபோட்ட நாளிலிருந்து பெரும்பாலான மக்கள் வாடகை வீட்டில்தான் இருக்காங்க. மாதம் மாதம் வாடகை கொடுக்கக்கூட முடியல, கூலி வேலை செய்கிறோம். கிடைக்கிற கூலியை வைத்து வயிற்றைக் கழுவவே முடியல. இதுல வீட்டு வாடகை எப்படி கொடுக்க முடியும். குழந்தைகளை எப்படி படிக்கவைக்க முடியும். குழுவில் வாங்கிய கடனை எப்படி கட்ட முடியும்?''’என்று வேதனைப்படுகிறார்.
சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகர் ஒருவர் நம்மிடம், "நாகை மாவட்டத்தில் இருக்கும் மூன்று சமத்துவ புரத்தில் ரொம்பவே மிக மோசமாக, தரமில்லாமல் வேலைகள் நடப்பது பனங்குடி சமத்துவபுரத்தில்தான். ஒப்பந்தக்காரரான சிங்காரவேல் திருத்துறைப்பூண்டி அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர். இந்த வேலையைச் செய்யும் அளவிற்கு ஒர்த்தான ஒப்பந்தக்காரர் இல்லை என்பதுதான் உண்மை. இவரிடம் ஒப்பந்தத்தைக் கொடுக்க தி.மு.க. மாவட்டச் செயலாளர் எப்படி ஒப்புக்கொண்டார் என்பதுதான் புரியாத புதிரா இருக்கு. சிங்காரவேல் மனைவி கடந்தமுறை திருத்துறைப் பூண்டி ஒன்றியச் சேர்மனாக இருந்தவர். அந்த காலத்தில் பல வேலைகளைச் செய்யாமலேயே பில் போட்டதாகவும், இவர் செய்யும் வேலைகளுக்கான கரண்ட், மணல் உள்ளிட்டவைகளை அரசு இடத்திலேயே திருடியதாகவும், இவர் செய்த வேலைகள் எதுவுமே தரமில்லை என்று நீதிமன்றம்வரை போனது. இப்படிப்பட்டவரிடம் கலைஞரின் கனவுத் திட்டத்தைக் கொடுத்திருப்பது வேதனையளிக்கிறது''’என்கிறார் ஆதங்கமாக.
மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜிடம் கேட்டோம், "மூன்று நாளுக்கு ஒருமுறை ஆய்வு செய்துகொண்டுதான் இருக்கிறேன். அங்கேயே தனி பொறியாளரைப் போட்டிருக்கிறோம். இந்த திட்டத்திற்கு பொருத்தமான ஒப்பந்தக்காரராக அவர் இல்லை என்பதை உணரமுடிகிறது, சில வீடுகளை இடித்துவிட்டு கட்டச்சொல்லியுள்ளேன், மற்ற சமத்துவபுரம் பிரச்சனையில்லை, இங்குதான் பிரச்சனையாக இருக்கு, தனி கவனம் செலுத்தி வேலை வாங்குகிறோம், நல்லபடியா முடித்துவிடலாம்''’என்கிறார் பொறுப்புடன்.