ராங்கால் கொங்கு மண்டலம் தி.மு.க.வை ஓவர்டேக் செய்யும் அ.தி.மு.க! தமிழக பா.ஜ.க. தலைவர் பதவி விஜயதாரணி. டிமாண்ட்

epss

"ஹலோ தலைவரே, தேர்தல் திருவிழா வுக்கான ஏற்பாடுகள் நாடு முழுக்க பரபரப்பா நடந்துவருகிறது.''”

"ஆமாம்பா, இந்த நேரத்தில் இந்திய தலைமைத் தேர்தல் அதிகாரி சென்னையில் தீவிரமாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியிருக்கிறாரே?''”

gg

"உண்மைதாங்க தலைவரே, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார், இரண்டு நாட்களுக்கு முன் சென்னை வந்தார். அவர் இங்குள்ள அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுடன் தேர்தல் குறித்து ஆலோசித்தார். அவர் அதி காரிகளுடன் விவாதித்தபோது காரசாரமாக எச்சரிக்கை தொனியிலேயே பேசினா ராம். குறிப்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனைப் பார்த்து, "சென்னையில் தேர்தல் நேரத்தில் கட்சிகளின் சார்பில் பண விநியோகம் அதிகமாக நடக்கும் என்று எனக்குத் தகவல் வந்திருக்கிறது. அது எந்தெந்த வகையில் நடக்கும்? அதை எப்படி எல்லாம் தடுப்பீர்கள்?' என்று சொல்லுங்கள் என்று கேட்டாராம். அப்போது இருவருக்கும் இடையில் கொஞ்சம் ஹாட்டாகவே உரையாடல் நடந்தது என்கிறார்கள் விபரமறிந்தோர். அதேபோல், ஜவஹர் என்கிற எஸ்.பி.யைப் பார்த்து, "ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின்போது, குக்கரில் வைத்துப் பணம் கொடுக்கப்பட்டதை நீங்கள் அனுமதித்ததாகக் கூறுகிறார்களே' என்று காட்டம் காட்டியிருக்கிறார். மேலும், "இந்தமுறை தமிழகத் தேர்தலில் பண வினியோகம் நடக்க அனுமதிக்க முடியாது. அப்படி நடந்தால் குறைந்த பட்சம் 15 தொகுதியிலாவது நான் தேர்தலை நிறுத்துவேன்' என்றும் மிரட்டலாகச் சொன்னாராம். இதேபோல் அண்மையில் சென்னைக்கு விசிட் அடித்த அமலாக்கத்துறையின் தலைமை அதிகாரியான ராகுல்நவீனும், "தமிழக அரசியல் கட்சி வேட்பாளர்கள் கரன்சியை நம்பியே தேர்தலில் நிற்கிறார்கள். இந்தமுறை அதற்கு இடம் தரமாட்டோம்' என்று சொல்லிவிட்டுச் சென்றாராம்.''”

"பிரதமர் மோடி கலந்துகொள்ளும் பல்லடம் பிரச்சாரக் கூட்டத்துக்கு மிரட்டல்கள் மூலம் ஆள் திரட்டும் வேலை நடக்கிறது என்கிறார்களே?''

"அப்படிதாங்க தலைவரே தகவல்கள் வருது. ஆயிரம் ஏக்கர் மைதானத்தில் கூட்டம். அதற்கு 14 லட்சம் சதுர அடியில் மெகா பந்தல், 5 லட்சம் இருக்கைகள் என 27ஆம் தேதி பிரதமர் மோடி கலந்துகொள் ளும் பல்லடம் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கான் ஏற்பாடுகளை தடபுடலாக நடத்தியது பா.ஜ.க. இந்தக் கூட் டத்தில் 15 லட்சம் பேர்வரை கலந்துகொள்வார் கள் என்று மாநில நிர்வாகிகள் ஒரு பக்கம் அலப்பறை செய்த நிலையில், அக்கட்சியின் மாவட்ட நிர்வாகியான ஏ.பி.முருகானந்தமோ, அந்தக் கூட்டத்தில் 5 லட்சம் பேர்வரை கலந்து கொள்வார்கள் என்று உண்மையைப் போட்டு டைத்தார். பிரதமரின் இந்தக் கூட்டத்திற்கு மிரட்டல்கள் மூலம் ஆள் திரட்டும் வேலைகள் நடந்திருக்கிறது. குறிப்பாக, பஞ்சாலை அதிபர் களை அணுகிய கட்சி நிர்வாகிகள், உங்கள் பஞ்சாலைகளில் பணியாற்றும் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு லீவு கொடுத்து, வாகனங்களை ஏற்பாடு செய்த

"ஹலோ தலைவரே, தேர்தல் திருவிழா வுக்கான ஏற்பாடுகள் நாடு முழுக்க பரபரப்பா நடந்துவருகிறது.''”

"ஆமாம்பா, இந்த நேரத்தில் இந்திய தலைமைத் தேர்தல் அதிகாரி சென்னையில் தீவிரமாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியிருக்கிறாரே?''”

gg

"உண்மைதாங்க தலைவரே, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார், இரண்டு நாட்களுக்கு முன் சென்னை வந்தார். அவர் இங்குள்ள அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுடன் தேர்தல் குறித்து ஆலோசித்தார். அவர் அதி காரிகளுடன் விவாதித்தபோது காரசாரமாக எச்சரிக்கை தொனியிலேயே பேசினா ராம். குறிப்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனைப் பார்த்து, "சென்னையில் தேர்தல் நேரத்தில் கட்சிகளின் சார்பில் பண விநியோகம் அதிகமாக நடக்கும் என்று எனக்குத் தகவல் வந்திருக்கிறது. அது எந்தெந்த வகையில் நடக்கும்? அதை எப்படி எல்லாம் தடுப்பீர்கள்?' என்று சொல்லுங்கள் என்று கேட்டாராம். அப்போது இருவருக்கும் இடையில் கொஞ்சம் ஹாட்டாகவே உரையாடல் நடந்தது என்கிறார்கள் விபரமறிந்தோர். அதேபோல், ஜவஹர் என்கிற எஸ்.பி.யைப் பார்த்து, "ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின்போது, குக்கரில் வைத்துப் பணம் கொடுக்கப்பட்டதை நீங்கள் அனுமதித்ததாகக் கூறுகிறார்களே' என்று காட்டம் காட்டியிருக்கிறார். மேலும், "இந்தமுறை தமிழகத் தேர்தலில் பண வினியோகம் நடக்க அனுமதிக்க முடியாது. அப்படி நடந்தால் குறைந்த பட்சம் 15 தொகுதியிலாவது நான் தேர்தலை நிறுத்துவேன்' என்றும் மிரட்டலாகச் சொன்னாராம். இதேபோல் அண்மையில் சென்னைக்கு விசிட் அடித்த அமலாக்கத்துறையின் தலைமை அதிகாரியான ராகுல்நவீனும், "தமிழக அரசியல் கட்சி வேட்பாளர்கள் கரன்சியை நம்பியே தேர்தலில் நிற்கிறார்கள். இந்தமுறை அதற்கு இடம் தரமாட்டோம்' என்று சொல்லிவிட்டுச் சென்றாராம்.''”

"பிரதமர் மோடி கலந்துகொள்ளும் பல்லடம் பிரச்சாரக் கூட்டத்துக்கு மிரட்டல்கள் மூலம் ஆள் திரட்டும் வேலை நடக்கிறது என்கிறார்களே?''

"அப்படிதாங்க தலைவரே தகவல்கள் வருது. ஆயிரம் ஏக்கர் மைதானத்தில் கூட்டம். அதற்கு 14 லட்சம் சதுர அடியில் மெகா பந்தல், 5 லட்சம் இருக்கைகள் என 27ஆம் தேதி பிரதமர் மோடி கலந்துகொள் ளும் பல்லடம் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கான் ஏற்பாடுகளை தடபுடலாக நடத்தியது பா.ஜ.க. இந்தக் கூட் டத்தில் 15 லட்சம் பேர்வரை கலந்துகொள்வார் கள் என்று மாநில நிர்வாகிகள் ஒரு பக்கம் அலப்பறை செய்த நிலையில், அக்கட்சியின் மாவட்ட நிர்வாகியான ஏ.பி.முருகானந்தமோ, அந்தக் கூட்டத்தில் 5 லட்சம் பேர்வரை கலந்து கொள்வார்கள் என்று உண்மையைப் போட்டு டைத்தார். பிரதமரின் இந்தக் கூட்டத்திற்கு மிரட்டல்கள் மூலம் ஆள் திரட்டும் வேலைகள் நடந்திருக்கிறது. குறிப்பாக, பஞ்சாலை அதிபர் களை அணுகிய கட்சி நிர்வாகிகள், உங்கள் பஞ்சாலைகளில் பணியாற்றும் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு லீவு கொடுத்து, வாகனங்களை ஏற்பாடு செய்து, அவர்கள் அனைவரையும் கட்டாயமாக அனுப்பி வைக்கவேண்டும். இல்லை என்றால் அதன் விளைவுகளை நீங்கள் சந்திக்கநேரும் என்று அடாவடியாக மிரட்டல் விடுத்தார்களாம்.''”

"கொங்கு மண்டலத்தில் தி.மு.க.வைவிட அ.தி.மு.க. தரப்பு தேர்தல் பிரச்சாரத்தை விறுவிறுப் பாக ஆரம்பித்துவிட்டதே?''”

ff

"வரப்போகும் தேர்தலை முன்னிட்டு, ஜெ.’பிறந்தநாள் நிகழ்ச்சியை, கொங்கு மண்ட லத்தில் மூன்றுநாள் விழாவாக அ.தி.மு.க.வினர் கோலாகல மாக நடத்தியிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிகள் அனைத் தும் பிரச்சாரக் கூட்டங்களாக, தி.மு.க.வை ஓவர்டேக் செய்யும் வகை யில் நடத்தப்பட்டிருக்கின்றன. தி.மு.க. ஆட்சிக்கு எதிரான விசயங்களை பரவ லாக மக்களிடம் வைத்திருக்கிறது அ.தி.மு.க. தரப்பு. அது அக்கட்சித் தொண்டர்கள் தரப்பை வெகுவாக உற்சாகப்படுத்தியிருக்கிறது. அதேசமயம், இந்தக் கொங்கு பகுதியில் தி.மு.க.வின் பிரச்சார வேலைகள் இன்னும் சூடு பிடிக்கவில்லை என்கிறார்கள் பார்வை யாளர்கள். எப்போதும் அங்கே விறு விறுப்பாகக் களமிறங்கும் செந்தில் பாலாஜி சிறையில் இருப்பதால், கொங்கு பெல்ட்டைக் கவனிக்க தி.மு.க.வில் ஆளில்லை என்கிற ஆதங்கம் தி.மு.க. தரப்பிலேயே இருக்கிறதாம்.''”

"போயஸ் கார்டனில் சசிகலா கட்டியிருக்கும் புதிய பங்களாவுக்கு ரஜினி போயிருக்கிறாரே?''”

asi

"ஆமாங்க தலைவரே. அண்மையில் பால் காய்ச்சிய தனது போயஸ் கார்டன் புதிய பங்களா வில் ஜெ.வின் பிறந்தநாளான 24ஆம் தேதி சிறப்பு வழிபாடு நடத்தியிருக்கிறார் சசிகலா. இதற்கு அவர் ரஜினியையும் அழைக்க, அவரும் வருகை தந்திருக் கிறார். இந்த பங்களாவின் கிரஹப்பிரவேசத்துக்கே ரஜினியை அவர் அழைத்தபோது, அவர் வெளியூர் ஷூட்டிங்கில் இருந்தாராம். அதனால் இந்தமுறை தட்டாமல் ரஜினி வந்திருக்கிறார் என்கிறது அவர் தரப்பு. ரஜினியின் இந்த வருகை, அரசியல் வட்டா ரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சந்திப்பின்போது, சசியிடம் ரஜினி, இனி நீங்கள் நினைச்சதெல்லாம் நடக்கும். உங்க வீட்டை ஜெயலலிதாவின் வேதா இல்லம் மாதிரியே வடிவமைத்திருக்கிறீர்கள், அவரது ஆசி உங்களுக்கு எப்போதும் இருக்கும்.’என்று சொன்னதோடு, "அர சியலில் இனி உங்களுக்கு அரசியலில் ஆரோக்கிய மான சூழல் அமையும்'’ என்றும் வாழ்த்தினாராம். இது எடப்பாடி தரப்பை அதிர வைத்திருக்கிறதாம்.''

"அ.தி.மு.க.வினர் நடத்திய கூவத்தூர் கூத் தடிப்பில் நடிகைகள் பெயரை எல்லாம் இழுத்தடித்து வருகிறார்களே?''”

"ஆமாங்க தலைவரே, ஜெ.’மறைந்த நிலையில், ஆட்சி அமைக்க நினைத்த சசிகலா, கூவத்தூரில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை தங்க வைத்தார். அவர்களுக்கு சசி தரப்பு சகலத்தையும் சப்ளை செய்து உபசரித்ததாக, அப்போதே குற்றச் சாட்டுகள் பலமாக எழுந்தன. அந்த விவகாரம் குறித்து தற்போது வாய்திறந்திருக்கும் சேலம் அ.தி.மு.க. பிரமுகரான ஏ.வி.ராஜூ, அங்கே த்ரிஷா உள்ளிட்ட சில நடிகைகளும் அழைக்கப்பட்டதாகக் கூறி பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தினார். இதற்கு பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்திருக்கும் நிலையில், இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக நடிகை த்ரிஷா அறிவித்தார். இந்த நிலையில், அ.தி.மு.க.விலிருந்து அந்த ராஜூவை அதிரடியாக நீக்கியிருக்கிறார் எடப்பாடி.''”fff

"ஆனால் அந்த ராஜூ, தன்னைக் கட்சியில் இருந்து நீக்கியது தவறுன்னு எடப்பாடிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறாரே?''”

"தன்னுடைய பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்த நிலையில், நடிகை த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்பதாக அறிவித்தார் ராஜூ. மேலும், தன்னைக் கட்சியில் இருந்து நீக்கிய எடப்பாடிக்கு நோட்டீஸ் அனுப்பலாமான்னு வழக்கறிஞர் முத்துக்குமா ருடன் ராஜூ ஆலோசித்திருக்கிறார். பின்னர் என்ன நினைத்தாரோ? எடப்பாடிக்கு நோட்டீஸ் அனுப்பாதீர்கள் என்று முத்துக்குமாருக்கு தகவல் அனுப்பிவிட்டு, மருத்துவமனையில் போய் அவர் படுத்துக்கொண்டாராம். ஆனாலும் முத்துக்குமா ரோ விடப்பிடியாக ராஜூ பெயரில் நோட்டீஸை எடப்பாடிக்கு அனுப்பிவிட்டார். இதற்குக் கார ணம், ஜெ.’காலத்தில் அரசு வழக்கறிஞராக இருந்த அந்த முத்துக்குமார், சில புகார்கள் காரணமாக இடையில் பதவி நீக்கப்பட்டிருக்கிறார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி முதல்வரானதும், அவரிடம் மீண்டும் அரசு வழக்கறிஞராக்கும்படி அவர் கேட்டாராம். ஆனால் எடப்பாடியோ, அவரை தன் பக்கத்தில்கூட வரக்கூடாது என்று சொல்லிவிட்டாராம். அதனால் அவர் மீது கோபத்தில் இருந்த முத்துக்குமார், அதை ராஜூ சாக்கில் தீர்த்துக்கொண்டாராம்.''”

"அ.தி.மு.க., கூட்டணிப் பேச்சுவார்த்தை களை ரகசியமான நடத்திவருகிறதே?''”

"ஆமாங்க தலைவரே, தற்போது பா.ம.க. மற்றும் தே.மு.தி.க.வோடு கூட்டணிப் பேச்சுவார்த் தையை அ.தி.மு.க. ரகசியமாக நடத்திவருகிறது. கூட்டணி குறித்த முழுமையான விபரங்களை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகுதான் எடப்பாடி முறைப்படி அறிவிப்பார் என்கிறார்கள் அக்கட்சியின் சீனியர்கள். காரணம், கூட்டணிக் கட்சிகளை யாரும் கலைத்துவிடக்கூடாது என்று எடப்பாடி கவனமாக இருக்கிறாராம். தற்போது சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, இந்தக் கூட்டணியில் இணைந் திருக்கிறதாம். இதற் கிடையே காங்கிர ஸுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக் கும் ரூட் போட்டுப் பார்த்தாராம் எடப் பாடி. ஆனால் அந்த இரண்டு கட்சிகளும், மண்குதிரையை நம்பி நாங்கள் ஆற்றில் இறங்க விரும்பவில்லை என்று சொல்லிவிட்டதாம்.''”

"நாம் முன்னதாகவே தெரிவித்த மாதிரி காங்கிரஸில் இருந்த விஜயதாரணி, பா.ஜ.க.வில் இணைந்திருக்கிறாரே?''”

ff

"காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாகவும் சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் கொறடாவாகவும் இருந்த விஜயதாரணி அக்கட்சியிலிருந்து விலகி, ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்ததோடு, அக்கட்சியின் தேசியத் தலைவ ரான ஜே.பி.நட்டாவையும் சந்தித்து வாழ்த்தைப் பெற்றிருக்கிறார். இந்த நிகழ்வில் தமிழக பா.ஜ.க. வின் முக்கியப்புள்ளி கலந்து கொள்ளவில்லை. காரணம், எல்.முருகன் முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்ததை அவர் ரசிக்கவில்லையாம். தனது தலைமையில் பா.ஜ.க.வில் இணையும்படி அவர் கேட்டுக்கொண்டதை, விஜயதாரணி ஏற்காததாலும் அவர் கடுப்பில் இருக்கிறாராம். கட்சியில் சேரும்போதே அங்கே எதிரியை உருவாக்கிக்கொண்டிருக்கிறார் விஜயதாரணி என்கிறார்கள் கமலாலயத் தரப்பினர்.''”

"அதுசரி, விஜயதாரணி பா.ஜ.க.வுக்குச் சென்றதை, குமரி மாவட்ட காங்கிரஸ்காரர்கள் ஸ்வீட் கொடுத்து கொண்டாடியிருக்காங்களே?''”

"உண்மைதாங்க தலைவரே, விஜய தாரணி கட்சியை விட்டு வெளியேறி யதை அவரது குமரி மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ்காரங்க ஸ்வீட் வழங்கிக் கொண்டாடி மகிழ்ந்திருக் கிக்காங்க. காரணம், தொடர்ச்சியாக அங்குள்ள விளவங்கோடு தொகுதி யில் அவர் 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தும் அவரால் கட்சித் தொண் டர்களுக்கோ, தொகுதி மக்களுக் கோ எந்த வகையிலும் பயனில்லை என்ற அதிருப்தி அங்கே பரவலாக இருக்கிறது. பா.ஜ.க.வில் இணைந்திருக்கும் அவரது எம்.எல்.ஏ. பதவியை, கட்சித்தாவல் தடை சட்டத் தின் மூலம் பறிக்கணும்னு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் எழுதினார். இதையறிந்த விஜயதாரணி, சபாநாயகர் விளக்கம் கேட்பதற்கு முன்பாகவே, தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அதனால், நாடாளுமன்றத் தேர்தலோடு விஜயதாரணியின் விளவங்கோடு தொகுதிக்கும் இடைத்தேர்தல் வரப்போகிறது.''

"பா.ஜ.க.வுக்குச் சென்ற விஜயதாரணிக்கு, அவர் விரும்பியபடி ஏதேனும் பதவிக்கு வாய்ப்புண்டா?''”

"தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி அல்லது சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் பதவியைத் தர வேண்டும் என்று கேட்ட விஜயதாரணியிடம், அதற்கு வாய்ப்பில்லை என்று காங்கிரஸ் சொன்ன தால்தான், அவர் எல்.முருகன் மற்றும் பா.ஜ.க.வின் மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் ஆகியோர் வழியாக பா.ஜ.க.விற்குத் தாவினார். இதற்காக நடந்த டீலிங்கின்போது, என்னை எம்.பி.யாக்கி மத்திய அமைச்சராக அமர வைக்கவேண்டும். அதற்கு முன்பாக என்னை கட்சியின் தலைவராக்க வேண் டும். அப்போது தான் நான் காங் கிரசைப் பழி தீர்க்க முடியும் என்று சொன்னா ராம் தாரணி. அதற்கு முருகனும் அரவிந்த்மேனனும், "கட்சியில் இணையும் போதே இப்படிப்பட்ட கண்டிசன்களைப் போடாதீர்கள். அதை மோடியும் அமித்ஷாவும் ரசிக்க மாட்டார்கள். கொஞ்சம் காத்திருங்கள், எல்லாம் இயல்பாக நடக்கும். இப்போதைக்கு உங்களுக்கு கனமான ஸ்வீட் பாக்ஸ்கள் உண்டு' என்று சொல்லியிருக்கிறார்கள். வேறு வழியில் லாமல் இதற்குத் தலையசைத்திருக்கிறார் தாரணி. இதைத் தொடர்ந்தே அவர் பா.ஜ. க.வில் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் அவர் அங்கு எதிர் பார்த்த பதவிகள் கிடைக்குமா? என்பதற்கு உத்தரவாதம் இல்லை என்கிறது கமலாலயத் தரப்பு.''”

"தி.மு.க. கூட்டணியில் காங்கிர ஸோடு இன்னும் தொகுதிப் பங்கீடு முடியவில்லையே?''”

"ஆமாங்க தலைவரே, காங்கிரஸ் எதிர்பார்ப்பது ஒன்று. தி.மு.க. கொடுக்க நினைப்பது ஒன்று. அத னால் இழுபறி நீடிக்குது. இந்த நிலை யில் தி.மு.க. கூட்டணியில் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி யும், கொ.ம.தே.கவுக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டி ருக்கு. இக்கட்சிகளின் தலைவர்களான காதர்மொய்தீனும், கொங்கு ஈஸ்வர னும் தங்கள் கட்சிக்குத் தலா ஒரு ராஜ்யசபா சீட்டையும் கேட்டனர். இதனை தி.மு.க. தலைமை ஏற்க வில்லை. இந்த இரண்டு கட்சிகளின் சிட்டிங் எம்.பி. தொகுதியையே அக்கட்சிகளுக்கு ஒதுக்கியிருக்கிறது தி.மு.க. இதில் முஸ்லீம்லீக் கட்சி, அவர்களின் சொந்த சின்னத்திலும், கொ.ம.தே.க. தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிடுகின்றன. இந்த நிலையில் தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்திவரும் காங்கிரஸ், இந்தமுறை ராமநாதபுரம் தொகுதியை வாங்கவும் பகீதர முயற்சியில் இறங்கியது. ஆனால், அந்தத் தொகுதியை முஸ்லீம்லீக் மீண்டும் கொத்திக்கொண்டு போய், காங்கிரசுக்கு ஷாக் கொடுத்திருக்கிறது.''

"தந்தையின் இழப்பையும் தாங்கிக்கொண்டு பொதுநிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சரைப் பற்றி நெகிழ்ச்சியா பேசறாங்களே!''

"ஆமாங்க தலைவரே. செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் சாமிநாதனின் காங்கேயம் தொகுதி சென்னிமலை பகுதியில் குடிநீர், சாலை உட்பட மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பணிகள் துவக்கம் மற்றும் நூற்றுக்கணக்கான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்ற 23ஆம் தேதி காலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் தயாராகிக்கொண்டி ருக்கும்போது, கோவை மருத்துவமனையில் அவரது தந்தை பெருமாள்சாமி காலமானார் என்ற தகவல் வந்தது. அச்சூழலிலும்கூட, நலத்திட்ட உதவிகள் பெறுவதற்காகக் காத்திருக்கும் மக்கள் ஏமாற்றமடையக்கூடாதென அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உதவிகளை வழங்கிய பின்பே தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டிருக்கிறார். இச்செயல் தொகுதி மக்களை நெகிழச் செய்துள்ளது.”

"நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். ஜெ.வின் கொடநாடு பங்களாவில், பர்னிச்சர் தொடர்பான வேலைகளைச் செய்தவர், அங்கு அ.தி.மு.க.வில் மாவட்டப் பொறுப்பில் இருந்த சஜீவன். அங்கே க்ரைம் சம்பவங்கள் அரங்கேறியபோது, அதற்குத் தோதாக அவர்தான் பங்களா சாவியைக் கொடுத்தார் என்று சொல்லப்படுகிறது. தற்போது நீதிமன்றம், மீண்டும் க்ரைம் ஸ்பாட்டை ஆய்வு செய்வதற்காக, காவல்துறையினர், சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள், வழக்கறிஞர்கள் ஆகியோர் அடங்கிய ஒரு டீமை அமைத்திருக்கிறது. இந்தக் குழு, அரங்கேற்றப்பட்ட க்ரைம் நடவடிக்கைகள் பற்றி அங்கே இஞ்ச் பை இஞ்ச்சாக ஆராய்ந்து வருகிறது. இதன் முடிவில் பல பகீர் தகவல்கள் கிடைக்கலாம் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. அது கொடநாடு விவகாரத்தை மேலும் தீவிரப்படுத்தலாம் என்கிறார்கள்.''

fr

nkn280224
இதையும் படியுங்கள்
Subscribe