ல வகைகளிலும் எதிர்பார்ப்புகளையும் விறுவிறுப்பையும் உருவாக்கியுள்ளது தேர்தல் களம். அ.தி.மு.க. சைடில், முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை அ.தி.மு.க. அறிவித்ததில் பா.ஜ.க., பா.ம.க. கட்சிகளுக்கு உடன்பாடில்லை என்பது தொடர்ச்சியான பேச்சுகளால் தெரிய வருகிறது. ரஜினியை நம்பி நிறைவேறாததால் பா.ஜ.க தற்போது, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு முதல்வரை தேர்வு செய்வோம் என எடப்பாடி மீதான விருப்பமின்மையை வெளிப்படுத்துகிறது.

mm

இந்த நிலையில்,’""ரஜினியை வைத்துத்தான் நம்மை மிரட்டிக் கொண்டிருந்தனர். அந்த தடை நீங்கி விட்டது. அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி; கூட்டணிக்கான முதல்வர் வேட்பாளரும் அ.தி.மு.க.தான் என்பதை இனி நாம் அழுத்தமாக சொல்லலாம்'' என அமைச்சர்களுக்கு அட்வைஸ் செய்த கையோடு, ""அ.தி.மு.க.வை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன்தான் கூட்டணி'' என வெளிப்படையாகவே சொல்லி விட்டார் எடப்பாடி. கூட்டணி குறித்து டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் மத்திய அமைச்சர் அமீத்ஷா, தமிழக பா.ஜ.க.வின் மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி உள்ளிட் டோர் பங்கேற்ற ஆலோசனையில் விரிவாக விவாதிக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து பா.ஜ.க.வின் மேலிட தொடர்புகளில் விசாரித்தபோது, ""கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி 30 சதவீத வாக்குகளைத்தான் வாங்கியிருக்கிறது. கூட்டணிக் கட்சிகளில் வாக்குபலம் பங்கீடாகவில்லை. தற்போது, அ.தி.மு.க. கூட்டணியில் 40 அல்லது 45 தொகுதிகளில் போட்டியிட்டாலும் அதிகபட்சம் 5 சதவீத வாக்குகளைத்தான் பா.ஜ.க.வால் பெற முடியும். பா.ஜ.க.வுக்கு ஆதரவாக ரஜினியை வாய்ஸ் கொடுக்க வைப்பதாலும், அண்ணா மலை போன்ற இளைஞர் ஒருவரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி பா.ஜ.க. தனித்துப் போட்டியிட்டாலும் 10 சதவீதத் துக்கு அதிகமான வாக்குகளை நாம் பெறு வதற்கு வாய்ப்பு உண்டு என நம்புகிறோம்.

Advertisment

mm

10 சதவீத வாக்குபலம் இருந்தால், தேர்தலுக்குப் பிறகு மற்ற கட்சியினர் பா.ஜ.க.வில் சேருவார்கள். 2024 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமரின் (மோடி) ஆளுமையும் சேரும்போது 30 சதவீதத்தை நெருங்கி. 2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்சி யை கைப்பற்ற முடியும். மேற்குவங்கத்தில் இப்படித்தான் 2014-ல் 10 சதவீதத்தை தாண்டினோம். 2019-ல் 40 சதவீதத்தை எட்டி னோம். இப்போது 2021 சட்டமன்றத்தேர்தலில் ஆட்சியை கைப்பற்றக்கூடிய சூழல் பா.ஜ.க. வுக்கு இருக்கிறது. ரஜினி அரசிய லுக்கு வராத நிலையில் சர்வே எடுத்த மத்திய உளவுத்துறையும் தனித்து போட்டி என்கிற கான்செப்ட்டையே பா.ஜ.க. தலைமைக்கு தந்துள்ளது. இதனடிப் படையில்தான் அந்த ஆலோசனைக் கூட்டமே நடந்தது'' என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.

Advertisment

பா.ஜ.க. தலைமையில் பாமக, தேமுதிக, தமாகா, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி உள்ளிட்டவைகளை இணைத்து ஒரு கூட்டணியை உருவாக்குவதன் சாதக பாதகங்கள் குறித்தும் ஆலோசித்துள்ளனர் பா.ஜ.க. தலைவர்கள்.

அரசியலுக்கு ரஜினி வராததால் கூட்டணி கட்சிகளை பதம் பார்க்க எடப்பாடி துணிந்திருப் பதில், பா.ம.க. தலைமையும் அதிருப்தி அடைந்துள் ளது. 31-ந் தேதி இணைய வழியில் கூடிய பா.ம.க.வின் சிறப்பு பொதுக்குழுவில், கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை டாக்டர் ராமதாசிற்கு வழங்கியுள்ளது அதன்படி, எடப்பாடி பழனிச்சாமிதான் முதல்வர் வேட் பாளர் என்பது அ.தி.மு.க.வின் நிலைப்பாடு. அதற்கும் கூட்டணிக்கும் சம்மந்தமில்லை. கூட்டணியில் பாமக இருக்கிறதா? இல்லையா? என்பதை தேர்தல் நேரத்தில் அய்யா ராமதாஸ் அறிவிப்பார். கூட்டணி யின் ஒருங்கிணைப்புக் குழுதான் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை தெரிவிக்கும். பிப்ரவரியில்தான் எப்படிப்பட்ட கூட்டணி அமையும்; யார், யார் எங்கிருப்பார்கள் என தெரியும்'' என்கிறார் கட்சித் தலைவர் ஜி.கே.மணி, டாக்டர் ராமதாஸின் குரலாக.

எடப்பாடிதான் முதல்வர் வேட்பாளர் என்பதை ஏற்பதில் பா.ஜ.க., பாமக தலைமைகளுக்கு உள்ள தயக்கமும் தி.மு.க.வுக்கு இணையான எண்ணிக்கையில் அ.தி.மு.க. போட்டி யிட வேண்டும் என எடப்பாடி நினைப்பதால், கூட்டணிக் கட்சிகளுக்கு சீட் குறையும் என்பதாலும், அ.தி.மு.க கூட்டணி இன்னும் இறுதி முடிவுக்கு வரமுடியவில்லை. இறுதி செய்ய முடியாமல் தவித்து வருகிறார் எடப்பாடி!

தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளைப் பொறுத்த வரை, தங்களின் அங்கீகாரத் திற்கு தனி சின்னத்தில் போட்டியிடுவதில் கவனமாக உள்ளனர். 2016 சட்டமன்றத் தேர்தலில் தனிச் சின்னத்தில் நின்ற கட்சிகளின் தோல்வி யும் அ.தி.மு.க வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்தது என்பதால், தி.மு.க. சின்னத்தில் போட்டியிட இம்முறை அறிவாலயம் வலியுறுத்துகிறது. இதனால் தோழமைக் கட்சிகளிடத்தில் அதிருப்திகள் எதிரொலிக்கின்றன.

இதுகுறித்து தி.மு.க. கூட்டணி கட்சிகளான ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் தரப்பில் விசாரித்தபோது, ""இந்த தேர்தலில் 180 இடங்களுக்கு குறைவில்லாமல் திமுக போட்டியிட வேண்டும் என திட்டமிட்டுள்ள மு.க.ஸ்டாலின், தோழமைக் கட்சிகளுக்கு சொற்ப எண்ணிக்கையில் சீட் ஒதுக்கவே நினைத்தார். தவிர, எங்களை உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட வலியுறுத்தினர். இதனை எங்களால் ஜீரணிக்க முடியவில்லை.

நாங்கள் எதிர்பார்ப்பது இரட்டை இலக்க சீட் எண்ணிக்கையும், எங்கள் சின்னத்தில் போட்டியிடுகிற சுதந்திரமும்தான். சமீபத்தில் ஸ்டாலினை சந்தித்த வைகோ இதனை தெரிவித் திருக்கிறார். சிறுத்தைகளின் நிலைப்பாடும் அதுதான் என்பதை திருமாவளவனும் வெளிப் படையாகக் கூறியுள்ளார். தோழமையின் பலத்தை தி.மு.க. உணர்ந்திருக்கும்'' என்கிறார்கள் மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்.

கூட்டணிக் கட்சிகள் தனிச் சின்னம் கேட்பது தவறில்லை என தி.மு.க பொதுச்செயலாளர் துரை முருகன் கூறியுள்ள நிலையில், பெயரைத் தவிர்க்கச் சொல்லி நம்மிடம் பேசிய முன்னணி தலைவர்கள், “""தி.மு.க.தான் ஆட்சி அமைக்கும் என கள நிலவரம் சொல்லும் சூழலில், தோழமைக் கட்சிகளுக்கு அதிக சீட்டுகளைக் கொடுப் பதால், வெற்றிவாய்ப்பில் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆலோசிக்காமல் இருக்க முடியாது. எல்லாவற்றையும் சுமூகமாக ஸ்டாலின் கையாள்வார்'' என்கின்றனர்.

சென்னையில் வருகிற 6-ந்தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சிறுபான்மையினர் பிரிவு மூலம், முஸ்லீம் கட்சிகளையும் அமைப்புகளையும் ஒன்றி ணைக்கும் இதயங்களை இணைப்போம் என்கிற தேர்தல் மாநாட்டிற்கு பா.ஜ.க.வின் பீ டீம் என வர்ணிக்கப்படும் ஏ.ஐ.எம் .ஐ.எம். கட்சியின் தலைவர் ஒவைசியை தி.மு.க. அழைத் திருப்பதாக வெளியான தகவல் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. சிறுபான்மை யினர் நலப் பிரிவுக்குப் பொறுப்பு வகிக்கும் மஸ்தான் உடனடியாக அதனை மறுத்து அறிக்கை வெளியிட்ட நிலையில், அது குறித்த விவாதங்கள் தொடர்கின்றன.

தமிழகத்தில் உள்ள உருது பேசும் முஸ்லிம்களின் வாக்குகள் சிதறக்கூடாது என்பதால்தான் ஓவைசிக்கு ஸ்டாலின் விருப்பப்படி தி.மு.க. அழைப்பு விடுத்தது என்ற தகவல் திமுக கூட் டணியிலுள்ள முஸ்லீம் லீக், ம.ம.க. கட்சிகளை அதிருப்தியடைய வைத் தது.

stalin

இது குறித்து ம.ம.க. தலைவர் ஜவாஹிருல் லாவிடம் நாம் பேசியபோது, ""பீகார், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் போன்ற சில மாநிலங்களில் பாரம்பரியமான முஸ்லீம் அரசியல் கட்சிகள் இல்லை என்பதால் ஒவைசி அங்கு சில இடை வெளிகளை ஏற்படுத்தியிருக்கிறார். தமிழகத்தின் நீண்ட நெடிய வருடங்களாக பாரம்பரியமாக முஸ்லீம் கட்சிகள் கோலோச்சுகின்றன. ddஇதனைக்கடந்து எந்த தாக்கத்தையும் தமிழகத்தில் ஒவைசி ஏற்படுத்திட முடியாது. தமிழக அரசியல் களத்தில் தமிழ் முஸ்லீம்கள், உருது முஸ்லீம்கள் என எந்த வேறுபாடும் கிடையாது. முஸ்லிம் லீக் தலைவர்களில் அப்துல் லத்தீப் உருது முஸ்லிம் என்றாலும் தமிழ் முஸ்லீமான அப்துல் சமதுக்குத்தான் உருது பேசுவோரிடம் ஆதரவு அதிகமாக இருந்தது. தமிழகத்தில் மொழி சார்ந்து முஸ்லிம்கள் அரசியல் வேறுபாட்டை கொண்டிருக்கவில்லை என்பதுதான். அதனால் தமிழகத்தில் ஒவைசி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்திட முடியாது'' என்கிறார் மிக அழுத்தமாக.

களநிலவரப்படி முஸ்லிம் வாக்குகள் பெருமளவில் தி.மு.க. கூட்டணிக்கே கிடைக்கும் என்பதால், தமிழகத்தில் ஓவைசி கால்பதிக்க பா.ஜ.க .விரும்புகிறது. அதன் விருப்பத்தை தி.மு.க மூலம் நிறை வேற்ற முயற்சிக்கிறார்கள் என்கிறார்கள் பாரம்பரிய முஸ்லிம் அமைப்பினர். அத்துடன், தி.மு.க நடத்தும் சிறுபான் மையினருக்கு ஆதரவான மாநாட்டைக் காரணம் காட்டி, அதனை இந்து விரோத கட்சியாக பிரச்சாரம் செய்யவும் பா.ஜ.க. தரப்பு வியூகம் வகுக்கிறது.

தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் பல அதிரடிகளை திமுகவுக்கும் அ.தி.மு.க.வுக்கும் கொடுக்க வியூகங்களை வகுத்து வருகிறது பா.ஜ.க..

-இரா.இளையசெல்வன்