"ஹலோ தலைவரே, அரசு ஊழி யர்களின் கோரிக்கைகள் பலவற்றையும் நிறைவேற்றுவதாக அரசு வாக்குறுதி கொடுத்திருக்கு.''”

"ஆமாம்பா, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ மாநாட்டில் கலந்துக்கிட்ட முதல்வர் ஸ்டாலின், அவர்களின் கோரிக் கைகள் நிறைவேற்றப்படும்ன்னு அறிவிச் சிருக்காரே.''”

ff

"10-ந் தேதி சென்னை தீவுத்திடலில் நடந்த மாநாட் டில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் எல்லாம் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும் தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 60 வயது வரை பணியில் தொடரலாம் என்றும் அறிவித்தார். மேலும், அக்டோபர் 15-ந் தேதி முதல் இடமாறுதல் குறித்த கலந்தாய்வு வெளிப்படையாக நடக்கும் என்று அவர் சொன்னது நம்பிக்கை கொடுத்திருக்கு. ஆனாலும் இப்போதுள்ள அரசு ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை குறித்து முதல்வர் எதையும் அறிவிக்காததால், சிலர் பாதியிலேயே மன வருத்தத்தோடு மாநாட்டில் இருந்து வெளியேற, அவர்களை நிர்வாகிகள் சமாதானப்படுத்தினர்.''”

"செய்தித்துறையில் சலசலப்பு தெரியுதே?''”

Advertisment

rr

"ஆமாங்க தலைவரே, கடந்த 9-ந் தேதி சென்னை அசோகா ஓட்டலில் செய்தி, மக்கள் தொடர்புத் துறையின் கூடுதல் இயக்குநர் அன்புச் சோழனின் மகள் திருமணம் நடந்தது. எடப்பாடியின் உறவினரான துறையின் முன்னாள் கூடுதல் இயக்குநர் எஸ்.பி.எழிலழகன் அந்தத் திருமணத்திற்கு வந்தார். இவர், தி.மு.க. ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்களை வேண்டும் என்றே கடந்த ஆட்சிக்காலத்தில் ஆண்டு கணக்கில் கட்டாயக் காத்திருப்புப் பட்டியலில் வைத்தவர் என்பதோடு, தி.மு.க.வினர் பலரைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்தவரும் ஆவார். அப்படிப்பட்டவரை துறை யின் இணை இயக்குநர் செல்வராஜ் வரவேற்று மணமேடைக்கு அழைத்துச் சென்று கடைசிவரை இருந்து வழியனுப்பி வைத்திருக்கிறார். இந்தத் திருமணத்திற்கு பணியிலிருந்து ஓய்வுபெற்ற செய்தித்துறையின் அ.தி.மு.க. அதிகாரிகள் பலரும் வந்திருந்தனர். அவர்கள் எழிலழகனிடம் விசுவாசத் தைக் காட்டினார்கள். கோட்டை ரகசியங்கள் எல்லாம் அ.தி.மு.க. எடப்பாடி, பா.ஜ.க. அண்ணாமலை உள்ளிட்டவர்களுக்கு எப்படிப் போகுதுங்கிறது புரிஞ்சுது. இதையெல்லாம் மாநில உளவுத்துறை உன்னிப்பாக கவனித்து மேலிடத் திற்கு ரிப்போர்ட் பண்ணியிருக்கிறதாம்.''”

"டுபாக்கூர் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருத்தர் வசமாகச் சிக்கி இருக்காரே?''”

"ஆமாங்க தலைவரே, சேலத்தை சேர்ந்த சசிகுமார் என்பவர், எடப்பாடியின் வலது கரமான சேலம் இளங்கோவனுக்கு நெருக்கமானவர். அவர், மத்திய அரசில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருக்கிறேன் என்று சொல்லி, கடந்த 7 ஆண்டுகளாக தமிழக அரசு அதிகாரிகளையே நம்பவைத்ததுடன், 130-க்கும் மேற்பட்டவர் களிடம், அரசு வேலை வாங்கித் தருகிறேன், பதவி உயர்வு வாங்கித் தருகிறேன், தேசிய மருத்துவ கவுன் சிலின் உறுப்பினர் பதவி வாங்கித் தருகிறேன், தமிழக அரசில் கன்ஃபர்ட் ஐ.ஏ.எஸ். பதவி வாங்கித் தருகிறேன் என்றெல்லாம் சொல்லி, பல கோடி ரூபாய்களை வசூலித்து விழுங்கி விட்டா ராம். சென்னை நெற்குன் றத்தில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வசிக்கும் குடியிருப்பில் வாடகைக்கு சசிகுமார் குடியிருந்ததால் அதிகாரிகளும் டாக்டர்களும், இவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி என நம்பி விட்டார்களாம். சென்னை போரூரில் உள்ள பிரபல மருத்துவக்கல்லூரி பேராசிரியாக இருந்து ஓய்வு பெற்ற ஒரு டாக்டரே, சசிகுமாரிடம் 70 லட்சம் ரூபாய் கொடுத்து நெற்றியில் நாமத்தை வாங்கி இருக்கிறார் என்கிறார்கள்.''”

"இவருக்கு உடந்தையாக இருந்த அதிகாரி கள் மீது நடவடிக்கை எதுவும் இல்லையா?''”

"சொல்றேங்க தலைவரே, இந்த டுபாக்கூர் சசிகுமார் தங்களை ஏமாற்றி மோசடி செய்து விட்டதாகப் பலரும் காவல்துறையிடம் போய் பரிதவித்து நிற்க, ஷாக்கான போலீஸார் டுபாக்கூர் சசிகுமாரை தேடிப் பிடித்துக் கைது செய்திருக்கிறார்கள். அவரிடம் தீவிர விசாரணை நடத்திய போது, சசிகுமாரை ஐ.ஏ.எஸ். அதிகாரி என நம்பிய தமிழக செய்தித்துறை அதிகாரிகள்தான், அவரைப் பல்வேறு வகையில் விளம்பரப்படுத்தி நிறைய நபர்களை அறிமுகமும் செய்து வைத்தார்களாம். விளம்பர ஏஜென்சி நடத்திவரும் செழியன் என்பவர், சசிகுமாரின் பி.ஆர்.ஓ. என்று சொல்லிக்கொண்டு, சசிகுமாருக் காக எல்லா வேலைகளையும் பார்த்திருக்கிறார். இந்த நிலையில், போலீஸ் விசாரணையில் இதையெல்லாம் சசிகுமார் ஒப்பித்திருப்பதால், சசிகுமாரோடு நெருக்கமாக இருந்த செய்தித்துறை அதிகாரிகள் தொடங்கி, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வரை பலரும், நாமும் போலீஸ் நடவடிக்கைக்கு ஆளாக வேண்டி வருமோ என பதட்டத்தோடு இருக்கிறார்களாம்.''”

"மின்கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்துவிட்டதே?''”

Advertisment

rr

"இன்றைய சூழலில், சராசரியாக ஒரு நடுத்தர குடும்பத்தினர் வீட்டில் மின்சாரப் பயன்பாடு என்பது மாதத்திற்கு 500 யூனிட் வரை இருக்கிறது. 2 மாதங்களுக்கு ஒருமுறைதான் மின் ரீடிங் எடுக்கப்படுவதால் நடுத்தரக் குடும்பத்தின் மின் பயன்பாடு 1000 யூனிட் என்று வைத்துக்கொள் வோம். இந்தநிலையில், 34 சதவீதம் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டிருப்பதால், மின்கட்ட ணம் ஏற்கனவே வந்த பில்லில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் அதிகமாகிறது. இதனால் நடுத்தர வர்க்கத்தினர் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். ஏற்கனவே, தனி நபரின் வருமானத்தில் கடந்த 3 ஆண்டுகளாக மாதச்சம்பளம் உயர்த்தப்படவில்லை. மாறாக, பலருக்கு சம்பளமும் குறைக்கப்பட்டு விட்டது. போதாக்குறைக்கு அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்தின் விலைகளும் கடந்த 1 வருடத்தில் பல மடங்கு அதிகரித்துவிட் டன. இதேபோல் வீட்டு வாடகையும் 20 சதவீதம் வரை உயர்ந்துவிட்டது. மருத்துவ செலவுகள் என்று எடுத்துக்கொண்டால் குறைந்தபட்சம் 40 சதவீதம் அதிகரித்துள்ளது. இவ்வளவு சுமைகளுடன் இப்போது மின் கட்டணம் உயர்வுச் சுமையும் நடுத்தர வர்க்கத்தினரின் மீது ஏறினால், நிலைமை என்ன ஆகும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.''”

"சசிகலாவும் அ.தி.மு.க. மாஜி மந்திரி வைத்திலிங்கமும் சந்திச்சிருக்காங்களே?''”

rr

"ஆமாங்க தலைவரே, தஞ்சை பகுதியில் சுற்றுப்பயணத்தில் இருந்த சசிகலாவும், மாஜி வைத்திலிங்கத்தின் காரும் ஓவல்குடிப் பகுதியில் எதிரும் புதிருமாக சந்தித்துக்கொள்ள, அப்போது சசிகலாவைக் கண்டு காரில் இருந்து இறங்கிச் சென்று, சசிக்கு வைத்தி வணக்கம் சொன்னாராம். அப்போது ஒருவர் இன்று அண்ணனுக்குப் பிறந்தநாள் என்று சசியிடம் சொல்ல, உடனே அவர் கைவசம் இருந்த சாக்லெட்டைக் கொடுத்து, வைத்திக்கு வாழ்த்து சொன்னாராம். இப்படியாக அது எதிர்பாராத சந்திப்பு என்று அவர்கள் தரப்பு சொன்னாலும், இது திட்டமிட்ட சந்திப்பு என்கிறார்கள் விபரமறிந்தவர்கள். ஒரு காலத்தில் சசிகலாவைக் கடுமையாக விமர் சித்த வைத்தியை, சசிகலா ஓ.பி.எஸ்.சைத் தன் பக்கம் கொண்டுவந்தபோதே கொண்டுவந்துவிட்டார். எனினும் பொது வெளியில் வைத்தி தன்னிடம் இணக்கமாக இருக்கிறார் என்று காட்ட விரும்பியே, இப்படியொரு செட்டப் சந்திப்பை சசி கலா சாக்லெட் சகிதம் நடத்தியிருக்கிறார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.''

"டி.டி.வி.தினகரனின் ரோல் எப்படி இருக்கிறது?''”

rr

"அவர் அ.ம.மு.க. என்று தனியாகக் கட்சி நடத்தி, சசிகலாவையே எகிறியடித்துச் செல்வதுபோல் நடந்துகொண்டாலும், அதெல்லாம் உண்மையில்லை என்கிறார்கள் சசி தரப்பினர். தினகரன் ஒன்றும் இல்லாத ஒரு கேரக்டர். அவருக்கு பின்னணியில் இருப்பது சசிகலாதான். அவ ருக்காகத்தான் முக்குலத்தோர் தினகரன் பக்கம் நிற்கிறார்கள். அவர் கட்சி நடத்துவதற்கும் மற்ற செலவினங்களுக்கும் சசிகலாவிடம் இருந்துதான் நிதி போகிறது என்றும் கூறுகிற இவர்கள், தினகரன் உண்மையிலேயே சசியை எதிர்க்கத் துணிந்தால், அவ ருக்கு நிதி வரத்து நின்று விடும் என்றும் புன்னகைக்கிறார்கள். இதற்கிடையே சசிகலா பல்வேறு முயற்சிகளில் இறங்கி வருகிறாராம். அதன் பயனாக மாஜி ராஜேந்திர பாலாஜி அவர் பக்கம் சாய்ந்துவிட்டார் என்றும், விரை வில் மாஜி உதயகுமாரும் சாய்வார் என்றும் அவர்கள் அடித்துச் சொல்கிறார்கள். அதேபோல் மாஜிக்களான தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட பலரும் சசிகலாவிடம் நட்பு பாராட்டிவருவதாகவும் சொல்கிறார்கள்.''

"தேசிய காங்கிரஸில் ஏற்பட்டிருக்கும் கலாட்டா ஓயவில்லையே?''”

"அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் நடக்கிறது. இதில், சோனியா குடும்பத்தின் சார்பில் ராஜஸ்தான் முதல்வர் அசோக்கெலாட் போட்டியிட இருக்கிறார். இவரை எதிர்த்து கேரளாவைச் சேர்ந்த எம்.பி. சசிதரூர் களத்தில் குதிக்கப் போகிறார். இந்த நிலையில், தேர்தலில் ஓட்டுப் போட அதிகாரமிக்க வாக்காளர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என சசிதரூர் கோரிக்கை வைத்தார். ஆனால், அதை ஏற்க மறுத்து வந்தது அகில இந்திய காங்கிரஸ் தலைமை. இந்த நிலையில், தேர்தல் நெருங்குவதால், வாக்காளர்கள் யார், யார் என்பதே தெரியாமல் மர்மமாக இருக்கிறது என்று மூத்த தலைவர்கள் பலரும் ராகுல்காந்தி மீது கடும் கோபத் தில் இருந்தனர். வாக்காளர் பட்டியலை வெளியிடாமல் தேர்தல் நடத்துவதை எதிர்த்து, கட்சித் தலைமை அலுவல கத்தில் தர்ணா போராட்டம் நடத்த அதிருப்தித் தலைவர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள். அவர்கள் இப்போது, இது தொடர்பாக தலைமைக்கு முறைப்படி கடிதம் எழுதிக் கொண்டி ருக்கிறோம். அதன் பிறகும் வாக்காளர் கள் பட்டியலை வெளியிடவில்லை எனில் கட்சித் தலைமையை எதிர்த்து தர்ணா போராட்டத்தை நடத்துவோம் என்கிறார்கள் காட்டமாய்.''”

"கடிதத்தை அனுப்பிவிட்டார்களா?''”

"இப்போதுதான் காங்கிரஸ் எம்.பி.க்களான மனீஸ் திவாரி, சசி தரூர், அப்துல் காலித், பிரத்யூத், கார்த்தி சிதம்பரம் ஆகிய 5 எம்.பி.க்கள் கையெ ழுத்திட்ட ஒரு கடிதம் காங்கிரஸின் தேர்தல் அதிகாரியான மதுசூதனன் மிஸ்திரிக்கு அனுப்பி இருக்கின்றனர். அதில், வாக்காளர் பட்டியலை கட்சியின் இணையதளத்தில் முறைப்படி வெளி யிட்டு ஜனநாயகமாக தேர்தல் நடத்தப்படுவதை உறுதிப்படுத்துங்கள் என்று கேட்டுக்கொண்டிருக் கிறார்கள். இது குறித்து, கட்சியின் பொதுச்செய லாளர் கே.சி.வேணுகோபாலிடம் விவாதித்துள் ளார் மதுசூதனன் மிஸ்திரி. இதனால் காங்கிரஸ் கட்சியின் வாக்காளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி இல்லையெனில், கட்சித் தலைமைக்கு கடும் நெருக்கடி தர அதிருப்தித் தலைவர்கள் தயாராக இருக்கிறார்கள்.''”

"நானும் என் காதுக்கு வந்த ஒரு செய்தியைப் பகிர்ந்துக்கறேன். முன்னாள் கேரள கவர்னரும் ஓய்வுபெற்ற நீதிபதியுமான சதாசிவம், தனக்காக களமிறங்கத் தயார் நிலையில் இருப்பதாலும், கட்சி தன்பக்கம் இப்போதே வந்துவிட்ட தோரணையில் எடப்பாடி இருந்தாலும், ஓ.பி.எஸ். இன்னும் தெம்பாக இருக் கிறாராம். காரணம், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஓ.பி.எஸ்.ஸிடம், அ.தி.மு.க.வின் தலைமையைக் கைப்பற்றும் அவரது போராட் டத்திற்கு ஆதரவாக நீதிமன்றம் தொடங்கி அனைத்திலும் அவருக்குச் சாதகமான நிலையை ஏற்படுத்தித் தருகிறேன் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறாராம்.''”

___________________

rr

செப்டம்பர் 12, திங்களன்று, விளையாட்டு வீரர்களுக்கு உள்ள சந்தேகங்களைக் கேட்டறிய "ஆடுகளம்' உதவி மையத்தை, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டா லின் தொடங்கிவைத்தார். 2018-19, 20-21-ஆம் ஆண்டுகளுக்கான விளையாட்டு விருதாளர்களுக்கு பரிசுத்தொகையை வழங்கிவிட்டுப் பேசிய முதல்வர், "கடந்த 3 மாதங்களில் 3வது முறையாக நேரு விளையாட்டு அரங்கிற்கு நான் வந்துள்ளேன். இதிலிருந்தே விளை யாட்டுத் துறை எப்படிச் செயல்படு கிறது என்று தெரிந்து கொள்ளலாம். அமைச்சர் மெய்யநாதன், ஸ்போர்ட்ஸ் நாதனாகவே மாறிவிட்டார். கபடி, சிலம்பம் ஆகிய பாரம்பரியப் போட்டிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. அக்டோபரில் மாவட்ட அளவிலும், ஜனவரியில் மாநில அளவிலும் முதல்வர் கோப்பைக்கான போட்டிகள் நடைபெறும்'' என்று தெரிவித்தார்.

_____________

இறுதிச் சுற்று!

மாமனிதர் வைகோ

rr

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் 56 ஆண்டுகால பொது வாழ்க்கையை உலகுக்குச் சொல்லும் வகையில், "மாமனிதன் வைகோ -தி ரியல் ஹீரோ'’எனும் ஆவணப் படத்தை உருவாக்கியிருக்கிறார் வைகோவின் மகனும் ம.தி.மு.க.வின் தலைமைக் கழக செயலாளருமான துரை வைகோ. இந்த ஆவணப்படத்தை சென்னை சத்யம் தியேட்டரில் 11-ந் தேதி ஏற்பாடு செய் திருந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு ரிலீஸ் செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். கவிப்பேரரசு வைரமுத்து முன்னிலை வகிக்க, சுமார் 1 மணிநேரம் 20 நிமிடங்கள் ஓடும் அந்த ஆவணப் படம் விழாவில் ஒளிபரப்பப்பட்டது. ஆவணப் படத்தில், வைகோவின் அரசியல் வாழ்க்கை, போராட்டங்கள், மேடை பேச்சுகள் என அனைத்தும் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டிருந்தன. தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் கொடுத்த புகாரின் மீது நமது ஆசிரியர் கைது செய்யப்பட்ட சமயத்தில் அதை எதிர்த்து முதல் குரல் கொடுத்ததுடன் "ஆசிரியரை விடுதலை செய்' என வைகோ நடத்திய தர்ணா போராட்டமும் ஆவணப் படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், சித்தரிக்கப்படாத நிஜ ஹீரோ அண்ணன் வைகோ என்று புகழுரைத்ததுடன், தி.மு.க.வுக்கும் வைகோவுக்குமான பிணைப்பு, வைகோ மீது, தான் வைத்திருந்த மரியாதை, கலைஞரை வைகோ வைத்திருந்த மாண்பு உள்ளிட்ட பல சம்பவங்களை நினைவுகூர்ந்தார். ஆசிரியர் கி.வீரமணி, பெரியவர் நல்லகண்ணு, கே.எஸ். அழகிரி, திருமாவளவன், ஜவாஹிருல்லா, வேல்முருகன், முத்தரசன், பாலகிருஷ்ணன், காதர்மொய்தீன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் விழாவில் கலந்துகொண்டு வைகோவின் சிறப்பியல்பு களையும் அவருடன் தங்களுக்கு இருக்கும் தொடர்புகளையும் நினைவு கூர்ந்தது பிரமிப்பாக இருந்தது. ஆவணப்படத்தைத் தயாரிக்கும் போது பலமுறை அழுதுவிட்டேன் என்று துரைவைகோ பேசியது நெகிழ்ச்சியாக இருந்தது. ஏற்புரை நிகழ்த்திய வைகோ, மாமனிதர்கள் யார் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்தது விழாவின் ஹை-லைட்!

-இளையர்