ம்.ஜி.ஆரால் 1972-ல் துவக்கப்பட்டு ஜெயலலிதாவால் 2016-வரை பாதுகாக்கப்பட்ட அ.தி.மு.க.வுக்கு அக்டோபர் 17-ந் தேதி பொன்விழா பிறந்தநாள். ஓராண்டுக்கான கொண்டாட்டம் பற்றி ஓ.பி.எஸ்.சும், எடப்பாடியும் கூட்டாக அறிவித்திருக்கிறார்கள். ஆலோசனைக் கூட்டமும் நடக்கவிருக்கிறது. இதற்கிடையே, பொன்விழா ஆண்டில் அ.தி.மு.க.வை கைப்பற்றுவேன் என சூளுரைத்திருக்கிறார் சசிகலா.

sasi

அ.தி.மு.க.மற்றும் அ.ம.மு.க.வின் முக்கிய நிர்வாகி களிடம் கடந்த புதன்கிழமை கலந்துரையாடியிருக்கும் சசிகலா, சில அசைன்மெண்டுகளை அவர்களுக்கு கொடுத் துள்ளார். அது குறித்து சசிகலா தரப்பில் விசாரித்தபோது, "சின்னம்மா சசிகலாவால் நலமும் வளமும் பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிலர், பணி ஓய்வுக்குப் பிறகும் சின்னம்மா வுடன் தொடர்பில் தான் இருக்கிறார்கள். ஆலோசனைகளை வழங்குகிறார்கள். அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு குறித்து சமீபத்தில் அவர்களுடன் சசிகலா விவாதித்திருக்கிறார்.

அப்போது "தீவிர அரசியலிலிருந்து விலகுவதாக சட்ட மன்றத்தேர்தல் சமயத்தில் அறிவித்துவிட்டு , தேர்தலுக்குப் பிறகு அதனை வாபஸ் பெறும் வகையில் நடந்துகொண்டீர்கள். கட்சியை கைப் பற்றுவேன்; அ.தி.மு.க. நம்மிடம் வரும் என்றெல்லாம் அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் பேசிய ஆடியோக்களை வெளியிட்டீர்கள். அந்த பேச்சு உங்கள் விசுவாசிகளிடம் ஒருவித நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆனால், சில நாட்கள் பரபரப்புக்கு பிறகு அதுவும் ஓய்ந்து விட்டது. நீங்களும் அமைதியாகிவிட்டீர்கள். அரசியலில் அமைதியாக இருப்பது பலவீனம். உண்மையிலேயே அரசியலில் ஈடுபடுவதாக இருந்தால் உங்களின் மௌனத்தை கலைத்துவிட்டு வெளியே வாருங்கள் என அட்வைஸ் செய்திருக்கிறார்கள் அந்த அதிகாரிகள்.

Advertisment

இதனையடுத்து ஒரு முடிவுக்கு வந்த சின்னம்மா, கட்சியின் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு, "கொரோனா கட்டுப்பாடுகளால்தான் நான் அமைதியாக இருந்தேன். இனி அப்படி இருக்கமாட்டேன். அ.தி.மு.க.வின் பொன்விழா ஆண்டு என்பதால் விமர்சையாக செய்ய வேண்டும். நான் அமைதியாக இருப்பதை பலவீனமாகிவிட்டதாக துரோகிகள் (எடப்பாடி உள்ளிட்டவர்கள்) நினைக்கிறார்கள். "நான் யார் என்பதை கட்சியின் பிறந்தநாளில் காட்டப்போகிறேன்' என சொல்லி சில முடிவுகளை எடுத்துள்ளார் சின்னம்மா சசிகலா'' ‘’ என்று சுட்டிக்காட்டினார்கள்.

sasi

தனது மௌனத்தை கலைக்க முடிவு செய்திருக் கும் சசிகலா, அ.தி.மு.க.வின் பிறந்தநாளில் (அக்டோபர் 17-ந் தேதி) ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்துவதாக முடிவு செய்தார். ஆனால், அன்றைய தினம் ஓபிஎஸ்., இ.பி.எஸ். உள்ளிட்ட அ.தி.மு.க. தலைவர்களும் ஜெயலலிதா சமாதிக்கு வருவார்கள். இரு தரப்புக்கும் மோதல் வரலாம் அல்லது சசிகலா செய்தியைவிட அ.தி.மு.க. தலைவர்களின் செய்தியை ஊடகங்கள் பெரிதாக பிரம்மாண்டப்படுத்தலாம். அதனால், முதல்நாளே (அக்டோபர் 16-ந்தேதி) ஜெயலலிதாவின் நினைவிடத் துக்கு செல்வோம் என தீர்மானித்தார் சசிகலா.

Advertisment

மறுநாள் கட்சியின் பிறந்தநாளில் தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்துக்கும், ராமாபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். வாழ்ந்த இல்லத்துக்கும் செல்வது என முடிவு செய்யப்பட்டது. ராமாபுரத்தில் எம்.ஜி.ஆர். இல்ல வளாகத்திலிருக்கும் எம்.ஜி.ஆர். சிலைக்கு (சசிகலா அமைத்தது) மாலை அணிவித்து மரியாதை செய்துவிட்டு, அதே வளாகத்திலுள்ள காது கேளாதோர் பள்ளிக் குழந்தைகளுக்கு உணவளித்து சில நலத்திட்ட உதவிகள் வழங்கவும் முடிவு செய்திருக்கிறார்.

சிறையிலிருந்து இந்த வருடம் துவக்கத்தில் விடுதலையாகி சென்னைக்கு வந்த அவர், வீட்டிற்கு செல்வதற்கு முன்பு ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு சென்று வழிபடுவார் என சொல்லப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை. எடப்பாடி உள்ளிட்ட அ.தி.மு.க. பெருந்தலைகள் எல்லோரும் தன்னை சந்திக்க வருவார்கள்; அவர்களுடன் சென்று ஜெயலலிதா நினைவிடத்தை வழிபடலாம் என அவர் போட்ட மனக்கணக்கும் பிழையாகிப் போனது. சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியையும் அ.தி.மு.க. இழந்ததால் சசிகலாவும் அமைதி யானார். ஆடியோக்களை ரிலீஸ் செய்து தற்காலிக பரபரப்பை ஏற்படுத்தியதைத் தவிர வேறு எதையும் சசிகலாவால் செய்ய முடியவில்லை. இப்படிப்பட்ட சூழலில்தான் மீண்டும் லைம்லைட்டிற்கு வரத் துடிக்கிறார் சசிகலா.

சிறைக்கு செல்வதற்கு முன்பு ஜெய லலிதா நினைவிடத்தில் சத்தியம் அடித்து சில சபதங்களை எடுத்த சசிகலா, அதை நிறை வேற்ற உறுதிகொள்ளும் வகையில் ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்கிறார். அதற்கான ஏற்பாடுகள் ரகசியமாக நடந்துவருகின்றன. தி.நகர் மற்றும் ராமாவரம் நிகழ்வுகளை ஒருங் கிணைக்கும் பணிகளை அ.ம.மு.க. வைத்திய நாதனிடம் ஒப்படைத்துள்ளார் சசிகலா.

ஜெயலலிதா நினைவிடத்தில் வணங்கி மீண்டும் தனது அரசியலை துவங்கும் சசி, கட்சியின் பொன்விழா ஆண்டில் அ.தி.மு.க.வை கைப்பற்ற, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. நிர்வாகிகளை சந்திக்கும் பயணத் திட்டம் வகுக்கப்படவிருக்கிறது. கொரோனா நெருக்கடிகளாலும் கட்டுப்பாடுகளாலும் ஒத்தி வைக்கப்பட்டிருந்த அவரது சுற்றுப்பயணம் இந்த ஆண்டில் துவங்குகிறது.

இதுபற்றி எடப்பாடி உள்ளிட்ட அ.தி. மு.க.விலுள்ள சசிகலா எதிர்ப்பு தலைவர்கள் அலட்டிக்கொண்டதாகத் தெரியவில்லை. அதனால் "சசிகலாவின் வருகை புயலாக மையம் கொள்ளுமா? புஸ்வாணமாகுமா? அல்லது வரவேமாட்டாரா? என்பதெல்லாம் விரைவில் தெரியும்' என்கிறார்கள் அ.தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகள்.