"ஹலோ தலைவரே, தமிழகத்தில் தேர்தல் முடிந்த நிலையிலும் கூட பரபரப்பான செய்திகளுக்குப் பஞ்சமே இல்லை.''”
"ஆமாம்பா, நடிகர் திலகம் குடும்பத்திற்கே கூலிப்படை யினர் மிரட்டல் விடுத்திருப்ப தாகத் தகவல் வருதே?''”
"ஆமாங்க தலைவரே, நடிகர் திலகம் சிவாஜிகணேச னின் குடும்பம், சென்னை தி.நகரில் உள்ள அவரது அன்னை இல்லத்தில் வசித்து வருகிறது. சிவாஜியின் மூத்த மகனான நடிகர் ராம்குமார், தன் மகன் நடிகர் துஷ்யந்த்தை வைத்துப் படம் தயாரிப்பதற்காக வெளியே கடன் வாங்கியிருக் கிறார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருந்துவரும் நிலையில், தமிழ்நாடு புரடியூசர்ஸ் கவுன்சிலிலும் ராம் குமார் மீது புகார் கொடுக்கப்பட்டிருக் கிறது. இந்த நிலையில், அண்மையில் அன்னை இல்லத்துக்குள் அத்து மீறி நுழைந்த கூலிப் படையினர், கடனை உடனடியாகத் திருப்பிக் கொடுக்கவில்லை என்றால் உன் மகனான நடிகர் துஷ்யந்த்தையும், மரு மகளையும் கடத்திக்கொண்டு போய்விடு வோம் என்று ராம்குமாரைக் கடுமையாக மிரட்டி எச்சரித்திருக்கிறார்கள். இதில் மிரண்டுபோன ராம்குமார் தரப்பு திக்.. திக்கில் இருக்கிறதாம். இது தொடர்பாக தி.நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டும், அவர்கள் இதில் பெரிதாக அக்கறை காட்டவில்லை என்கிறார்கள். இந்த விசயம், அ.தி.மு.க. தலைவரான எடப்பாடிக்கும் பா.ஜ.க. மாநில நிர்வாகிக் கும் தெரியவர, அவர்கள், ’தி.மு.க. ஆட்சி யில் சிவாஜி குடும்பத்திற்கே பாதுகாப்பில்லை’ என்ற ரீதியில், இதைப் பெரி தாக்கத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.''”
"அடக்கொடுமையே, விரைவில் தி.மு.க.வில் புதிய மா.செ.க்கள் நியமனம் இருக்கும் என்கிறார்களே?''”
"ஆமாங்க தலைவரே, நாடாளு மன்றத் தேர்தல் முடிவு வந்த பின் தி.மு.க.வில் புதிய மாவட்டங்களும் புதிய மா.செ.க்களும் உருவாக்கப்பட இருப்ப தாகச் சொல்கிறார்கள். இதில் இளைஞ ரணியினருக்கு முன்னுரிமையை வழங்க உதயநிதி திட்டமிட்டி ருக்கிறாராம். தி.மு.க.வில் பெரும் பாலும் இரண்டு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு மா.செ. வீதம் நியமிக்க அறிவாலயம் திட்ட மிட்டிருப்பது தெரிந்த கதைதான். சென்னையில் அப்படி நியமிக் கப்படும் போது, ராயபுரம், பெரம்பூர் தொகுதிகள் அடங்கிய புதிய மாவட்டத்துக்கு ஆர்.டி.சேக ரும், ஆர்.கே. நகர், திருவொற்றியூர் தொகுதிகள் அடங்கிய மாவட் டத்திற்கு எம்.எல்.ஏ.வான ஜெ.ஜே.எபினேசரும். கொளத்தூர், திரு.வி.க.நகர், துறைமுகம் ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட மாவட்டத்திற்கு அமைச்சர் சேகர்பாபுவும் , மாதவரம், பொன்னேரி தொகுதி களைக் கொண்ட மாவட்டத்திற்கு எம்.எல்.ஏ. சுதர்சனமும் மா.செ.க்களாக நியமிக்கப்படலாம் என்கிற டாக் ஓடிக் கொண்டிருக்கிறது. இவர்களில் ஆர்.டி.சேகரும் எபினேசரும் இளைஞரணியில் இருந்து வந்தவர்கள். அமைச்சர் சேகர்பாபுவோ, முதல்வரின் கொளத்தூர் தொகுதியை சிறப்பாக கவனித்து வருகிறவர். அமைச்சர் சேகர்பாபு வசம் தற்போது 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.''”
"மாஜி அ.தி.மு.க. மந்திரியின் உதவியாளர் ஒருவர் கஞ்சா வழக்கில் கைதாகியிருக்கிறாரே?''”
"தி.மு.க. ஆட்சியில் கஞ்சா புழக்கம் அதிகரித்திருப்பதாக அ.தி.மு.க. தரப்பு கடுமையாக விமர்சித்துவருகிறது. இதற்கு ஏற்ப, டெல்டா பகுதிகளான கும்பகோணம், வலங்கைமான், நீடாமங்கலம், நன்னிலம், குடவாசல் போன்ற பகுதிகளிலும் தற்போது கஞ்சா புழக்கம் நிறைய இருப்பதாகப் புகார்கள் எழுந்தன. இந்த நிலையில், அ.தி.மு.க.வைச் சேர்ந்த திலீபன் என்கிற பார்த்திபனை அண்மையில் காவல்துறை கஞ்சா வழக்கில் கைதுசெய்திருக்கிறது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த இந்த பார்த்திபன், அ.தி.மு.க. மாஜி மந்திரி ஆர்.காமராஜின் உதவியாளராம். மேலும் இவர், கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவராகக் கருதப்படும் குடவாசல் எம்.ஆர். மகன் சண்முகையாவுடன் நெருங்கிய நட்பில் இருப்பவராம். இந்த பார்த்திபன் மீதும் பல்வேறு கிரிமினல் வழக்குகள் இருந்துவரும் நிலையில்தான், தற்போது கஞ்சா வழக்கும் பாய்ந்திருக்கிறது. இதையறிந்து ஷாக்கான எடப்பாடி, மாஜி காமராஜை அழைத்து, ’நான் கஞ்சாவுக்கு எதிராகக் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறேன். இந்த நேரத்தில் உங்கள் உதவியாளர் கஞ்சா வழக்கில் கைதாகியிருக்கிறார் என்றால், மக்கள் நம்மைப்பற்றி என்ன நினைப்பார்கள்? காறித் துப்பமாட்டார் களா? என்றெல்லாம் கேட்டு செமையாக டோஸ் விட்டாராம்.''
"இதனால்தான் எடப்பாடி அப்செட்டில் இருக்கிறார் என்கிறார்களா?''”
"எடப்பாடியின் அப்செட்டிற்கு இதுமட்டும் காரணமில்லைங்க தலைவரே, இன்னும்சில பிரச்சினை களும் அவரை முற்றுகையிட்டிருக்கு. ஓ.பி.எஸ். அணியில் கடும் அதிருப்தி நிலவுவதாக, அதன் செய்தித்தொடர்பாளரான பெங்களூர் புகழேந்தியே பகிரங்கமாகச் சொல்லிவருகிறார். இந்த நிலையில் ஓ.பி.எஸ். அணியின் தூணாக இருக்கும் வைத்திலிங்கமும், ஓ.பி.எஸ்.சுக்கு எதிரான மனநிலையில் இருக்கிறா ராம். இதையறிந்த எடப்பாடி, தங்கள் பக்கம் வரும்படி வேலுமணி மூலம் வைத்திலிங்கத்துக்கு ஆர்வமாகத் தூது விட்டாராம். ஆனால் வேலுமணி எடப்பாடிக்கு டிமிக்கி கொடுத்து விட்டு சசிகலாவைத் தனியே சந்தித் துப் பேசினாராம். இதையறிந்து அப்செட்டான எடப்பாடி, கொஞ்ச நாளைக்கு, அதாவது 27 ஆம் தேதிவரை, நான் யாரையும் சந்திக்க விரும்பவில்லை. கட்சி நிர்வாகிகள் பலரும் கொடுத்த பணத்தை தேர்த லுக்கு செலவுசெய்யாமல் சுருட்டியிருக் கிறார்கள். அதனால் நான் தேர்தல் கணக்கு வழக்குகளைக் கவனித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லி வருகிறாராம். இந்த வேலை முடிந்த தும், கட்சிக்குள் சில களையெடுப்புகள் இருக்கும் என்கிறார்கள்.''”
"இப்போதைக்கு தமிழகத்திற்குச் செல்லவேண்டாம் என்று அந்த பா.ஜ.க. நிர்வாகிக்கு உத்தரவு பிறப் பிக்கப்பட்டிருக்கிறதாமே?''”
"ஆமாங்க தலைவரே, நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வரும்வரை தமிழகத்தின் பக்கம் தலையைக் காட்டக்கூடாது என, அந்த மாநில நிர்வாகிக்கு பா.ஜ.க.வின் டெல்லி மேலிடம் உத்தரவிட்டி ருக்கிறதாம். இதனால் தமிழகத்தில் தேர்தல் முடிந்த கையோடு கேரளா, கர்நாடகா, ஆந்திரா என்று சுற்றிக்கொண்டிருந்த அந்த நபர், தற்போது மும்பைப் பகுதியில் திரிந்துகொண்டு இருக்கிறாராம். நம்மிடம் பேசிய பா.ஜ.க. நிர்வாகிகள், "அந்த மாநில நிர்வாகியால் தமிழக பா.ஜ.க. பல்வேறு சிக்கல்களைச் சந்தித் திருக்கிறது. கூட்டணி விசயத்திலும் படுதோல்வி ஏற்பட்டது. எனவேதான் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவரை அழைத்து, நான் சொல்லும்வரை தமிழகத்துக்குச் செல்லவேண்டாம் என்று கடிவாளம் போட்டிருக்கிறார்'’ என்கிறார் கள் புன்னகையோடு.''”
"மணல் சுரண்டும் கும்பலுடன் பா.ஜ.க. பிரமுகர் ஒருவர் கூடிக் கும்மியடித் திருக்கிறார் என்கிறார்களே?''
"பா.ஜ.க.வின் அமைப்புச் செயலாளர் கேசவவிநாயகம் கடந்த 16ஆம் தேதி புதுக்கோட்டைக்கு விசிட் அடித் திருக்கிறார். அங்கு மணல் மாஃபியாக் களுடன் தொடர் புடைய மணி வண்ணன் என்பவரின் வீட்டில் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடந் திருக்கிறது. அதில் கலந்துகொள்ளவே அவர் புதுகை சென்றாராம். அந்தக் கூட்டத்தில் புதுக் கோட்டை பா.ஜ.க. பிரமுகர்களான ஏ.சி.எஸ். மணிகண்டன், முருகானந்தம், விஜயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் பலரும் மணல் மாஃபியாக்களின் பிசினஸில் தொடர்புடையவர்களாம். ஆலோசனைக் கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பே, மிக எச்சரிக்கையாக, சி.சி.டி.வி. கேமராக்கள், மொபைல் போன்கள் அனைத்தையும் அணைத்து வைக்கும்படி கேசவவிநாயகம் கட்டளையிட, அதன்படியே செய்திருக் கிறார்கள். அந்தக் கூட்டத்தில் பா.ஜ.க. அர சியல் குறித்து நிறைய பேசப்பட்டிருக்கிறது.''
"விக்கிரவாண்டி இடைத்தேர்தலை பா.ம.க. எதிர்பார்த்துக்கொண்டிருக் கிறதே?''”
"ஆமாங்க தலைவரே, விக்கிரவாண்டி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி மறைந்ததைத் தொடர்ந்து, அங்கு அக்டோபர் மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. இங்கே பா.ம.க. நிற்கும் என்று அக்கட்சியின் . நிறுவனர் ராமதாஸ், அண்மையில் தெரிவித்தார். இந்த நிலையில் பா.ஜ.க.வோ, விக்கிரவாண்டியில் நாங்கள் நிற்கவிருக்கிறோம் என, பா.ம.க.வுக்கு எதிராக அறிவித்துப் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விக்கிரவாண்டி பகுதி யில்தான், வன்னியர் சங்கத்தினர் 40 ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் நடத்திய இடஒதுக்கீடு போராட்டம் பெரிய அளவில் வெடித்தது. 7 நாள்கள் தொடர்ந்து நடத்தப்பட்ட சாலை மறியலின்போது, போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 21 வன்னிய சமூகத்தினர் உயிரிழந்தார்கள். அந்த 21 பேரின் குடும்பத்திலிருந்து ஒருவரை இங்கு வேட்பாளராக்க நினைக் கிறாராம் ராமதாஸ். இதுதொடர்பாக, அனைத்துக் கட்சியிலும் உள்ள வன்னியர் சமூகத்தினருக்கு அவர் தனிப்பட்ட முறையில் உருகி, உருகிக் கடிதம் எழுதவும் தீர்மானித்திருக்கிறாராம்.''”
"காங்கிரஸில் தனது ஆதரவாளர்களை மாவட்ட தலைவர்களாக அமரவைக்க செல்வப் பெருந்தகை திட்டமிடுகிறாரே?''”
"தமிழக காங்கிரசின் தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திருநாவுக்கரசு, கே.எஸ். அழகிரி ஆகியோர் இருந்த காலகட்டத்தில் நியமிக்கப்பட்ட மாவட்டத் தலைவர்கள்தான், அக்கட்சியில் இப்போதும் நிர்வாகிகளாக இருக்கிறார்கள். தற்போதைய காங்கிரஸ் தலைவரான செல்வப் பெருந்தகை, மாவட்ட தலைவர் பதவிகளில் தனது ஆதரவாளர்களை அமரவைக்க நினைக்கிறாராம். இதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்திவருகிறார். தவிர, மாநில நிர்வாகிகளாக துணைத்தலைவர், பொதுச்செயலாளர், செயலாளர் ஆகிய பதவிகளில் 300-க்கும் மேற்பட்டவர்கள் இருக்கின்றனர். இதனால் அந்த பதவிக்கே மரியாதை இல்லாமல் இருக்கிறது. அதனால், அந்த மாநில பதவிகளுக்கு மரியாதை ஏற்படும் வகையில் 50 பேர் மட்டுமே மாநில நிர்வாகிகளாக இருக்க வேண்டும் என்கிற அளவில் அவர் திட்டமிடுகிறாராம். விரைவில் புதிய நிர்வாகிகள் பட்டியலுடன் அவர் டெல்லி செல்ல இருப்பதாகவும் சொல்கிறார்கள்.''”
"காங்கிரஸ் தலைவர்கள் வைத்த இருவேறு கருத்துக்கள், அங்கே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறதே?''”
"மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் 16 ஆம் தேதி ஈரோட்டில் நடந்தது. அதில் பேசிய தமிழக காங் கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, "செல்லும் இடமெல்லாம் நமது தொண்டர்கள் மகிழ்ச்சியாக இல்லை. காரணம், நம் கட்சிக்கு 138 ஆண்டுகால வரலாறு இருந்தும், நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, ராகுல் என தலைவர்களின் பாரம்பரியம் இருந்தும், தமிழகத்தில் நம்மால் மீண்டும் ஆட்சி அமைக்க முடியவில்லை. இங்கே ஸ்டாலின் கொண்டு வந்த திட்டங்களை பாராட்டுகிறோம். இருந்தாலும் பா.ஜ.க. என்ற பாசிச சக்தியை ஒழிக்க தி.மு.க. ஒன்றால் மட்டுமே முடியாது. இங்கே காமராஜர் ஆட்சி என்பது ஒவ்வொரு காங்கிரஸ் கட்சித் தொண்டர்களின் கனவாகும்' என்று ஆவேசமாகப் பேசினார். உடனே இதற்கு பதிலளித்துப் பேசிய காங்கிரஸின் மூத்த தலைவரான ஈ.வி.கே. எஸ். இளங்கோவன், ’"மீண்டும் காமராஜர் ஆட்சி வேண்டும் என்கின்றனர். பாசிசத்திற்கு எதிராக, சமூகநீதிக்கு ஆதரவாக எங்கெல்லாம் ஆட்சி நடக்கிறதோ அது எல்லாமே காமராஜர் ஆட்சி தான். அந்த வகையில் இங்கே ஸ்டாலின் முன்னெடுத் துள்ள திராவிட மாடல் ஆட்சியை காமராஜர் ஆட்சி எனச் சொல்வதில் எனக்குச் சிறிதும் தயக்கம் கிடையாது'’ என்று ஒரே போடாகப் போட்டார். ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கருத்தை வரவேற்று அவருக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார் அமைச்சர் சாமிநாதன். இவர்களின் பேச்சுக்கள் இப்போது முதல்வர் ஸ்டாலினின் கவனத்திற்கும் சென்றிருக்கிறதாம்.''”
"மீண்டும் தமிழக குவாரிகளில் மணல் சுரண்டல் ஆரம்பித்துவிட்டதே?''”
"நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக அமலாக்கத்துறை கொஞ்சம், மணல் குவாரிகள் விசயத்தில் அமைதியைக் கடைபிடித்து வந்த நிலையில், குவாரிகள் தரப்பு மீண்டும் ஜரூராக ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டன என்கிறார்கள். இந்த மணல் குவாரிகள் விவகாரத்தில் சில மாவட்ட ஆட்சியாளர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் தயவால் அவர்கள் சற்றே ரிலாக்ஸ் ஆகியிருந்தார்கள். இந்த இடைப்பட்ட நேரத்தில் மணல் அதிபர்களான கரிகாலன், ரத்தினம், ராமச்சந்திரன் ஆகியோர் துறை அமைச்சரான துரைமுருகனை சந்தித்துப் பேசியதாகவும் சொல்கிறார்கள். இதைத் தொடர்ந்தே முதல்கட்டமாக நெடுஞ்சாலைத் துறைப் பணிகளுக்காக, கிராவல் மற்றும் மணலை அள்ளும் பணிகள் கரிகாலன் தரப்பிற்குக் கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.'' ”
"சவுக்கு சங்கர் மீது பாய, லஞ்ச ஒழிப்புத்துறையும் தயாராகி வருகிறதே?''”
"பரபரப்பாக கைது செய்யப் பட்டிருக்கும் சவுக்கு சங்கர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக, லஞ்ச ஒழிப்புத் துறை ஒரு வழக்கைப் பதிவு செய்யத் திட்டமிட்டிருக்கிறதாம். அரசு ஊழி யர்களாக இருந்தவர்கள் ஓய்வுபெற் றாலோ, அல்லது டிஸ்மிஸ் செய்யப் பட்டாலோ அதிலிருந்து 5 ஆண்டுகள் வரை, அவர்கள் மீது சொத்துக் குவிப்பு வழக்கைப் பதிவுசெய்ய முடியுமாம். இப்படியொரு வழக்கைப் பதிவுசெய்தால், சவுக்கு மீது அமலாக் கத்துறையும் பாயும் என்கிறார்கள். எனவே லஞ்ச ஒழிப்புத்துறை பதிவுசெய்ய இருக்கும் வழக்கு, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி யிருக்கிறது. இது சவுக்கு தரப்பை பகீரில் ஆழ்த்தியிருக்கிறதாம்.''”
"நானும் என் காதுக்கு வந்த ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். சென்னை மாநகராட்சி அடையாறு மண்டல வளாகத்தில் சமூக ஆர்வலர் ஒருவர், பெண் தாசில் தாருக்குக் கொடுத்த லஞ்சத் தொகையை மீடியேட்டராக வாங்கிய அருண்குமார் என்ற காவலரைக் கைது செய்திருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை. இந்த அருண்குமார், தென்சென்னை இணை கமிஷனரின் கார் டிரைவ ராம். அருண்குமார் மீது ஏகப்பட்ட ரியல் எஸ்டேட் இல்லீகல் புகார்கள் இருப்பதையும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தற்போது கண்டு பிடித்திருக்கிறார்களாம்.''”
___________
இறுதிச் சுற்று!
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, ஹெலிகாப்டர் விபத்தில் பலியானதாக, மே 20, திங்களன்று அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, மே 19ஆம் தேதி அஜர்பைஜானுக்கு சென்றிருந்தார். அணை திறப்பு விழா முடிந்தபின், அதிபரின் ஹெலிகாப்டர், ஈரானின் வடகிழக்கு நகரான தப்ரிஸுக்கு அருகே பயணித்தபோது சிக்னல் கட்டானது. 15 மணி நேரத்துக்குப்பின்னர், தப்ரிஸ் நகர் டவில் கிராமத்தின் அருகிலுள்ள மலைப்பகுதியில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதையடுத்து, ஈரான் அரசு செய்தி ஊடகமான ஃபார்ஸ் செய்தி நிறுவனம், ஈரான் அதிபர் விபத்தில் உயிரிழந்ததாக தெரிவித்து, அதிபருக்கு அஞ்சலி செலுத்துமாறு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது தொடர்பாக இரு நாடுகளுக்கிடையேயான பதட்டமான சூழலில், ஈரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது சதிச்செய லாக இருக்குமா என்ற கோணத்திலும் விசாரணை தொடங்கியுள்ளது.
-ராஜா
தமிழகத்தில் வருகின்ற ஜூன் நான்காம் தேதி பாராளுமன்ற வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், மத்தியில் என்ன நடக்கும் என்பதைவிட தமிழக அமைச்சரவையில் சில மாற்றங்கள் உள்ளதாக வெளியாகும் தகவல்கள் தி.மு.க. தளங்களில் பரபரப்பாகி வருகின்றன. அதன்படி, ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை என இரண்டு துறைகளையும் ஒன்றாக இணைத்து தற்போது விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகிக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு உள்ளாட்சித்துறையை ஒதுக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
அமைச்சர் நேருவிற்கு மது ஆயத்தீர்வை, மின்சாரத்துறை வழங்குவதற்கான வாய்ப்புள்ளதாகவும், அமைச்சர் ஐ.பெரிய சாமிக்கு போக்குவரத்துத் துறையும், நிதியிலிருந்து ஐ.டி.க்கு தூக்கியடிக்கப்பட்ட அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுக்கு வெயிட்டான கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டு மீண்டும் அவர் லைம்லைட்டுக்கு வருவார் எனவும் தகவல்கள் கசிகின்றன. தவிர, பாராளுமன்றத் தேர்தலில் கொங்கு மண்டல பொறுப்பாளர்களாக இருந்து அங்கு கொடிநாட்ட பாடுபட்ட அமைச்சர்களில் டி.ஆர்.பி.ராஜாவுக்கும் தமிழக அமைச்சரவையில் கூடுதல் பொறுப்புகள் வழங்கவிருப்பதாகவும் ஆரூடம் கூறுகின்றன அறிவாலய வட்டாரங்கள்.
-துரை.மகேஷ்