"ஹலோ தலைவரே, தி.மு.க.வுக்கு எதிராக பா.ஜ.க. அண்ணாமலை வெளியிட்ட சொத்துப் பட்டியல் புஸ்வாணம் ஆயிடுச்சி.''”

"ஆமாப்பா, அதில் முன்னுக்குப் பின்னாக, தப்புத் தப்பான வரிசை எண் ணோடு தன் வாட்ச் பில்லை அண்ணாமலை வெளியிட்டது, அவருக்கு எதி ராகவே திரும்பிடுச்சி. அதோட அ.தி.மு.க. தரப்பின் ஊழலையும் வெளியிடுவேன்னு மறைமுகமாக அவர் சொன்னதும், எதிர்த்தரப்பில் பட்டாசைப் பற்ற வச்சிருக்கே?''’

"உண்மைதாங்க தலைவரே, தமிழகத்தை இதுவரை ஆட்சி செய்தவர்களின் ஊழல்களையும் வெளியிடுவேன்னு அண்ணாமலை சொன்னதை, அது தங்களைக் குறிவைத்து அவர் எய்திருக்கும் அம்பு என்பதைப் புரிந்துகொண்ட எடப்பாடி தரப்பு ஏக டென்ஷனில் இருக்குது. இது குறித்து பத்திரிகையாளர்கள் எடப்பாடியிடம் கேட்டபோது, "அந்த அண்ணாமலையைப் பத்தி என்னிடம் கேட்காதீர்கள். முதிர்ந்த அரசியல்வாதிகளைப் பற்றி மட்டும் என்னிடம் கேளுங்கள்' என்று கோபமாக அண்ணாமலையை அட்டாக் பண்ணினார். அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி நீடிக்கும் என அமித்ஷா உறுதியளித்திருக்கும் நிலையில், ஒரேயடியாகக் கூட்டணியை முறித்துக்கொள்ளும் வகையில் அண்ணாமலை பேசியதை ஜீரணித்துக்கொள்ள முடியாமல் எடப்பாடி தரப்பு குமுறிக்கொண்டிருக்கிறது.''”

"அண்ணாமலைக்கு எடப்பாடி தரப்பு மீது அப்படி என்ன கசப்பு?''”

Advertisment

"ஏற்கனவே எடப்பாடியிடம் சுமுகமான நட்பில் இருந்தபோது, "வரும் நாடாளுமன்றத் தேர்தலில், நான் கோவையில் நிற்கப்போகிறேன். அதனால் கோவையை இப்பவே ரிசர்வ் செய்துகொள்கிறேன்னு அண்ணாமலை சொன்னாராம். ஆனால் எடப்பாடியோ, இப்பவே எப்படி நீங்களா ஒரு தொகுதியை பிக்ஸ் பண்ணிக்கிறீங்க? கொங்கு பெல்ட்டில் பா.ஜ.க.வுக்கு சீட் ஒதுக்குறது கஷ்டம். ஏன்னா, இந்தப் பகுதியில் இருக்கும் என் ஆதர வாளர்கள் பலரையும் நான் சீட் கொடுத்து திருப்திபடுத்தியாகணும். அதனால், எப்பவுமே இப்படியொரு டிமாண்ட்டை வைக்காதீங்கன்னு நேரடியாகவே அண்ணாமலையிடம் முகத்தில் அடித்தாற்போல் சொன்னாராம். இதுதான் அண்ணாமலைக்கு எடப்பாடி மீது எரிச்சல் வர முதல் காரணம் என்கிறார்கள். அதேபோல் பா.ஜ.க. வில் இருக்கும் 20-க்கும் மேற்பட்டோரிடம் எம்.பி. தேர்தலில் சீட் தருவதாக அண்ணாமலை கமிட் ஆகியிருக்கிறாராம். அதனால் எடப்பாடியிடம் நாடாளுமன்றத் தேர்தலில் 50-க்கு 50 என்கிற ஃபார் முலாப்படி உங்களோடு சீட் ஷேரிங் இருக்க ணும்னு எங்க தேசி யத் தலைமை விரும்புது என்றும் அப்போது அடிப்போட்டிருக்கிறார். எடப்பாடியோ, என்னங்க காமெடி பண்றீங்க. அதுக்கு வாய்ப்பே இல்லைன்னு நக்கலாகச் சிரித்தாராம். அதிலிருந்துதான், அ.தி.மு.க.வின் சங்காத்தமே வேண் டாம்ங்கிற முடிவுக்கு வந்தாராம் அண்ணாமலை. இதை கமலாலயத் தரப்பே சொல்லுது.''”

"அண்ணாமலையுடனான இந்த விவகாரத்தை பா.ஜ.க. தலைமையிடமே எடப்பாடி புகாராகக் கொண்டுபோனாரே?''”

"ஆமாங்க தலைவரே, இந்த விவகாரத்தை அமித்ஷா கவனத்துக்குக் கொண்டுபோன எடப் பாடி, "தொடர்ந்து அ.தி.மு.க. கூட்டணிக்கு எதி ராகவே அண்ணாமலை பேசிவருகிறார். அதனால் கூட்டணிப் பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு, தொகுதிகளை அடையாளம் காண்பது என எதிலும் அவர் தலையிட்டால் எல்லாமே கெட்டுவிடும். அதனால் தேர்தல் சமயத்தில் தமிழக பா.ஜ.க.வின் தலைவராக அண்ணாமலை இருந்தால், நம் கூட் டணிக்கு இடையூறாகவே இருப்பார் என்று சொல்லி யிருக்கிறார். இதைக்கேட்ட அமித்ஷா, "அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம். அதையெல்லாம் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்' என்றாராம். எனினும் அண்ணாமலை, தங்களுக்கு எதிராக வாய் திறக்கும் போதெல்லாம் அதுபற்றிய தகவலை எடப் பாடி தரப்பு, டெல்லிக்கு பாஸ்செய்து வருகிறது. அந்த வகையில், இப்போது, அ.தி.மு.க.வின் ஊழ லையும் வெளிப்படுத்துவேன்னு அண்ணாமலை அறிவித்திருப்பதையும், அமித்ஷாவின் கவனத்துக் குக் கொண்டுபோகச் செய்தாராம் எடப்பாடி. ஆனால் அதற்கு டெல்லியில் இருந்து பெரிதாக ரீயாக்ஷன் எதுவும் வராததால், மேலும் எரிச்சலில் இருக்கிறார் எடப்பாடி.''”

Advertisment

"அதனால்தான் பா.ஜ.க.வுடன் கூட்டணி என்று அ.தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் போடவில்லையா?''”

rr

"ஆமாங்க தலைவரே, கடந்த 16 ஆம் தேதி கூடிய, அ.தி.மு.க. செயற்குழுவில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி நீடிக்கும் என்ற தீர்மானத்தை நிறை வேற்றுவார்கள் என்று பா.ஜ.க.வின் தேசியத் தலை மை எதிர்பார்த்ததாம். ஆனால், அப்படியொரு தீர்மானம் நிறைவேற்றப்படாததில் பா.ஜ.க. தலைமை ஏமாற்றம் அடைந்திருக்கிறதாம். அதே சமயம் அந்த செயற்குழுவில், நாடாளுமன்றத் தேர்தலிலும், அடுத்துவரும் சட்டமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி அமைப் போம் என்று தீர்மானம் நிறைவேற்றியதோடு, எடப்பாடி தலைமையில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றிபெற வீர சபதம் எடுப்போம் என்றும் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். பா.ஜ.க.வின் தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை நீக்கப் பட்டால் மட்டுமே பா.ஜ.க.வுடன் கூட்டணி என்ற முடிவில் எடப்பாடி உறுதியாக இருக்கிறாராம்.

"அ.தி.மு.க.வின் ஒட்டுமொத்த லகானும் தன் கைப்பிடிக்குள் இருக்கும் வகையில் செயற்குழு தீர்மானங்களை நிறைவேற்றும்படி செய்திருக் கிறாரே எடப்பாடி?''”

"ஆமாங்க தலைவரே, எடப்பாடி விரும்பிய படியே கொள்கை ரீதியிலான முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தையும் எடப்பாடிக்கு கட்சியின் செயற் குழு வழங்கியுள்ளது. இதன்மூலம், எடப்பாடியின் முடிவுகளுக்கு மாறாக எந்த ஒரு எதிர் கருத்தும் கட்சியில் யாரும் எழுப்ப முடியாத அளவுக்கு தனது வலிமையை நிலைநாட்டிக்கொண்டிருக்கிறார் எடப்பாடி. இந்த நிலையில், கட்சித் தொண்டர்கள் மத்தியில் உற்சாகம் குறைந்திருப்பதை உணர்ந்த அவர், திருச்சியில் ஓ.பி.எஸ். நடத்த இருக்கும் மாநாட்டுக்கு பதிலடி கொடுப்பதுபோல், மதுரையில் ஒரு மாபெரும் மாநாட்டை நடத்தும் வியூகத்தில் இருக்கிறாராம். இந்த நிலையில் தன்னோடு கைகோர்க்க சசிகலா விடுத்த தூதையும் உறுதியாக மறுத்துவிட்டாராம் எடப்பாடி.''”

"கவர்னர் விவகாரத்தில் தி.மு.க. அரசு எடுத்த அதிரடி முடிவை மற்ற மாநிலங்களும் பின்பற்றத் தொடங்கி இருக்கே''”

rr"உண்மைதாங்க தலைவரே, தமிழ்நாடு சட்ட மன்றம் நிறைவேற்றிய சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க, அவருக்கு ஒரு காலக் கெடு நிர்ணயிக்க வேண்டும் என்று, சட்டமன்றத் தில் கடந்த வாரம் ஒரு அதிரடி தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றினார். தமிழ்நாட்டைப் போலவே, பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநில அரசுகளும் இதுபோன்ற தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என அப்படிப்பட்ட மாநில முதல்வர் களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள் கடிதம் எழுதியிருந் தார். இதை மகிழ்வோடு ஏற்றுக்கொண்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இதே போன்ற தீர்மானத்தை டெல்லி சட்டமன்றத்திலும் தாக்கல் செய்து நிறைவேற்றுவோம் என்றும் சொல்லியிருக்கிறார். இதற்கு நன்றி தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், சோசியல் மீடியாவில் தீ பரவட்டும் என் கிற ஹேஸ்டேக்கையும் பதிவு செய்ய, அது ஏகத்துக் கும் வைரலாகிப் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.''”

"தி.மு.க.வில் உறுப்பினர் சேர்ப்பு குறித்த ஆதங்கம் பலரிடமும் இருக்கிறதே?''’

"ஆமாங்க தலைவரே, தி.மு.க.வில் உறுப்பினர் சேர்க்கை விவகாரத்தில் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. புதிய உறுப்பினர்களை அதிக அளவில் சேர்க்கவேண்டும் என்று டார்கெட் வைத்து செயல்படும்படி அறிவுறுத்தியிருக்கிறது அறிவாலயம். ஆனால் சில அமைச்சர்களும் பவர் ஃபுல் மா.செ.க்களும் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவே இல்லையாம். ஜூனியர் மா.செ.க்கள் சிலர், உறுப்பினர் சேர்க்கையில் தீவிரம் காட்டினா லும் அதற்கு அமைச்சர்கள் சைடில் இருந்து போதுமான ஆதரவு கிடைப்பதில்லையாம். ஆளும் கட்சியான தி.மு.க.வில் இது குறித்த ஆதங்கம் பரவலாகவே சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.''”

"அதுசரிப்பா, கோவை மாவட்ட செய்தித் துறையில் சலசலப்பு தெரியுதே?''”

"கோவையில் அரசு பொருட்காட்சி நடத்திட அங்கு அமைக்கப்பட்டு வரும் பல்வேறு அரங்கங்களையும் கடைகளையும் கடந்த வாரம் செய்தித்துறை ஏலம் விட்டது. அதில் ஏலத்தில் எடுக்கப் படாத கடைகள் மற்றும் அரங்கங்கள் அடுத்த ஏலத் துக்காகக் காத்திருந்த நிலையில், அதே துறையில், பொருட்காட்சிப் பிரிவில் பணியாற்றும் அன்பரசு என்பவர், அப்படிச் செய்யாமல், அரசு நிர்ணயித் துள்ள ஏலத் தொகையை விடக் குறைவான தொகைக்கு, தனது நண்பர்களுக்கு அரங்குகளைக் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறாராம். இது அங்கே கொதிநிலையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலை யில், அரங்குகளையும் கடைகளையும் மறுஏலம் விடுவதற்கு செய்தித்துறை இயக்குநர் மோகன் ஐ.ஏ.எஸ். நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோவை மாவட்ட வியாபாரிகள் கோரிக்கை வைத் திருக்கிறார்கள். அதோடு, பொருட்காட்சி அரங்கு களை ஒதுக்கீடு செய்ததில் ஊழல்கள் நடந்திருப்ப தாகவும் அவர்கள் புகார் எழுப்பிவருகிறார்கள்.''”

"பொருளாதாரக் குற்றப்பிரிவின் மீதே குற்றச்சாட்டு எழுந்திருக்கே?''”

"தமிழ்நாட்டில் நிதி நிறுவன மோசடிப் புகார் கள், காவல் துறையில் இயங்கும் பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவுக்கு நிறைய வருகின்றன. சமீ பத்தில், ஒருங்கிணைத்தல் என்பதைக் குறிக்கும் பெயர் கொண்ட ஒரு நிதி நிறுவனம் குறித்தும் இந்தப் பிரிவுக்குப் புகார்கள் சென்றுள்ளன. உடனே குற்றத் தடுப்புப்பிரிவில் இருக்கும் டி.எஸ்.பி. ரேங்கில் உள்ள குரூப்-1 அதிகாரி ஒருவர், அந் தப் புகார்களை விசாரித்திருக்கிறார். இதற்காக, சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தின் உரிமையாளர் அழைக்கப்பட்டிருக்கிறார். பேரம் நடந்திருக்கிறது. இதன் அடிப்படையில் சுமார் 5 கோடி ரூபாய்க்கு மேல் கைமாற, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கையை கிடப்பில் போட்டுவிட்டார் அந்த டி.எஸ்.பி. இது இந்த பிரிவின் உயரதிகாரிக்கு தெரியவர, டி.எஸ்.பி. வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டிருக்கிறது.''”

“"நானும் இது தொடர்பாக எனக்கு வந்த செய்தியைப் பகிர்ந்துக்கறேன். அந்த ரெய்டின்போது கைமாறிய 5 கோடி ரூபாய், அந்த டி.எஸ்.பி. வீட்டில் கிடைத்திருக்கிறது. சம்பந்தப்பட்ட டி.எஸ்.பி. மீது நடவடிக்கை எடுக்க உயரதிகாரி முயற்சித்தபோது, தமிழ்நாடு காவல்துறையின் அந்த உயரதிகாரி, இந்த விவகாரத்தில் இப்போது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம். சட்டமன்றத்தில் உள்துறை மானியக் கோரிக்கை முடிந்ததும் பார்த்துக் கொள்ளலாம்’ என்று சொல்லி, மேல் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தி வைத்திருக்கிறாராம்.''