தமிழகத்தில் தேர்தல் முடிவுகளை தேர்தல் அறிக்கைகள் தீர்மானித்த வரலாறு உண்டு. இப்பொழுது தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகள் நடைபெறப்போகும் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்குமா? என மக்களைக் கேட்டோம்.
அ.தி.மு.க. வாஷிங்மெஷின், 6 சிலிண்டர், மகளிருக்கு ரூ.1500, சோலார் அடுப்பு... மேலும் பல என சொல்லும் அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை நம்புகிறீர்களா?
கொரோனா நிவாரணம் 4,000, சிலிண்டருக்கு ரூ.100 மானியம், மகளிருக்கு ரூ.1000, மாணவர்களுக்கு மடிக்கணினி, மேலும் பல என சொல்லும் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை நம்பி வாக்களிப்பீர்களா? இரண்டையும் நம்பமாட்டோம் எனச் சொல்கிறீர்களா'' எனக் கேட்டோம். மக்கள் பொரிந்து தள்ளிவிட்டார்கள்.
""எந்தத் தேர்தல் அறிக்கை வந்தாலும் எங்க வறுமை மட்டும் மாறலை. மாதம் முழுக்க ரேஷன் கடை திறந்திருக்க வேண்டும். ரேஷன் கார்டுக்குரிய பொருட்கள் இல்லையென்று சொல்லாமல் கிடைக்க வேண்டும். இதை எந்தக் கட்சி தேர்தல் அறிக்கையும் சொல்லவேயில்லை'' என்கிறார் செந்துறை மஞ்சுளா.
""எங்களிடமிருந்து பெறப்பட்ட வரி வருமானம் மூலம் பெறப்பட்ட பணம் இவைகள்தான் ஓட்டுக்குப் பணமாகவும் இலவசங்களாகவும் வருகிறது. எங்களுக்கு இலவசமே வேண்டாம்யா, வெலவாசிய குறைங்க. ரேஷன்ல போடுற அரிசி புழுத்ததா இல்லாம வயிறார சாப்பிடுறாப்ல உள்ள நல்ல அரிசியைக் கொடுங்க. எங்களுக்குத் தொழிலைக் குடுங்க. எங்க புள்ளைங
தமிழகத்தில் தேர்தல் முடிவுகளை தேர்தல் அறிக்கைகள் தீர்மானித்த வரலாறு உண்டு. இப்பொழுது தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகள் நடைபெறப்போகும் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்குமா? என மக்களைக் கேட்டோம்.
அ.தி.மு.க. வாஷிங்மெஷின், 6 சிலிண்டர், மகளிருக்கு ரூ.1500, சோலார் அடுப்பு... மேலும் பல என சொல்லும் அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை நம்புகிறீர்களா?
கொரோனா நிவாரணம் 4,000, சிலிண்டருக்கு ரூ.100 மானியம், மகளிருக்கு ரூ.1000, மாணவர்களுக்கு மடிக்கணினி, மேலும் பல என சொல்லும் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை நம்பி வாக்களிப்பீர்களா? இரண்டையும் நம்பமாட்டோம் எனச் சொல்கிறீர்களா'' எனக் கேட்டோம். மக்கள் பொரிந்து தள்ளிவிட்டார்கள்.
""எந்தத் தேர்தல் அறிக்கை வந்தாலும் எங்க வறுமை மட்டும் மாறலை. மாதம் முழுக்க ரேஷன் கடை திறந்திருக்க வேண்டும். ரேஷன் கார்டுக்குரிய பொருட்கள் இல்லையென்று சொல்லாமல் கிடைக்க வேண்டும். இதை எந்தக் கட்சி தேர்தல் அறிக்கையும் சொல்லவேயில்லை'' என்கிறார் செந்துறை மஞ்சுளா.
""எங்களிடமிருந்து பெறப்பட்ட வரி வருமானம் மூலம் பெறப்பட்ட பணம் இவைகள்தான் ஓட்டுக்குப் பணமாகவும் இலவசங்களாகவும் வருகிறது. எங்களுக்கு இலவசமே வேண்டாம்யா, வெலவாசிய குறைங்க. ரேஷன்ல போடுற அரிசி புழுத்ததா இல்லாம வயிறார சாப்பிடுறாப்ல உள்ள நல்ல அரிசியைக் கொடுங்க. எங்களுக்குத் தொழிலைக் குடுங்க. எங்க புள்ளைங்களுக்கு வேலை கொடுங்க. கொரோனா காலத்துல எங்க குடும்பங்கள் எப்படி சீரழிஞ்சதுன்னு யாருமே கவலைப்படல'' என்கிறார் தென்காசி தாயம்மாள்.
""எதை, எதையோ இலவசம்னு தேர்தல் அறிக்கைல சொல்றாங்க. அடிப்படை வசதிகளான குடிநீர், கல்வி, மருத்துவம் இவற்றை இலவசமா தராம காசுக்கு விக்கிறாங்க. அதை அரசும் ஆதரிக்குது'' என வருத்தப்படுகிறார் நெய்வேலி ஷாலினி.
""அரசாங்கம் கடன்ல இருக்கிறதா சொல்றாங்க. கடன்ல இருக்கும் போது அந்தக் கடனை அடைக்கிறதுக்கு வழிசொல்லி மக்களை நல்லா வாழவைக்க முயற்சி செய்யாம எதுக்கு இலவசத்தை தரணும். இன்னும் பல லட்சம் கடன் வாங்கி நம்மள விக்கிறதுக்கு முடிவுபண்ணிட்டாங் களோன்னு தோணுது'' என்கிறார் திருவண்ணாமலை தாயம்பாடி செல்வம்.
அதே நேரத்தில் வீட்டுக்குத் தேவையான மின்சாதன பொருட்கள் அவை. கடந்த முறை ஜெ. கொடுத்த இலவச மிக்சி, கிரைண்டர் போல அதன் தொடர்ச்சியாக வருவதுதான் வாஷிங்மெஷின். எடப்பாடியார் அறிவித்திருக்கும் வருடத்திற்கு 6 சிலிண்டர் இலவசம் என்பது எங்களுக்கு பிடித்திருக்கிறது'' என்கிறார் திருச்சி ஈஸ்வர்.
""கடந்த காலங்களில் அ.தி.மு.க. அளித்த தேர்தல் அறிக்கையின்படி அனைத்தையும் அ.தி.மு.க. வழங்கியுள்ளது. தற்பொழுது நிவாரணமாக 2,500 ரூபாய் வழங்கியுள்ளது. இப்பொழுது அறிவித்திருப்பதையும் தருவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது'' என்கிறார் கடலூர் ராமாபுரம் விவசாயி ராஜதுரை.
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூடுதல் பலன்கள் இருக்கிறது. இல்லத்தரசிக்கு மாதம் 1,500 ரூபாயும் ஆண்டுக்கு 6 க்யாஸ் சிலிண்டர், ஒரு சோலார் அடுப்பு இலவசம் என எடப் பாடி கூறியுள்ளார். இவை கிடைத்தாலே என் வீட்டு வாடகைச் செலவை ஓரளவு ஈடுகட்டிவிடுவேன்'' என்கிறார் சேலத்தைச் சேர்ந்த பிரகாஷ்.
""இந்தக் காலத்துல யாருங்க வீட்டுக்கு வீடு வாஷிங்மெஷின் தருவாங்க. அதுபோல 6 சிலிண்டர் இலவசமாக மொத்தம் 5400 ரூபாய் மிச்சமாகுது. இதுபோதுமே'' என்கிறார் கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த நடைபாதை வியாபாரி சிராஜுதீன்.
""அரசு வேலை தருவதாக அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை சொல்கிறது. அப்படி எங்கள் குடும்பத்தில் யாருக்காவது வேலை கிடைப்பது சாத்தியம் என்றால் நிச்சயம் குடும்பத்தோடு இரட்டை இலைக்கு ஓட்டுப்போடு வோம்'' என்கிறார் சிங்காநல்லூரைச் சேர்ந்த சுமித்ராவும் விமலாவும்.
""நாங்க எல்லோருக்கும் பட்டா கொடுத்து கான்கிரீட் வீடு கட்டித் தருவதாக எடப்பாடி சொல்றாரு. அதனால் அ.தி.மு.க.வுக்கு ஓட்டுப் போடலாம்னு இருக்கேன்'' என்கிறார் கிருஷ்ணகிரி முருகேசன்.
""எடப்பாடி ஆட்சி நல்லாருக்கு. சாதிச்சண்டை இல்ல, ஆட்டம் போட்ட மன்னார்குடி கும்பலுக்கு ஆப்பு வச்சாரு. அத்துடன் நல்ல இலவச திட்டங்களை நிறைவேத்துறதா சொல்றாரு'' என்கிறார் விருதுநகர் சுரேஷ்.
""குடி மராமத்துப் பணிகள், கொரோனா நிவாரணம், கிராமத்தில் நல்ல குடிநீர், பெண்பிள்ளைகளுக்கு தாலிக்குத் தங்கம் என ஏகப்பட்ட திட்டங்களை எடப்பாடியார் நிறைவேத்தியிருக்காரு. தேர்தல் அறிக்கையில் சொன்னவைகளை எடப்பாடி செய்வார்'' என்கிறார்கள் விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. ஆதரவாளர்கள்.
ஆனால் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையைவிட நடைமுறை சாத்தியமாக இருக்கிறது என்கிற கருத்தை பரவலாக பொதுமக்கள் மத்தியில் கேட்க முடிந்தது. "கடந்த பத்தாண்டுகளாக ஆட்சியில் இருந்தபோது எதுவும் செய்யவில்லை. தேர்தலின்போது கடைசி கட்டத்தில் இலவச அறிவிப்பாக எடப்பாடி அரசு வெளியிடுகிறது' என்கிற சந்தேகத் தொனி மக்களிடம் வெளிப்படுகிறது. குறைந்த வருமானத்துல குடும்பத்தை நடத்துறவனுக்கு தி.மு.க.வோட அறிக்கைதான் சரி. பெட்ரோல், டீசல் விலைக்கு மானியம் தருவதாகக் கூறியிருக்கின்றார்கள். அதுபோல மாதந்தோறும் மின்சார கட்டணம் செலுத்தலாம்'' என்ற வாக்கு சரியானதுதான்'' என்கிறார்கள்.
""இது இரண்டையும் செய்துவிட்டாலே அது பின்னால் இருக்கும் பல பிரச்சினைகள் களையப்படும். விலைவாசி குறையும் அதனால் தி.மு.க.வோட அறிக்கையே சரி'' என்கிறார் தூத்துக்குடியைச் சேர்ந்த கருப்பையா.
""அ.தி.மு.க சொல்வது போல 6 சிலிண்டர் இலவசம் என்பதை முட்டாள்கூட நம்பமாட்டான். சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் என்பது சாத்தியமாகும்'' என்கிறார் சமுக ஆர்வலரான மாதேஷ்.
""சிறுபான்மையினருக்கு எதிரான சி.ஏ.ஏ. சட்டத்தையும் நீட் தேர்வையும் ரத்து செய்வோம் என தி.மு.க. சொல்வது வரவேற்புக்குரியது'' என்கிறார் கோவையைச் சேர்ந்த பால்ராஜ்.
கடந்த தேர்தலில் பா.ஜ.க. அனைவரது அக்கவுண்ட்டிலும் பணம் வரும் என்கிறார்கள். பணம் வரவேயில்லை. போன பத்து வருஷத்துல செய்திருக்கலாமே? என்கிறார் வாலாஜாபாத்தைச் சேர்ந்த சாந்தி.
""ஸ்டாலின் அறிவித்ததை காப்பியடித்து மறுநாளே எடப்பாடி அறிவித்திருக்கிறார். அவர் மனதார அறிவிக்கவில்லை. அவரது அறிவிப்பும் எடுபடவில்லை'' என்கிறார் சென்னையைச் சேர்ந்த ஜம்பு லிங்கம்.
இப்படி வருஷத்துல 6 சிலிண்டர் இலவசம்னு சொல்ற எடப்பாடி சிலிண்டர் விலை தாறுமாறாக ஏறும்போது அதை எதிர்த்து ஏன் போராட்டம் பண்ணலை. சிலிண்டர் விலை ஏறுனதால நான் தென்னை மட்டையில் சமைக்க ஆரம்பித்துவிட்டேன்'' என்கிறார் தஞ்சாவூரைச் சேர்ந்த தேன்மொழி.
""தேர்தல் வந்தாலே இந்த இலவச அறிவிப்பு கூத்து நடக்கிறது'' என வருத்தப்படுகிறார் சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த ரம்யா. பத்தாண்டு களாக கோடி கோடியாக கொள்ளையடிச்ச அ.தி.மு.க. அமைச்சர்களின் சொத்துக்களை பிடுங்கினாலே தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தக் கடனும் அடைந்துவிடும்'' என்கிறார் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த கண்மணி.
-நக்கீரன் சர்வே டீம்
சக்தி, ராம்கி, ஜீவா, எஸ்.பி.எஸ்., பரமசிவம், மணிகண்டன் பகத், ராஜா, செல்வகுமார், அருள்குமார், அண்ணல், அரவிந்த், அருண்பாண்டியன், நாகேந்திரன், சுந்தரபாண்டியன், இளையராஜா, மகேஷ், காளிதாஸ், சேகுவேரா
-தொகுப்பு: தாமோதரன் பிரகாஷ்
படங்கள்: ராம்குமார், விவேகானந்தன், விவேக்