லோ தலைவரே, ஆளும் கட்சியான அ.தி.மு.க. தனது புதிய மா.செ.க்கள் பட்டியலைப் பரபரப்பா அறிவிச்சிருக்கு.''

""ஆமாம்பா. நாம் ஏற்கனவே பேசிக்கிட்ட மாதிரி 3 சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு மா.செ.ங்கிற கணக்கில், மாவட்டங்களைப் பிரிச்சி, புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டி ருக்காங்க. அதே சமயம் முதலமைச்சரான எடப்பாடியாலேயே ஒரு சில மாவட்டங்களைப் பிரிக்க முடியலையே?''

rang

""உண்மைதாங்க தலைவரே, தன்னை அடுத்த முதல்வருக்கான வேட்பாளரா முன்னிறுத்திக்க ஆசைப்படும் அமைச்சர் சி.வி.சண்முகம், தன் மாவட்டமான விழுப்புரத்தைப் பிரிக்கக் கூடாதுன்னு எடப்பாடியைத் தடுத்து ஷாக் கொடுத்துட்டார். அதேபோல் சென்னை தெற்கு மா.செ.வான தி.நகர் எம்.எல்.ஏ. சத்யாவும், தன் மாவட்டத்தைப் பிரிப்பதன் மூலம் தன் அதிகார எல்லை சுருங்குவதை விரும்பலை. அதனால், அவரும் மாவட்டப் பிரிவினைக்கு மறுத்துட்டார். அதுமட்டுமில்லாமல், பிரிக்கப்பட்ட மாவட்டங்களின் பொறுப்பாளர்கள் மத்தியிலும் அதிருப்தி நிலவுது. நியமிக்கப்பட்ட 31 புதிய மா.செ.க்களில், தன் ஆதரவாளர்கள் 7 பேர் மட்டுமே இருப்பதை உணர்ந்த ஓ.பி.எஸ்.சும், எடப்பாடி மீது எரிச்சல்ல இருக்காராம்.''

Advertisment

""மா.செ.க்கள் தவிர மற்ற சில பதவிகளும் அறிவிக்கப்பட்டிருக்கே?''

""அதிலும் அதிருப்திகள் இருக்குது. எம்.ஜி.ஆர் காலத்து நடிகையான லதாவை ஜெ. மரணத்துக்குப் பிறகு, இ.பி.எஸ்.சும் ஓ.பி,எஸ்.சும் 3 முறை அழைச்சிப் பேசியதோடு, கட்சியின் இணைச் செயலாளராகவோ, கொள்கை பரப்புச் செயலாளராகவோ நியமிப்போம்னும் வாக்கும் கொடுத்திருக்காங்க. ஆனா, நடிகை விந்தியாவுக்கு முக்கியத்துவம் தந்த தலைமை நடிகை லதாவை கண்டுக்கலை. அதிருப்தியில் இருக்கும் லதாவை தினகரன் தரப்பு கனிவோடு பார்த்துக்கிட்டு இருக்குது.''

""தினகரன் வீட்டிலும் கெட்டிமேளம் சத்தம் கேட்கப் போகுதே?''

Advertisment

r

""ஆமாங்க தலைவரே, பாரம்பரியமான காங்கிரஸ் குடும்பமான பூண்டி வாண்டையார் குடும்பத்தில், கிருஷ்ணசாமி வாண்டையார் மகனுக்கும் தினகரன் மகளுக்கும் சம்பந்தம் போடப்பட்டிருக்கு. சசிகலா விடுதலையாகி வந்ததும் அவர் தலைமையில் தன் மகள் ஜெயஹரணியின் திருமணத்தையும் நடத்திடனும்ங்கிற வகையில் ஏற்பாடுகளை தினகரன் செய்துக்கிட்டிருக்காரு. காங்கிரஸ் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையாரின் மகன் ராமநாதன் துளசிக்கும் தினகரன் மகளுக்கும், இந்த கொரோனா காலத்தில் தினகரன் தங்கியிருக்கும் புதுச்சேரி ஆரோவில் பண்ணை வீட்டில், முக்கிய மான உறவுகள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்தது. ஒட்டுமொத்த அ.தி.மு.க.வும் தங்கள் கைக்கு மறுபடியும் வர, இந்தத் திருமணம் ஒரு சந்திப்புக் களமா இருக்கும்ங்கிற எதிர்பார்ப்பு தினகரனுக்கு இருக்குதாம்.''

""கூட்டணிக் கணக்கும் மாறுமா?''

""தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி, இரண்டு வாரத்துக்கு முன்னாடி முறைப்படி இ-பாஸோட போய், ஆரோவில் பண்ணை வீட்ல இருக்கும் தினகரனை சந்திச்சிருக்கார். பாஜ.க.வின் அழுத்தங்களுக்குப் பணிஞ்சி, காங்கிரஸைத் தி.மு.க. கழட்டிவிடப் போவதா வரும் செய்திகள் பற்றி இரண்டு பேரும் பேசியிருக்காங்க. சோனியா- ராகுல் கவனத்துக்கும் இதுபோன்ற தகவல் போயிருக்குதுன்னு சொன்ன அழகிரி, அப்படி ஒரு நிலைமை வந்தால், காங்கிரஸ் உருவாக்கும் புதிய கூட்டணியில் அ.ம.மு.க. வரணும்னு சொன்னாராம். ரஜினி அரசியலுக்கு வந்தால் எல்லாக் கூட்டணிக் கணக்கும் மாறும்னும் அங்கிருந்து கிளம்பற நேரத்தில் தினகரனிடம் சொன்னாராம் அழகிரி.''

""எல்லா கணக்குகளும் ஊரடங்கு முடிந் தால்தான் சரியா தெரியும். எப்பதான் ஊரடங்கு முடியுமாம்?''

""வரும் 29ந் தேதி அது பற்றி கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்துறாரு முதல்வர். ஊரடங்கை சின்னச் சின்ன கட்டுப்பாடுகளுடன் முடிவுக்கு கொண்டு வாங்கன்னு முதல்வருக்கு நிதித்துறை அழுத்தம் கொடுக்குதாம். இப்போதே பணப் புழக்கம் முடங்கி, மக்கள் மத்தியில் வறுமை தலைவிரிச்சி ஆட ஆரம்பிச்சிடிச்சி. இதே நிலை நீடித்தால், அசாம் தம்பதிகள் வறுமையால் தங்கள் குழந்தையை 45 ஆயிரம் ரூபாய்க்கு விற்க முனைந்தது போன்ற சம்பவங்கள், இங்கும் அரங்கேறலாம்னும் எச்சரிச்சிருக்குதாம்.''

""நிதி நெருக்கடியை சமாளிக்க எம்.எல். ஏ.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி வரை கை வைக்கப்பட்டிருக்கே?''

""அதைக் கண்டிச்சி மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டாரு. வருடம் தோறும் எம்.எல்.ஏ.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியாக 3 கோடி ரூபாயை அரசு ஒதுக் குது. இதில் இப்ப, கொரோனா நிவாரணத்துக்குன்னு தலா 1 கோடி ரூபாயை அது பிடித்து rrவிட்டது. அதோட நிக்காமல் ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் மேலும் தலா 25 லட்ச ரூபாயை கொரோனா நிதிக்கு ஒதுக்கனும்ன்னு வசூல் பண்ணியிருக்கு. மிச்சமிருக்கும் நிதியை, தொகுதி மேம்பாட்டுக்குப் பயன்படுத்த எம்.எல். ஏ.க்கள் முயன்றாலும், அதுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்காமல் பிரேக் போட்டு வச்சிருக்கு. இதில் எரிச்சலான ஆளும்கட்சி எம்.எல். ஏ.க்கள், தி.மு.க. எம்.எல்.ஏ.க்களைத் தொடர்பு கொண்டு, உங்க தலைவர் ஸ்டாலின் மூலமா, எங்க அரசை கண்டிங்கன்னு கோரிக்கை வச்சிருக்காங்க. அ.தி.மு.க-தி.மு.க. இரண்டு கட்சி எம்.எல்.ஏக்களுக்காகவும் ஸ்டாலினோட அறிக்கை வெளியாகியிருக்கு.''

""எடப்பாடிக்கும் அவருடைய அரசியல் ஆலோசகரான சுனிலுக்கும் மனத்தாங்கல்ன்னு சொல்லப்படுதே?''

""அண்மையில் போடப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகளின் டிரான்ஸ்பர் பட்டியலைமுன்னாள் உளவுத்துறை ஐ.ஜியான சத்தியமூர்த்தியும், எடப்பாடியின் மகன் மிதுனும்தான் தயாரிச்சாங்களாம். இதில் எடப்பாடியின் சமூகத்தைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு முக்கியப் பணி இடங்கள் பார்த்துப் பார்த்து வழங்கப்பட்டிருக்கு. இந்த விவகாரத்தில் தேவையில்லாமல் தன் பெயரும் அடிபடுதுன்னு எடப்பாடியிடம் புகார் சொன்ன சுனில், சாதிரீதியான அரசியல் உங்களை காலை வாரிவிட்டுவிடும்னு சொல்ல, இதைக்கேட்டு எரிச்சலான எடப்பாடி, சூடான சொற்களை சுனிலிடம் கொட்டிட்டாராம். இதில் சுனில் படு அப்செட்டுன்னு கோட்டை வட்டாரத்தில் ஹாட் டாபிக்.''

""வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ராஜீவ் வழக்கில் தொடர்புடைய நளினியும் ஏதோ ஒரு அப்செட் டில், தற்கொலைக்கு முயன்ற தாகச் செய்திகள் அடிபடுதே?''

rr

""நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி, நளினி சிறைத்துறையின் தேவையற்ற விசாரணை டார்ச்சரால், தற்கொலைக்கு முயன்றார்னு சொல்லியிருக்கார். சிறைத்துறை வட்டாரமோ, தற்கொலை முயற்சிக்கான தடயமோ-காயமோ நளினியிடம் இல்லை. பி.பி-சுகர் லெவல் கூட நார்மலாத்தான் இருக்குன்னு சொல்லுது. கைதிகள் தரப்போ, நளினிக்கு தன்னைப் பற்றிய செய்திகள் வெளியே போகக் காரணமாக இருப்பது, தன் சக கைதி ஒருவர்தான்னு சந்தேகப்படறாராம். அவர்களுக்கு இடையிலான சச்சரவால்தான், இப்படியொரு தகவல் பரவுச்சுன்னு சொல்றாங்க.''

""7 பேர் விடுதலையை தாமதப்படுத்துவது பற்றி ஹைகோர்ட் கேள்வி எழுப்பியுள்ள நிலையிலாவது நன்மை நடக்குதான்னு பார்க்கலாம்ப்பா...''

""காஞ்சி சங்கர மடத்துக்கு சொந்தமா திருவனந்தபுரத்தில் இருக்கும் உத்திராட நட்சத்திரம் மருத்துவக் கல்லூரியை மறைந்த rrஜெயேந்திரருக்கு வேண்டியவரான கௌரி காமாட்சி என்பவர் நிர்வகித்து வருவதையும், அதை சங்கர மடத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஆடிட்டர் குருமூர்த்தி தரப்பு, விற்க முயல்வது குறித்தும், அதனை எதிர்த்து கௌரி காமாட்சி போராடிவருவது குறித்தும் நாம் பலமுறை பேசியிருக்கோம். இந்த நிலையில் அந்த மருத்துவக் கல்லூரிப் பொறுப்பில் இருந்து கௌரி காமாட்சி நீக்கப்பட்டதாக அண்மையில் கேரள பத்தி ரிகைகளில், ஒரு கோடி ரூபாய் அளவுக்குச் செலவிட்டு சங்கரமடம் விளம்பரங் களைச் செய் திருந்தது. இதை எதிர்த்து அங்குள்ள நீதிமன்றத்தில் கௌரிகாமாட்சி முறையிட்டார். நீதிமன்றமோ, கௌரி காமட்சியின் மருத்துவக் கல்லூரி உரிமையில் யாரும் தலையிடக் கூடாதுன்னு அதிரடியாக அறிவிச்சிருக்குதாம்.’’

""நானும் ஒரு முக்கியமான தகவலை பகிர்ந்துக்கறேன்.. சுகாதாரத்துறைச் செயலாளராக பீலா ராஜேஷ் இருந்தப்ப, துறைக்கு உட்பட்ட ’டாம் கால்’ நிறுவன எம்.டி.யின் உபயோகத்திற்காக என்று ஒரு விலை உயர்ந்த கார் வாங்கப்பட்டது. அந்த சொகுசுக் காரை பீலாராஜேஷ்தான் பயன்படுத்திக்கிட்டு இருந்தார். பீலாவை சுகாதாரத்துறைச் செயலாளர் பதவியில் இருந்து, வணிக வரித்துறைக்கு மாற்றிய நிலையிலும், அந்த சொகுசுக் காரை டாம்காலிடம் ஒப்படைக்கலையாம்.''

______________

குஷ்புக்கு வலைவீசும் அ.தி.மு.க.!

சில நாட்களுக்கு முன் குஷ்புவின் ஃபேஸ்புக் படத்தில் காவிக்கலர் இருந்ததால், அவர் காங்கிரசிலிருந்து பா.ஜ.க.வுக்குத் தாவுகிறாரா என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு கிளம்பியது. அதேநேரத்தில், காங்கிரசில் முக்கியத்துவம் இல்லாமல் இருக்கும் குஷ்புவை அ.தி.மு.கவுக்கு கொண்டுவர ஆளுந்தரப்பு வலைவீசியுள்ளது. தி.மு.க.வில் அவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை தேர்தல் நேரத்தில் பிரச்சாரம் செய்ய வைப்பது என்பது தான் டார்கெட்டாம். திரையுலகினர் மூலமாக வெயிட்டாக வேலை செய்கிறது ஆளுந்தரப்பு