ராங்கால்! சங்கர்லால் அ.தி.மு.க. செயற்குழுவில் வெடித்த மோதல்! காங்கிரஸுக்குள் கட்டா குஸ்தி!

dd

"ஹலோ தலைவரே, கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தின் வெளியீட்டு விழா, சென்னையில் மிகக்கோலாகலமாக நடந்திருக்கு''”

"ஆமாம்பா, நாணயத்தை வெளியிட்ட ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கலைஞருக்கு பெரிய அளவில் புகழாரம் சூட்டியிருக்கிறாரே!''”

"உண்மைதாங்க தலைவரே.. ஏதோ நிகழ்ச்சிக்கு வந்தோம், போனோம்னு இல்லாம. கலைஞர் நிகழ்வில் உணர்வுப்பூர்வமாகக் கலந்துகொண்டிருக்கிறார் ராஜ்நாத்சிங். நாணய வெளியீட்டு விழாவிற்கு முன்பாக, முதல்வர் ஸ்டாலினுடன் கலைஞரின் நினைவிடத்துக்கும் சென்று அஞ்சலி செலுத்தி, தி.மு.க.வினரை நெகிழவைத்த அவர், நாணய வெளியீட்டு விழாவில் கலைஞரை மனம் திறந்து பாராட்டி, அவர்களை புதிய உற்சாகத்தில் நிமிர வைத்திருக் கிறார். கலைஞர் நாணயத்தை வெளியிட்டுவிட்டு உரையாற்றிய ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத்சிங், ’மதத்தின் பெயரில், இந்தியாவின் ஒற்றுமையை சிதைக்க ஒருபோதும் அனுமதிக்காத கலைஞர், மாநிலத் தலைவராக மட்டுமல்லாமல், மிக முக்கியத்துவம் வாய்ந்த தேசிய தலைவராகவும் திகழ்ந்தார்’ன்னு புகழாரம் சூட்டினார்.''”

"சரிப்பா, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மாற்றம் நடந்திருக்கிறதே?”

"ஆமாங்க தலைவரே, தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா மாற்றப்பட இருக்கிறார் என்றும் அவர், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தின் தலைவராக நியமிக்கப்பட இருக்கிறார் என்றும் ஒரு மாதத்திற்கு முன்பே நம் நக்கீரன் அழுத்தமாகச் சொல்லியிருந்தது. அதன்படிதான் இப்போது, சிவ்தாஸ் மீனா, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.''

"கடந்த சில மாதங்களாகவே அவர் இந்தப் பதவியில் அமர காய்களை நகர்த்திவந்தார். வருகிற அக்டோபர் மாதம் 5ஆம் தேதி ஓய்வுபெறவிருக்கும் நிலையில்தான், அவரது மாற்றம் நடந்திருக்கிறது. இவருக்காக முதல்வர் ஸ்டாலினிடம் சில உயர் அதிகாரிகள் சிபாரிசு செய்திருந்தார்கள். தனது அமெரிக்கப் பயணத்திற்குப் பிறகு, ஷிவ்தாஸை அவர் விரும்புகிற பதவிக்கு அனுப்பலாம் என்று முடிவெடுத்திருந்த ஸ்டாலின், அதற்கு முன்ன தாகவே அவர் கேட்ட பதவியைக் கொடுத்து ஷிவ்தாஸை மகிழ வைத்திருக்கிறார்.''

"தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் நியமிக்கப்பட்டிருப்பது கோட்டைத் தரப்பில் உற்சாகத்தைத் தந்திருக்கிறதே?''”

"உண்மைதாங்க தலைவரே, முதல்வர் ஸ்டாலினின் முதன்மைச் செயலாளராக இருந்த முருகானந்தம் ஐ.ஏ.எஸ்.தான் தற்போது, புதிய

"ஹலோ தலைவரே, கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தின் வெளியீட்டு விழா, சென்னையில் மிகக்கோலாகலமாக நடந்திருக்கு''”

"ஆமாம்பா, நாணயத்தை வெளியிட்ட ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கலைஞருக்கு பெரிய அளவில் புகழாரம் சூட்டியிருக்கிறாரே!''”

"உண்மைதாங்க தலைவரே.. ஏதோ நிகழ்ச்சிக்கு வந்தோம், போனோம்னு இல்லாம. கலைஞர் நிகழ்வில் உணர்வுப்பூர்வமாகக் கலந்துகொண்டிருக்கிறார் ராஜ்நாத்சிங். நாணய வெளியீட்டு விழாவிற்கு முன்பாக, முதல்வர் ஸ்டாலினுடன் கலைஞரின் நினைவிடத்துக்கும் சென்று அஞ்சலி செலுத்தி, தி.மு.க.வினரை நெகிழவைத்த அவர், நாணய வெளியீட்டு விழாவில் கலைஞரை மனம் திறந்து பாராட்டி, அவர்களை புதிய உற்சாகத்தில் நிமிர வைத்திருக் கிறார். கலைஞர் நாணயத்தை வெளியிட்டுவிட்டு உரையாற்றிய ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத்சிங், ’மதத்தின் பெயரில், இந்தியாவின் ஒற்றுமையை சிதைக்க ஒருபோதும் அனுமதிக்காத கலைஞர், மாநிலத் தலைவராக மட்டுமல்லாமல், மிக முக்கியத்துவம் வாய்ந்த தேசிய தலைவராகவும் திகழ்ந்தார்’ன்னு புகழாரம் சூட்டினார்.''”

"சரிப்பா, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மாற்றம் நடந்திருக்கிறதே?”

"ஆமாங்க தலைவரே, தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா மாற்றப்பட இருக்கிறார் என்றும் அவர், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தின் தலைவராக நியமிக்கப்பட இருக்கிறார் என்றும் ஒரு மாதத்திற்கு முன்பே நம் நக்கீரன் அழுத்தமாகச் சொல்லியிருந்தது. அதன்படிதான் இப்போது, சிவ்தாஸ் மீனா, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.''

"கடந்த சில மாதங்களாகவே அவர் இந்தப் பதவியில் அமர காய்களை நகர்த்திவந்தார். வருகிற அக்டோபர் மாதம் 5ஆம் தேதி ஓய்வுபெறவிருக்கும் நிலையில்தான், அவரது மாற்றம் நடந்திருக்கிறது. இவருக்காக முதல்வர் ஸ்டாலினிடம் சில உயர் அதிகாரிகள் சிபாரிசு செய்திருந்தார்கள். தனது அமெரிக்கப் பயணத்திற்குப் பிறகு, ஷிவ்தாஸை அவர் விரும்புகிற பதவிக்கு அனுப்பலாம் என்று முடிவெடுத்திருந்த ஸ்டாலின், அதற்கு முன்ன தாகவே அவர் கேட்ட பதவியைக் கொடுத்து ஷிவ்தாஸை மகிழ வைத்திருக்கிறார்.''

"தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் நியமிக்கப்பட்டிருப்பது கோட்டைத் தரப்பில் உற்சாகத்தைத் தந்திருக்கிறதே?''”

"உண்மைதாங்க தலைவரே, முதல்வர் ஸ்டாலினின் முதன்மைச் செயலாளராக இருந்த முருகானந்தம் ஐ.ஏ.எஸ்.தான் தற்போது, புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதுவரை முதல்வரின் விருப்பப்படி பணி யாற்றிவந்த அவர், இந்த புதிய பதவிக்கும் பொருத்தமானவராக இருப்பார் என்கிறார் கள். காரணம், அனைத்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையும் இவர் அரவணைத்து செல்லக்கூடியவர். அப்படியிருந்தும் இவரை தலைமைச் செயலாளராக ஆக்கிவிடக் கூடாது என்று ஒரு சிலர் தீவிரமாக லாபி நடத்தியிருக்கிறார்கள். இருந்தும் இவரை நன்கறிந்து வைத்திருந்த ஸ்டாலின், அவர்களின் குரலுக்கு செவிசாய்க்காமல் முருகானந்தத்தையே தலைமைச்செயலாளர் பொறுப்புக்கு டிக் அடித்திருக்கிறார். இதனையடுத்து முதல்வரின் செயலாளராக எஸ்.1ஆக உமாநாத்தும், எஸ்.2ஆக சண்முகமும், எஸ்.3 ஆக அனு ஜார்ஜும், எஸ். 4ஆக, இணைச்செயலாளராக தூத்துக்குடி கலெக்டராக இருந்த லட்சுமிபதி நியமிக்கப் பட்டிருக்கிறார். மிகவும் நேர்மையான ஐ.ஏ.எஸ்.ஸாக பணியாற்றியவர் இவர் என்றும், இவருடைய அப்பா கோபால கிருஷ்ணன் கலைஞர் அரசில் ஐ.ஏ.எஸ்.ஸாக பணிபுரிந்தவர். இவர் வன்னிய சமுதாயத் தைச் சேர்ந்தவர். லட்சுமிபதி ஐ.ஏ.எஸ். நியமனம் மூலம் தி.மு.க. அரசு சமூக நீதியை நிலைநாட்டியுள்ளது என பலரும் பாராட்டி வருகிறார்களாம்.'' ”

"தமிழ்நாடு அரசின் சீருடைப் பணி யாளர் தேர்வாணையத் தலைவர் நியமனமும் சர்ச்சைகளை உருவாக்கி வருகிறதே?''”

dd

"ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி சுனில்குமாரை தமிழக அரசு சீருடைப் பணியாளர் தேர்வாணையத் தலைவராக நியமித்திருக்கிறது தி.மு.க. அரசு. இந்த நியமனம் தமிழக ஐ.பி.எஸ். அதிகாரிகள் தரப்பில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கி வருகிறது. குறிப்பாக, தமிழக காவல்துறையில் டி.ஜி.பி.க்கள், ஏ.டி.ஜி.பி.க்கள் என உயர் பொறுப்புகளில் 40-க்கும் மேற்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகள் இருக்கின்றனர். அப்படியிருக்கும்போது இவர்களில் ஒருவரை இந்தப் பதவியில் நியமிக்காமல், 2021-ல் ஓய்வுபெற்ற வடநாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட சுனில் குமாரை எதற்காக நியமிக்கவேண்டும் என அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இன்னும் சில அதிகாரிகளோ, இப்போது முதல்வரிடம் ஆலோசிக்க ôமலே கோட்டையில் பல முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றுதான் இது. இப்படிப்பட்ட போக்குகள் சரியானதில்லை என்று கோட்டை வட்டாரத்திலேயே சூறாவளியை எழுப்புகின்றனர்.''”

"நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியின் முதல் மாநாட்டை நடத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறாரே?''

"ஆமாங்க தலைவரே, நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை திருச்சியில் நடத்தும் ஆர்வத்தில் இருக்கிறாராம். இதற்காக அங்குள்ள ரயில்வே கிரவுண்ட்டை அவர் தரப்பு பரிந்துரை செய்ததாம். இது ஒன்றிய அரசின் கட்டுப் பாட்டிற்குள் இருக்கும் இடம் என்பதால், பா.ஜ.க.வின் மாநில நிர்வாகி மூலம் இடத்தை வாங்க நடிகர் விஜய் முயற்சி செய்துவருகிறார். இதற்கிடையில் அந்த இடம் சிறியது என்று அவரது கட்சி நிர்வாகிகள் சிலர் சொல்ல, விழுப்புரம் பகுதியிலுள்ள ஒரு 85 ஏக்கர் இடத்தையும் விஜய் பரிசீலித்து வருகிறாராம். இந்த மாநாட்டை மிகப்பிரமாண்டமாக நடத்திக்காட்டி, திராவிடக் கட்சிகளை ஆச்சரியத்தில் திணற வைக்க வேண்டும் என்று, தனது சகாக்களிடம் சொல்லிவருகிறாராம் விஜய். இதற்காக கோடிக்கணக்கில் பணம் இறைக்கப்படவிருக்கிறது என்கிறார்கள்.''”

"அ.தி.மு.க. செயற்குழுவில் காரசாரத்துக்குப் பஞ்சமில்லையே?''”

dd

"ஆமாங்க தலைவரே, கடந்த 16ஆம் தேதி எல்லோராலும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட அ.தி.மு.க. செயற்குழு, எடப்பாடி தலைமையில் கூடியது. அதில் சசிகலா, ஓ.பி.எஸ். உள்ளிட்டவர் களை அ.தி.மு.க.வில் இணைக்கவேண்டும் என்று வலியுறுத்தி, சீனியர்கள் பலரும் எடப்பாடிக்கு எதிராக ஒரு சூறாவளியை ஏற்படுத்தவிருப்பதாக செய்திகள் பரபரப்பாகப் பரவி இருந்தது. இந்த விவகாரம் குறித்து, செயற்குழுவுக்கு முன்னதாக செங்கோட்டையன், சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலு மணி, தங்கமணி உள்ளிட்டோர் எடப்பாடியிடம் விவாதித்தபோது, ’"அவர்களை இப்போதைக்கு இணைப்பதால் நமக்கு என்ன லாபம்? இவர்களை இணைப்பதால் முக்குலத்தோர் சமூக ஆதரவு முழுதும் அ.தி.மு.க.வுக்கு வந்துவிடுமா? வரவே வராது. இவர்கள் அவர்கள் மத்தியில் முழுதாக அம்பலமாகிவிட்டார்கள். அதனால் இவர்களை யாரும் ஒரு பொருட்டாகவே கருதவேண்டாம்' என்று எடப் பாடி அழுத்தமாக வாதிட, அதை ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை என்பதைப் புரிந்துகொண்ட சீனியர்கள் கப்சிப் ஆகி விட்டார் களாம். செயற்குழு வில் அ.தி. மு.க. மாஜி மந்திரி களான சி.வி. சண்முகத்துக்கும், வேலுமணிக்கும் இடையில் காரசார வாக்குவாதம் ஏற்பட்டபோது, "நீ பா.ஜ.க.வின் கையாள்'’என்று சி.வி.சண்முகம், வேலுமணியை பகிரங்கமாகவே போட்டுத் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்திவருகிறதாம்.''”

"அ.தி.மு.க. கூட்டணிக்கு காங்கிரஸ் வரும் என்று தங்கள் கட்சி சீனியர்களிடம் எடப்பாடி சொன்னாராமே?''”

"உண்மைதாங்க தலைவரே, தேர்தலில் மக்களை அ.தி.மு.க. பக்கம் இழுப்பதற்கு, தி.மு.க. அரசின் ஊழல்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவேண்டும் என்று செயற்குழுவில் அழுத்தம் திருத்தமாகச் சொன்ன எடப்பாடி, தி.மு.க. அரசுக்கு எதிரான கண்டனத் தீர்மானங்கள் சிலவற்றை நிறைவேற்றிவிட்டு, செயற்குழு கூட்டத்தை முடித்துவைத்தார்.

"சரிப்பா, தமிழக காங்கிரஸுக்குள் ஒரு கலாட்டா நடந்துக்கிட்டு இருக்குதே?''”

ff

"காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பீட்டர் அல்போன்ஸ் கூறிய சில கருத்துக்களுக்கு, அதே கட்சியைச் சேர்ந்த சீனியரான திருச்சி வேலுச்சாமி மிகக்கடுமையாக எதிர்வினை ஆற்றி னார். அதாவது, காரசாரமாக பதிலடி கொடுத்தார். இதனால் காங்கிரஸில் இந்த இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் வெடித்திருக்கிறது. இது சத்திய மூர்த்தி பவனை பதட்டப் பரபரப்பிற்குள் மூழ் கடித்திருக்கிறது. இந்த நிலையில், திருச்சி வேலுச்சாமிக்கு மாநில காங்கிரஸ் தலைவ ரான செல்வப்பெருந்தகை அதிக முக்கியத்துவம் தரு கிறார். அதனால்தான், வேலுச்சாமி இப்படியெல் லாம் பேசுகிறார், பீட்டர் அல் போன்ஸை எடுத் தெறிந்து பேசு கிறார் என, செல்வப் பெருந்தகைக்கு எதிராக பீட்டரின் ஆதரவாளர்கள் கட்சியின் டெல்லி மேலிடத்துக்குப் புகார்களை அனுப்பிவருகிறார்கள்.''”

"தமிழக பா.ஜ.க.விலும் சர்ச்சைகள் எழுந்துக்கிட்டி ருக்குதே?''”

"பா.ஜ.க.வின் வட சென்னை மேற்கு மாவட்டத் தலைவரும், மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜனின் தீவிர ஆதரவாளருமான கபிலன், சமீபத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் தி.மு.க.வையும், முதல்வர் ஸ்டாலினையும் மிகவும் தரக்குறைவாகப் பேசிய தால் கைதானார். அவரைப் புழல் சிறையில் அடைத்திருக்கிறது காவல்துறை. இதையறிந்த பா.ஜ.க. நிர்வாகிகள் சிலர், கட்சியின் மாநில நிர்வாகியைச் சந்தித்து, கபிலனையும், வெவ்வேறு வழக்குகளில் கைதாகிச் சிறையில் இருக்கும் இன்னும் சில பா.ஜ.க. நிர்வாகிகளையும் சந்திப்ப தோடு, அவர்களுக்குத் தேவையான சட்ட உதவி களையும் நாம் செய்யவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் மாநில நிர்வாகியோ, "இவங்கள்லாம் சிறையில் இருப்பதால் நம் கட்சிக்கு என்ன நஷ்டம்? அவர்கள் சிறையில் இருந்துட்டுப் போகட்டும். அவரவரும் அவரவர் முயற்சியில் வெளியில் வரட்டும். இவர்களுக்கெல்லாம் கட்சி தன் நேரத்தைச் செலவிட முன்வராது' என்று இறுக்கமான முகத்தோடு சொல்லிவிட்டாராம். இந்தத் தகவல் கட்சியின் அனைத்து மட்டத்திலும் பரவி, "கட்சிக்காரனுக்கான குரல் கொடுக்காத இவரெல்லாம் தலைவரா?' என ஆளாளுக்கு எதிர்ப்புக் குரலைக் கொடுத்துவருகிறார்கள்.''”

"நானும் ஒரு முக்கியத் தகவலைப் பகிர்ந்துக்கறேன். ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக, அண்மையில் பா.ஜ.க. வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் பால் கனகராஜுக்கு சம்மன் அனுப்பி, அவரிடம் காவல்துறை விசாரணை நடத்தியது. அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் அவர் பதில் சொல்லியிருக்கிறார். இந்த நிலையில், அவரைக் கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று, சில ஆடியோ விபரங்களுடன் ஆட்சித் தலைமையிடம் காவல்துறை அனுமதி கேட்டதாம். இது குறித்து அரசின் தலைமை வழக்கறிஞர், குற்றவியல் வழக்கறிஞர் மற்றும் தி.மு.க.வின் சீனியர் வழக்கறிஞர்கள் ஆகியோரிடம் ஆலோ சனை நடத்தப்பட்டிருக்கிறது. கடைசியில், வெறும் ஆடியோக்களை மட்டுமே வைத்துக்கொண்டு கைது நடவடிக்கை வரை போகக்கூடாது. அது வழக்கை பலவீனப்படுத்திவிடும். எனவே இந்த ஆதாரங்கள் போதுமானதில்லை என்று ஆட்சித் தலைமை சொல்லிவிட்டதாம்.''”

______________

இறுதிச் சுற்று!

ee

திருவொற்றியூர் தி.மு.க. எம்.எல்.ஏ. கே.பி.சங்கரின் இல்லத் திருமண விழா, 19-ந் தேதி திங்கள்கிழமை நடந்தது. அதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் ஸ்டா-ன், "கலைஞரின் நாணய விழா நிகழ்ச்சிக்கு ராகுல்காந்தியை ஏன் அழைக்க வில்லை?' என்பது குறித்து விளக்கினார். விழாவில் பேசிய முதல்வர், "நாணயம் வெளியீட்டு விழாவில் கலைஞரைப் பற்றி தி.மு.க.வினரை விட சிறப்பாக பேசினார் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங். அப்படி புகழ்ந்து பேச வேண்டுமென அவருக்கு அவசியமே கிடையாது. கலைஞரைப் பற்றி ராஜ்நாத்சிங் புகழ்ந்து பேசியதை சிலரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அப்படி தாங்கிக்கொள்ள முடியாத எதிர்க்கட்சி தலைவர் (எடப்பாடி) நமக்கு வாய்த்திருக்கிறார். கலைஞர் நாணய வெளியீட்டு விழா என்பது தி.மு.க. நிகழ்ச்சி இல்லை. அது, மத்திய அரசின் நிகழ்ச்சி. மத்திய அரசின் நிகழ்ச்சி என்பதால் ராகுல்காந்தியை அழைக்கவில்லை. பா.ஜ.க.வுடன் ரகசிய உறவு வைத்துக்கொள்ள வேண்டி அவசியம் தி.மு.க.வுக்கு கிடையாது. ஆதரித்தாலும், எதிர்த்தாலும் தி.மு.க. எப்போதும் அதன் கொள்கை யி-ருந்து விலகியதில்லை. நம் கொள்கையை விட்டுக் கொடுக்கமாட்டேன் என அண்ணா மீது ஆணையாக சொல்கிறேன். ஜெயல-தாவுக்கு இரங்கல் கூட்டம் கூட நடத்த முடியாதவர்கள், கலைஞரின் விழாவை கேள்வி கேட்பது ஏன்?'' என்றார் ஆவேசமாக.

-இளையர்

nkn210824
இதையும் படியுங்கள்
Subscribe