திவுத்துறையின் வருமானம் எப்போதை யும்விட இம்முறை அதிகரித்திருப்பதாக தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சரான பி.மூர்த்தி அறிக்கை வெளியிட்டு பெருமிதப் பட்டுக் கொண்டிருக்கும் அதேநேரத்தில், நிர்வாகச் சீர்கேடுகளும் முன்னெப்போதையும்விட இப்போது அதிகரித்துள்ளதாக வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றனர் துறைசார்ந்த சில அதிகாரிகள்.

ரியல் எஸ்டேட் சட்டங்கள், காலிப்பணியிடங்களை நிரப்புதல், தனியார் மூலம் செயல்படுத்திக் கொண்டிருக்கும் பதிவுத்துறை ஒப்பந்தப் பணிகளை ரத்து செய்தல், பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழகமெங்கும் உள்ள சார்பதிவாளர் சங்கத்தினர் கடந்த வாரம் ஆர்ப்பாட்டம் நடத்தினாலும், அவர்களின் முக்கிய கோரிக்கையாக இருந்தது, ‘பொதுக்கலந்தாய்வின் மூலம் பணி யிடங்களை நிரப்பவேண்டும்’ என்பதும், ‘உரிய காலத்தில் முறையாக பணிமூப்பு பட்டியலை வெளியிட்டு பதவி உயர்வு வழங்கவேண்டும்’ என்பதும்தான். இதுகுறித்து அத்துறையில் பணியாற்றும் சிலரிடம் நாம் பேசினோம்.

dd

Advertisment

தங்களது பெயரோ பதவியோ வேண்டாம் என்ற கோரிக்கையோடு தயக்கமாக சிலர் வாய்திறந்தனர். அரசுக்கு அதிக வருவாய் தரும் முக்கிய துறைகளில் ஒன்றாக இருக்கும் பதிவுத்துறையானது சில அதிகாரிகளின் பாக் கெட்டுகளை நிரப்பும் காமதேனுவாகவும் இருப் பதுதான் இங்கு பிரச் சனையே. ஆண்டுக் கணக்கில் பணியாற்றி விட்டு பதவி உயர்வுக்காக பலரும் காத்திருக்கும்போது, அவர்களுக்கு பதவி வழங்காமல் அதே அலுவலகத்தில் இருக்கும் உதவி யாளர்களை சார்பதிவாளர்களாக நியமித்து அதன் மூலம் கைநிறைய காசு பார்த்து வருகிறார்கள் சில அதிகாரிகள்.

பதிவுத்துறை தலைவர் அலுவலகத்தில் பணியாற்றும் சில ஊழியர்கள் இத்துறையில் நடக்கும் மோசடிகளை பட்டியலிடத் துவங்கினர்.

dd

"பதிவுத்துறையில் நடை பெறும் நிர்வாகச் சீர்கேடுகளுக்கு துறையின் செயலர் ஜோதி நிர்மலா சாமிக்கு எந்த அளவில் பங் குள்ளதோ, அதுபோன்றே பதிவுத்துறையின் தலைவரான ஐ.ஜி. சிவன்அருளுக்கும் உண்டு. ‘சார்பதிவாளர்கள் ஒரு இடத்தில் 3 ஆண்டுகளும், மாவட்ட பதிவாளர் நிலையில் பணிபுரியும் சார்பதிவாளர்கள் ஒரு இடத்தில் 2 ஆண்டுகள் மட்டுமே பணிபுரிய முடியும்’ என்பது அரசாணை. பதிவுத் துறைக்கு ஜோதிநிர்மலா சாமி செயலாளராக பதவியேற்ற பிறகு மொத்தமுள்ள 580 சார்பதிவாளர் அலுவலகங் களை ஏ, பி, சி என மூன்றாக தரம் பிரித்து, ‘"ஏ கிரேடு' அலுவலகத்தில் 1 வருடமும், "பி கிரேடு' அலு வலகத்தில் 2 வருடமும், "சி கிரேடு' அலுவலகத்தில் 3 ஆண்டுகளும் ஒரு சார்பதிவாளர் பணிபுரிய லாம்’ என்று புதியதாக அரசாணை பிறப்பித் தார். ஆனால் இதுவரை அதனை நடை முறைப்படுத்த முடியவில்லை. காரணம், அவ சரகதியில் பிறப்பிக்கப்பட்ட இந்த அரசாணை யிலுள்ள முரண்பாடான விஷயங்களே ஆகும். இதனால், பல சார்பதிவாளர்கள் ஒரே அலுவலகத்தில் 4, 5 ஆண்டுகள் கடந்த பின்னரும் தொடர்ந்து பணியாற்றுகின்றனர்.

உதாரணமாக கோடம்பாக்கம் -ஜக்கரியா காலனியிலுள்ள கோடிக்கணக்கான மதிப் புடைய ஒரு சொத்தினை போலியாக ஆவணம் பதிவுசெய்த மூன்றெழுத்து பெண் அதிகாரியும், ஆவடியில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தை பதிவு செய்த மற்றொரு ஏழு எழுத்து பெண் அதிகாரியும் பல்வேறு முறைகேடுகள் செய்த பின்பும் தொடர்ந்து அங்கு பணியாற்றி வருகின்றனர். சார்பதி வாளர்களை மாறுதல் செய்யவேண்டிய பதிவுத்துறை தலைவரான சிவன்அருள், வரும் செப்டம்பர் மாதம் ஓய்வுபெற உள்ளதால்... துறையில் எது நடந்தாலும் பரவாயில்லை’ என்று கண்டும் காணாமலும் இருக்கிறார்.

தலைநகரிலேயே இதுதான் நிலைமை என்றால் மற்ற மாவட்டங்களின் நிலையை யூகித்துக்கொள்ளலாம். இதுபோன்ற சீர் கேடுகள் சரிசெய்யப்பட்டால்தான், தகுதியான வர்களுக்கு சரியான பதவியும் பணியிடமும் கிடைக்கும்''’என்றனர் அவர்கள்.

dd

Advertisment

இது இப்படியிருக்க, மேலிடத்திலிருந்து பரிந்துரை செய்யப்படும் நியாயமான இட மாறுதலைக்கூட பதிவுத்துறை தலைவர் அலு வலகத்தில் பணியாற்றும் சிலர் கண்டுகொள்வ தில்லையாம். இதனால், தனியாக ரூட் போட்ட மேலிடம், 10 மண்டலங்களின் துணை பதிவுத்துறை தலைவர் களைக் கையிலெடுத்து அவரவர் மண்டலத்திலுள்ள சார்பதி வாளர்களை பணியிட மாற்றம் செய்ய லிஸ்ட் அனுப்பியிருக்கிறது. “தனது அதிகார வரம் பையும் மீறி சென்னை யிலுள்ள ஒரு பெரிய நிறுவனத்திற்கு சாதகமாகச் செயல்பட்டு அரசுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக உயரதிகாரி ஒருவர் மீது ஒருபுறம் விசாரணை நடந்துகொண்டிருக்கும்போதே அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், கடைக்கோடி மாவட்டமான ராமநாதபுரத்தில் வீட்டுவசதி வாரிய குடியிருப்போர் நலச்சங்கத்திற்கு சொந்தமான குழந்தைகள் படிக்கும் பள்ளிக் கூடத்தை மோசடி யாளர்களிடமிருந்து மீட்டு ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட விசயத்திலும்கூட, திகட்டத் திகட்ட ‘லட்டு’ சாப்பிட்டுள் ளார் அந்த அதிகாரி’என தலையிலடித் துக் கொள்கின்றனர்.

நிலைமை சீரடைய பதிவுத்துறை மீது அமைச்சர் அதிக அக்கறை காட்டவும், மேலும், முதல்வரும் தன் பார்வையை பதிக்க வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள் நியாய மான அதிகாரிகள்.