"கோவை ஈஷாவிலுள்ள கட்டிடங்கள், ஆதியோகி சிலை உள்ளிட்டவைகள் முன்அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளன'' என 2017ம் ஆண்டு தொடர்ந்திருந்த வழக்கில், "ஈஷாவிற்கு சிலை வைக்கவோ, கட்டிடங்கள் கட்டவோ அனுமதி பெறவில்லை' என தமிழக அரசு பதிலளித்திருந்தது. இந்நிலையில், கடந்த வியாழனன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கங்கா புர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய முதல் பெஞ்சோ, "கோவை மண்டல நகரமைப்பு திட்டமிடல் துணை இயக்குனர் முறையாக ஆய்வு செய்து உரிய அனுமதி பெறப்படவில்லை என தெரியவந்தால் சட்டப்படி உரிய நடவடிக்கையை விரைவாக எடுக்க வேண்டும்' என உத்தரவிட்டது.

isha

"தீர்ப்பினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில செயற்குழு வரவேற்கிறது. இத்தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு தாமதமில்லாமல் ஈஷா யோகா மையத்தின்மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், மேல்முறையீட்டு நடவடிக் கைகளுக்கு ஈஷா யோகா மையம் முயற்சிக் கும்பட்சத்தில் அதனை முறியடிக்கவும் உரிய சட்ட ஏற்பாடுகளை செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். சட்ட விரோதமாக செயல்பட்ட ஈஷா யோகா மையத் தின் மீது தாமதமில்லாமல் நட வடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள் ளது' என கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கையை வெளியிட... தீர்ப்பு அனைத்து தரப்பு மக்களாலும் பேசுபொரு ளானது. ஆனால், "அனைத்திற்கும் ஆவணம் எங்க ளிடம் இருக்கின்றது. எங்கேயும் எப்போதும்' என ஈஷா மையமும் பதில் அறிக்கையை வெளியிட்டது. அப்படியெனில் யார் சொல்வது பொய்..?

"ஈஷா மையத்தினரால் 2017ம் ஆண்டு நிறுவப் பட்ட ஆதியோகி சிலை உள்ளிட்ட கட்டிடங் களுக்கு எவ்வித உரிய அனுமதியும் பெறவில்லை. வழிபாட்டுத் தலத்திற்கான மாவட்ட ஆட்சியரின் தடையில்லாச் சான்றிதழ், சுற்றுச்சூழலுக்கான மாசு கட்டுப்பாட்டு வாரிய சான்றிதழ், மலை இடர் பாதுகாப்பு அமைப்பிடமிருந்து சான்றிதழையும் பெறவில்லை. இதனால் எங்களைப் போன்ற மலை வாழ் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. அதுபோல் வன விலங்குகளின் வலசை பாதையும் மாறியதால் மனித மிருக மோதல் ஏற்பட்டு உயிர்ப் பலிகள் நடந்து வருகின்றன. அதுபோல் அந்த வனப்பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இயற்கைக்கு மீறி நடக்கின்றன. இதனைத் தடுத்து நிறுத்திட வேண்டும்'' என சென்னை உயர் நீதிமன்றத்தின் கதவுகளை தட்டியிருக் கின்றார் கோவை வெள்ளியங்கிரி மலை பழங்குடியின பாதுகாப்பு சங்க தலைவர் முத்தம்மாள் என்பவர்.

Advertisment

இதன் தொடர்ச்சியாக, "ஆதியோகி சிலை உள்ளிட்ட கட்ட டப் பணிகளை நிறுத்தி வைக்கவும், ஈஷா மையத்தினை சீல் வைக்கவும் 2017ம் ஆண்டே மாவட்ட ஆட்சியருக்கு நாங்கள் கடிதம் கொடுத்திருந் தோமே' என தமிழக நகரமைப்பு திட்டமிடல் துறை பதிலளித்திருந்தது. அதன் பின் வழக்கு கிணற்றில் போட்ட கல்லானது.

isha

"1990-ல் Hill Area Conservation Authority எனப்படும் ஹாகா ஆணையம் காடுகளில் வனவிலங்கு மற்றும் சூழலைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டது. வனப்பகுதியில் கட்டடங்கள் எழுப்ப வேண்டுமானால் இதனின் அனுமதி இல்லாமல் யாராலும் எழுப்ப முடியாது. அதாவது "300 சதுர மீட்டர் அளவுக்கு கட்டடம் கட்டவேண்டுமென்றால் இந்த ஆணையத்தின் அனுமதி அவசியம். ஆனால் ஜக்கி வாசுதேவ் இவர்களைக் கண்டு கொள்ளவில்லை. ஈஷாவில் கட்டடங்களை கட்டி விட்டுத்தான் அனுமதிக்கே விண்ணப்பித்திருந்தார். அதிலும் சாதுர்யமாக, "ஈஷா மையத்தால் கட்டப்பட்ட இங்குள்ள கட்டடங்கள் மத ரீதியிலானவை' என இக்கரை போளுவம் பட்டி பஞ்சாயத்தில் அனுமதி வாங்கியதாக குறிப்பிட்டிருந் தார். ஈஷாவில் என்ன இலவசமாகவா கொடுக்கின்றார்கள்? மல்டிப்ளக்ஸ் தியேட்டரில் வாங்கும் பாப்கார்ன் விலையை விட கூடுதலாகத் தான் ஒவ்வொரு பொருளையும் விற்பனை செய்கின்றார்கள். மத ரீதியிலான கட்டடம் எனக் கூறிவிட்டு வணிகரீதியிலான பொதுப்பயன்பாட்டிற்காக பயன்படுத்து வது எவ்வகையில் உகந்தது? இதுதான் ஜக்கியின் களவாணித்தனம். இம்மாதிரியான கட்டுமானங்களுக்கு ஹாகா, ஆட்சியர், நகர்ப்புறத் திட்டமிடல் துறை ஆகியோ ரின் ஒப்புதல் தேவை. ஆனால் எதனையும் ஜக்கி பெறவில்லை. நம்மை யார் என்ன செய்ய முடி யும்..? என்கின்ற ஆணவம்'' என்கிறார் பெயர் தவிர்த்த வருவாய்த்துறை அதிகாரி ஒருவர்.

இக்கரை போளுவம் பட்டி கிராமப் பஞ்சாயத்திற் குட்பட்ட 48/1, 2, 49,50/1 உள்ளிட்ட சர்வே எண் களின்படி 109 ஏக்கரில் ஈஷா யோகா மையம் அமைந் துள்ளதாகவும், அதில் வளாகத்தின் தென் புற எல்லையில் தியான லிங்கம், லிங்கபைரவி கோவில், யோக பயிற்சி மையம், பெண்கள் குளியலறை, கழிவறை மற்றும் ஏ.டி.எம். உள்ளிட்ட கட்டடங்களும், கிழக்குப்பகுதியில் தீர்த் தக்குண்ட கட்டிம், ஆதியோகி ஆலயம் மற்றும் தாமரைக்குளம் உள்ளிட்ட கட்ட டங்களும், தியானலிங்க வடபுறத்தில் வாகன நிறுத்துமிடம், ஈஷா யோக மையத்தின் கட்டடங்கள் உள்ளன இதற்கு எவ்வித அனுமதியையும் பெற வில்லை என்கின்றது அரசு ஆவணங்கள். அதுபோக, மேற்கு பகுதியில் காப்புக் காட்டுக்குள் அமைந்துள்ள 9 மீ. அகல சரளைச்சாலை அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோத கட்டடங்களை 30 நாட்களுக்குள் இடித்துவிட வேண்டு மென மாவட்ட வன அலுவலர் 28-08-2012 அன்று ஒரு கடிதமும், 05-11-2012 அன்று ஈஷாவின் சட்ட விரோத கட்டுமானங் களை நிறுத்தவேண்டி ஒரு கடிதத்தையும், கட்டடங்களை தானாக இடிக்க முன்வராத நிலையில் கட்டடங் களுக்கு சீல் வைக்க வேண்டுமென 01-03-2013 ஒரு கடி தத்தையும் 02-02-2015 அன்று எந்நேரமும் சட்டவிரோத கட்டி டங்களுக்கு சீல் வைக் கப்படலாம் எனவும் கோவை மண்டல நகரமைப்பு திட்ட மிடல் துணை இயக்கு னர் எச்சரித்தார். ஆனால், கண்டு கொள்ளவில்லை ஜக்கி வாசுதேவ். விளைவு... துணை இயக்குனர் இடமாற்றம் செய்யப்பட்டார். அதன் பின், ஒரு சிலர் தவிர யாரும் ஈஷாவை எதிர்க்கத் துணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

isha

கோவை மண்டல நகரமைப்பு திட்டமிடல் துறையில் பணியாற்றிய அதிகாரி ஒருவரோ, "1,402.62 சதுர மீட்டரில் ஒரு செயற்கை ஏரி ஈஷாவினுள் உள்ளது. அதற்கும் அனுமதியில்லை. 32,855 ச.மீட்டர் வரை கட்டடம் கட்ட கிராமப் பஞ்சாயத்தின் அனுமதியே போதும் என்கின்ற வாதத்தை வைக்கின்றார் ஜக்கி வாசுதேவ். ஆனால், ஹாகாவின் பகுதியில் வரும் பகுதிக்கு ஒப்புதல் அளிக்க பஞ்சாயத்திற்கே அனுமதி இல்லை. ஹாகாவின் அனுமதியில்லாமல் சட்டவிரோத கட்டடங்களை கட்டி வரும் ஈஷாவினை தடுத்து நிறுத்தாதது ஏன்? என வனத் துறையிடம் சி.ஏ.ஜி. கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது. ஆனால், 16-03-2017ல் "நாங்கள் அனைத்துக் கட்டிடங்களுக்கும் அனுமதி பெற்றோம்' என்றார் ஜக்கி வாசு தேவ். ஆனால், ஈஷா வில் சட்டவிரோதக் கட்டடங்கள் உள்ளதா? என ஆராய கமிட்டி அமைக்கப்பட்டதே அதற்கு அடுத்த நாளான 17-03-2017 அன்றுதான். இதிலிருந்து தெரியவில்லையா ஜக்கியின் தகிடுத்தத் தங்கள்''" என்கிறார் அவர்.

இந்த வழக்கில் ஆஜரான வழக்கறிஞ ரான புருஷோத்தம னோ, "கோவை மண் டல நகரமைப்பு திட்ட மிடல் நீதிமன்றத்தில் அளித்த ஸ்டேட்டஸ் அறிக்கையின்படி ஈஷா மையம் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் கட்டடங்களில் இரண்டு அரசு நிலம் நிரூபணமாகி யுள்ளது. அது தவிர, நொய்யல் ஆற்றின் ராஜ வாய்க் காலே ஈஷாவின் ஆதியோகி சிலைக்கு அடியில் இருக்கின்றது. ஈஷாவோ, "ராஜ வாய்க்கால் அங்கி ருப்பதை ஒத்துக்கொண்டு அதன் மேல்தான் சிலை வைத்துள்ளோம். வாய்க்காலை ஒன்றும் செய்ய வில்லை' என தெரிவித்துள்ளது. இந்த வழக்கினைப் பொறுத்தவரை குறிப்பிட்ட 2 சர்வே எண்களை மட்டும் வகைப்பாடு மாற்றம் செய்ததாகக் காண் பித்துவிட்டு, கூடுதலாக 18க்கும் அதிகமான சர்வே எண்களை இணைத்து அனுமதி கேட்டிருக்கின்றது ஈஷா. அதுவும் இப்பொழுது நிரூபணமாகியுள்ளது. ஹாகா, நகரமைப்பு திட்டமிடல் துறை, சி.ஏ.ஜி. ஆகியன கிடுக்கிப்பிடி போட்ட நிலையில்... வனத்துறையின் தடையில்லாச் சான்றிதழை காண்பிக்கின்றது ஈஷா. ஆனால் அதிலும் ஈஷா மையத்திற்கு தடையிருக்கின்றது என அறியவில்லை ஈஷா'' என்கிறார் அவர்.

________________

மகள்களை பார்க்கத் தடையில்லை.. கோர்ட் அதிரடி!

isha

ஈஷாவால் துறவிகளாக்கப்பட்ட கீதா, லதா ஆகிய எங்களது குழந்தைகளை பார்க்க அனுமதி வேண்டுமென நீதிமன்றத்தை பேராசிரியர் காமராஜ் என்பவர் அணுகிய நிலையில், குழந்தைகளைப் பார்க்க அனுமதிக்க ஈஷாவிற்கு உத்தரவிட்டது நீதிமன்றம். ஆரம்பத்தில் குழந்தைகளை பார்க்க அனுமதித்த ஈஷா பின்னாளில் பெற்றோர்களை அனுமதிக்கவில்லை. மாறாக பெண் துறவிகளைக் கொண்டே, பிரச்சனை ஏற்படுத்துகின்றார். அதனால் பெற்றோர்களுக்கு அனுமதி மறுக்க வேண்டுமென 2017ல் நீதிமன்றத்தை நாடியது ஈஷா. இதனின் எதிரொலியாக வழக்கு நீதிமன்றத்தில் இருக்கின்றது. என காரணம் காட்டி பெற்றோரை அனுமதிக்க மறுத்தது. இந்நிலையில், கடந்த 04-08-2023 அன்று வயதான காலத்தில் பெற்றோர்களைப் பார்க்கவேண்டியது குழந்தைகளின் கடமை. ஆகையால் குழந்தைகளை பார்க்க எவ்வித தடையையும் ஈஷா ஏற்படுத்தக் கூடாதென நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்ததது குறிப்பிடத்தக்கது.