ராங்கால் உதயநிதிக்கு கூடுதல் பொறுப்பு! -புதிய வியூகத்தில் ஸ்டாலின் வில்லங்கத்திற்கு வில்லங்கம்! -அண்ணாமலையின் காலை வாரும் முருகன்! ஸ்ரீமதிக்கு மணிமண்டபம்! -கள்ளக்குறிச்சி அப்டேட்!

ff

"ஹலோ தலைவரே, பரபரப்பாக டெல்லி சென்ற கவர்னர் ஆர்.என்.ரவி, இறுக்கமாகவே திரும்பியிருக்கிறார்.''”

"ஆமாம்பா, எப்படியாவது தி.மு.க. அரசை பஞ்சராக்க முடியாதான்னு கவர்னர் டெல்லிக்கும் தமிழ்நாட்டுக்குமாக அலைபாய்கிறார்.''”

"உண்மைதாங்க தலைவரே, ஒரு வார பயணமாக டெல்லிக்குச் சென்ற கவர்னர் ரவி, 12ஆம் தேதி இரவுதான் சென்னைக்குத் திரும்பி னார். தி.மு.க. அரசுக்கு எதிராக எதையாவது செய்து, தனது கௌரவத்தையும் தன்மானத்தை யும் நிலை நாட்டிக்கணும்னு துடிக்கும் அவர், டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை 8ஆம் தேதி சந்தித்தார்.அதேபோல், அவர், ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞரான அட்டர்னி ஜெனரல் வெங்கட் ரமணியையும், சட்ட அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வாலையும் 11ஆம் தேதி சந்தித் தார். இவர்கள் எல்லோரிடமும், 356-ஐ பயன்படுத்த முடியாதா? என்று ஆதங்கத்தோடு கேட்டாராம். இருந்தும் ஒருவரிடம் இருந்தும் உற்சாகமான பதில் வரவில்லையாம். அதேபோல் டெல்லியில் நடந்த ரகசிய சந்திப்புகளின்போது, செந்தில்பாலாஜி விவகாரத்தில் அடுத்தகட்டமாக எப்படி ரியாக்ட் செய்வது என்றும் அவர் ஆலோசித்தாராம்.''

"பொதுவாக, கவர்னர் ஒரு உத்தரவைப் பிறப்பித்து விட்டால், அந்த உத்தரவை அவரே நினைத்தாலும் திரும்ப பெற முடியா தேப்பா?''”

"ஆமாங்க தலைவரே, அதனால்தான் அவர் பிறப்பித்த அமைச்சர் பதவி ரத்து என்ற உத்தரவைத் திரும்ப பெறுவதாகக் குறிப்பிடாமல், அடுத்த உத்தரவு வரும் வரை, அதை நிறுத்தி வைப்ப தாகக் கடிதம் மூலம் கவர்னர் தெரிவித்தாராம். நீக்கம் என் பது இங்கு உத்தரவாகவும், நிறுத்தி வைப்பது ஒரு தகவ லாகவும் இருப்பதால், அது குறித்து சட்ட வல்லுநர்கள் ஆராய்ந்துவருகிறார்கள். அமைச்சரவையில் இருக்கும் ஒருவரை நீக்கும் அதிகாரம் கவர்னருக்கு இல்லை என் பதில் இங்குள்ள தி.மு.க. அரசு உறுதியாக இருக்கிறது. அதனால், இந்த விவகாரத்தில் மாநில அரசு எந்த நகர்வுகளையும் செய்யாமல் அமைதிகாக்கிறது. அதேபோல் டெல்லியில் அடுத்தகட்ட நகர்வுக்குக் காத்திருந்த கவர்னர் ரவியிடம், பிரதமரிடமும் உள்துறை அமைச்சரிட மும் கலந்தாலோசித்துவிட்டு, தகவல் தருகிறோம். நீங்கள் இப்போதைக்கு சென்னைக்கு கிளம்புங்கள் என ஒன்றிய சட்ட அமைச்சர் மேக்வால் சொல்லி அனுப்பியிருக்கிறாராம். இதற்கிடையே கவர்னரின் உத்தரவுகள் குறித்து நீதிமன்றம் போகலாமா என்று ஆலோசித்து வருகிறார் ஸ்டாலின்.''”

"முதல்வர் ஸ்டாலின், தன் செயலாளர்கள் இருவரின் முக்கியத்துவ

"ஹலோ தலைவரே, பரபரப்பாக டெல்லி சென்ற கவர்னர் ஆர்.என்.ரவி, இறுக்கமாகவே திரும்பியிருக்கிறார்.''”

"ஆமாம்பா, எப்படியாவது தி.மு.க. அரசை பஞ்சராக்க முடியாதான்னு கவர்னர் டெல்லிக்கும் தமிழ்நாட்டுக்குமாக அலைபாய்கிறார்.''”

"உண்மைதாங்க தலைவரே, ஒரு வார பயணமாக டெல்லிக்குச் சென்ற கவர்னர் ரவி, 12ஆம் தேதி இரவுதான் சென்னைக்குத் திரும்பி னார். தி.மு.க. அரசுக்கு எதிராக எதையாவது செய்து, தனது கௌரவத்தையும் தன்மானத்தை யும் நிலை நாட்டிக்கணும்னு துடிக்கும் அவர், டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை 8ஆம் தேதி சந்தித்தார்.அதேபோல், அவர், ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞரான அட்டர்னி ஜெனரல் வெங்கட் ரமணியையும், சட்ட அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வாலையும் 11ஆம் தேதி சந்தித் தார். இவர்கள் எல்லோரிடமும், 356-ஐ பயன்படுத்த முடியாதா? என்று ஆதங்கத்தோடு கேட்டாராம். இருந்தும் ஒருவரிடம் இருந்தும் உற்சாகமான பதில் வரவில்லையாம். அதேபோல் டெல்லியில் நடந்த ரகசிய சந்திப்புகளின்போது, செந்தில்பாலாஜி விவகாரத்தில் அடுத்தகட்டமாக எப்படி ரியாக்ட் செய்வது என்றும் அவர் ஆலோசித்தாராம்.''

"பொதுவாக, கவர்னர் ஒரு உத்தரவைப் பிறப்பித்து விட்டால், அந்த உத்தரவை அவரே நினைத்தாலும் திரும்ப பெற முடியா தேப்பா?''”

"ஆமாங்க தலைவரே, அதனால்தான் அவர் பிறப்பித்த அமைச்சர் பதவி ரத்து என்ற உத்தரவைத் திரும்ப பெறுவதாகக் குறிப்பிடாமல், அடுத்த உத்தரவு வரும் வரை, அதை நிறுத்தி வைப்ப தாகக் கடிதம் மூலம் கவர்னர் தெரிவித்தாராம். நீக்கம் என் பது இங்கு உத்தரவாகவும், நிறுத்தி வைப்பது ஒரு தகவ லாகவும் இருப்பதால், அது குறித்து சட்ட வல்லுநர்கள் ஆராய்ந்துவருகிறார்கள். அமைச்சரவையில் இருக்கும் ஒருவரை நீக்கும் அதிகாரம் கவர்னருக்கு இல்லை என் பதில் இங்குள்ள தி.மு.க. அரசு உறுதியாக இருக்கிறது. அதனால், இந்த விவகாரத்தில் மாநில அரசு எந்த நகர்வுகளையும் செய்யாமல் அமைதிகாக்கிறது. அதேபோல் டெல்லியில் அடுத்தகட்ட நகர்வுக்குக் காத்திருந்த கவர்னர் ரவியிடம், பிரதமரிடமும் உள்துறை அமைச்சரிட மும் கலந்தாலோசித்துவிட்டு, தகவல் தருகிறோம். நீங்கள் இப்போதைக்கு சென்னைக்கு கிளம்புங்கள் என ஒன்றிய சட்ட அமைச்சர் மேக்வால் சொல்லி அனுப்பியிருக்கிறாராம். இதற்கிடையே கவர்னரின் உத்தரவுகள் குறித்து நீதிமன்றம் போகலாமா என்று ஆலோசித்து வருகிறார் ஸ்டாலின்.''”

"முதல்வர் ஸ்டாலின், தன் செயலாளர்கள் இருவரின் முக்கியத்துவத்தைக் குறைத்திருக்கிறார் என்கிறார்களே?''”

"ஆமாங்க தலைவரே, முதல்வரின் இரண்டாம் நிலை செயலாளரான உமாநாத் மற்றும் மூன் றாம் நிலை செயலாளரான சண்முகம் ஆகியோரின் முக்கியத்துவத்தை, முதல்வரே குறைக்கச் செய்திருக்கிறாராம். காரணம், இவர்கள் இருவர் மீதும் தொடர்ச்சியாகப் புகார்கள் வந்து குவிந்து கொண்டே இருந்ததாம். குறிப்பாக சுகாதாரத்துறை தொடர்பான ஊழல் புகார்களில் உமாநாத் தொடர்ந்து அடிபட்டு வருகிறாராம். அதேபோல் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் குறித்து எழுந்த புகாரிலும், இவர் பெயரும் சர்ச்சையாகி இருக் கிறது. இந்த இருவரும் செல்வாக்கு மிகுந்த உதய மான அதிகாரியின் அன்பிற்குரியவர்கள் என்ற போதும், இவர்களை முதல்வர் டம்மியாக்கி, கோட்டை அதிகாரிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தி யிருக்கிறாராம். இவர்களுக்கு பதில் விரைவில் புதிய அதிகாரிகள் அங்கே நியமிக்கப்பட இருக்கிறார்களாம்.''

’"காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தை உற்சாகமாக நடத்தியிருக்கிறாரே ஸ்டாலின்?''”

ff

"ஆமாங்க தலைவரே, காவல்துறையில் டி.ஜி.பி. உள்ளிட்ட பதவிகளில் புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில், துறையின் முதல் கூட்டத்தை நடத்தினார் முதல்வர் ஸ்டாலின். அப்போது, குற்றச்செயல்களை முழுதாக ஒடுக்குங்கள். க்ரைம் சம்பவங்கள் நடக்காத சூழலை உருவாக்க நீங்கள் உங்களை அர்ப்பணியுங்கள் என்று காவல்துறை அதிகாரிகளை ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். இதன்பின், துறை குறித்து, 2 மணி நேரத்துக்கு மேல் முதல்வர் கேள்விகளைக் கேட்க, அவ்வளவுக்கும் டி.ஜி.பி.சங்கர் ஜிவாலும், சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. அருணும் உரிய பதில்களை உடனுக்குடன் சொல்லி, முதல்வரை ஆச்சரியப்படுத்தினார்களாம். இதில் உற்சாகமடைந்த ஸ்டாலின், அவர்களை வெகுவாகப் பாராட்டியிருக்கிறார்.''”

"கட்சி விவகாரங்களையும் கவனிக்கும்படி, உதயநிதிக்கு முதல்வர் ஸ்டாலின் கூடுதல் பொறுப்பைக் கொடுத்திருக்கிறாரே?''”

stalin-uday

"ஆட்சி நிர்வாகத்தில் உதயநிதியை மெல்ல... மெல்ல ஒரு முக்கிய இடத்திற்குக் கொண்டு வந்து உட்காரவைத்தது போல், கட்சியிலும் அவரை ஒரு முக்கியமான இடத்தில் விரைவில் உட்காரவைக்க நினைக்கிறாராம் ஸ்டாலின். அதனால், கட்சி தொடர்பான பிரச்சனைகளையும் உதயநிதியை அவர் கவனிக்கச் சொல்லியிருக்கிறாராம். தற்போது, ஆட்சி தொடர்பான பணிகளைக் கவனிப்பதிலேயே பெரும்பாலான நேரத்தைச் செலவிடுகிறார் ஸ்டா லின். அதனால், முன்பு போல, கட்சிப் பிரச்சனை களை அவரால் கவனிக்க முடிவதில்லையாம். இதனால் கட்சி நிர்வாகிகள் ஸ்டாலினை சந்திக்க முடியாமல் தவிக்கின்றனர். ஒவ்வொரு மாவட்டத் திலும் கட்சி நிர்வாகிகளுக்குள் ஏகப்பட்ட பிரச்ச னைகள், அதிருப்திகள் உருவாகி வருகின்றன. அத னால்தான் உதயநிதியிடம் கட்சி பிரச்சினைகளை யும், ஸ்டாலின் கவனிக்கச்சொல்லி இருகிறாராம். இதைத் தொடர்ந்து, உதயநிதி இப்போது, கட்சி தொடர்பான பஞ்சா யத்துக்களையும் கவனிக்க ஆரம்பித்திருக்கிறார்.''”

"ஒன்றிய அமைச்சருக்கான பரிசீலனைப் பட்டியலில் அண்ணா மலை பெயரும் இருக்கிறதாமே?''”

annamalai

"தமிழகத்தில் இருந்து அண்ணாமலைக்கு அமைச்சர் பதவி கொடுக்க லாமா? என்று டெல்லியில் விவாதம் நடந்த தாம். அப்போது, ஒன்றிய அமைச்சரான எல்.முருகன், அண்ணாமலையை அமைச்சராக்கி னால், விரைவில் கட்சியே அதற்காக வருந்தவேண்டி யிருக்கும் என்று தன் கருத்தை அங்கே அழுத்தமாக வைத்தாராம். அடுத்தவருக்கு வில்லங்கம் செய்யும் அண்ணாமலைக்கே வில்லங்கமா? என்று புன்ன கைக்கிறார்கள் பா.ஜ.க. சீனியர்கள். அதேபோல் த.மா.கா.தலைவரான ஜி.கே.வாசனின் பெயரும் இந்த பரிசீலனைக்கு வந்தபோது, தமிழக பா.ஜ.க. பிரமுகர்கள் பலரும்,’"வாசனை அமைச்சராக்கினால் நம் கட்சிக்கும் பயன் இருக்காது. மற்றவர்களுக்கும் பயனிருக்காது. தொண்டர்களே இல்லாமல் கட்சி நடத்துகிறவர் வாசன்'’என்று, அவருக்கு எதிர் கருத்தையே எடுத்து வைத்தார்களாம்.''”

"ராகுல்காந்தி விவகாரத்தில் குஜராத் நீதிமன்றம் பா.ஜ.க.வின் மனவோட்டத்தை எதி ரொலித்திருக்கிறதே?''”

"ராகுல் காந்திக்கு குஜராத் மாநில கீழமை நீதிமன்றம் விதித்த 2 ஆண்டு சிறைத் தண்டனைக்கு எதிராக, அவர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அங்கேயும் ராகுலுக்கு எதிராகவே தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது, கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்திருக்கிறது மாவட்ட அமர்வு நீதிமன்றம். இது, பா.ஜ.க.வினரை குஷிப்படுத்த, காங்கிரஸ் தரப்பை இது ஏகத்துக் கும் கொந்தளிக்க வைத்திருக்கிறது. அதனால், இந்தியா முழுவதும் ராகுலுக்கு எதிரான இந்தத் தீர்ப்பினைக் கண்டித்து, காங்கிரஸார் அறவழியில் போராட்டங்களை நடத்திவருகிறார்கள். அனைத்து மாநிலங்களிலும் இந்தப் போராட்டம் வீரியம் பெற்றிருக்கிறது.''”

"சரிப்பா, இந்தத் தீர்ப்புக்கு எதிராக தமிழக காங்கிரஸில் பெரிதாக ரியாக்ஷனைப் பார்க்க முடியலையே?''”

rr

"ஆமாங்க தலைவரே, ராகுல் விவகாரத்தில் பா.ஜ.க. அரசின் தொடர் அத்துமீறலைக் கண்டித்து, தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் கடந்த 12ஆம் தேதி சென்னை -வள்ளுவர் கோட்டத்தில் கே.எஸ்.அழகிரி தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அங்கே காங்கிரஸ் தொண்டர்கள் குவிந் தனர். எனினும், அழகிரி அந்தப் பக்கமே தலை காட்டவில்லையாம். இதனால், தொண்டர்கள் தரப்பு அதிர்ச்சியடைந்தது. அடுத்து, அந்தப் போராட்டம் திருநாவுக்கரசர் தலைமையில் நடக்கும் என சொல்லப்பட்டது. அவரும் 11 மணிக்கு போராட்ட ஸ்பாட்டுக்கு வந்துவிட்டு, 2 மணி நேரத்தில் அங்கிருந்து கிளம்பிப் போய் விட்டாராம். தங்கபாலு, செல்வப்பெருந்தகை உள்ளிட்ட சிலர் மட்டுமே அங்கிருந்தனர், அதனால் போராட்டம் பிசுபிசுத்துவிட்டதாம்.''’

"அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகள், மன்னிப்பு கடிதம் கொடுத்தால், அது ஏற்றுக் கொள்ளப்படும் என்று எடப்பாடி திடீர் அறிவிப்பு செய்திருக்கிறாரே?''”

’"உண்மைதாங்க தலைவரே, சசிகலா- ஓ.பி.எஸ்.-தினகரன் ஆகிய மூவரும் கைகோத்து அரசியல் செய்யப்போவதாக, ஒரு அதிரடித் தகவல் பரவ, அது எடப்பாடித் தரப்பைத் திகைக்க வைத்திருக்கிறது. இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி நீடிக்கவில்லை எனில், ஓ.பி.எஸ்.-தினகரன் ஆகியோரைச் சேர்த்துக் கொண்டு, பா.ஜ.க. ஒரு தனி அணியைக் கட்டமைக்கும் தீர்மானத்தில் இருக்கிறது. இதையறிந்து திடுக்கிட்ட எடப்பாடி, தினகரன் கட்சியில் இருக் கும் அ.தி.மு.க.வினரையும், ஓ.பி.எஸ். ஆதரவாளர்களையும் தங்கள் பக்கம் கொண்டுவரும் ஒரு உத்தியாகத்தான் எடப்பாடி இப்படி ஒரு தூண்டில் அறிவிப்பை வெளியிட்டா ராம். இதன்மூலம், தினகரனையும் ஓ.பி.எஸ்.ஸையும் பலவீனமாக்கிவிடலாம் என்பதுதான் அவரது கணக்காம்.''”

"கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி இறந்து ஒரு வருடம் ஆகிவிட்டதே?''”

srimathi

"ஆமாங்க தலைவரே, கடந்த 12ஆம் தேதி, கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி இறந்து ஒரு வருடம் நிறைவடைந்திருக்கும் நிலையில், அவருக்காக ஒரு மணிமண்டபத்தைக் கட்டி, அவர் அம்மா திறந் திருக்கிறார். இந்த நிலையில்... ஸ்ரீமதி விவகாரத்தில் கைதாகி சிறையில் இருந்தவர்களில் ஒருவரான கணித ஆசிரியை கிருத்திகா, "தனக்கும் ஸ்ரீமதி விவகாரத்திற்கும் சம்மந்தமில்லை என்றும், தன்மீது பொய்வழக்கு போட்டார்கள்' என்றும் புலம்பிவந் தார். இவர் பேச்சை நம்பிய வழக்கறிஞர் ஒருவர், உங்கள் தரப்பு உண்மைகளை என்னிடம் சொல்லுங்கள் என்று சொல்ல, அவரைச் சந்திக்க வருமாறு கிருத்திகா அழைத்திருக்கிறார். அதைத் தொடர்ந்து அந்த வழக்கறிஞர் சென்றபோது, அந்த கிருத்திகா, சக்தி பள்ளி தாளாளரான ரவிக்குமாரைத் தொடர்புகொண்டு, வழக்கறிஞர் தனக்கு டார்ச்சர் கொடுக்கிறார் என்று சொல்ல,அந்த வழக்கறிஞர் மீது பொய் வழக்குப் போடும் முயற்சிகள் நடக்கிறதாம்.''”

"க.திருநாவுக்கரசு இல்லத் திருமண விழாவில் முதல்வரோட அதிரடிப் பேச்சு பரபரப்பாகி யிருக்கே?''”

"ஆமா தலைவரே, கடந்த 9ஆம் தேதி ஞாயிறன்று, திராவிட இயக்கத்தின் எழுத்தாளர் க.திருநாவுக்கரசு வின் மகன் சிற்றரசுவுக்கும்- எழிலரசிக்கும், அண்ணா அறிவாலயத்தில் வைத்து முதல்வர் தலைமையில் திருமணம் நடைபெற்றது. அப்போது தலைமையுரையாற்றிய முதல்வர், "அண்ணன் திருநாவுக்கரசு, எப்பொழுதும், எதையுமே வெளிப் படையாகப் பேசக்கூடியவர். அழைப்பிதழிலேயே தன்னை திராவிட இயக்கத்தின் எழுத்தாளர் என்று அடையாளப்படுத்தியிருக்கிறார். இன்றைக்கு வெளிப்படையாக அதை யாரும் வெளிப்படுத்து வதற்கு அச்சப்பட்டு யோசிப்பார்கள். ஆனால் திருநாவுக்கரசு போன்றவர்களுக்கு அந்த துணிவு உண்டு' எனப் புகழ்ந்த முதல்வர், "வெளிநாட்டி லுள்ள கருப்புப்பணத்தை மீட்டு, நாட்டிலுள்ள மக்களுக்கு ஒரு நபருக்கு 15 லட்ச ரூபாய் வழங்கு வேன் என்று உறுதிமொழி தந்தாரே, 15 ஆயிரமா வது தந்தாரா?' என பிரதமரை ஒரு பிடி பிடித்தார். அதோடு, "ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கித் தருவோம்கற உறுதிமொழி யை காற்றில் பறக்கவிட்டார். யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதைவிட யார் ஆட்சி இருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். எந்த சூழ்நிலை வந்தாலும், ஏன் ஆட்சிக்கு ஆபத்தே வந்தாலும் அதைப்பற்றி இம்மியளவும் கவலைப்பட வேண்டியதில்லை'ன்னு பரபரப்பா பேசியிருக்கார்.''”

"நானும் என் காதுக்கு வந்த ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். சட்டப் பாயிண்டுகளோடு பேசும், வட மாவட்டத்தைச் சேர்ந்த அந்த அ.தி.மு.க. மாஜி மந்திரி வீட்டில், அண்மைக் காலமாக சோகச் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறதாம். ஏற்கனவே அவரது தங்கை ஒருவர் தற்கொலை செய்துகொண்டிருக்கும் நிலையில், அடுத்து அவரது அண்ணன் மகன் ஒருவரும் தற்கொலை செய்துகொண்டு இறந்துபோனார். இந்த நிலையில் சமீபத்தில் அந்த மாஜியின் சென்னை வீட்டில் வசிக்கும் அவரது மகள், காதல் விவகாரத்தில் தற்கொலைக்கு முயல, நல்லவேளையாக அவர் காப்பாற்றப்பட்டிருக்கிறாராம். இது அவர் தரப்பைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.''

nkn150723
இதையும் படியுங்கள்
Subscribe