யிலாடுதுறை மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் பலரும் அதிருப்தியில் இருக்கிறார்கள். கேட்டால். எங்க ளுக்கு வாய்த்த மா.செ. பவுன் ராஜ், கட்சியைத் தன் சொந்த வளர்ச்சிக் காக மட்டும் பயன்படுத்துகிறார்.

இது குறித்து கட்சி நிர்வாகிகள் கேள்வி எழுப்பினால், அவர்களின் பதவியைப் பறித்துவிட்டு, புதிய நிர்வாகிகளை நியமித்து விடுவேன் என்று மிரட்டுகிறார். இவரது அடாவடிகளால் கட்சியின் பெயரே கெட்டு விட்டது''’என்றெல்லாம் புகார்களை அடுக்கு கின்றனர்.

kk

அங்கே என்னதான் நடக்கிறது? என்பதை அறிய, மயிலாடுதுறை மாவட்டத்தின் சீர்காழியில் களமிறங்கினோம்.

இது குறித்து அக்கட்சியின் சீனியர் ஒருவர் நம்மிடம், "சீர்காழியில் அ.தி.மு.க. சீரழிந்து விட்டது. காரணம், இங்கே கோஷ்டிப் பூசல் தலையெடுத்திருக்கிறது. கட்சியின் சீனியர்களும் உண்மையான தொண்டர்களும் ஓரங்கட்டப்படு கிறார்கள். இங்கிருக்கும் மா.செ. பவுன்ராஜ் இஷ்டத்திற்கு ஆட்டம் போடுகிறார். நாகை மாவட்டத்தை இரண்டாக பிரித்து மயிலாடு துறை மாவட்டம் உருவானதும், அதற்கு செந்தில் நாதனை மா.செ.வாக ஆக்கினர்.

dd

செந்தில் நாதனோ முன்னாள் அமைச்சர் காமராஜின் ஆதரவாளராக இருக்கிறார் என்று அவரைத் தூக்கிவிட்டு, பவுன்ராஜை மா.செ.வாக ஆக்கினார் ஓ.எஸ்.மணியன். இதற்கு சீர்காழி முன்னாள் எம்.எல்.ஏ. பாரதியும், மயிலாடுதுறை முன்னாள் எம்,எல்,ஏ ராதாகிருஷ்ணனும் ஒத்து ழைத்தனர். அதற்கான பலனை அந்த இருவரும் இப்போது அனுபவிக்கிறார்கள். இப்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் மா.செ. டீமால் அ.தி.மு.க. ஒளிகுன்றி வருகிறது.” என்றவர்,

பவுன்ராஜ், மா.செ.பொறுப்புக்கு வந்தது முதல் இன்றுவரை கட்சி நிர்வாகிகளை ஒருமையில் பேசுவதையும், அடிக்கப் பாய்வதை யும், மைனாரிட்டி சமூகத்தினரை கூட்டத்தில் வைத்து அவமானப்படுத்துவதையும் வாடிக்கை யாகவே வைத்திருக்கிறார். அப்படித்தான் ஆலோசனைக் கூட்டம் என்கிற பெயரில் நிர்வாகி களை அழைத்து அவமானப்படுத்தினார். இந்த நிலையில் முன்னாள் அமைச்சர்களான, எஸ்.பி. வேலுமணி, ஓ.எஸ்.மணியன், தங்கமணி உள்ளிட்ட வர்களோடு மிக நெருக்கமாக இருந்தவரும், சீர்காழி அதிமுகவின் முக்கிய பிரமுகராகவும் இருந்தவருமான மணல் பாபு என்கிற ரமேஷ்பாபு கொலை வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருந்து வெளியே வந்த மார்கோனியை, பவுன்ராஜ் கட்சியில் சேர்த்தார். இது கட்சித் தொண்டர்கள் மத்தியில் கவலையை உருவாக்கியது.

இதேபோல் அதே கொலை வழக்கில் தொடர்புடையவரான எங்கள் கட்சி ஓ.செ,வான கொள்ளிடம் ஜெயராமனை, கட்சியை விட்டே நீக்கினார் எடப்பாடி. அந்த ஜெய ராமனை மீண்டும் கட்சியில் சேர்த்து, மீண்டும் அவருக்கு பொறுப்பைக் கொடுப்பதற்காக, இணைப்பு விழாவை ஏற்பாடு செய்துவருகிறார் பவுன்ராஜ்.

அந்த கொள்ளிடம் ஜெய ராமனின் மகன் தி.மு.க.வில் இளை ஞர் அணி பொறுப்பில் இருந்து கொண்டு பல கோடிகளுக்கு டெண் டர் எடுத்து வேலை செய்து வருகிறார். அதேபோல பவுன்ராஜின் தம்பி சேகரும், அவரது மகன் பாபு வும் தற்போது பல கோடிக்கு வேலையை எடுத்து செய்து வருகின் றனர். இவர்கள் மட்டும் தி.மு.க. வினரோடு உறவுவைத்துக் கொள்ள லாம்,

ஆனால், சாதாரண நிர்வாகி களின் குடும்ப விழாக்களில் தி.மு.க.. வினர் கலந்துகொண்டால் மட்டும் அவர்களை மிரட்டுவதும், அவர் களோடு பேசக்கூடாது என்று வாய்ப்பூட்டு போடுவதையும் மா.செ. பவுன்ராஜ் வழக்கமாக வைத்திருக் கிறார்”என்றும் ஆதங்கப்பட்டார்.

இன்னொரு அ.தி.மு.க. சீனி யரோ, "இது ஒருபுறம் இருக்க, சீர்காழியில் பூர்வீக அ.தி.மு.க. குடும்பமாக இருப்பவர் மண்ணெண் ணெய் ஜெயபால். இவர் குடும்பம், 40 ஆண்டுகளுக்கு மேல் அதிமுகவில் உள்ளது. அதோடு 25 ஆண்டுகள் அவர் நகர செயலாளராக இருந்தவர். மைனாரிட்டி சமூகத்தைச் சேர்ந்தவர் இவர். அவர் பொறுப்பில் இருந்த வரை கட்சி நிகழ்ச்சிகள் அனைத் திற்கும் சொந்த காசை செலவு செய்து, கட்சியை நடத்தி வந்தார். ஜெயலலிதாவையும், ஓ.எஸ். மணியனையும் இவர் தனது இரு கண்களாகக் கொண்டாடிவந்தார்.

அந்த ஜெயபால் மறைந்ததும் அவரது சாகுபடியில் இருந்துவந்த 20 கோடி மதிப்புடைய விவசாய நிலங்களை மார்கோணி, பவுன்ராஜ், ஓ.எஸ்.மணியன் கூட்டணி பிடுங்கி கொண்டது. மேலும் ஜெயராமன் குடும்பத்தினர் மீது பொய் வழக்கு போடவைத்து, அவர்களை அலைக் கழித்து வருகிறார்கள்.” என்று சொன்னதோடு...

“இந்த மார்கோனி அ.தி.மு.க.வில் சேருவதற்கான காரணமே ஜெயபா

லின் இட விவகாரம்தான். இந்த சூழலில் அந்த பிரச்சனையை மூடி மறைப்பதற்காக இணைப்பு விழா என்கிற பெயரில் எடப்பாடியை ஏமாற்றி நிகழ்ச்சிக்கு அழைத்திருக்கிறார் கள். மக்கள் இதையெல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலின் போது மாவட்டம் பவுன்ராஜுக் குப் பாடம் புகட்டுவார்கள்''’என்கிறார் விரக்தியாக.

சீர்காழியைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் பலரும் மா.செ. பவுன் ராஜின் ஏடாகூட செயல்பாடுகள் குறித்து எடப்பாடிக்கு புகார் மனுக் களை அனுப்பி “மா.செ. பதவியிலிருந்து தூக்கவேண்டும்” என்று கோரிக்கை வைத்திருக்கிறார்களாம்.

இதையறிந்த பவுன்ராஜ், "இனி ஒரு பொறுப்பாளரும் இருக்க முடியாது. எல்லாரையும் மாத்திட்டு தான் மறுவேலை பார்ப்பேன்'’ என்றபடி, ஒரு புதிய நிர்வாகிகள் லிஸ்ட்டையும் தயார் செய்து வருகிறாராம்.

இதற்கிடையே அ.தி.மு.க. நகரச் செயலாளரான எல்.வி.ஆர்.வினோத், எடப்பாடியை அவரது வீட்டிற்கே சென்று சந்தித்து, "எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து எங்கள் குடும்பமே அ.தி.மு.க.வில்தான் இருக்கிறது. நீங்கள் பார்த்து என்னை நகரச்செயலாளராக ஆக்கினீர்கள். என்னையே மா.செ. பவுன்ராஜ் எல்லோர் முன்னிலையிலும் அடிக்கப் பாய்கிறார். அவரது

உறவுக்காரரை நகர செயலாளராக்க, மைனாரிட்டி சமுகத்தவனான என்னை உதாசினபடுத்துறார். தற்போது நடக்கிற கூட்டங்களில் என்னுடைய பெயரையே போடுவதில்லை. என் உயிருக்கும்

Advertisment

dd

பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டிருக் கிறது'’என்றெல்லாம் கண்ணீருடன் புகார் கொடுத்துவிட்டு வந்திருக்கிறாராம்.

நிலவரம் குறித்து, மயிலாடுதுறை மாவட்டத்தில் இருக்கும் கட்சி நிர்வாகிகள் சிலரிடம் நாம் விசாரித்தோம். அப்போது அவர்கள் "மாவட்டச் செயலாளர் பவுன்ராஜ், சீர்காழி நகரத்தை மட்டுமே மாவட்டப் பகுதியாக நினைத்து அரசியல் செய்து வருகிறார்.

Advertisment

சீர்காழி நகரத்தைப் பொறுத்தவரை மைனாரிட்டி சமுகத்தவர்களே அதிகம். 28 ஆயிரம் வாக்குகள் அவர்களிடம் உள்ளது. அதில் 18 ஆயிரம் வாக்குகள் தி.மு.க.விற் கானது. அதை அவ்வளவு எளிதில் யாராலும் மாற்றிவிட முடியாது. இவர்கள் புதிதாக சிலரைக் கட்சியில் சேர்ப்பதாக கூறி நாடகம் நடத்துகிறார்கள். நான்காயிரம் இஸ்லா மியர்களை சேர்ப்பதாகவும் அறிவித் துள்ளனர்,

இதை சாதாரண பாமரன்கூட நம்பமாட்டான். மொத்தத்தில் எடப்பாடி யையே ஏமாற்றிவருகிறார்கள். மாவட்டம் முழுக்கவே அ.தி.மு.க. பலவீனமான நிலையில் இருக்கிறது''’என்கிறார்கள்.

இதுகுறித்து விளக்கம் கேட்பதற்காக மாவட்ட செயலாளர் பவுன்ராஜை தொடர்பு கொண்டோம். அவரோ "ஹலோ யார் பேசுறது?''’என்றார். நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும், "கொஞ்சம் பிஸி தலைவா'’ என்றபடி போனை கட் செய்துவிட்டார். அதேபோல் மார்கோனியை தொடர்பு கொண்டபோதும், அவர் நம் அழைப் பை ஏற்கவில்லை.

இவர்களின் ஆதரவாளரான முன் னாள் சட்டமன்ற உறுப்பினரும் வழக்கறி ஞருமான சந்திர மோகனிடம் இது குறித்தெல்லாம் கேட்டபோது “ முன்பு சீர்காழியில் அ.தி.மு.க. நான்கு பேர் கட்டுப்பாட்டில் மட்டும் இருந்தது. தற்போது அதைப் பரவலாக்கி இருக்கிறார் மா.செ.

அதற்கு மார்கோனி மிகுந்த ஒத்துழைப்பு கொடுக்கிறார். வரும் தேர்தலில் சீர்காழியில் உள்ள மொத்த வாக்குகளையும் பெறுவதுதான் எங்களு டைய லட்சியம். பலதரப்பட்ட மக்களும் அ.தி.மு. க.வை நாடிவருகிறார்கள். மாவட்டச் செயலாளரின் சீரிய முயற்சியில் அ.தி.மு.க. வளர்ச்சி பெற்றிருக்கிறது. அதற்கு முழு ஒத்துழைப்பும் மார்கோனி தருகிறார். மண்ணெண்ணெய் ஜெயபால் விவகாரம் நீதிமன்றத் தில் உள்ளது. யாரோ நான்குபேர் சொல்வதை நீங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். கட்சி அசுர வளர்ச்சியைக் கண்டுவருகிறது''’என்றவரிடம்...

"சீர்காழி மட்டுமே மாவட்டமாகிடுமா?'' என்றோம்.“

"எல்லா இடங்களிலும் பணிகளை துவங்கி யாச்சி...''’என்றார் அழுத்தமாக.

எனினும், அ.தி.மு.க.வுக்குள் மா.செ. பவுன்ராஜ் குறித்த சர்ச்சைகள் பலவிதமாக வெடித்துக்கொண்டே யிருக்கின்றன.

dd